இந்த பொலிசிஸ்ரிக் ஓவரி நோய் பெண்களில் பல பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றது. அவையாவன ஒழுங்கற்ற மாதவிடாய் சக்கரம், தாமதமாகும் குழந்தைப்பாக்கியம், உடற்பருமன் அதிகரித்தல் மற்றும் ஹோர்மோன்களின் (Hormones) சமநிலையற்ற தன்மையால் முகத்தின் தோற்றத்தில் ஏற்படும் அசாதாரண மாற்றங்கள் என்பனவாகும். இந்த நோய் பெண்களின் பிற்கால வாழ்க்கையிலும் கெடுதலை உண்டு பண்ணும்.
இந் நோயின் அறிகுறிகள்
*ஒழுங்கற்ற மாதவிடாய் சக்கரம் அல்லது மாதக்கணக்கில் மாதவிடாய் வராமல் இருத்தல்.
*குழந்தைப் பாக்கியம் அல்லது கருத்தரித்தல் தாமதமடைதல்.
*முகத்திலும் உடம்பிலும் வழமையைவிட அதிகமாக உரோமங்கள் வளருதல்.
*தலை முடி உதிர்தல்.
*அதி கூடிய உடற்பருமனைக் கொண்டிருத்தல், உடற்பருமன் வேகமாக அதிகரித்தல், மற்றும் உடற்பருமனைக் குறைக்க முயற்சிகள் எடுக்கின்றபோது இது குறைவடைதல் மிக மெதுவாகவே நடைபெறும்.
*முகத்தில் பருக்கள் தோன்றுதல் (Acne).
*மனம் சோர்வடைதல் மற்றும் மனநிலை மாற்றங்கள்.
இந்த நோய் அறிகுறிகள் பெண்களுக்கு பெண்கள் மாறுபடும். சில பெண்களின் இந்த நோய் அறிகுறிகள் சிறிதளவில் இருக்கும். ஆனால், வேறு சில பெண்களில் இவை அதிகூடிய உக்கிர நிலையில் இருக்கும்.
பொலிசிஸ்ரிக் ஓவரி நோய் எதனால் உருவாகின்றது?
இதற்கு பல விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றது. இந்த நோய் சிலவேளைகளில் பரம்பரையாகவும் கடத்தப்படும். உங்களது தாய் மற்றும் சகோதரிகள் போன்ற உறவினர்களில் இந்த நோய் இருந்தால் உங்களுக்கு இது உருவாகுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இதன் நோய் அறிகுறிகள் அசாதாரண ஹோர்மோன்களின் (Hormones) அளவுடன் தொடர்புபட்டுள்ளது. ஹோர்மோன்கள் என்றால் எமது உடற்செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் இரத்தத்தில் காணப்படும் இரசாயன பதார்த்தம். ஆண்களில் காணப்படும் ரெஸ்ரெஸ்ரரோன் (Testosterone) என்ற ஹோர்மோன். சாதாரணமாக பெண்கள் சூலகத்தில் இருந்து சிறிதளவில் சுரக்கப்படும். பொலிசிஸ்ரிக் ஓவரி நோய் உடைய பெண்களில் இந்த ரெஸ்ரெஸ்ரரோன் (Testosterone) கூடுதலாக சுரக்கப்பட்டு பெரும்பாலான நோய் அறிகுறி தோன்றக் காரணமாக உள்ளது.
இன்சுலின் (Insulin) என்ற ஹோர்மோன் எமது இரத்தத்தில் வெல்லத்தின் அளவை கட்டுப்படுத்துகின்றது. பொலிசிஸ்ரிக் ஓவரி நோய் உடையவர்களின் உடம்பில் இன்சுலின் சரியாக தொழிற்பட முடியாதுள்ளது. எனவே, வெல்லத்தின் அளவு உயர்கின்றது. இந்த வெல்லத்தின் உயர்வைக் கட்டுப்படுத்த உடம்பில் மேலும் மேலும் இன்சுலின் சுரக்கப்படுகிறது. அதிகளவில் இன்சுலின் இருப்பதால் உடற்பருமன் அதிகரிக்கும். மாதவிடாய் ஒழுங்கற்றதாகும். கருத்தரித்தல் தாமதமடையும் மற்றும் அதிகளவில் ரெஸ்ரெஸ்ரரோன் உருவாகும்.
பொலிசிஸ்ரிக் ஓவரி நோய் எவ்வாறு கண்டு பிடிக்கப்படுகின்றது?
பொலிசிஸ்ரிக் ஓவரி நோய் உடைய பெண்களில் பலவிதமான நோய் அறிகுறிகள் தோன்றி மறைகின்றது. இதனால் இந்த நோயைக் கண்டு பிடிப்பதில் கடினம் உள்ளது.
பின்வரும் மூன்று குணாதிசயங்களில் ஏதாவது இரண்டு குணாதிசயங்கள் இருந்தாலே இந்த நோய் உறுதிப்படுத்தப்படும்.
1. ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது மாதவிடாயே வராது இருத்தல்.
2. முகத்திலும் உடம்பிலும் அதிகளவில் உரோமம் வளருதல் அல்லது இரத்தத்தில் அதிகளவில் ரெஸ்ரெஸ்ரரோன் இருத்தல்.
3. ஸ்கேன் (Scan) பரிசோதனையில் பொலிசிஸ்ரிக் ஓவரி காணப்படுதல்.
பொலிசிஸ்ரிக் ஓவரி நோயினால் பிற்கால வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புக்கள் எவை?
இந்த நோய் உடையவர்களில் பின்வரும் சிக்கல்கள் பிற்காலவாழ்க்கையில் தோன்றும்.
* நீரிழிவு, சலரோக நோய்
பொலிசிஸ்ரிக் ஒவரி நோய் உடைய 10 பெண்களை எடுத்தால் 1 அல்லது 2 பெண்களுக்கு நீரிழிவு நோய் ஒரு காலகட்டத்தில் உருவாகும். அத்துடன் 40 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பின் உறவினர்களுக்கு நீரிழிவு நோய் இருப்பின் கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் ஏற்பட்டிருப்பின் மற்றும் உடற்பருமன் அதிகமாக இருப்பின் நீரிழிவு நோய் கூடுதலாக ஏற்படும்.
* உயர் குருதி அமுக்கம்
பொலிசிஸ்ரிக் ஒவரி நோய் உடைய பெண்களில் உயர் குருதி அமுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. அத்துடன் இது உடற்பருமன் அதிகமாக உள்ளவர்களில் கூடுதலாக ஏற்படும்.
இருதய மாரடைப்பு நோய்கள்
பொலிசிஸ்ரிக் ஓவரி நோய் உடையவர்களில் நீரிழிவு நோயோ அல்லது உயர் குருதி அமுக்கமோ இருப்பின் இருதய, மாரடைப்பு நோய்கள் ஏற்படவாய்ப்புள்ளது.
கர்ப்பப்பை புற்றுநோய்கள்
மாதவிடாய் 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒரு தடவை வருபவர்களில் கர்ப்பப்பையின் உட்சுவர் அதிகளவில் தடிப்படைந்து சில பெண்களில் இது புற்று நோயாக மாறும். இதற்கு புறஹொஸ்ரரோன் (Progestorone) மாத்திரைகளை பாவித்து கர்ப்பப்பையை பாதுகாப்பது அவசியம். இவ்வாறு மாதவிடாய் வராதவர்களில் இந்த மாத்திரைகளை 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒரு தடவை 5 நாட்களுக்கு உட்கொண்டு மாதவிடாயை தூண்டுவதன் மூலம் கர்ப்பப்பை புற்றுநோயைத் தடுக்கலாம்.
இந்த நோயினால் ஏற்படும் சிக்கல்களைத் தடுக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
ஆரோக்கியமான சம நிலையான உணவுகளை உட்கொள்ள வேண்டும். அல்லது பழங்கள், மரக்கறிகள், தானிய வகைகள், சிவத்த அரிசி, அவரை, கடலை மற்றும் மீன் வகைகள் உணவில் உள்ளடக்க வேண்டும். கொழுப்பு, மாச்சத்து, இனிப்பு வெல்லங்கள் மற்றும் உப்பு என்பன தவிர்க்கப்படவேண்டும். -உணவுகளை ஒழுங்கான நேரத்துக்கு குறிப்பாக காலை உணவு சரியாக எடுக்க வேண்டும்.
-ஒழுங்கான உடற்பயிற்சி முக்கியம் ஒரு கிழமையில் ஆகக்குறைந்தது 3 தடவைகளாவது 30 நிமிட உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
இவ்வாறு சிறந்த உணவுப்பழக்கத்தினாலும் ஒழுங்கான உடற்பயிற்சியினாலும் உடற்பருமனை உங்களது உயரத்துக்கு ஏற்ற அளவு கட்டுப்பாடாக வைத்திருந்தால் இந் நோயின் உருவாக்கத்தையும் அதன் உக்கிரத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். இதன் மூலம் மாதவிடாய்களை ஒழுங்காக வரச்செய்யலாம். குழந்தைப் பாக்கியத்தை துரிதப்படுத்தலாம். முகத்தில் ஏற்படும் அசாதாரண தோற்றத்தை குறைக்கலாம் மற்றும் பிற்காலத்தில் ஏற்படும் உடல் நலச் சிக்கலான நீரிழிவு நோய், மாரடைப்பு நோய் மற்றும் கர்ப்பப்பை புற்று நோய் என்பன தடுக்கப்படும்.
பொலிசிஸ்ரிக் ஓவரி நோயினால் ஏற்படும் சிக்கல்களுக்கு வேறு என்ன சிகிச்சைகள் உள்ளன.
-முகத்தில் அசாதாரண உரோமங்கள் இருந்தால் அவற்றை அகற்றும் பலவிதமான சிகிச்சைகளுடன் அவ்வாறான உரோமங்கள் வளர்வதனைத் தடுக்கும் மருந்துகளை முகத்தில் பூசுதல் மற்றும் மாத்திரைகளை உட்கொள்ளுதல் இதற்கு பலன் தரும்.
-* ஒழுங்கற்ற மாதவிடாய் முக்கிய பிரச்சினையெனில் இதனை ஒழுங்காக வரவழைப்பதற்கான ஹோர்மோன் மாத்திரைகளையோ அல்லது குடும்பக்கட்டுப்பாட்டு வில்லைகள் போன்ற நாளாந்தம் உட்கொள்ளும் மாத்திரைகளையோ இதற்கு பாவிக்கலாம்.
-* குழந்தைப் பாக்கியம் தாமதமடைதல் ஒரு முக்கிய பிரச்சினை எனில் இதற்குக் காரணம் சூல்முட்டை வளர்ந்து வெளியேறாது இருத்தலே ஆகும். இதனைத் தூண்டுவதற்கு முதலில் உடற்பருமனை குறைக்க வேண்டும். அடுத்ததாக மெற்போர்மின் (Metformin) போன்ற நீரிழிவு நோய்க்கு பாவிக்கப்படும் மாத்திரைகளே இந்த நோய்க்கும் பாவிக்கப்படும். இதனால் இன்சுலின் தொழிற்பாடு உடம்பில் ஒழுங்காக நடைபெறும். இதன்போது இன்சுலின் அளவு உடம்பில் கட்டுப்பாட்டில் வருகின்றது. இதனால் இந்நோயின் உக்கிரம் குறைவடையும். மேலும் சூல் முட்டை வளருவதனை தூண்டும் மாத்திரைகள் அல்லது ஊசிகள் என்பனவும் பாவிக்கப்படும். இவை பலனளிக்காவிட்டால் லப்ரஸ்கோபி (Laparoscopy) சத்திரசிகிச்சை மூலம் சூலகங்களில் சிறிய துளைகள் போடப்பட்டு (Ovarian drilling) சூல் முட்டை வளர்ச்சியை தூண்டலாம்.
இந்த நோயை நாம் இன்று கூடுதலாக காண்பதற்கு காரணம் எமது வாழ்க்கை முறையே.
அதாவது நாம் உட்கொள்ளும் கொழுப்புச்சத்தும் மாச்சத்தும் நிறைந்த பலவகை சுவை உணவுகளுக்கு ஈடாக நாம் எமது வேலைகளைச் செய்து சக்தியை விரயமாக்குவது இல்லை. ஏனென்றால் நாம் செய்து வந்த வேலைளை இன்று எமது வீடுகளில் இயந்திரங்கள் செய்கின்றன. இதுவே இன்று பெண்களின் உடற்பருமன் அதிகரித்து செல்ல மூலகாரணம். எனவே, எமது அன்றாட வேலைகளையே உடற்பயிற்சிகளாக்கி உடற்பருமனை கட்டுப்பாட்டில் வைத்து இந்த நோயில் இருந்து விடுபடுவோமாக.
டாக்டர் கு.சுஜாகரன் மகப்பேற்று பெண் நோயியல் சத்திரசிகிச்சை நிபுணர்

இந் நோயின் அறிகுறிகள்
*ஒழுங்கற்ற மாதவிடாய் சக்கரம் அல்லது மாதக்கணக்கில் மாதவிடாய் வராமல் இருத்தல்.
*குழந்தைப் பாக்கியம் அல்லது கருத்தரித்தல் தாமதமடைதல்.
*முகத்திலும் உடம்பிலும் வழமையைவிட அதிகமாக உரோமங்கள் வளருதல்.
*தலை முடி உதிர்தல்.
*அதி கூடிய உடற்பருமனைக் கொண்டிருத்தல், உடற்பருமன் வேகமாக அதிகரித்தல், மற்றும் உடற்பருமனைக் குறைக்க முயற்சிகள் எடுக்கின்றபோது இது குறைவடைதல் மிக மெதுவாகவே நடைபெறும்.
*முகத்தில் பருக்கள் தோன்றுதல் (Acne).
*மனம் சோர்வடைதல் மற்றும் மனநிலை மாற்றங்கள்.
இந்த நோய் அறிகுறிகள் பெண்களுக்கு பெண்கள் மாறுபடும். சில பெண்களின் இந்த நோய் அறிகுறிகள் சிறிதளவில் இருக்கும். ஆனால், வேறு சில பெண்களில் இவை அதிகூடிய உக்கிர நிலையில் இருக்கும்.
பொலிசிஸ்ரிக் ஓவரி நோய் எதனால் உருவாகின்றது?
இதற்கு பல விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றது. இந்த நோய் சிலவேளைகளில் பரம்பரையாகவும் கடத்தப்படும். உங்களது தாய் மற்றும் சகோதரிகள் போன்ற உறவினர்களில் இந்த நோய் இருந்தால் உங்களுக்கு இது உருவாகுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இதன் நோய் அறிகுறிகள் அசாதாரண ஹோர்மோன்களின் (Hormones) அளவுடன் தொடர்புபட்டுள்ளது. ஹோர்மோன்கள் என்றால் எமது உடற்செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் இரத்தத்தில் காணப்படும் இரசாயன பதார்த்தம். ஆண்களில் காணப்படும் ரெஸ்ரெஸ்ரரோன் (Testosterone) என்ற ஹோர்மோன். சாதாரணமாக பெண்கள் சூலகத்தில் இருந்து சிறிதளவில் சுரக்கப்படும். பொலிசிஸ்ரிக் ஓவரி நோய் உடைய பெண்களில் இந்த ரெஸ்ரெஸ்ரரோன் (Testosterone) கூடுதலாக சுரக்கப்பட்டு பெரும்பாலான நோய் அறிகுறி தோன்றக் காரணமாக உள்ளது.
இன்சுலின் (Insulin) என்ற ஹோர்மோன் எமது இரத்தத்தில் வெல்லத்தின் அளவை கட்டுப்படுத்துகின்றது. பொலிசிஸ்ரிக் ஓவரி நோய் உடையவர்களின் உடம்பில் இன்சுலின் சரியாக தொழிற்பட முடியாதுள்ளது. எனவே, வெல்லத்தின் அளவு உயர்கின்றது. இந்த வெல்லத்தின் உயர்வைக் கட்டுப்படுத்த உடம்பில் மேலும் மேலும் இன்சுலின் சுரக்கப்படுகிறது. அதிகளவில் இன்சுலின் இருப்பதால் உடற்பருமன் அதிகரிக்கும். மாதவிடாய் ஒழுங்கற்றதாகும். கருத்தரித்தல் தாமதமடையும் மற்றும் அதிகளவில் ரெஸ்ரெஸ்ரரோன் உருவாகும்.
பொலிசிஸ்ரிக் ஓவரி நோய் எவ்வாறு கண்டு பிடிக்கப்படுகின்றது?
பொலிசிஸ்ரிக் ஓவரி நோய் உடைய பெண்களில் பலவிதமான நோய் அறிகுறிகள் தோன்றி மறைகின்றது. இதனால் இந்த நோயைக் கண்டு பிடிப்பதில் கடினம் உள்ளது.
பின்வரும் மூன்று குணாதிசயங்களில் ஏதாவது இரண்டு குணாதிசயங்கள் இருந்தாலே இந்த நோய் உறுதிப்படுத்தப்படும்.
1. ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது மாதவிடாயே வராது இருத்தல்.
2. முகத்திலும் உடம்பிலும் அதிகளவில் உரோமம் வளருதல் அல்லது இரத்தத்தில் அதிகளவில் ரெஸ்ரெஸ்ரரோன் இருத்தல்.
3. ஸ்கேன் (Scan) பரிசோதனையில் பொலிசிஸ்ரிக் ஓவரி காணப்படுதல்.
பொலிசிஸ்ரிக் ஓவரி நோயினால் பிற்கால வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புக்கள் எவை?
இந்த நோய் உடையவர்களில் பின்வரும் சிக்கல்கள் பிற்காலவாழ்க்கையில் தோன்றும்.
* நீரிழிவு, சலரோக நோய்
பொலிசிஸ்ரிக் ஒவரி நோய் உடைய 10 பெண்களை எடுத்தால் 1 அல்லது 2 பெண்களுக்கு நீரிழிவு நோய் ஒரு காலகட்டத்தில் உருவாகும். அத்துடன் 40 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பின் உறவினர்களுக்கு நீரிழிவு நோய் இருப்பின் கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் ஏற்பட்டிருப்பின் மற்றும் உடற்பருமன் அதிகமாக இருப்பின் நீரிழிவு நோய் கூடுதலாக ஏற்படும்.
* உயர் குருதி அமுக்கம்
பொலிசிஸ்ரிக் ஒவரி நோய் உடைய பெண்களில் உயர் குருதி அமுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. அத்துடன் இது உடற்பருமன் அதிகமாக உள்ளவர்களில் கூடுதலாக ஏற்படும்.
இருதய மாரடைப்பு நோய்கள்
பொலிசிஸ்ரிக் ஓவரி நோய் உடையவர்களில் நீரிழிவு நோயோ அல்லது உயர் குருதி அமுக்கமோ இருப்பின் இருதய, மாரடைப்பு நோய்கள் ஏற்படவாய்ப்புள்ளது.
கர்ப்பப்பை புற்றுநோய்கள்
மாதவிடாய் 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒரு தடவை வருபவர்களில் கர்ப்பப்பையின் உட்சுவர் அதிகளவில் தடிப்படைந்து சில பெண்களில் இது புற்று நோயாக மாறும். இதற்கு புறஹொஸ்ரரோன் (Progestorone) மாத்திரைகளை பாவித்து கர்ப்பப்பையை பாதுகாப்பது அவசியம். இவ்வாறு மாதவிடாய் வராதவர்களில் இந்த மாத்திரைகளை 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒரு தடவை 5 நாட்களுக்கு உட்கொண்டு மாதவிடாயை தூண்டுவதன் மூலம் கர்ப்பப்பை புற்றுநோயைத் தடுக்கலாம்.
இந்த நோயினால் ஏற்படும் சிக்கல்களைத் தடுக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
ஆரோக்கியமான சம நிலையான உணவுகளை உட்கொள்ள வேண்டும். அல்லது பழங்கள், மரக்கறிகள், தானிய வகைகள், சிவத்த அரிசி, அவரை, கடலை மற்றும் மீன் வகைகள் உணவில் உள்ளடக்க வேண்டும். கொழுப்பு, மாச்சத்து, இனிப்பு வெல்லங்கள் மற்றும் உப்பு என்பன தவிர்க்கப்படவேண்டும். -உணவுகளை ஒழுங்கான நேரத்துக்கு குறிப்பாக காலை உணவு சரியாக எடுக்க வேண்டும்.
-ஒழுங்கான உடற்பயிற்சி முக்கியம் ஒரு கிழமையில் ஆகக்குறைந்தது 3 தடவைகளாவது 30 நிமிட உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
இவ்வாறு சிறந்த உணவுப்பழக்கத்தினாலும் ஒழுங்கான உடற்பயிற்சியினாலும் உடற்பருமனை உங்களது உயரத்துக்கு ஏற்ற அளவு கட்டுப்பாடாக வைத்திருந்தால் இந் நோயின் உருவாக்கத்தையும் அதன் உக்கிரத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். இதன் மூலம் மாதவிடாய்களை ஒழுங்காக வரச்செய்யலாம். குழந்தைப் பாக்கியத்தை துரிதப்படுத்தலாம். முகத்தில் ஏற்படும் அசாதாரண தோற்றத்தை குறைக்கலாம் மற்றும் பிற்காலத்தில் ஏற்படும் உடல் நலச் சிக்கலான நீரிழிவு நோய், மாரடைப்பு நோய் மற்றும் கர்ப்பப்பை புற்று நோய் என்பன தடுக்கப்படும்.
பொலிசிஸ்ரிக் ஓவரி நோயினால் ஏற்படும் சிக்கல்களுக்கு வேறு என்ன சிகிச்சைகள் உள்ளன.
-முகத்தில் அசாதாரண உரோமங்கள் இருந்தால் அவற்றை அகற்றும் பலவிதமான சிகிச்சைகளுடன் அவ்வாறான உரோமங்கள் வளர்வதனைத் தடுக்கும் மருந்துகளை முகத்தில் பூசுதல் மற்றும் மாத்திரைகளை உட்கொள்ளுதல் இதற்கு பலன் தரும்.
-* ஒழுங்கற்ற மாதவிடாய் முக்கிய பிரச்சினையெனில் இதனை ஒழுங்காக வரவழைப்பதற்கான ஹோர்மோன் மாத்திரைகளையோ அல்லது குடும்பக்கட்டுப்பாட்டு வில்லைகள் போன்ற நாளாந்தம் உட்கொள்ளும் மாத்திரைகளையோ இதற்கு பாவிக்கலாம்.
-* குழந்தைப் பாக்கியம் தாமதமடைதல் ஒரு முக்கிய பிரச்சினை எனில் இதற்குக் காரணம் சூல்முட்டை வளர்ந்து வெளியேறாது இருத்தலே ஆகும். இதனைத் தூண்டுவதற்கு முதலில் உடற்பருமனை குறைக்க வேண்டும். அடுத்ததாக மெற்போர்மின் (Metformin) போன்ற நீரிழிவு நோய்க்கு பாவிக்கப்படும் மாத்திரைகளே இந்த நோய்க்கும் பாவிக்கப்படும். இதனால் இன்சுலின் தொழிற்பாடு உடம்பில் ஒழுங்காக நடைபெறும். இதன்போது இன்சுலின் அளவு உடம்பில் கட்டுப்பாட்டில் வருகின்றது. இதனால் இந்நோயின் உக்கிரம் குறைவடையும். மேலும் சூல் முட்டை வளருவதனை தூண்டும் மாத்திரைகள் அல்லது ஊசிகள் என்பனவும் பாவிக்கப்படும். இவை பலனளிக்காவிட்டால் லப்ரஸ்கோபி (Laparoscopy) சத்திரசிகிச்சை மூலம் சூலகங்களில் சிறிய துளைகள் போடப்பட்டு (Ovarian drilling) சூல் முட்டை வளர்ச்சியை தூண்டலாம்.
இந்த நோயை நாம் இன்று கூடுதலாக காண்பதற்கு காரணம் எமது வாழ்க்கை முறையே.
அதாவது நாம் உட்கொள்ளும் கொழுப்புச்சத்தும் மாச்சத்தும் நிறைந்த பலவகை சுவை உணவுகளுக்கு ஈடாக நாம் எமது வேலைகளைச் செய்து சக்தியை விரயமாக்குவது இல்லை. ஏனென்றால் நாம் செய்து வந்த வேலைளை இன்று எமது வீடுகளில் இயந்திரங்கள் செய்கின்றன. இதுவே இன்று பெண்களின் உடற்பருமன் அதிகரித்து செல்ல மூலகாரணம். எனவே, எமது அன்றாட வேலைகளையே உடற்பயிற்சிகளாக்கி உடற்பருமனை கட்டுப்பாட்டில் வைத்து இந்த நோயில் இருந்து விடுபடுவோமாக.
டாக்டர் கு.சுஜாகரன் மகப்பேற்று பெண் நோயியல் சத்திரசிகிச்சை நிபுணர்





































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக