'ஓராயிரம் யானை கொன்றால் பரணி. ஆதலால் யுத்தம் இருக்கு கவனி....' என்கிற பாடல், நா. முத்துக்குமாரால், பாலாவின் ' நந்தா' திரைப்படத்திற்காக எழுதப்பட்டது. இது, ஒடுக்கப்படுவோ ரின் இன்னுமொரு போர்க்களத்திற்கான பாதையைக் காட்டுவது போலுள்ளது.
11 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட பாட்டாயினும், முள்ளிவாய்க்கால் பேரழிவு முடிவுற்று நான்கு வருடங்கள் கழிந் தும், வலி. வடக்கில் கூடும் மக்களும், நீதி கோரும் காணாமல் போகடிக்கப்பட் ட மக்களின் உறவுகளும், அதனை உயிர்ப்புள்ள கவிதையாக இன்றும் நிறுத்தி வைத்துள்ளார்கள்.
ஒரு விடயம் மட்டும் ஊடக இரும்புத் திரைகளை, வெள்ளை வான்களின் உறுமல்களைத் தாண்டித் தெரிகிறது.
அது வேறொன்றுமில்லை. சுயாதீன சர்வதேச விசாரணையை வேண்டி நிற்கும் தமிழ் மக்களின் குரல்தான் அது.
அதை எப்படி உறுதியாகச் சொல்ல முடியும் என்கிறீர்களா? சர்வதேச நாடுக ளின் தலைவர்களும், ஐ.நா.சபையின் உயர்மட்டத் தலைவர்களும் தமிழர் தாய கப் பகுதிகளில் காலடி வைக்கும்போது, காணாமல் போன தமது உறவுகளை கண்டு பிடித்துத் தருமாறு, இவர்களிடமே அந்த மக்கள் திரண்டு சென்று முறையிடுகின்றார்கள்.
ஒடுக்கப்படும் தமிழினம் வேண்டுவது, சர்வதேச விசாரணை என்பதைத்தவிர வேறொன்றுமில்லை என்பதை உணர்த்த இது ஒன்றே போதும்.
அதேவேளை, பாதிப்புற்ற பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களின் வலிகளை யும், துயரங்களையும் கொச்சைப்படுத் தும் வகையில் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வழங்கிய நேர்காணல், இந்த ஆண்டின் மிகக் கொடுமையான விடயமாகப் பார்க்க வேண்டும்.
அத்தோடு, உலகிலுள்ள கிரிக்கெட் ஆதரவாளர்களை, தனது நட்சத்திர அந்தஸ்து போர்வையூடாக, ஆட்சியாளர்களுக்கு சார்பாக மாற்றும் முயற்சியானது, விளையாட்டையும் அரசியலையும் கலக்கக் கூடாதென்று அடம் பிடிக்கும் தீவிரவாதிகளின் சிந்தனைக்கு விடப்படும் சவாலாகக் கருத வேண்டும்.
முரளியின் அதிகாரவாசிகள் சார்பான அரசியல் கருத்தினை, மிகவும் காட்டமான வகையில் கண்டித்துள்ளார் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன். காணாமல் போகடிக்கப்பட்ட மக்களின் சார்பாக தொடர்ச்சி யாகக் குரல் கொடுத்தவாறு பல போராட்டங்களை முன்னெடுக்கும் மனோ கணேசனுக்கு அந்த மக்களின் துயரமும், சீற்ற மும் நன்கு புரியும்.
சனல் 4 வெளியிட்ட இன அழிப்பு ஆவணங்கள் போலியானவையென்று இதுவரை எவராலும் நிரூபிக்கப்பட வில்லை. சர்வதேச சுயாதீன விசாரணையொன்று நிகழ்த்தப்பட்டால் அதன் உண்மைத்தன்மை உலகிற்கு வெளிச்சமாகும். அதைவிடுத்து, எந்த அறிவியல் உண்மை யின் அடிப்படையில் சனல் 4 இன் காணொளிகள் பொய்யென்று சுழல் பந்து வீச்சாளரால் சொல்ல முடிகின்றது.
வேறொரு கோணத்தில் பார்த்தால், இதனை அரசியல் பிரவேசம் ஒன்றிற்கான முன்னோட்டமாகவும் பார்க்கலாம். ஆனால், புகழின் உச்சாணிக் கொம்பில் அமர்ந்திருக்கும் எவரும், மக்களின் உணர்வோடும், வாழ்வோடும் விளையாட முற்பட்டால், ஒரு சிறு கணத்தில் மக்கள் நெஞ்சங்களிலிருந்து அகற்றப்ப டும் சோகமும் நடக்கும். கரகோஷம் செய்ய ஆட்கள் இருக்கமாட்டார்கள்.
பொதுநலவாய மாநாடு நடைபெற்ற வேளையில்தான், இந்த சுழல்பந்து வீச் சால் ஈழத்தமிழினம் ஆவேசப்பட்டது. ஆனால் ஆட்சியாளர் எதிர்பார்த்தது போல, எந்த விக்கெட்டையும் முரளிதரனால் வீழ்த்த முடியவில்லை. மழை போல் பொழிந்த எறிகணைகளை சந்தித்த மக்களுக்கு, இவ்வாறான சிறு சுழல்பந்து வீச்செல்லாம் ஒரு பொருட்டேயல்ல.
இருப்பினும் வர்த்தகக் குழுவோடு இலங்கை சென்ற பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், 2015 மே இல் நிறைவ டையும் பதவிக்காலத்தை மனதில் நிறுத்தி, சில காட்டமான கேள்விகளை எழுப்ப மறக்கவில்லை.
'சுயாதீன விசாரணையை இலங்கை அரசு நடத்தாவிட்டால், வருகிற மார்ச்சில் நவநீதம்பிள்ளை அம்மையார் கொண்டுவரும் சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றிற்கான பிரேரணையை ஆதரிப்போம்' என்று கமரூன் போட்ட வெடியால், அரசு அதிர்ந்தது. அதை முழுவதுமாக நம்பி சில ஈழத்தமிழ் அமைப்புக்களும், ஊடகங்களும் கொண்டாடத் தொடங்கி விட் டன. இவைதவிர, பிரித்தானியப் பிரதம ரைப் பாராட்டி கலைஞர் கருணாநிதியும் எழுதிவிட்டார்.
ஆனால் பூனைக்கு, ஐ.நா.மனித உரிமைப்பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையாரே மணி கட்டட் டும் என்கிறவகையில், பிரித்தானிய பிரதமர் தெரிவித்த கருத்துதான், பூகோள அரசியலில் இந்த வல்லரசாளர்கள் போடும் இரட்டை வேடங்களையும், தற்காப்பு நிலைகளையும் புரிய வைக்கிறது.
ஒடுக்கப்படும் தமிழ்த்தேசிய இனத்திற்கு, உண்மையாகவே உதவி செய்ய விரும்பினால். பாதுகாப்புச்சபையில் பிரித்தானிய அரசே இந்த தீர்மானத்தை முன்வைக்கலாம்.
வடக்கில் கால் பாதிக்கும் வல்லரசுத் தலைவர்கள் யாவரும், தற்காலிக ஆற்றுப்படுத்தலைத்தான் அங்கு வாழும் மக்களுக்கு அளிக்கின்றார்கள்.
இரணங்களின் மீது ஒரு மெல்லிய காற்று வருடிச் செல்கிறது. கண நேர மகிழ்வு, அடுத்தகணத்தில் தலைகீழாக புரட்டிப்போடப்படுகிறது. சற்று இளைப் பாறிய வெள்ளை வாகனங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கிவிடுகின்றன. காணா மல் போதல் என்கிற இயல்பு வாழ்வு மறுபடியும் ஒட்டிக் கொள்கிறது.
ஏதோவொரு மூலையில், அரசியல் பேசாமல், அபிவிருத்தி பற்றிப் பேசிக் கொண்டு மாகாணசபைகளும் அசைந் து கொண்டிருக்கின்றன அணுக்களைப்போல.
வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டுவரும் மாநாட்டு ஆரவாரங்கள் முடிவடைந்ததும், வரவு- செலவு திட்டத்திற்கான பெருவிழா ஆரம்பமாகிவிட்டது.
மாநாட்டிற்கு வருகை தந்த, பொதுநலவாய நாடுகளின் விழுமியங்களைக் காப்பாற்ற திடசங்கற்பம் பூண்டுள்ள இரட்சகர்கள் எவருமே, பாதுகாப்பு அமைச்சுக்கு இத்தனை கோடி பணத்தை ஏன் ஒதுக்கீடு செய்கிறீர்கள் என்று கேட்கவில்லை.
மனித உரிமை மீறல்களைத் தட்டிக்கேட்போம், அதட்டிக் கேட்போம் என்று சொன்னவர்கள், வர்த்தகக் குழுவோடு தான் இலங்கை சென்றார்கள்.
அதேவேளை, இவ் வரவு- செலவு திட்டமானது கிராமிய பொருளாதாரத்தை இலக்கு வைத்து உருவாக்கப்பட்டுள்ள தாக தலைநகர பொருளியல் நிபுணர்கள் விளக்கமளிக்கின்றார்கள். பாதுகாப்புத் துறையோடு நகர அபிவிருத்தி அமைச் சும் சேர்ந்திருப்பதால், ஒதுக்கப்படும் பெரிய தொகை பாதுகாப்பு அமைச்சுக்கு மட்டுமானதல்ல என்கிற வியாக்கியா னத்தை அரசு கூறும் என்கிறார்கள்.
இருப்பினும், பொதுநலவாய மாநாடு பெரியளவில் வெளிநாட்டு நேரடி முதலீ டுகளைக் கொண்டு வரவில்லை என் கிற செய்தியும் வருகின்றது. வரவு–-செல வுத் திட்ட குறைநிரப்ப, தேசிய சேமிப்பு வங்கியூடாக மீண்டும் ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான முறிகளை விற்ப தற்கு அரசு தயாராகலாம் என்று வேடிக் கையாகச் சொல்லப்படுகிறது.
சீனாவிடம் வாங்கிய கடனிற்கான வட் டிப்பணத்தைச் செலுத்த, மென்மேலும் கடன் வாங்கும் தவிர்க்க முடியாத சூழ் நிலைக்குள் அரசு தள்ளப் படுகிறது.
கடனை அடைக்கக் கடன் வாங்கும் நாட்டில் ஏராளமான பொருளியல் நிபு ணர்கள்.

11 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட பாட்டாயினும், முள்ளிவாய்க்கால் பேரழிவு முடிவுற்று நான்கு வருடங்கள் கழிந் தும், வலி. வடக்கில் கூடும் மக்களும், நீதி கோரும் காணாமல் போகடிக்கப்பட் ட மக்களின் உறவுகளும், அதனை உயிர்ப்புள்ள கவிதையாக இன்றும் நிறுத்தி வைத்துள்ளார்கள்.
ஒரு விடயம் மட்டும் ஊடக இரும்புத் திரைகளை, வெள்ளை வான்களின் உறுமல்களைத் தாண்டித் தெரிகிறது.
அது வேறொன்றுமில்லை. சுயாதீன சர்வதேச விசாரணையை வேண்டி நிற்கும் தமிழ் மக்களின் குரல்தான் அது.
அதை எப்படி உறுதியாகச் சொல்ல முடியும் என்கிறீர்களா? சர்வதேச நாடுக ளின் தலைவர்களும், ஐ.நா.சபையின் உயர்மட்டத் தலைவர்களும் தமிழர் தாய கப் பகுதிகளில் காலடி வைக்கும்போது, காணாமல் போன தமது உறவுகளை கண்டு பிடித்துத் தருமாறு, இவர்களிடமே அந்த மக்கள் திரண்டு சென்று முறையிடுகின்றார்கள்.
ஒடுக்கப்படும் தமிழினம் வேண்டுவது, சர்வதேச விசாரணை என்பதைத்தவிர வேறொன்றுமில்லை என்பதை உணர்த்த இது ஒன்றே போதும்.
அதேவேளை, பாதிப்புற்ற பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களின் வலிகளை யும், துயரங்களையும் கொச்சைப்படுத் தும் வகையில் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வழங்கிய நேர்காணல், இந்த ஆண்டின் மிகக் கொடுமையான விடயமாகப் பார்க்க வேண்டும்.
அத்தோடு, உலகிலுள்ள கிரிக்கெட் ஆதரவாளர்களை, தனது நட்சத்திர அந்தஸ்து போர்வையூடாக, ஆட்சியாளர்களுக்கு சார்பாக மாற்றும் முயற்சியானது, விளையாட்டையும் அரசியலையும் கலக்கக் கூடாதென்று அடம் பிடிக்கும் தீவிரவாதிகளின் சிந்தனைக்கு விடப்படும் சவாலாகக் கருத வேண்டும்.
முரளியின் அதிகாரவாசிகள் சார்பான அரசியல் கருத்தினை, மிகவும் காட்டமான வகையில் கண்டித்துள்ளார் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன். காணாமல் போகடிக்கப்பட்ட மக்களின் சார்பாக தொடர்ச்சி யாகக் குரல் கொடுத்தவாறு பல போராட்டங்களை முன்னெடுக்கும் மனோ கணேசனுக்கு அந்த மக்களின் துயரமும், சீற்ற மும் நன்கு புரியும்.
சனல் 4 வெளியிட்ட இன அழிப்பு ஆவணங்கள் போலியானவையென்று இதுவரை எவராலும் நிரூபிக்கப்பட வில்லை. சர்வதேச சுயாதீன விசாரணையொன்று நிகழ்த்தப்பட்டால் அதன் உண்மைத்தன்மை உலகிற்கு வெளிச்சமாகும். அதைவிடுத்து, எந்த அறிவியல் உண்மை யின் அடிப்படையில் சனல் 4 இன் காணொளிகள் பொய்யென்று சுழல் பந்து வீச்சாளரால் சொல்ல முடிகின்றது.
வேறொரு கோணத்தில் பார்த்தால், இதனை அரசியல் பிரவேசம் ஒன்றிற்கான முன்னோட்டமாகவும் பார்க்கலாம். ஆனால், புகழின் உச்சாணிக் கொம்பில் அமர்ந்திருக்கும் எவரும், மக்களின் உணர்வோடும், வாழ்வோடும் விளையாட முற்பட்டால், ஒரு சிறு கணத்தில் மக்கள் நெஞ்சங்களிலிருந்து அகற்றப்ப டும் சோகமும் நடக்கும். கரகோஷம் செய்ய ஆட்கள் இருக்கமாட்டார்கள்.
பொதுநலவாய மாநாடு நடைபெற்ற வேளையில்தான், இந்த சுழல்பந்து வீச் சால் ஈழத்தமிழினம் ஆவேசப்பட்டது. ஆனால் ஆட்சியாளர் எதிர்பார்த்தது போல, எந்த விக்கெட்டையும் முரளிதரனால் வீழ்த்த முடியவில்லை. மழை போல் பொழிந்த எறிகணைகளை சந்தித்த மக்களுக்கு, இவ்வாறான சிறு சுழல்பந்து வீச்செல்லாம் ஒரு பொருட்டேயல்ல.
இருப்பினும் வர்த்தகக் குழுவோடு இலங்கை சென்ற பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், 2015 மே இல் நிறைவ டையும் பதவிக்காலத்தை மனதில் நிறுத்தி, சில காட்டமான கேள்விகளை எழுப்ப மறக்கவில்லை.
'சுயாதீன விசாரணையை இலங்கை அரசு நடத்தாவிட்டால், வருகிற மார்ச்சில் நவநீதம்பிள்ளை அம்மையார் கொண்டுவரும் சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றிற்கான பிரேரணையை ஆதரிப்போம்' என்று கமரூன் போட்ட வெடியால், அரசு அதிர்ந்தது. அதை முழுவதுமாக நம்பி சில ஈழத்தமிழ் அமைப்புக்களும், ஊடகங்களும் கொண்டாடத் தொடங்கி விட் டன. இவைதவிர, பிரித்தானியப் பிரதம ரைப் பாராட்டி கலைஞர் கருணாநிதியும் எழுதிவிட்டார்.
ஆனால் பூனைக்கு, ஐ.நா.மனித உரிமைப்பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையாரே மணி கட்டட் டும் என்கிறவகையில், பிரித்தானிய பிரதமர் தெரிவித்த கருத்துதான், பூகோள அரசியலில் இந்த வல்லரசாளர்கள் போடும் இரட்டை வேடங்களையும், தற்காப்பு நிலைகளையும் புரிய வைக்கிறது.
ஒடுக்கப்படும் தமிழ்த்தேசிய இனத்திற்கு, உண்மையாகவே உதவி செய்ய விரும்பினால். பாதுகாப்புச்சபையில் பிரித்தானிய அரசே இந்த தீர்மானத்தை முன்வைக்கலாம்.
வடக்கில் கால் பாதிக்கும் வல்லரசுத் தலைவர்கள் யாவரும், தற்காலிக ஆற்றுப்படுத்தலைத்தான் அங்கு வாழும் மக்களுக்கு அளிக்கின்றார்கள்.
இரணங்களின் மீது ஒரு மெல்லிய காற்று வருடிச் செல்கிறது. கண நேர மகிழ்வு, அடுத்தகணத்தில் தலைகீழாக புரட்டிப்போடப்படுகிறது. சற்று இளைப் பாறிய வெள்ளை வாகனங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கிவிடுகின்றன. காணா மல் போதல் என்கிற இயல்பு வாழ்வு மறுபடியும் ஒட்டிக் கொள்கிறது.
ஏதோவொரு மூலையில், அரசியல் பேசாமல், அபிவிருத்தி பற்றிப் பேசிக் கொண்டு மாகாணசபைகளும் அசைந் து கொண்டிருக்கின்றன அணுக்களைப்போல.
வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டுவரும் மாநாட்டு ஆரவாரங்கள் முடிவடைந்ததும், வரவு- செலவு திட்டத்திற்கான பெருவிழா ஆரம்பமாகிவிட்டது.
மாநாட்டிற்கு வருகை தந்த, பொதுநலவாய நாடுகளின் விழுமியங்களைக் காப்பாற்ற திடசங்கற்பம் பூண்டுள்ள இரட்சகர்கள் எவருமே, பாதுகாப்பு அமைச்சுக்கு இத்தனை கோடி பணத்தை ஏன் ஒதுக்கீடு செய்கிறீர்கள் என்று கேட்கவில்லை.
மனித உரிமை மீறல்களைத் தட்டிக்கேட்போம், அதட்டிக் கேட்போம் என்று சொன்னவர்கள், வர்த்தகக் குழுவோடு தான் இலங்கை சென்றார்கள்.
அதேவேளை, இவ் வரவு- செலவு திட்டமானது கிராமிய பொருளாதாரத்தை இலக்கு வைத்து உருவாக்கப்பட்டுள்ள தாக தலைநகர பொருளியல் நிபுணர்கள் விளக்கமளிக்கின்றார்கள். பாதுகாப்புத் துறையோடு நகர அபிவிருத்தி அமைச் சும் சேர்ந்திருப்பதால், ஒதுக்கப்படும் பெரிய தொகை பாதுகாப்பு அமைச்சுக்கு மட்டுமானதல்ல என்கிற வியாக்கியா னத்தை அரசு கூறும் என்கிறார்கள்.
இருப்பினும், பொதுநலவாய மாநாடு பெரியளவில் வெளிநாட்டு நேரடி முதலீ டுகளைக் கொண்டு வரவில்லை என் கிற செய்தியும் வருகின்றது. வரவு–-செல வுத் திட்ட குறைநிரப்ப, தேசிய சேமிப்பு வங்கியூடாக மீண்டும் ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான முறிகளை விற்ப தற்கு அரசு தயாராகலாம் என்று வேடிக் கையாகச் சொல்லப்படுகிறது.
சீனாவிடம் வாங்கிய கடனிற்கான வட் டிப்பணத்தைச் செலுத்த, மென்மேலும் கடன் வாங்கும் தவிர்க்க முடியாத சூழ் நிலைக்குள் அரசு தள்ளப் படுகிறது.
கடனை அடைக்கக் கடன் வாங்கும் நாட்டில் ஏராளமான பொருளியல் நிபு ணர்கள்.





































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக