எம்மில் சிலருக்கு அவர்களுடைய பாதங்களில் சிறிய புண் போன்றோ அல்லது சிறிய கட்டி போன்றோ ஒரு பாதிப்பு உருவாகிவிடும்.
இதற்கு கால் ஆணி என்று குறிப்பிடுவதுண்டு.
பொதுவாக கால் ஆணி பாதிப்பை கால் ஆணி, காய்ப்பு, மரு என்று மூன்று வகையாக பிரித்து உணரவேண்டும். இந்த மூன்றும் ஒரே அறிகுறியுடன் இருந்தாலும் இந்த மூன்றிற்கும் வெவ்வேறான சிகிச்சைகள் வழங்கப்பட்டு குணப்படுத்தப்படுகின்றன.
நாம் தற்போது வணிக வளாகங்களிலும், பூங்கா அல்லது கடற்கரை போன்ற மிகக்குறைவான இடங்களில் மட்டுமே நடக்கிறோம். இதன்போது எதிர்பாராதவிதமாக பாதங்களில் கடினமான பொருள்கள் குத்திவிட்டால், அங்கே சிறிய அளவிலான துளை ஏற்படுகிறது.
உடனடியாக எம்முள் இருக்கும் நோயெதிர்ப்பு சக்தியானது அங்கு தோலை வளரச் செய்யும். இது எதிர்பாராதவிதமாக உள்நோக்கி வளரத் தொடங்கினால் அதைத்தான் கால்ஆணி என்று குறிப்பிடுகிறோம்.
சிலர் இத்தகைய தருணங்களில் தங்களின் பாதத்தை தவறாகவோ அல்லது இயல்பிற்கு மீறிய நிலையிலோ பயன்படுத்தினால் இவை வலியுடன் கூடிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.
சிலர் இதனை குணப்படுத்திக்கொள்கிறேன் என்று கூறி சுய மருத்துவம் செய்து கொண்டு, வலியை அதிகரித்துக் கொள்வர். அத்துடன் தொடர்ந்து நடக்கக்கூட இயலாமல் முடங்கிவிடுவர். இத்தகைய தருணத்தில் அதனை மின்கதிர் சிகிச்சை மூலம் குணமாக்கலாம்.
ஆனால் அதன் பிறகு வைத்தியர்கள் பரிந்துரைக்கும் பிரத்யேக காலணிகளை அவர் அறிவுறுத்தும் காலகட்டம் வரைக்கும் அணிந்திருக்கவேண்டும்.
டொக்டர் பார்த்திபன்
-Virakesari
இதற்கு கால் ஆணி என்று குறிப்பிடுவதுண்டு.
பொதுவாக கால் ஆணி பாதிப்பை கால் ஆணி, காய்ப்பு, மரு என்று மூன்று வகையாக பிரித்து உணரவேண்டும். இந்த மூன்றும் ஒரே அறிகுறியுடன் இருந்தாலும் இந்த மூன்றிற்கும் வெவ்வேறான சிகிச்சைகள் வழங்கப்பட்டு குணப்படுத்தப்படுகின்றன.
நாம் தற்போது வணிக வளாகங்களிலும், பூங்கா அல்லது கடற்கரை போன்ற மிகக்குறைவான இடங்களில் மட்டுமே நடக்கிறோம். இதன்போது எதிர்பாராதவிதமாக பாதங்களில் கடினமான பொருள்கள் குத்திவிட்டால், அங்கே சிறிய அளவிலான துளை ஏற்படுகிறது.
உடனடியாக எம்முள் இருக்கும் நோயெதிர்ப்பு சக்தியானது அங்கு தோலை வளரச் செய்யும். இது எதிர்பாராதவிதமாக உள்நோக்கி வளரத் தொடங்கினால் அதைத்தான் கால்ஆணி என்று குறிப்பிடுகிறோம்.
சிலர் இத்தகைய தருணங்களில் தங்களின் பாதத்தை தவறாகவோ அல்லது இயல்பிற்கு மீறிய நிலையிலோ பயன்படுத்தினால் இவை வலியுடன் கூடிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.
சிலர் இதனை குணப்படுத்திக்கொள்கிறேன் என்று கூறி சுய மருத்துவம் செய்து கொண்டு, வலியை அதிகரித்துக் கொள்வர். அத்துடன் தொடர்ந்து நடக்கக்கூட இயலாமல் முடங்கிவிடுவர். இத்தகைய தருணத்தில் அதனை மின்கதிர் சிகிச்சை மூலம் குணமாக்கலாம்.
ஆனால் அதன் பிறகு வைத்தியர்கள் பரிந்துரைக்கும் பிரத்யேக காலணிகளை அவர் அறிவுறுத்தும் காலகட்டம் வரைக்கும் அணிந்திருக்கவேண்டும்.
டொக்டர் பார்த்திபன்
-Virakesari
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக