புதிய கொவிட் 19 கொரோனா வைரஸ் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வுகளில் அந்த வைரஸ் சிறுநீரகங்களை தாக்கி அவற்றுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை காலம் கொரோனா வைரஸ் நுரயீரல்கைளேயே தாக்குவதாக கருதப்பட்டு வந்தநிலையில் அந்த வைரஸ் சிறு நீரகங்கைள தாக்கி அவற்றைச் சேதப்படுத்துவதாக மேற்படி ஆய்வுகள் கூறுகின்றன.
அமெரிக்க பெயின்ஸ்டெயின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தைச் சேர்ந்த மருத்துவர்களால் மேற்கொள்ளப்பட்டு கிட்னி இன்டர்நஷனல் மருத்துவ ஆய்வேட்டில் வெளியிடப்பட்ட முதலாவது ஆய்வானது ஆய்வுக்குட்பத்தப்பட்ட 5,500 கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 37.3 சதவீதமானவர்களுக்கு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு 24 மணிநேரத்திற்குள் சிறுநீரகம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளமை அவதானிக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறது.
இந்த ஆய்வின்போது மேற்படி வைரஸ் நுரையீரல் மற்றும் சிறுநீரகங்களில் மட்டுமல்லாது மூளை, இருதயம் மற்றும் ஈரல் ஆகிய உடல்பகுதிகளிலும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களில் சுவாச உபகரணம்தேவையாகவிருந்த நோயாளிகளில் 90 சதவீதமானவர்கள் சிறுநீரகப்பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக மேற்படி ஆய்வுகளில் ஒன்று தெரிவிக்கிறது. அத்துடன் மற்றைய ஒருஆய்வில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் சிறுநீரகங்களில் உயர் மட்டத்தில் வைரஸூக்கள் உள்ளமை கண்டறியப்பட்ள்ளது.
இந்நிலையில் சீனாவில் பெறப்பட்ட தரவுகளின் பிரகாரம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 5 சதவீதம் முதல் 23 சதவீதம் வரையானவர்கள் சிறுநீரகப் பாதிப்க்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை காலம் கொரோனா வைரஸ் நுரயீரல்கைளேயே தாக்குவதாக கருதப்பட்டு வந்தநிலையில் அந்த வைரஸ் சிறு நீரகங்கைள தாக்கி அவற்றைச் சேதப்படுத்துவதாக மேற்படி ஆய்வுகள் கூறுகின்றன.
அமெரிக்க பெயின்ஸ்டெயின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தைச் சேர்ந்த மருத்துவர்களால் மேற்கொள்ளப்பட்டு கிட்னி இன்டர்நஷனல் மருத்துவ ஆய்வேட்டில் வெளியிடப்பட்ட முதலாவது ஆய்வானது ஆய்வுக்குட்பத்தப்பட்ட 5,500 கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 37.3 சதவீதமானவர்களுக்கு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு 24 மணிநேரத்திற்குள் சிறுநீரகம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளமை அவதானிக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறது.
இந்த ஆய்வின்போது மேற்படி வைரஸ் நுரையீரல் மற்றும் சிறுநீரகங்களில் மட்டுமல்லாது மூளை, இருதயம் மற்றும் ஈரல் ஆகிய உடல்பகுதிகளிலும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களில் சுவாச உபகரணம்தேவையாகவிருந்த நோயாளிகளில் 90 சதவீதமானவர்கள் சிறுநீரகப்பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக மேற்படி ஆய்வுகளில் ஒன்று தெரிவிக்கிறது. அத்துடன் மற்றைய ஒருஆய்வில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் சிறுநீரகங்களில் உயர் மட்டத்தில் வைரஸூக்கள் உள்ளமை கண்டறியப்பட்ள்ளது.
இந்நிலையில் சீனாவில் பெறப்பட்ட தரவுகளின் பிரகாரம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 5 சதவீதம் முதல் 23 சதவீதம் வரையானவர்கள் சிறுநீரகப் பாதிப்க்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக