தேயிலைப் பயிர்ச்செய்கையை இந்த நாட்டில் அறிமுகப்படுத் தியவர்கள் ஆங்கிலேயர்களாவர். அதுமட்டுமின்றி இந்த நாட்டுக்கு இந்திய வம்சாவளித் தமிழர்கள் வரு வதற்கும் அவர்களே காரணமாக இருந்திருக்கின்றார்கள். இந்தியத் தமிழர்கள் இந்த நாட்டிலேயே நிரந்தரமாக தங்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆனால், ஆங்கிலேயரோ பல ஆண்டுகளுக்கு முன்னரே நாட்டைவிட்டு வெளியேறி தாய்நாட்டுக்குத் திரும்பிவிட்டனர். இருதரப்பினருக்குமிடையில் எந்தவிதமான தொடர்புகளும் இல்லாமல்போய்விட்டது.
இந்த நிலையில் கடந்தவாரம் கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரித்தானிய மகாராணியின் பிரதிநிதியாக இளவரசர் சார்ள்ஸ் அவருடைய பாரியாருடன் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் அப்படியே மலையகத்திற்கும் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். அவர் முதலில் கண்டி தலதாமாளிகைக்கும் அதன்பின்னர் நுவரெலியாவிற்கும் விஜயம் செய்தார்.
நுவரெலியாவில் “மென்கப்” என்ற விஷேட தேவையுடையோர் பாடசாலை ஒன்றுக்கு இளவரசர் சார்ள்ஸ் விஜயம் செய்தார். அங்குள்ள விஷேட தேவையுடைய மாணவர்களுடன் உரையாடி, பாடி மகிழ்ந்தார். இது அந்த மாணவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.
இளவரசர் தமது மலையக விஜயத்தின்போது தோட்டங்களுக்குச் சென்று சென்று தேயிலைச் செடிகள், தேயிலைத் தொழிற்சாலை, தொழிலாளர்கள், அவர்களின் வாழ்க்கை நிலை என்பவற்றை நேரில் பார்த்து அறிந்துகொள்வார் என்றுதான் நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்கள்! ஆனால் அவ்வாறு எதுவுமில்லை.
நுவரெலியாவுக்கு ஹெலிகொப்டர் மூலம் வந்த அவர் அங்கிருந்து (தரைமார்க்கமாக) லபுக்கலை தோட்டத்திற்கு வந்தார். அவரை குறித்த (லபுக்கலை) தோட்டத்தின் உயர்அதிகாரிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் தோட்ட நிருவாகிகள் ஆகியோர் வரவேற்றனர்.
அங்கிருந்த அனைவரிடமும் சுமுகமாக உரையாடிய இளவரசர் தமது சந்தேகங்களை அங்கிருந்தவர்களிடம் கேட்டு நிவர்த்தி செய்துகொண்டார். பின்னர் அவரின் பிறந்த தினத்தையொட்டி அங்கு தயாராக வைக்கப்பட்டிருந்த கேக் வெட்டப்பட்டது. பல நூற்றுக்கணக்கான வண்ணப் பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டன.
பின்னர், பெண்கள் கொழுந்து பறிக்கும் இடத்திற்கு இளவரசர் அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு கொழுந்து பறித்த பெண்கள் மிகவும் அழகாக காட்சியளித்தனர். வழமையாக தோட்டத்தொழிலாளர் உடுத்தும் உடையிலிருந்து வேறுபட்டு அதாவது இடுப்பில் கனமான பொலித்தீன் ரெட்டு மற்றும் தலையில் கொங்கானி போன்றவை இல்லாமல் காணப்பட்டனர். புதியபட்டுச் சேலையும், வண்ணவண்ண அணிகலன்களும் அணிந்திருந்தனர்.
விஷேடமாக பழைய பாரம்பரிய மூங்கில் கூடைகளின்றி நவீன கொழுந்து கூடைகளை சுமந்தபடி இருந்தனர். வழமையாக தோட்டமக்கள் கொழுந்து பறிக்க செல்வதுபோல் இருக்க வில்லை. கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண்ணான டி..வினிதமேரியிடம் வயது என்ன? பெயர் என்ன? என்று மாத்திரமே இளவரசர் கேட்டார். சுமார் 25 பெண்கள் அங்கு கொழுந்துபறித்தபடி இருந்தனர்.
அதன்பின் புதிதாக அமைக்கப்பட்ட தேயிலை நூதன சாலையை திறந்து வைத்தார். அவருக் கும் நினைவுப்பரிசுகள்; வழங்கப்பட்டன. ஒருபுறம் பியானோ வாத்தியம் இசைக்கப்பட்டு கொண்டிருந்தது. நூதன சாலையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த அவரின் தாயாரின் படத்தை பார்வையிட்டார். ஏற்கனவே தாயார் மேற்படி தோட்டத்திற்கு வருகை தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.. பின்பு தகவல் தொழில்நுட்ப பிரிவையும் பார்வையிட்டார். அங்கு தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் இருந்தமை ஒரு விஷேட அம்சமாகும்.
பின்னர்; தேநீர் ருசி பார்க்கும் பிரிவிற்கு அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு பல தரப்பட்ட தேயிலைவகைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட தேநீரை ருசித்த இளவரசர் தனக்குப் பிடித்த சுவையொன்றை தெரிவு செய்து சந்தோஷமடைந்தார். அத்துடன் இவர் பிரித்தானியாவில், இலங்கை தேயிலையை குறிப்பாக குறித்த தோட்டத்தின் தேயிலையை விரும்பி அருந்துவது தெரியவந்தது. இவை அனைத்தையும் முடித்துவிட்டு அங்கிருந்த அனைவருக்கும் கையசைத்துவிட்டு ஹெலிகொப்டர் மூலம் பயணமானார்.
இளவரசருக்கு விஷேட பாதுகாப்பு பிரிவினரால் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. அனுமதிக்கப்பட்டவர்கள் மாத்திரமே குறித்த பிரதேசத்துக்குள் செல்லக்கூடியதாக இருந்தது. பொதுமக்கள் மலைமேடுகளிலிருந்து அங்கு நடந்தவைகளை பார்த்துக்கொண்டிருந்தனர். இளவரசர் வந்த இடத்திற்கு எல்லோரும் அனுமதிக்கப்படவில்லை.
இளவரசர் வருகையையொட்டி மேற்படி தோட்டத்தில் பலகோடி ரூபா செலவில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நவீனமயப்படுத்தப்பட்டிருந்தன. பாதைகள் துப்புரவு செய்யப்பட்டு விஷேட பாதுகாப்பு வேலிகள் போடப்பட்டிருந்தன, ஹெலிகொப்டர் இறங்குதளம் அமைக்கப்பட்டிருந்தது, வீட்டுக்கூரைகளுக்கு வர்ணம் தீட்டப்பட்டிருந்ததுடன் பூ மரங்கள், மற்றும் பூக்கன்றுகள் நாட்டப்பட்டிருந்தன.
கடந்த பல வருடங்களாக திருத்தப்படாமல் இருந்த பாதைகள் அனைத்தும் திருத்தி அமைக்கப்பட்டிருந்தன. இந்த அபிவிருத்திகளை பார்வையிடும்பொழுது பிரமிப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. ஏனெனில் எமது தோட்ட தொழிலாளர்கள் எத்தனை கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர் என்பது இங்குள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும். பல வருடங்களாக வர்ணம் பூசப்படாமல் இருந்த பல கூரைகளுக்கு வர்ணம் பூசப்பட்டது. கூரைகள் வர்ணம் பூசப்பட்டனவே தவிர வீட்டின் உட்பகுதியில் எந்தவிதமான அபிவிருத்தியும் செய்யப்படவில்லை. இளவரசர் நிச்சயமாக வீடுகளுக்கு விஜயம் செய்யமாட்டார் என்பது நன்கு தெரியும். வெளியில் இருந்து பார்க்கும் பொழுது வீட்டின் உட்பகுதி பார்க்கக்கூடியதாக இருக்காது என்பதால் இந்த ஏற்பாடாகும். எனவே இளவரசருக்கு வெளியில் தெரியக்கூடிய இடங்களுக்கு மாத்திரமே கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்யப்பட்டிருந்தன. அபிவிருத்தி செய்யப்பட்டன.
இளவரசரின் பிறந்த தினமான 15ஆம் திகதி அன்று தோட்டத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா பணமும் உலர் உணவு பொருட்களும் வழங்கப்பட்டன. அதிலும் ஒரு சிலருக்கு இந்த எதுவும் கிடைக்கவில்லை என சில தொழிலாளர்கள் புலம்புவதை கேட்கக்கூடியதாக இருந்தது.
பாதை ஓரங்களில் பல ஆண்டுகளாக திருத்தி அமைக்கப்படாமல் இருந்த கொழுந்து மடுவங்கள் திடீரென புதுப்பொலிவு பெற்றிருந்தன. அதைவிட இந்த மக்கள்மீது அக்கறை இருந்திருந்தால்; இளவரசரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு சில வீடுகளையாவது அமைத்துக் கொடுத்திருக்கலாம். அல்லது வீடுகளை திருத்தி அமைப்பதற்கான பண உதவிகளை செய்திருக்கலாம். அவ்வளவுகூட தேவையில்லை, இளவரசருக்கு மாலை அணிவிப்பதற்கு ஒரு தோட்ட தொழிலாளிக்கு சந்தர்ப்பம் கூடவா வழங்க முடியவில்லை?
பெருந்தோட்ட மக்கள் சுமார் 2 நூற்றாண்டுகளுக்கு முன்னர் பிரித்தானியரினால் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்காக கொண்டுவரப்பட்டார்கள். அன்று அவர்கள் வருகின்றபோது என்னனென்ன பிரச்சினைகளை எதிர்நோக்கினார்களோ அதே பிரச்சினைகள் தற்போதும் நிலவுகின்றன.
பல்வேறு வகைகளில் தொடர்ந்தும் தோட்டமக்கள் வேதனைகளை அனுபவித்து வருகின்றனர். இளவரசர் சார்ள்ஸின் வருகையால் இதற்கொரு தீர்வு கிடைத்திருக்குமானால் அவை பாராட்டத்தக்கதாக இருந்திருக்கும் அவருக்கு மலையக மக்களின் நிலை தொடர்பாக எந்தவொரு விடயமும் தெரியாது. யாரும் சொல்லியோ, ஞாபகப்படுத்தியோ இருந்திருக்கமாட்டார்கள் என்பதுதான் வேதனைக்குரிய விடயம்.
ஆனால், இது இளவரசருக்கு ஒரு உல்லாசப்பயணமாகவே அமைந்திருந்தது.
பா. திருஞானம், - நுவரெலியா எஸ். தியாகு

இந்த நிலையில் கடந்தவாரம் கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரித்தானிய மகாராணியின் பிரதிநிதியாக இளவரசர் சார்ள்ஸ் அவருடைய பாரியாருடன் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் அப்படியே மலையகத்திற்கும் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். அவர் முதலில் கண்டி தலதாமாளிகைக்கும் அதன்பின்னர் நுவரெலியாவிற்கும் விஜயம் செய்தார்.
நுவரெலியாவில் “மென்கப்” என்ற விஷேட தேவையுடையோர் பாடசாலை ஒன்றுக்கு இளவரசர் சார்ள்ஸ் விஜயம் செய்தார். அங்குள்ள விஷேட தேவையுடைய மாணவர்களுடன் உரையாடி, பாடி மகிழ்ந்தார். இது அந்த மாணவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.
இளவரசர் தமது மலையக விஜயத்தின்போது தோட்டங்களுக்குச் சென்று சென்று தேயிலைச் செடிகள், தேயிலைத் தொழிற்சாலை, தொழிலாளர்கள், அவர்களின் வாழ்க்கை நிலை என்பவற்றை நேரில் பார்த்து அறிந்துகொள்வார் என்றுதான் நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்கள்! ஆனால் அவ்வாறு எதுவுமில்லை.
நுவரெலியாவுக்கு ஹெலிகொப்டர் மூலம் வந்த அவர் அங்கிருந்து (தரைமார்க்கமாக) லபுக்கலை தோட்டத்திற்கு வந்தார். அவரை குறித்த (லபுக்கலை) தோட்டத்தின் உயர்அதிகாரிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் தோட்ட நிருவாகிகள் ஆகியோர் வரவேற்றனர்.
அங்கிருந்த அனைவரிடமும் சுமுகமாக உரையாடிய இளவரசர் தமது சந்தேகங்களை அங்கிருந்தவர்களிடம் கேட்டு நிவர்த்தி செய்துகொண்டார். பின்னர் அவரின் பிறந்த தினத்தையொட்டி அங்கு தயாராக வைக்கப்பட்டிருந்த கேக் வெட்டப்பட்டது. பல நூற்றுக்கணக்கான வண்ணப் பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டன.
பின்னர், பெண்கள் கொழுந்து பறிக்கும் இடத்திற்கு இளவரசர் அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு கொழுந்து பறித்த பெண்கள் மிகவும் அழகாக காட்சியளித்தனர். வழமையாக தோட்டத்தொழிலாளர் உடுத்தும் உடையிலிருந்து வேறுபட்டு அதாவது இடுப்பில் கனமான பொலித்தீன் ரெட்டு மற்றும் தலையில் கொங்கானி போன்றவை இல்லாமல் காணப்பட்டனர். புதியபட்டுச் சேலையும், வண்ணவண்ண அணிகலன்களும் அணிந்திருந்தனர்.
விஷேடமாக பழைய பாரம்பரிய மூங்கில் கூடைகளின்றி நவீன கொழுந்து கூடைகளை சுமந்தபடி இருந்தனர். வழமையாக தோட்டமக்கள் கொழுந்து பறிக்க செல்வதுபோல் இருக்க வில்லை. கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண்ணான டி..வினிதமேரியிடம் வயது என்ன? பெயர் என்ன? என்று மாத்திரமே இளவரசர் கேட்டார். சுமார் 25 பெண்கள் அங்கு கொழுந்துபறித்தபடி இருந்தனர்.
அதன்பின் புதிதாக அமைக்கப்பட்ட தேயிலை நூதன சாலையை திறந்து வைத்தார். அவருக் கும் நினைவுப்பரிசுகள்; வழங்கப்பட்டன. ஒருபுறம் பியானோ வாத்தியம் இசைக்கப்பட்டு கொண்டிருந்தது. நூதன சாலையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த அவரின் தாயாரின் படத்தை பார்வையிட்டார். ஏற்கனவே தாயார் மேற்படி தோட்டத்திற்கு வருகை தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.. பின்பு தகவல் தொழில்நுட்ப பிரிவையும் பார்வையிட்டார். அங்கு தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் இருந்தமை ஒரு விஷேட அம்சமாகும்.
பின்னர்; தேநீர் ருசி பார்க்கும் பிரிவிற்கு அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு பல தரப்பட்ட தேயிலைவகைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட தேநீரை ருசித்த இளவரசர் தனக்குப் பிடித்த சுவையொன்றை தெரிவு செய்து சந்தோஷமடைந்தார். அத்துடன் இவர் பிரித்தானியாவில், இலங்கை தேயிலையை குறிப்பாக குறித்த தோட்டத்தின் தேயிலையை விரும்பி அருந்துவது தெரியவந்தது. இவை அனைத்தையும் முடித்துவிட்டு அங்கிருந்த அனைவருக்கும் கையசைத்துவிட்டு ஹெலிகொப்டர் மூலம் பயணமானார்.
இளவரசருக்கு விஷேட பாதுகாப்பு பிரிவினரால் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. அனுமதிக்கப்பட்டவர்கள் மாத்திரமே குறித்த பிரதேசத்துக்குள் செல்லக்கூடியதாக இருந்தது. பொதுமக்கள் மலைமேடுகளிலிருந்து அங்கு நடந்தவைகளை பார்த்துக்கொண்டிருந்தனர். இளவரசர் வந்த இடத்திற்கு எல்லோரும் அனுமதிக்கப்படவில்லை.
இளவரசர் வருகையையொட்டி மேற்படி தோட்டத்தில் பலகோடி ரூபா செலவில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நவீனமயப்படுத்தப்பட்டிருந்தன. பாதைகள் துப்புரவு செய்யப்பட்டு விஷேட பாதுகாப்பு வேலிகள் போடப்பட்டிருந்தன, ஹெலிகொப்டர் இறங்குதளம் அமைக்கப்பட்டிருந்தது, வீட்டுக்கூரைகளுக்கு வர்ணம் தீட்டப்பட்டிருந்ததுடன் பூ மரங்கள், மற்றும் பூக்கன்றுகள் நாட்டப்பட்டிருந்தன.
கடந்த பல வருடங்களாக திருத்தப்படாமல் இருந்த பாதைகள் அனைத்தும் திருத்தி அமைக்கப்பட்டிருந்தன. இந்த அபிவிருத்திகளை பார்வையிடும்பொழுது பிரமிப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. ஏனெனில் எமது தோட்ட தொழிலாளர்கள் எத்தனை கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர் என்பது இங்குள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும். பல வருடங்களாக வர்ணம் பூசப்படாமல் இருந்த பல கூரைகளுக்கு வர்ணம் பூசப்பட்டது. கூரைகள் வர்ணம் பூசப்பட்டனவே தவிர வீட்டின் உட்பகுதியில் எந்தவிதமான அபிவிருத்தியும் செய்யப்படவில்லை. இளவரசர் நிச்சயமாக வீடுகளுக்கு விஜயம் செய்யமாட்டார் என்பது நன்கு தெரியும். வெளியில் இருந்து பார்க்கும் பொழுது வீட்டின் உட்பகுதி பார்க்கக்கூடியதாக இருக்காது என்பதால் இந்த ஏற்பாடாகும். எனவே இளவரசருக்கு வெளியில் தெரியக்கூடிய இடங்களுக்கு மாத்திரமே கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்யப்பட்டிருந்தன. அபிவிருத்தி செய்யப்பட்டன.
இளவரசரின் பிறந்த தினமான 15ஆம் திகதி அன்று தோட்டத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா பணமும் உலர் உணவு பொருட்களும் வழங்கப்பட்டன. அதிலும் ஒரு சிலருக்கு இந்த எதுவும் கிடைக்கவில்லை என சில தொழிலாளர்கள் புலம்புவதை கேட்கக்கூடியதாக இருந்தது.
பாதை ஓரங்களில் பல ஆண்டுகளாக திருத்தி அமைக்கப்படாமல் இருந்த கொழுந்து மடுவங்கள் திடீரென புதுப்பொலிவு பெற்றிருந்தன. அதைவிட இந்த மக்கள்மீது அக்கறை இருந்திருந்தால்; இளவரசரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு சில வீடுகளையாவது அமைத்துக் கொடுத்திருக்கலாம். அல்லது வீடுகளை திருத்தி அமைப்பதற்கான பண உதவிகளை செய்திருக்கலாம். அவ்வளவுகூட தேவையில்லை, இளவரசருக்கு மாலை அணிவிப்பதற்கு ஒரு தோட்ட தொழிலாளிக்கு சந்தர்ப்பம் கூடவா வழங்க முடியவில்லை?
பெருந்தோட்ட மக்கள் சுமார் 2 நூற்றாண்டுகளுக்கு முன்னர் பிரித்தானியரினால் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்காக கொண்டுவரப்பட்டார்கள். அன்று அவர்கள் வருகின்றபோது என்னனென்ன பிரச்சினைகளை எதிர்நோக்கினார்களோ அதே பிரச்சினைகள் தற்போதும் நிலவுகின்றன.
பல்வேறு வகைகளில் தொடர்ந்தும் தோட்டமக்கள் வேதனைகளை அனுபவித்து வருகின்றனர். இளவரசர் சார்ள்ஸின் வருகையால் இதற்கொரு தீர்வு கிடைத்திருக்குமானால் அவை பாராட்டத்தக்கதாக இருந்திருக்கும் அவருக்கு மலையக மக்களின் நிலை தொடர்பாக எந்தவொரு விடயமும் தெரியாது. யாரும் சொல்லியோ, ஞாபகப்படுத்தியோ இருந்திருக்கமாட்டார்கள் என்பதுதான் வேதனைக்குரிய விடயம்.
ஆனால், இது இளவரசருக்கு ஒரு உல்லாசப்பயணமாகவே அமைந்திருந்தது.
பா. திருஞானம், - நுவரெலியா எஸ். தியாகு






































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக