கேள்வி - பதில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கேள்வி - பதில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 10 ஜூலை, 2016

"ஒரு கூர்வாளின் நிழலில்" சிங்­கள சமூ­கத்தை சுய பரி­சோ­தனை செய்ய வைத்­துள்­ளது தமி­ழி­னியின் கணவர் ம. ஜெயக்­கு­மரன் தெரி­விக்­கின்றார்

மறைந்த முன்னாள் தமிழ்ப்­போ­ரா­ளி­யான தமி­ழி­னியின் புத்­த­க­மா­னது சிங்­கள சமூ­கங்­க­ளி­டையே, சுய­ப­ரி­சோ­தனை செய்­வ­தற்­கான ஒரு எழுச்­சியை அவர்கள் மனங்­களில் உரு­வாக்­கி­ய­மையே இப்­புத்­த­கத்­திற்கு கிடைத்த வெற்றி என நான் நினைக்­கின்றேன். சிங்­க­ளத்தில் கிட்­டத்­தட்ட 6,000 பிர­தி­க­ளுக்கு மேல் விற்­ப­னை­யா­கி­யுள்­ளது. இப்­புத்­த­கத்தின் சிங்­கள வெளி­யீட்­டாளர் உண்­மை­யி­லேயே இப்­புத்­த­கத்­தினால் கிடைக்கும் நிதியை மஹ­ர­கமை புற்­றுநோய் வைத்­தி­ய­சா­லையில் சிறுவர் பிரி­விற்கு வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்­கின்றார். தமி­ழி­னியின் இறுதி விருப்­பமும் இது­வா­கவே இருந்­தது என தமி­ழி­னியின் கணவர் ம.ஜெயக்­கு­மரன் வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய விசேட செவ்­வி­யின்­போது தெரி­வித்தார்.
அவர் வழங்­கிய செவ்வி முழு­மை­யாகக் கீழே தரப்­ப­டு­கின்­றது.

வியாழன், 24 டிசம்பர், 2015

எம்ஜிஆர் பதில்கள்... ஒரு ஃப்ளாஷ்பேக்! | Interview with MGR

நீங்கள் நடிக்க வந்தது ஏன்?

வறுமைதான்.

நடிகன் ஆனதை உங்கள் பெற்றோர் ஏற்றுக் கொண்டார்களா?

வேறு என்ன செய்ய முடியும்? பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்களே. பசியை போக்க நடிக்க வந்தேன். அதற்கு ஏன் தடை சொல்ல போகிறார்கள்.

ஞாயிறு, 15 நவம்பர், 2015

என்ர மகள் தமிழினி நாட்டுக்காகவே வாழ்ந்து அந்த ஏக்கத்துடனேயே போனாள் தாயாரான சின்னம்மா கூறுகிறார்

"தமி­ழினி தடுப்­பால வந்­த­வு­டனும் சிலர் அவ கேட்­கிற மாதி­ரியே கதைச்­சி­ருக்­கினம் பிள்­ளை­களை பிடிச்சி கொண்டு போய் கொன்று போட்டு அவ மட்டும் உயி­ரோட வந்­திட்டா என்று. இப்­படி பலர் கதைப்­பினம். இதால தமி­ழி­னிக்கு இங்க வாழ விருப்பம் இல்­லாமல் போயிட்டு வெளிய வெளிக்­கிட்டு போக முடி­யாது விடு­த­லை­யாகி வந்தும் சிறைக்குள் இருக்­கிற மாதிரி இருக்க அவ விரும்­ப­யில்ல அதால தான் அவ கொழும்­புக்கு போயிட்டா. பூந்­தோட்டம் தடுப்பில் இருந்து வந்த பிறகு கொழும்­பில்தான் அதிகம் இருந்­தவ. அவ­வுக்கு இங்க (பரந்­தனில்) இருக்­கவே விருப்பம் இல்லை" என்­கிறார் தமி­ழி­னியின் தாய் சின்­னம்மா.

சனி, 31 அக்டோபர், 2015

பிரபாகரனுடன் குரோதமில்லை

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் எனக்கும் தனிப்பட்ட குரோதங்கள் எதுவுமில்லை என கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளதோடு, இராஜதந்திர ரீதியிலான தவறுகளை புலிகள் இழைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரபாகரன் தற்கொலையே செய்துள்ளார் என சுட்டிக்காட்டியவர் தற்போது தமிழ் மக்களுக்கு மாற்று அரசியல் சக்தி அவசியம் என்பதால் தமிழர் விடுதலைக்கூட்டணியில் இணைந்து செயற்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

‘கேசரி’க்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு;

வியாழன், 10 செப்டம்பர், 2015

ஆப்கானிஸ்தானில் அல் கய்தாவை உருவாக்கியவர் யார்?

சிரியா நாட்டு தூதர் டாக்டர் ரியாத் கமெல் அப்பாஸ். | ஐ.எஸ். அமைப்பு வலுப்பெற்றதற்குக் காரணம் துருக்கி, கத்தார், சவுதி அரேபியா என்கிறார் இவர்.

சிரியாவின் 4 ஆண்டுகள் சிவில் யுத்தம் அந்நாட்டை சீரழித்துள்ளது. மனிதார்த்த துயரமாக அந்த நாடு முடிந்து போயுள்ளது. ஆயிரக்கணக்கில் உயிரிழப்பும், லட்சக்கணக்கானோர் அகதிகளாக நாடு நாடாக குழந்தைகள், பெண்களுடன் அலைந்து திரிகின்றனர்.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

குடும்பக் கட்­டுப்­பாட்டு சத்­தி­ர­சி­கிச்சை மாத­விடாய் சக்­க­ரத்தில் ஏற்­ப­டுத்தும் மாற்றம்

குடும்ப தம்­ப­திகள் தமது குடும்­பத்தில் இருக்கும் பல பிரச்­சி­னை­களை வெற்றி கொண்டு தமது குடும்­பம் எவ்­வாறு அமைய வேண்டும் என திட்­ட­மிட வேண்­டி­யது அவ­சியம். அதா­வது தமக்கு இரண்டு பிள்­ளைகள் போதுமா? அல்­லது மூன்று பிள்­ளைகள் போதுமா? என திட்­ட­மிட்டுக் கொள்­வது சிறந்­தது. இன்­றைய கால­கட்­டத்தில் அதி­க­ரித்து வரும் வாழ்க்கை செல­வினால் பல குடும்­பங்கள் தடு­மாறும் போது குடும்­பத்தை திட்­ட­மிட்டு அமைத்துக் கொள்­வது தங்­க­ளுக்கு இருக்கும் பிள்­ளை­களை நன்கு கற்­பித்து ஆரோக்­கி­ய­மாக வளர்க்க உதவும். இவ்­வாறு குடும்­பத்தை சரி­யாக திட்­ட­மி­டாது இருந்தால் பின்னர் திட்­ட­மி­டாது கர்ப்பம் தரித்து திட்­ட­மி­டாது பிள்­ளைகள் பிறக்கும் போது குடும்­பங்கள் தடு­மா­று­வது தவிர்க்க முடி­யாமல் போகின்­றது. இந்­நி­லையில் இருக்கும் பிள்­ளை­க­ளையும் சரி­யாக கவ­னிக்­காமல் போகும் நிலை ஏற்­ப­டு­கின்­றது. இதனால் குடும்­பங்­களை திட்­ட­மிட உதவும் குடும்ப கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்சை பற்றி அறிந்­தி­ருப்­பது அவ­சி­ய­மாகும்.

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

சிக்கலில்லாத ப்ரீச் டெலிவரி

டாக்டர்.சுதா தீப், M.D., D.G.O., மகப்பேறு மருத்துவ நிபுணர்

குழந்தை பெறுவது என்பது ஒரு வரம். கருவில் குழந்தை தோன்றியப் பின், அந்த பெண்ணுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியைபோல வேறு ஏதும் இல்லை என்றே சொல்ல முடியும். குழந்தை

வயிற்றில் இருக்கும் போது, அப்பெண் தன்னை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும், அவர்கள் கடைபிடிக்க வேண்டிவை என்னென்ன என்கிற கேள்விகளுடன் தாஜ் மருத்துவமனையின் டொக்டர். சுதா தீப் அவர்களைச் சந்தித்தோம்.

ஞாயிறு, 5 ஜூலை, 2015

ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் - சரவணா ஸ்டோர்ஸ்

சில நாட்களுக்கு முன்பு சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருந்தேன். இரவு 9 மணி. அதிகக் கூட்டம் இல்லை. நாள் முழுக்க உழைத்த களைப்புடன், வலுக்கட்டாயமாக ஒட்ட வைத்த சிறு புன்னகையுடன் துணிகளை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தார் அந்தப் பெண். மெலிந்த தேகம். மிஞ்சிப் போனால் 25 வயது இருக்கலாம்.

‘‘எந்த ஊர் நீங்க?’’

‘‘திருவண்ணாமலை பக்கம்..’’

திங்கள், 22 ஜூன், 2015

பயங்­க­ர­வாத தடைச்சட்­டத்தை வித்­தி­யாவின் வழக்கு விசா­ர­ணையில் பயன்­ப­டுத்­து­வதை ஏற்கமுடியாது

 - சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கே.வி. தவ­ராசா

ஒன்­பது சந்­தேக நபர்­களும் சாதா­ரண சட்­டத்தின் கீழ்தான் கைது செய்­யப்­பட்­டார்கள். ஆனால், விசா­ரணை மேற்­கொள்­வ­தற்­காக மட்டும் வலு­வி­லுள்ள ஒரே சட்­ட­மான பயங்­க­ர­வாத தடைச்சட்டம் பிர­யோ­கிக்­கப்­ப­ட்­டுள்­ளமை அவ­தா­னிக்கக் கூடி­ய­தா­க­வுள்­ளது. தடுப்புக் காவல் விசா­ரணை முடி­வ­டைந்த பின்னர் மீண்டும் இந்த வழக்கு சாதா­ரண சட்­டத்தின் கீழ் கொண்­டு­வ­ரப்­படும். குற்­ற­வா­ளிகள் என அடை­யாளம் காணப்­பட்ட பின்னர் தண்­டனை சாதா­ரண சட்­டத்­தி­லேயே வழங்­கப்­படும். பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தினைப் பொறுத்­த­வரை, அந்தச் சட்­டத்தில் மரண தண்­டனை வழங்க முடி­யாது

வியாழன், 18 ஜூன், 2015

துக்ளக் கேள்வி பதிலிலிருந்து

கே: ‘விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறலாம்; எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ – என்கிறாரே இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷ! இது சிங்களவர்களைக் கவரும் அரசியல் தந்திரமாக இருக்குமா?

ப: இதில் அரசியல் கலப்பு இருக்கலாம். இந்த மாதிரி கவலை சிங்கள மக்களிடையே பரவினால் தனக்கு ஆதரவு கூடும் என்று ராஜபக்ஷ எதிர்பார்க்கலாம். அதே சமயத்தில் அவர் கூறுகிற ஆபத்து இருக்கத்தான் செய்கிறது என்பதை மறுக்க முடியாது. நாசவேலைகள் புரிகிறவர்களுக்கு பெரும் பட்டாளம் தேவை இல்லை.
Share |

ஞாயிறு, 14 ஜூன், 2015

சொந்த உறவுகளுக்குள் திருமணங்கள் பிறக்கும் குழந்தைகளைப் பாதிக்குமா? ...

காலங்­கா­ல­மாக பார்த்தால் நம்­ம­வர்கள் பலர் தமது குடும்ப சொந்­தங்­களில் இருக்கும் உற­வி­னர்­களை திரு­மணம் செய்யும் வழமை இருந்து வரு­கின்­றது. இதனை பலரும் சமூக கலா­சார ரீதி­யாக சிறந்­தது என நினைத்து மகிழ்ந்­தாலும் மருத்­துவ ரீதி­யான கண்­ணோட்­டத்தில் பார்த்தால் இதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யா­த­தா­கவே இருந்து வரு­கின்­றது. எனவே, சமூ­கங்கள் குடும்­பங்கள் உற­வி­னர்­க­ளுக்குள் திரு­ம­ணங்­களை காலம் கால­மாக ஏற்­றுக்­கொண்டு அதனை செய்து வரும்­போது, எமது மருத்­துவ ஆலோ­சனை ரீதி­யாக இவ்­வாறு செய்ய வேண்டாம். இதனை சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் ஏற்றுக் கொள்­வார்­களா? நாம் சொல்ல வந்த கருத்­து­களை சரி­யாக விளங்கிக் கொள்­வார்­களா ? என்ற பிரச்­சி­னைகள் இருக்­கத்தான் செய்­கின்­றன. ஆகையால் இந்த விடயம் குறித்து மக்கள் மத்­தியில் சரி­யான கருத்­துக்­களை விளக்க வேண்­டிய அவ­சியம் உள்­ளது.

ஞாயிறு, 7 ஜூன், 2015

தண்­டனை கடு­மை­யா­க இருப்பின் குற்­றச்­செ­யல்­களை தடுக்­க­மு­டியும்

வித்­தியா வன்­பு­ணர்வுக் கொலை­யுடன் புங்­கு­டு­தீவில் இது மூன்­றா­வது சம்­ப­வ­மாக இடம்­பெற்­றுள்­ளது. எனவே, இதற்கு ஒரே­வழி குற்­ற­வா­ளி­க­ளுக்­கான தண்­ட­னை­யினை துரி­த­மாக வழங்­கு­வ­தே­யாகும். தண்­டனை கடு­மை­யா­கவும், விரை­வா­கவும் இருந்தால் குற்றச்செயல்­களை குறைக்­க­மு­டியும். மக்­க­ளுக்கு சட்­டத்­தின்­மீது நம்­பிக்கை ஏற்­ப­ட­வேண்­டு­மாயின் தண்­ட­னைகள் விரை­வாக வழங்­கப்­பட வேண்டும் என்று வித்­தி­யாவின் குடும்­பத்­தினர் சார்பில் ஆஜ­ராகும் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கே.வி. தவ­ராசா வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய விசேட செவ்­வியில் தெரி­வித்தார்.

அவர் வழங்­கிய செவ்வி முழு­மை­யாக கீழே தரப்­ப­டு­கின்­றது.

வியாழன், 16 ஏப்ரல், 2015

“மக்களை நடுக்கடலில் விட்டுவிட்டுப் புலிகள் நந்திக்கடலில் விழுந்துவிட்டனர்” - எம். ஏ. நுஃமான்

எம். ஏ. நுஃமான்(1944) ஈழத்திலிருந்து தமிழ்சார்ந்து செயற்படும் ஆளுமைகளுள் முக்கியமானவர். கவிஞராகவும் சிறுகதையாசிரியராகவும் வெளிப்பட்ட இவர் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி ஆகியோரின் திறனாய்வு மரபில்வைத்து எண்ணப்பட வேண்டிய விமர்சகர்களுள் ஒருவர். மார்க்சியக் கோட்பாட்டின்மீது நம்பிக்கை கொண்டவராக இருந்தபோதிலும் அவற்றின் பெயரால் இலக்கியத்தை எளிமைப்படுத்துவதற்கு அப்பால் நிற்கும் வெகுசிலரில் ஒருவர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றார். இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். மரபான இலக்கியத்திலும் இலக்கணத்திலும் புலமைகொண்ட அவர் நவீன இலக்கியக் கோட்பாடுகள் பற்றி எழுதியும் விவாதித்தும் வருகிறார். தமிழில் கால்கொண்ட அமைப்பியல், பின்அமைப்பியல் பற்றி இவர் எழுதிய கட்டுரைகள் முக்கியமானவை. தமிழ்மொழியோடு ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளையும் பயின்று தனது விமர்சனச் செயற்பாட்டை அமைத்துக்கொண்டவர். ஆங்கிலத்திலிருந்து பாலஸ்தீனக் கவிதைகள் உள்ளிட்டவற்றை மொழிபெயர்த்த இவரின் கவிதைகள், ஆங்கிலம், சிங்களம், கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆசிரியர், இணையாசிரியர், பதிப்பாசிரியர், இணைப் பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர் என்ற வகையில் 25 நூல்களுக்குமேல் இவர் வெளியிட்டுள்ளார். ஈழத்தின் கடந்த தலைமுறையினரோடு படைப்புப் பணியைத் தொடங்கிய எம்.ஏ. நுஃமான் இளைய தலைமுறைப் படைப்பாளிகளோடும் உறவைப் பேணிவருபவர்.

ஞாயிறு, 7 டிசம்பர், 2014

எனக்கு ரஜினியைப் பற்றித் தெரியாது, கமல் பற்றித்தான் நன்கு தெரியும்... சொல்கிறார் குஷ்பு!

சென்னை: ராகுல் காந்தியின் அத்தியாயம் முடிந்து விட்டதாக யாரும் கருதக் கூடாது. அவருக்கு இன்னும் அவகாசம் தர வேண்டும். பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று சமீபத்தில் காங்கிரஸில் இணைந்த நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

மேலும் ரஜினியை அரசியலுக்கு இழுக்க நடக்கும் முயற்சிகள் குறித்து அவர் கூறுகையில், எனக்கு ரஜினியைப் பற்றி அவ்வளவாக தெரியாது. கமல்ஹாசன் குறித்துத்தான் நன்றாக தெரியும் என்றும் அவர் பதிலளித்துள்ளார்.

செவ்வாய், 4 நவம்பர், 2014

தமிழக போராட்டங்களால் பலன் இல்லை; பிரச்னை தான்: யாழ்ப்பாண பல்கலை மாணவர்கள் பளீச் பேட்டி

சென்னை : 'தமிழக தலைவர்களின் கண்டனங்களும், தீர்மானங்களும், இலங்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இலங்கை அரசை கண்டித்து, தமிழகத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்படும் போது, தங்களுக்கான உரிமைகள் கிடைப்பது தள்ளிப் போவதாகவே, அங்குள்ள தமிழர்கள் கருதுகின்றனர்' என, தமிழகம் வந்துள்ள இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

புதன், 5 மார்ச், 2014

ராஜீவ் கொலை பெரிய தப்பு...!

“ராஜீவ் காந்தியோட அந்த சாவுதான் எங்களோட வாழ்க்கையையும் சூறையாடப் போவுதுன்னு அப்ப தெரியல்ல” என்கிறார் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள். இந்த நாட்டில் சர்வவல்லமை பொருந்திய அமைப் புக்களோடு 23 வருடங்கள் போராடி உங்கள் மகனைத் தூக்குக் கொட்டடியிலிருந்து மீட்டிருக்கிறீர்கள். இந்தப் போரா ட்டத்துக்கான மனோபலம் எங்கிருந்து உருவானது?

பெரியார்க்கிட்டே இருந்துதான்பா உருவானுச்சு. நான் பொறந்தது தி.மு.க. குடும்பத்துல. எங்கப்பா டி.எ.திருவேங்கடம் கட்சியில எந்தக் கூட்டம், போராட்டம்னாலும் எங்களையும் கூடவே அழைத் துக்கிட்டுப்போயிடுவார். குரல் ஒப்பிக்கிறது. கூட்டங்கள்ல பேசுறதுன்னு வாய்ப்புக் கிடச்சப்பல்லாம் போய்க்கிட்டுத்தான் இருந்தேன். ஆனால் உண்மையான அரசியலை பெரியார்க்கிட்டேயிருந்துதான் கத்துக்கிட்டேன்.

செவ்வாய், 4 மார்ச், 2014

கே.பி. (குமரன் பத்மநாதன்) என்பவர், உண்மையில் கைது செய்யப் பட்டாரா? (-சாத்திரி பேசுகிறேன்.. பாகம் -மூன்று)

புலிகள் உலகாளவிய ரீதியில் போதைப் பொருள் கடத்தியதாக பாகம் ஒன்றில் கூறியிருந்தீர்கள். எந்தெந்த நாடுகள் ஊடாக போதைப் பொருள் கடத்தல் நடை பெற்றது என விளக்க முடியுமா?

ஆசியாவில் ஏன் உலகிலேயே மலிவாகவும், இலகுவாகவும் போதைப் பொருட்கள் கிடைக்குமிடமாக ஆப்கானிஸ்தான் விளங்குகிறது. இங்கு ஏற்றுமதிக்கெனவே போதைப் பொருட்கனை பயிரிடுகிறார்கள். அமெரிக்க சோவியத் யூனியன் பனிக்கால யுத்தத்தின் போது ரஸ்ய இராணுவத்தினரிற்குள் பரப்புவதற்காக அமெரிக்க உளவமைப்பே இந்த போதைப்பொருள் உற்பத்தியினை ஆப்கானிஸ்தானில் ஊக்குவித்திருந்தனர்.

திங்கள், 3 மார்ச், 2014

‘பாம்பு குறூப்’ எனப்படும் குழுவில் இயங்கியவர்களே பரிதியைக் கொன்றார்கள்.. “சாத்திரி” (புலிகளின் சர்வதேசப் பிரிவின் முக்கியஸ்தர்களில் ஒருவர்) பேசுகிறேன் பாகம்: இரண்டு..

‘சாத்திரி” எனப்படும் ஸ்ரீ கெளரிபால் ஒரு பதிவராக உங்களில் பெரும்பாலானவர்களுக்கு அறிமுகமாகியிருக்கலாம். ‘அவலங்கள்’ எனும் பெயரில் பல சொல்லப்படாத விடயங்களை பதிவாக எழுதி வருபவர்.

புலிகளின் சர்வதேசப் பிரிவின் முக்கியஸ்தர்களில் ஒருவராக பணியாற்றிய யாழ் மானிப்பாய் கிராமத்தில் பிறந்த இவர். 1984 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து புலிகள் அமைப்பில் ‘சியாம்’ என்கிற புனை பெயரில் இயங்கினார்.

வியாழன், 13 பிப்ரவரி, 2014

புலிகள் மக்களை படுகொலை செய்து குப்பையில் போட்டனர் - ஹரிகரன்

புலிகள் அமைப்பால் மக்கள் உயிருடன் பிடிக்கப்பட்டு மின்விளக்கு கம்பத்துடன் ரயர்களால் கட்டப்பட்டு தீ மூட்டப்பட்டனர். நாங்கள் அவர்களது பாதி எரிந்த உடலங்களைப் பார்த்தோம். நான் இவற்றைப் பார்த்த போது பிரபாகரனின் தலைமைத்துவம் மற்றும் இவரது ஈழம் தொடர்பான கருத்தியல் மீது நான் கொண்டிருந்த மிகக் குறைந்த ஆர்வத்தையும் இழந்தேன் என்று கேணல் ஆர்.ஹரிகரன் தெரிவித்தார். இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படை பணியில் ஈடுபட்ட போது இந்திய இராணுவப் புலனாய்வுத் தலைமை அதிகாரியாகச் செயற்பட்ட கேணல் ஆர்.ஹரிகரன், தான் பெற்றுக் கொண்ட அனுபவம் தொடர்பாக விரிவாக விளக்குகிறார்.

இது இங்கு செவ்வி வடிவில் வழங்கப்படுகிறது.

வியாழன், 6 பிப்ரவரி, 2014

அன்ரன் பாலசிங்கத்தை விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேற்றினார்களா?

புலிகளின் சர்வதேசப் பிரிவின் முக்கியஸ்தர்களில் ஒருவராக பணியாற்றிய சாத்திரியை நான் எடுத்தவிரிவான பேட்டியை எனது தளத்தில் பதிவு செய்கிறேன். பேட்டியின் நீளம் காரணமாக இந்தப் பேட்டியை பாகம் பாகமாக பதியவுள்ளேன். முதலாம் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை பதிவு செய்கிறேன்.

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல