புதன், 5 மார்ச், 2014

ராஜீவ் கொலை பெரிய தப்பு...!

“ராஜீவ் காந்தியோட அந்த சாவுதான் எங்களோட வாழ்க்கையையும் சூறையாடப் போவுதுன்னு அப்ப தெரியல்ல” என்கிறார் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள். இந்த நாட்டில் சர்வவல்லமை பொருந்திய அமைப் புக்களோடு 23 வருடங்கள் போராடி உங்கள் மகனைத் தூக்குக் கொட்டடியிலிருந்து மீட்டிருக்கிறீர்கள். இந்தப் போரா ட்டத்துக்கான மனோபலம் எங்கிருந்து உருவானது?

பெரியார்க்கிட்டே இருந்துதான்பா உருவானுச்சு. நான் பொறந்தது தி.மு.க. குடும்பத்துல. எங்கப்பா டி.எ.திருவேங்கடம் கட்சியில எந்தக் கூட்டம், போராட்டம்னாலும் எங்களையும் கூடவே அழைத் துக்கிட்டுப்போயிடுவார். குரல் ஒப்பிக்கிறது. கூட்டங்கள்ல பேசுறதுன்னு வாய்ப்புக் கிடச்சப்பல்லாம் போய்க்கிட்டுத்தான் இருந்தேன். ஆனால் உண்மையான அரசியலை பெரியார்க்கிட்டேயிருந்துதான் கத்துக்கிட்டேன்.



பெரியார் எப்போது அறிமுக மானார்?

என்னோட கணவர் குயில்தா சன்கிட்டேயிருந்து. அவர்தான் பெரியாரையும் சுயமரியாதை வாழ்க்கையையும் அறிமுகப்படுத்தினார். மொதமொதல்ல கலந்துக்கிட்ட தி.மு.க. கூட்டத்திலேயே சின்னச்சின்ன விடயங்கள் கூட ரொம்பப் பிடிச்சுப்போச்சு. தி.மு.க. கூட்டங்களிலேயும் கலந்துக்கிட்டிருக்கேன்னாலும் கூட்டத்தை அங்கே ஆண், பெண்ணுன்னு ரெண்டு வரிசையாப் பிரிச்சுருப்பாங்க.இங்கே அந்தப் பாகுபாடு கிடையாது. எல்லோரும் சமம்ங்கிறது பதிஞ்சுது.

ஒரு காலத்துல எல்லாப் பெண்களையும் போல நகை நட்டுப் போட்டுக்கிட்டு வெளியே போன நான் பெரியார் பேச்சைக் கேட்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் இந்த சமூகம் பெண்களுக்கு அழகுன்னு கற்பிச்சு வச்சிருக்கிற எல் லாமே கை விலங்கெங்கிறதைப் புரிஞ்சுக்கிட்டு தாலியே வேணாம்னு முடிவெடுத்தேன். எல்லோரும் எதிர்த்து நின்னாலும் நாம சளைக்கக் கூடாதெங்கிற தைரி யத்தையும் அங்கேதான் கத்துக் கிட்டேன். என் பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுத்தேன்.

கூட்டங்கள், போராட்டங்கள்ல எல்லாம் குடும்பமாகவே கலந்துக்கிட்டோம். நானே ரெண்டு தடவை சிறைக்குப் போயிருக்கேன். இயக்கத்தைத் தனி யாவும் எங்க குடும்பத்தைத் தனியாவும் நாங்க பாக்கலை.

ராஜீவ் கொலையை இப்போது நினைவு கூறமுடியுமா?

எப்படிப்பா மறக்கமுடியும்? எங்க வாழ்க்கையையே புரட்டிப்போட்ட சம்பவம் இல்லையா அது? ராஜீவ் கொல்லப்பட்ட செய்தி வந்தப்போ எல்லாக் குடும்பங்களையும் போல எங்க குடும்பமும் ஆடிப்போச்சு. அதுவும் ராஜீவோட கோரமான சாவு. அந்தப் படங்களையயல்லாம் பாத்தப்போ உடைஞ்சுபோயிட்டோம். ஆனா அப்ப தெரியலையே... அந்தச் சாவுதான் எங்களோட வாழ்க்கையையும் சூறையாடப் போவுதுன்னு.

ஈழத்தமிழர் பிரச்சினையில் ராஜீவ் நிலைப்பாட்டையும் அவர் கொல்லப்பட்டதையும் பற்றி உங்கள் கருத்து என்ன?

ராஜீவோட அணுகுமுறையை எப்படிப்பா சரின்னு சொல்ல முடியும்? ஈழத்தமிழர்கள் எவ்வளவு பேர் இந்திய அமைதிப்படையால கொல்லப்பட்டாங்க, எவ்வளவு தமிழ்ப்பெண்கள் சீரழிக்கப்பட்டாங்க, ராஜீவோட தவறான முடிபு தானே இதுக்கெல்லாம் காரணம்? அவரு அவங்கம்மா பாதையை பின்பற்றியிருக்கலாங்கிறது என்னோட கருத்து. ஆனா எதுக்காகவும் ஒரு உயிர் கொல்லப்படக் கூடாதுன்னு போராடுற நான் எப் படி ராஜீவ் கொல்லப்பட்டதை சரின்னு சொல்வேன்? பெரிய தப் புப்பா....

பேரறிவாளன் இந்தக்கொலை வழக்கில் சிக்கியபோது உங்கள் வீட்டுச்சூழல் எப்படியிருந்தது? அதை நீங்கள் எப்படி உள்வாங்கினீர்கள்?

அப்போதான் என் பெரிய பொண்ணு அன்புக்கு மாப்பிளை பார்த்திருந்தோம். சின்னப் பொண்ணு அருள் படிச்சுக்கிட்டிருந்தார். அறிவுக்கு அப்போ 19 வயசு. டிப்ளோமா படிச்சிருந்தவன். வேலை செஞ்சுக் கிட்டே இன்ஜினியரிங் படிக்கிறதுக்கு ஏதுவா சென்னையில பெரியார் திடல்ல தங்கியிருக்கான். ஏன் அங்க தங்கியிருந்தான்னா அதுதான் அன்னைக்கு சொந்தக்கார வீடு. இந்த நெலமையில தான் மே 21 ஆம் திகதி ராஜீவ் கொல்லப்படுறார். ஜூன் 10 ஆம் திகதி ராத்திரி 12 மணிக்கு எங்க வீட்டுக்கதவு தட்டப்படுது.

உங்க மகன்கிட்டே சில விபரங்களை விசாரிக்கணும். 2 நாள்ல மல்லிகைக்கு வரச் சொல்லுங்கன்னு சொல்லிட்டுப் போனாங்க. படிப்புல ஆகட்டும், பண்புல ஆகட்டும் ரொம்ப உயர்வானவன் அறிவு. நம்ம பக்கம் எந்தத்தப்பும் இல்லை யேங்கிற தைரியத்துல நாங்க தயாரானோம். மறுநாள் காலையிலேயே அனுப்பிடுறோம்னு சொல்லித்தான் அவனை அழைச்சுக் கிட்டுப்போனாங்க. ஆனா என் புள்ள இன்னும் வெளியே வரலைய்யா.......

இந்த வழக்கில் பேரறிவா ளன் சிக்கியதற்கான பொறி எது?

அன்றைய காலச்சூழல். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவா ஒவ்வொரு தமிழரும் அனுதாபம் காட்டின நேரம் அது. தமிழ் உணர்வாளர்கள் பலரோட வீட்டையும் போல எங்க வீட்டுலேயும் தம்பி படம் மாட்டியிருந்துச்சு. அறிவு, அவங்க அப்பா ரெண்டுபேரும் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தவங்க. கூடவே நளினியோட தம்பி பாக்கியநாதன், தி.மு.க. கூட்டங்கள் வாயிலா இவங்களுக்கு அறிமுகமாயிருந்தார். இது எல்லாத்தையும் சேர்த்தே அறிவைக் குற்றவாளியா ஜோடிச்சாங்க.

ஆரம்பத்தில் உங்கள் மகன் தான் வெடிகுண்டைத் தயாரி த்தவர் என்று சொன்னார்கள் இல்லையா?

அறிவு ஒரு வெடிகுண்டு நிபுணன்னே ஜோடிச்சாங்கப்பா. அந்தப் பொய்யை நம்பவைக்க முடியாததால அறிவு பற்றரி வாங்கிக் கொடுத்தான். அந்த பற்றரியைப் போட்டுத்தான் குண்டை வெடிச் சாங்கன்னு கதையை மாத்தினாங்க. உண்மை என்னன்னா ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை இவங்களால பிடிக்க முடியலை. அதனால பிடிச்சவங்களையயல்லாம் குற்றவாளியா மாத்தினாங்க. அப்போ அவங்க போடுற ஆட்டத் துக்கு ஏத்த மாதிரி ஒரு சட்டம் இருந்துச்சு. தடா.ஒருத்தரைப் பிடிச்சுக்கிட்டுப் போக எந்தக் காரணத்தையும் சொல்லவேண்டியது இல்லை. என்ன குற்றச்சாட்டை வேணும்னாலும் சுமத்தலாம். அடிச்சுத் துவச்சு மிரட்டி வாங்குற கையயழுத்துகளை வைச்சு வாக்குமூலம் தயாரிக்கலாம். மூடின அறைக் குள் யாரையும் விடாம விசாரிக்குற எல்லாத்தையும் நீதிமன்றம் ஏத்துக்கும். அப்படி ஏத்துக்கிட்டு தான் உலகத்துல எந்த நாட்டிலேயும் நடந்திராத நடக்காத கொடுமையா 26 பேருக்கு தூக்குத் தண்டனைய விதிச்சுது.

பேரறிவாளனுக்கு நீதிமன் றங்களில் மூன்று முறை மரண தண்டனை அறிவிக்கப்பட்டது. உச்சக்கட்டமாக குடியரசுத் தலைவரே கருணை மனுவை நிராகரித்தார். அந்தச் சூழலை எல்லாம் எப்படி எதிர்கொண் டீர்கள்?

ஒவ்வொரு முறையும் நெஞ்சு வெடிச்சுச் சிதறுற வலியைக் கடந்து தான்பா வந்தேன். அதெல்லாத் தையும் விடப்பெரிய கொடுமை கருணை மனு நிராகரிக்கப்பட் டதுக்கு அப்புறம் ........ ..வேலூர் சிறையிலேருந்து செம்ரெம்பர் 9 ஆம் திகதி தூக்கிலிடப்படும் உங்கள் மகனின் சவத்தை நீங்கள் பெற்றுச் செல்ல வேண்டும்னு அனுப்பப்பட்ட கடிதம்.

ஒரு தாயா என் நெலமையை அன்னைக்கு நீங்க யோசித்துப் பாருங்க... நான் சந்திச்ச அதிர்ச்சிக் கெல்லாம் நான் எப்பவோ செத்திருக்கணும்.வீட்டில ஏற்கனவே உடம்பும் நைஞ்சு மனசும் நைஞ்சுபோய் உக்காந்துருக்குற அப்பா. இதுல அம்மா நானும் போய்ட்டா என் பிள்ளையோட நிலைமை என்ன வாகும்? இந்த ஒரே கேள்வியும் வைராக்கியமும்தான் இன்னும் என்னை உசிரோட வச்சிருக்கு.

பேரறிவாளன் விடுதலைக்கான இந்தப்போராட்டத்துக்கு இடையிலேயே சிறைச்சூழல் மாற் றத்துக்காகவும் போராடினீர்கள் அல்லவா?

ஆமாம். வெளியிலேந்து பாக்குற மாதிரி நம்ம விசாரணை அமைப் புகளும் சிறைகளும் அவ்வளவு சாதாரணமான இடம் இல்லப்பா. அதிகாலையிலேயே புறப்பட்டு பல பஸ்ஸு மாறி நாள் முழுக்க கொதிக் கிற வெயில்ல காத்திருப்பேன். எதுக்கு? அஞ்சு நிமி­ம்புள்ள முகத் தைப் பாக்குறதுக்கு. ஈவிரக்கமே இல்லாம துரத்தியடிச்சுடுவாங்க.

ஆரம்பக்கட்டத்துல மல்லிகைக்கு அறிவைப் பார்க்கப்போனப்ப நடந்த சம்பவம் இது. பல நாள் காத்திருந்து அஞ்சு நிமி­ அனுமதி வாங்குறேன். வயித்துக்கோளாறு. கூட இருந்த பெண் காவலர்கிட்ட சொன்னப்போவேண்டா வெறுப்பா பக்கத்துல இருந்த ஒரு கழிப்பறையைக் காட்டினாங்க. கதைவைச் சாத் தப்போறன் தடுத்துட்டு தொறந்து வச்சுக்கிட்டே போன்னு சொன்னா ங்க. அப்படியேதான் போனன், கூனிக் குறுகி. வெளியிலயிருந்து போற நமக்கே இந்த நெலமைன்னா உள்ளே இருக்குறவங்க நிலைமை எப்படியி ருக்கும். அறிவு எவ்வளவே சித்திர வதைகளையும் அவமானங்களை யும் தாங்கியிருக்கான்.

தனிமைச்சிறையில ஒரு சின்னக் கொட்டடியில இருக்குற அவனுக்கு எதைத் துணையாய்க் கொடுக்க முடியும்? அவன் கேட்குற பத்திரி கைகள், புத்தகங்களையயல்லாம் வாங்கி சுமந்துக்கிட்டுப்போவேன்.

அரிதாக் கிடைக்கிற அஞ்சு நிமி­ சந்திப்பும் எப்படியிருக்கும்னு நெனைக் கிறீங்க? ஒவ்வொரு சிறையிலேயும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஒரு சிறையில குறுக்கே கண்ணாடிச் சுவர் இருக்கும். எதுவும் பேசமுடி யாது. கேட்காது. எல்லாம் சைகை தான். இன்னொரு சிறையில ரெண்டடி இடைவெளியில ரெண்டு கம்பித் தடுப்பு இருக்கும். ரெண்டு பக்கமும் எல்லோரும் கத்துற கத்துல யாருக் கும் எதுவும் கேட்காது. இதையயல்லாம் எதிர்த்து நீதிமன்றத்துக்குப் போனேன். இன்னைக்கு கொஞ்ச மாச்சும் அது மாற்றத்தைக் கொண் டாந்திருக்கு.

தொடக்கத்தில் எல்லோருமே உங்களை விட்டு ஒதுங்கியிருப் பார்கள் இல்லையா?

நிறையப்பேர் ஒதுங்கிட்டாங்க. ஆனா, சில நல்ல மனுசங்க அப்போ தான் கைகோத்தாங்க. என்னோட பெரிய பொண்ணைப் பார்த்திட்டுப் போயிருந்தாங்கின்னு சொன்னேன் இல்லையா அந்தச் சம்பந்தம் தட் டிப்போகலை. பேருக்கு ஏத்த மாதிரியே அமைஞ்ச மாப்பிள்ளை ராஜா வழக்கெல்லாம் கிடக்குதுன்னு சொல்லி என் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டார்.

அறிவு விடுதலைக்காக ரொம்ப நாள் திருமணம் பண்ணிக்க மாட்டேன்னு காத்திருந்த ரெண்டாவது பொண்ணுக்கும் மாப்பிள்ளை தனசேகரன் அப்படித்தான் தேடிவந்தார். இன்னைய வரைக்கும் வழக்குக் காக ஏற்படுற பெருஞ்செலவை மகள் களும் மாப்பிளைகளும்தான் பகிர் ந்துக்கிறாங்க.

ஏன் அரசியல் கட்சிகள் பகிர் ந்து கொள்ளவில்லையா?

சில வி­யங்களையயல்லாம் பேசவேணாம்னு நினைக்கிறேன்பா. அவ்வளவு துரோகங்கள் அறிவு கதையில. ரெண்டு உதாரணங்களை மட்டும் செல்றேன். எந்த இயக்கத்தை எங்க உயிரா நினைச்சோமோ அந்த தி.மு.க. என்ன பண்ணிச்சு தெரியுமா? அறிவு கைது செய்யப் பட்டவுடனே இயக்கத்துக்கும் அறிவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைன்னு அறிவிச்சுச்சு. சீக்கிரமே பகுத்தறிவுக்கழக மாவட் டப் பொறுப்பாளரா இருந்த என் னோட கணவர் குயில்தாசனையும் ஒதுக்குச்சு. அவசர நிலை காலகட் டத்துல கலைஞர் அரசு கவிழ்க்கப்பட் டப்போ எதிர்த்துப்போராட நிதி வசூலிச் சுக்கிட்டு ஊரையே திரட்டிக்கிட்டுப்போய் தலைவா நாங்க இருக்கோம் உங் கூடன்னு நின்ன குடும்பம் எங்க ளோடது. ஆனா அறிவு கைது செய் யப்பட்ட பின்னாடி இந்த 23 வரு சத்துல ஒரு முறைகூட அவரைச் சந்திக்கமுடியலை.இதையயல்லாம் குற்றச்சாட்டாச் சொல்லலை. வேதனையாத்தான் சொல்றன். இப்படி எவ்வளவோ கதை களைச் சொல்லலாம்.

ஆனாலும் நெடுமாறன், நல்லகண்ணு, தியாகு, வைகோ, சீமான் இவங்கல்லாம் பெரிய அதரவைத் தந்திருக்காங்க. எல்லாத் துக்கும் மேல இப்போ முதல்வரம்மா என் பிள்ளைய மீட்டுத்தாறேன்னு சொல்லிட்டாங்களே...

முதல்வரிடம் என்ன பேசினீர்கள்? ஏனையோர் இதைத் தேர் தல் நாடகமென்றெல்லாம் விமர் சிக்கிறார்களே?

அவங்க கூப்பிடலை நானாத் தான் ஓடினேன். நன்றி சொல்லுறதுக்காக அவங்களைப் பார்த்தப்போ அழுகையைத் தாண்டி எதுவும் வரலை. இவ்ளோ சந்தோ­த்தையும் என்னால தாங்கிக்க முடியலைன்னு கதறி னேன். இனி நீங்க அழக்கூடாது. உங்க மகன் சீக்கிரமே வந்துடுவார்னாங்க. விமர்சிக்கிற வாய்கள் இத்தனை நாள் என்ன பேசுச்சு? என்ன செஞ்சுச்சுன்னு? ஊருக்குத் தெரியும்.

முதல்வர் முடிவுக்கு பிரதமர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். மத்திய அரசின் எதிர்ப்பால் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது... என்ன வேணா நடக்கட்டும். முதல்வர் அம்மா சொல் லிட்டாங்க. இனி என் புள்ள வெளியே வர்றதை யாராலும் தடுக்க முடியாது.

சரி பிள்ளை வந்திடுவார். அடுத்து என்ன?

அவனைப்பத்தி ஆயிரம் கனவு இருக்கப்பா. ஆனா அதையயல்லாம் தாண்டிச் செய்ய வேண்டிய கடமை ஒன்று இருக்கு. இந்த நாட்டுல மரணதண்டனையை ஒழிக்கணும். என் புள்ள வி­யத்துல எதிர்பாராத விதமாக நிறைய வி­யங்கள் நடந்துஞ்சு. வாக்குமூலத்தைப் பதிவு செஞ்ச சி.பி.ஐ. அதிகாரி தியாகரா ஜன் பின்னாடி, நான் கடமையி லிருந்து வழுக்கியிருக்கேன். வாக்கு மூலத்தை பேரறிவாளன் சொன் னபடி முழுசாப் பதியலைன்னு சொன்னார்.

அதேபோல மரண தண்டனையை விதிச்ச நீதிபதி கே.டி.தாமஸும் இவ் வளவு ஆண்டுகள் காத்திருக்க வைச்சு மரணதண்டனை கொடுப்பது சரியில்லைன்னு சொன்னார். செங்கொடிமாதிரி ஒரு இளங்குருத்து தன்னை மாய்ச்சுக்கிட்டு உருவாக்கின போராட்டத்தீ இந்த மாநிலமே மரண தண்டனைக்கு எதிராதிரளக்கார ணமா இருந்துச்சு.

அரசாங்கம் சட்ட பேரவையில மரணதண்டனையை ஆயுள் தண்ட னையா குறைக்கணும்னு தீர்மானம் நிறைவேத்திச்சு. இப்போ முதல்வர் விடுதலை அறிவிப்பையும் வெளி யிட்டிருக்காங்க. ஆனா எல்லோ ருக்கும் இதெல்லாம் வாய்க்குமா, சாத்தியமா? என் காலத்துக்குள்ள இந்த நாட்டுல மரணதண்டனையை ஒழிக்கணும். அதுக்காக கடைசி மூச்சு இருக்குற வரைக்கும் போராடு வேன் என்றார்.

 (முற்றும்)
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல