இன்று ஐம்பது வயதைக் கடந்த ஆண்களில் பலர் ப்ராஸ்டேட் புற்றுநோயால் திக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் முழு உடற் பரிசோதனையையும், தொடர் கண்காணிப்பில் உள்ளவர்களும் இதற்கான ஆரம்ப கட்ட அறிகுறிகளின் போது பரிசோதனை செய்து கொண்டு, அத்தகைய பாதிப்பை உறுதிப்படுத்திக் கொண்டு நவீன சிகிச்சையின் மூலம் குணமடைந்திருக்கிறார்கள்.
அறிகுறிகளை அலட்சியப்படுத்தியவர்கள் இவ்வகையினதான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மரணத்தையும் சந்தித்திருக்கிறார்கள்.
முதலில் இதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். பதினைந்து வயது முதல் பத்தொன்பது வயது வரையில் உள்ள இளம் ஆண்களுக்கு இத்தகைய தருணங்களில் பாலியல் சுரப்பியான புராஸ்டேட் சுரப்பியின் செயற்பாடு சீராகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
இதன் போது மது அருந்தும் பழக்கத்திற்கு ஆளானால் அதன் காரணமாக புராஸ்டேட் சுரப்பியின் செயற்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு, புற்றுநோய் செல்கள் அங்கு வந்து தங்கி பல்கி பெருகுவதற்கு வழி வகுக்கின்றன. இதனை அண்மைய ஆய்வுகள் மூலம் உறுதி செய்திருக்கிறார்கள்.
அதனால் புராஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்கவேண்டும் என்றால் பதின்ம வயது என்ப்படும் பதிமூன்று வயது முதல் பத்தொன்பது வயது வரையிலான காலகட்டத்தில் மதுவை தொடவேக்கூடாது. அதையும் கடந்து தொட்டால் அவர்களுக்கு எதிர்காலத்தில் புராஸ்டேட் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு மூன்று இரண்டு பங்கு அதிகம் என்று உறுதியாக சொல்கிறார்கள்
ஆய்வாளர்கள். அத்துடன் புராஸ்டேட் சுரப்பில் இருக்கும் புற்றுநோயிற்கான செல்கள் முற்றிய நிலையில் ஏனைய எலும்புகளிலும் ஊடுருவிச் செல்லக்கூடியது என்றும், வேறு உறுப்புகளுக்கு பரவும் தன்மையைக் கொண்டது என்றும் வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
முதல் நிலையில் எந்த அறிகுறியையும் தோற்றுவிக்காது. நான்காம் நிலையில் முற்றும் போது தான் அறிகுறிகள் தோன்றும். உடனடியாக சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற உணர்வு, சிறுநீர் கழிக்கும் போது அசௌகரியமான உணர்வு, விந்து மற்றும் சிறுநீர் வெளியேறும் போது அதனுடன் சிறிதளவில் இரத்தமும் வெளியேறுவது, முதுகின் கீழ் பகுதி, தொடையில் மேல் பகுதி, இடுப்பு ஆகிய பகுதிகளில் தாங்க முடியாத வலி அல்லது விட்டுவிட்டு வலி ஏற்படும்.
இத்தகைய அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று ஏற்பட்டாலும் உடனடியாக வைத்தியர்களை சந்திக்க வேண்டும். அவர்கள் பரிந்துரைக்கும் எம் ஆர் ஐ ஸ்கேன், சி டி ஸ்கேன் மற்றும் எலும்பிற்கான ஸ்கேன் ஆகிய பரிசோதனைகளை செய்து பாதிப்பு உள்ளதா? என்பதை பரிசோதிக்கவேண்டும்.
இதனை வராமல் தடுக்கவேண்டும் என்றால் முதலில் மதுவை முற்றாக தவிர்க்கவேண்டும். உடல் எடையை சீராக பராமரிக்கவேண்டும். கலோரி அதிகமாக இருக்கும் உணவுகளையும், பானங்களையும் தவிர்க்கவேண்டும். தினமும் காய்கறிகளை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். பதப்படுத்தப்பட்ட இறைச்சியை தவிர்க்கவேண்டும். கல்சிய சத்து அதிகமுள்ள உணவையும், பால்மா பொருள்களினால் செய்யப்பட்ட உணவு மற்றும் பானத்தை மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி மட்டுமே சாப்பிடவேண்டும்.
டொக்டர் கோவிந்தராசன்
-Virakesari
அறிகுறிகளை அலட்சியப்படுத்தியவர்கள் இவ்வகையினதான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மரணத்தையும் சந்தித்திருக்கிறார்கள்.
முதலில் இதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். பதினைந்து வயது முதல் பத்தொன்பது வயது வரையில் உள்ள இளம் ஆண்களுக்கு இத்தகைய தருணங்களில் பாலியல் சுரப்பியான புராஸ்டேட் சுரப்பியின் செயற்பாடு சீராகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
இதன் போது மது அருந்தும் பழக்கத்திற்கு ஆளானால் அதன் காரணமாக புராஸ்டேட் சுரப்பியின் செயற்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு, புற்றுநோய் செல்கள் அங்கு வந்து தங்கி பல்கி பெருகுவதற்கு வழி வகுக்கின்றன. இதனை அண்மைய ஆய்வுகள் மூலம் உறுதி செய்திருக்கிறார்கள்.
அதனால் புராஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்கவேண்டும் என்றால் பதின்ம வயது என்ப்படும் பதிமூன்று வயது முதல் பத்தொன்பது வயது வரையிலான காலகட்டத்தில் மதுவை தொடவேக்கூடாது. அதையும் கடந்து தொட்டால் அவர்களுக்கு எதிர்காலத்தில் புராஸ்டேட் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு மூன்று இரண்டு பங்கு அதிகம் என்று உறுதியாக சொல்கிறார்கள்
ஆய்வாளர்கள். அத்துடன் புராஸ்டேட் சுரப்பில் இருக்கும் புற்றுநோயிற்கான செல்கள் முற்றிய நிலையில் ஏனைய எலும்புகளிலும் ஊடுருவிச் செல்லக்கூடியது என்றும், வேறு உறுப்புகளுக்கு பரவும் தன்மையைக் கொண்டது என்றும் வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
முதல் நிலையில் எந்த அறிகுறியையும் தோற்றுவிக்காது. நான்காம் நிலையில் முற்றும் போது தான் அறிகுறிகள் தோன்றும். உடனடியாக சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற உணர்வு, சிறுநீர் கழிக்கும் போது அசௌகரியமான உணர்வு, விந்து மற்றும் சிறுநீர் வெளியேறும் போது அதனுடன் சிறிதளவில் இரத்தமும் வெளியேறுவது, முதுகின் கீழ் பகுதி, தொடையில் மேல் பகுதி, இடுப்பு ஆகிய பகுதிகளில் தாங்க முடியாத வலி அல்லது விட்டுவிட்டு வலி ஏற்படும்.
இத்தகைய அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று ஏற்பட்டாலும் உடனடியாக வைத்தியர்களை சந்திக்க வேண்டும். அவர்கள் பரிந்துரைக்கும் எம் ஆர் ஐ ஸ்கேன், சி டி ஸ்கேன் மற்றும் எலும்பிற்கான ஸ்கேன் ஆகிய பரிசோதனைகளை செய்து பாதிப்பு உள்ளதா? என்பதை பரிசோதிக்கவேண்டும்.
இதனை வராமல் தடுக்கவேண்டும் என்றால் முதலில் மதுவை முற்றாக தவிர்க்கவேண்டும். உடல் எடையை சீராக பராமரிக்கவேண்டும். கலோரி அதிகமாக இருக்கும் உணவுகளையும், பானங்களையும் தவிர்க்கவேண்டும். தினமும் காய்கறிகளை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். பதப்படுத்தப்பட்ட இறைச்சியை தவிர்க்கவேண்டும். கல்சிய சத்து அதிகமுள்ள உணவையும், பால்மா பொருள்களினால் செய்யப்பட்ட உணவு மற்றும் பானத்தை மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி மட்டுமே சாப்பிடவேண்டும்.
டொக்டர் கோவிந்தராசன்
-Virakesari
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக