ஐ.நா. பாதுகாப்புச் சபையின் 1373 ஆவது தீர்மானத்துக்கு அமைய, இலங்கை அரசாங்கமும், வெளிநாடுக ளில் செயற்படும் பயங்கரவாத அமைப்பு கள் என்ற பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில், விடுதலைப் புலிகள் இயக்கம், புலம்பெயர் தமிழர் அமைப்புகள் என மொத்தம் 16 அமைப்புகளை இலங்கை அரசாங்கம் தடை செய்யப்பட்டவையாக அறிவித்துள்ளது.
போரின் போது, கூட அரசாங்கம் விடுதலைப் புலிகளை தேசிய அளவில் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்ததே தவிர, சர்வதேச அளவுக்கு அதனை விரிவாக்க எத்தனித்திருக்கவில்லை.
அப்போதுகூட, அரசாங்கம் விடுத லைப் புலிகள் இயக்கம் மீது தான் கவ னம் செலுத்தியிருந்தது.
புலம்பெயர் அமைப்புகளை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை.
ஆனால், இப்போது விடுதலைப் புலி கள் சார்பு அமைப்புகளான புலம்பெயர் தமிழர் அமைப்புகள் அனைத்தையும் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலுக்குள் கொண்டு வந்துள்ளது அரசாங்கம்.
அதுவும், ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஒருசில நாட்களுக்குள் இது நடந்திருப்பது முக்கியமான விடயமாகப் பார்க்கப்படுகிறது.
ஜெனீவா தீர்மானம் கொண்டு வரப்பட்டது மேற்குலக நாடுகளின் முடிவாக இருந்தாலும், அதற்கு ஒரு வகையில் அழுத்தங்களைக் கொடுப்பதற்கு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் காரணமாக இருந்தன என்பதில் சந்தேகமில்லை.
ஜெனீவாவில் கூட்டத்தொடரில், இப் போது இலங்கை அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்டுள்ள உலகத் தமிழர் பேரவை, பிரித்தானியத் தமிழர் பேரவை உள்ளிட்ட பல அமைப்புகளின் பிரதிநிதிகள் வெளிப்படையாகவே பங்கேற்றிருந்தனர். சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை அவர்கள் இதன்போது கடுமையாகவும் வலியுறுத்தியிருந்த னர். இந்தச் சூழலில், ஜெனிவா கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தவுடன், அரசாங்கம் தடையை விதித்துள்ளது, ஜெனீவா தீர்மானத்தின் எதிரொலியாகவே பரவலாகப் பார்க்கப்படுகிறது.
ஆனால், ஜெனீவா தீர்மானத்தின் எதிரொலியாகவே, புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் கருத்துகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரிகேடியர் ருவன் வணிகசூரிய இதுகுறித்துக் கூறுகையில், ஜெனீவா தீர்மானத்துக்கும் இந்தத் தடைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறியிருக்கிறார்.
அதுமட்டுமன்றி, இது நீண்டகாலமாகவே மேற்கொள்ளப்பட்டு வந்த முயற்சி என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
அதேவேளை, இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு உயிர் கொடுக்கும் முயற்சிகளில் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் ஈடுபடுவதாகவும், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்க முனைவதாகவும் வெளிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த சில வாரங்களாக வடக்கிலும் கிழக்கிலும், நடந்து வரும் புலிவேட்டையுடன் தொடர்புபடுத்தி - அவர்களுக்குப் பின்புலமாக இருந்து செயற்படுவதாக குற்றம்சாட்டியே அரசாங்கம் இந்த தடையை விதித்திருந்தது.
ஆனால், வெளிநாடுகள் பலவற்றிலும் வலுவாகச் செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீது அரசாங்கம் கொண்டு வந்துள்ள இந்த தடைக்கான உண்மையான காரணம், ஜெனீவா தீர்மானத்துக்குப் பதிலடி கொடுப்பதாகவே கருத வைக்கிறது.
இந்தத் தடைக்கும் ஜெனீவாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற அரசாங்கத்தின் மறுப்பு எந்த அடிப்படை ஆதாரங்களுமற்றதாகவே உள்ளது.
அதேவேளை, புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்க முனைவதாகக் கூறி தடைவிதித்த அரசாங்கம், இன்னொரு வகையில் அதற்கான காரணத்தை நிரூபிக்கத் தவறியுள்ளது.
ஜெனீவா கூட்டத்தொடர் ஆரம்பமாகிய பின்னர் தான், வடக்கில் திடீரெனப் புலிவேட்டை தொடங்கப்பட்டது.
இந்தப் புலிவேட்டை நாளுக்கு நாள் விரிவாக்கப்பட்டும் – தேடப்படும் புதியவர்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டும் வருகிறது.
ஆனால், இதுவரை சன்மானம் அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வரும் கோபி, அப்பன், தேவியன் ஆகிய மூவரில் ஒருவரையேனும் அரசாங்கத்தினால் பிடிக்க முடியவில்லை. இது ஒரு பக்கத்தில் அரசாங்கத்தின் பாதுகாப்பு பலவீனம் என்று எடுத்துக் கொள்ளப்படலாம்.
இன்னொரு பக்கத்தில், வடக்கின் பாதுகாப்புக் கெடுபிடிகளை நீடித்துச் செல்வதற்கான முயற்சியாகவும் கருதலாம்.
ஜெனீவா கூட்டத்தொடரின் பின்னர் தொடங்கிய புலிவேட்டை மற்றும் புலிகளுக்கு மீண்டு உயிர் கொடுக்கும் முயற்சி என்பனவற்றுடன் தொடர்புபடுத்தி, புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளன.
ஆனால், இது நீண்டகால முயற்சி என்று பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவ்வாறாயின், குறுகிய காலத்துக்குள் ஏற்பட்டுள்ள, புலிகளின் மீள் எழுச்சி பற்றிய கதைகளுக்கும் இந்த தடைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது உறுதியாகிறது.
அதைவிட, வடக்கில் தொடங்கப்பட்ட புலிவேட்டையானது, இந்த தடையை விதிப்பதற்கான ஒரு கருவியாக உருவாக்கப்பட்டிருக்கலாம்.
அதேவேளை, இந்த தடையின் மூலம், புலம்பெயர் தமிழர்களின் அரசியல் பலத்தை சிதைக்கவும், அவர்களுக்கும், அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களுக்கும் இடையில் இருக்கின்ற சுமுகமான உறவுகளை குலைக்கவும் அரசாங்கம் முயற்சிப்பதாகத் தெரிகிறது.
அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்
டுள்ள 16 அமைப்புகளில், பல மேற்கு நாடுகளின் அரசாங்கங்கள், அரசியல் தலைவர்களுடன் சுமுகமான உறவைப் பேணும் நிலையில் இருப்பவை.
உதாரணத்துக்கு. உலகத் தமிழர் பேரவை, பிரித்தானியத் தமிழர் பேரவை, அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், கனேடி யத் தமிழ் காங்கிரஸ் உள்ளிட்ட அமைப்புகள் இவ்வாறானவை. இவை, விடுத லைப் புலிகளின் எந்தவொரு அமைப்பினதும் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை.ஆனால், இந்த அமைப்புகள் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறுவதற்கும், அதிகாரப்பகிர்வுக்கும் கொடுக்கும் அழுத்தங்களை அரசாங்கத்தினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்த தடையின் மூலம், புலம்பெயர் அமைப்புகளை நெருக்கடிக்குள் தள்ளுவது மட்டும் அரசாங்கத்தின் நோக்கமல்ல.
ஜெனீவாவில் தமக்கெதிரான தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றிய மேற்குலக நாடுகளையும் சிக்கலுக்குள் மாட்டி விடுவது தான் அரசாங்கத்தின் இலக்காக உள்ளது. ஏனென்றால், இந்த தடைவிதிக்கப்பட்டுள்ள, 1373ஆவது இலக்க ஐ.நா. பாதுகாப்புச் சபைத் தீர்மானத்துக்கு உலக நாடுகள் அனைத்தும் கட்டுப்படுபவை.
பயங்கரவாதத்தை ஒழித்தல் மற்றும் கட்டுப்படுத்தல் ஆகிய நோக்கங்களுக்காக அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் இது.
அமெரிக்கா மீது அல்கைய்தா நடத்திய தாக்குதலை அடுத்து, 2001 செப்டெம்பர் 28 ஆம் திகதி கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் அடிப்படை நோக்கம், பின்லேடனையும், அல்கைய்தாவையும் நசுக் குவதற்கு உலகளாவிய ஆதரவை உறுதிப்படுத்திக் கொள்வது தான்.
அமெரிக்கா அந்த நோக்கத்தைப் பெரும் பாலும் அடைந்து விட்டது என் றே கூறலாம். இப்போது இலங்கையும் அது வழியில் நடக்கப் பார்க்கிறது.
புலிகளுடன் போரை நடத்திய போது, கூட புலிகளுக்கு எதிராக இத்தகைய தடையை விதிக்க முனையாத இலங்கை அரசாங்கம், போருக்குப் பின்னர், 5 ஆண்டுகள் கழித்து இந்த தடையை விதித்திருக்கிறது,
இது புலம்பெயர் தமிழர்களின் அரசியல் போராட்டங்களை நசுக்குவதற்கான – முயற்சி என்பதை விட வேறெதுவாகவும் இருக்க முடியாது.
இந்த தடைக்குப் பின்னரும், குறிப்பிட்ட புலம்பெயர் அமைப்புகளுடன் மேற்கு நாடுகள் உறவுகளை வைத்துக் கொண்டிருந்தாலோ, அவற்றைச் செயற்பட அனுமதித்தாலோ, பயங்கரவாதத்துக்கு துணைபோவதாக மேற்கு நாடுகளை நோக்கி இலங்கை சுட்டுவிரலை நீட்டப்போகிறது.
அத்துடன், புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகள், சர்வதேச கூட்டங்களில் பங்கேற்பதற்கும் இலங்கை சட்டரீதியாக எதிர்ப்பைத் தெரிவிக்கும்.
அவர்கள் எதைச் சொன்னாலும் அது பயங்கரவாதிகளின் கருத்தாக தட்டிக்கழிக்கும்படி எடுத்துக்கூறும்.
இது தான் இனி நடக்கப்போகிறது
இதன்மூலம் புலம்பெயர் தமிழர்கள் சர்வதேச அளவில் கொடுத்து வரும் தலைவலியைக் குறைக்கலாம் என்று இலங்கை அரசாங்கம் கருதுகிறது.
இந்த அமைப்புகளில் இயங்குவோருக்கும் இலங்கையில் வசிக்கும் அவர்களின் உறவுகளுக்கும் இடையிலான உறவில் கூட இந்த தடை விரிசலை ஏற்படுத்தும்.
அவ்வாறான உறவு நீடித்தால், தடைசெய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம்சாட்டி இங்குள்ள உறவினர்கள் தண்டிக்கப்படக் கூடும்.
எனவே, புலம்பெயர் தமிழர்கள் தமது இங்குள்ள உறவுகளுடன் உறவைத் துண்டிக்க வேண்டும், அல்லது இலங்கை அரசுக்கு எதிரான செயற்பாடுகளில் இருந்து ஒதுங்க வேண்டும்.
புலம்பெயர் தமிழர்கள் தமது உறவுகளின் தொடர்புகளை துண்டிப்பதால், ஏற்படும் விரிசல், புலம்பெயர் தமிழர்களின் இலங்கை அரச எதிர்ப்பு போராட்டங்களை உளவியல் ரீதியாக வலுவிழக்கச் செய்யும்.
அது இனிவரும் காலத்தில் இலங்கைக்கான சர்வதேச அழுத்தங்களை குறைப்பதற்கு உதவியாக அமையும்.
இவ்வாறு அடுக்கடுக்கான பல இலக்குகளை அடையும் நோக்கில் தான் அரசாங்கம் இந்த தடையை விதித்துள்ளது.
அதேவேளை, இந்த தடையின் மூலம் அரசாங்கத்தின் தோல்வி ஒன்றும் வெளிப்பட்டுள்ளது.
போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், கே.பியை வைத்தும் அவர் சார்ந்த புலம்பெயர் செயற்பாட்டாளர்களை வைத்தும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளை முடக்க முயற்சித்தது அரசாங்கம்.
புலம்பெயர் தமிழர்கள் தம்மைத் தேடிவருவதாகவும் அவர்களுடன் அரசாங்கம் நல்லுறவை ஏற்படுத்த முனைவதாகவும் முன்னர் காட்டிக் கொண்ட அரசாங்கம், இப்போது புலம்பெயர் தமிழ் அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகளாக பட்டியலிட்டுள்ளது.
இது புலம்பெயர் தமிழ் அமைப்புகளை வசப்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் அடைந்துள்ள தோல்வியை எடுத்துக் காட்டியுள்ளது.
இந்த தடைகளின் மூலம் வெளிப்படையான போர் ஒன்றை புலம்பெயர் அமைப்புகளுக்கு எதிராக அரசாங்கம் தொடுத்துள்ளது.
இது, இருதரப்புக்கும் இடையில் சுமுகமான இணக்கத்தை ஏற்படுத்தும் கதவுகளை மட்டும் அடைக்கப் போவதில்லை.
இலங்கை அரசுக்கு எதிரான புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் நிலைப்பாட்டை இன்னும் கடுமையாக்கவும் காரணமாகலாம்.
சுபத்ரா
இந்தப் பட்டியலில், விடுதலைப் புலிகள் இயக்கம், புலம்பெயர் தமிழர் அமைப்புகள் என மொத்தம் 16 அமைப்புகளை இலங்கை அரசாங்கம் தடை செய்யப்பட்டவையாக அறிவித்துள்ளது.
போரின் போது, கூட அரசாங்கம் விடுதலைப் புலிகளை தேசிய அளவில் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்ததே தவிர, சர்வதேச அளவுக்கு அதனை விரிவாக்க எத்தனித்திருக்கவில்லை.
அப்போதுகூட, அரசாங்கம் விடுத லைப் புலிகள் இயக்கம் மீது தான் கவ னம் செலுத்தியிருந்தது.
புலம்பெயர் அமைப்புகளை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை.
ஆனால், இப்போது விடுதலைப் புலி கள் சார்பு அமைப்புகளான புலம்பெயர் தமிழர் அமைப்புகள் அனைத்தையும் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலுக்குள் கொண்டு வந்துள்ளது அரசாங்கம்.
அதுவும், ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஒருசில நாட்களுக்குள் இது நடந்திருப்பது முக்கியமான விடயமாகப் பார்க்கப்படுகிறது.
ஜெனீவா தீர்மானம் கொண்டு வரப்பட்டது மேற்குலக நாடுகளின் முடிவாக இருந்தாலும், அதற்கு ஒரு வகையில் அழுத்தங்களைக் கொடுப்பதற்கு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் காரணமாக இருந்தன என்பதில் சந்தேகமில்லை.
ஜெனீவாவில் கூட்டத்தொடரில், இப் போது இலங்கை அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்டுள்ள உலகத் தமிழர் பேரவை, பிரித்தானியத் தமிழர் பேரவை உள்ளிட்ட பல அமைப்புகளின் பிரதிநிதிகள் வெளிப்படையாகவே பங்கேற்றிருந்தனர். சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை அவர்கள் இதன்போது கடுமையாகவும் வலியுறுத்தியிருந்த னர். இந்தச் சூழலில், ஜெனிவா கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தவுடன், அரசாங்கம் தடையை விதித்துள்ளது, ஜெனீவா தீர்மானத்தின் எதிரொலியாகவே பரவலாகப் பார்க்கப்படுகிறது.
ஆனால், ஜெனீவா தீர்மானத்தின் எதிரொலியாகவே, புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் கருத்துகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரிகேடியர் ருவன் வணிகசூரிய இதுகுறித்துக் கூறுகையில், ஜெனீவா தீர்மானத்துக்கும் இந்தத் தடைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறியிருக்கிறார்.
அதுமட்டுமன்றி, இது நீண்டகாலமாகவே மேற்கொள்ளப்பட்டு வந்த முயற்சி என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
அதேவேளை, இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு உயிர் கொடுக்கும் முயற்சிகளில் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் ஈடுபடுவதாகவும், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்க முனைவதாகவும் வெளிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த சில வாரங்களாக வடக்கிலும் கிழக்கிலும், நடந்து வரும் புலிவேட்டையுடன் தொடர்புபடுத்தி - அவர்களுக்குப் பின்புலமாக இருந்து செயற்படுவதாக குற்றம்சாட்டியே அரசாங்கம் இந்த தடையை விதித்திருந்தது.
ஆனால், வெளிநாடுகள் பலவற்றிலும் வலுவாகச் செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீது அரசாங்கம் கொண்டு வந்துள்ள இந்த தடைக்கான உண்மையான காரணம், ஜெனீவா தீர்மானத்துக்குப் பதிலடி கொடுப்பதாகவே கருத வைக்கிறது.
இந்தத் தடைக்கும் ஜெனீவாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற அரசாங்கத்தின் மறுப்பு எந்த அடிப்படை ஆதாரங்களுமற்றதாகவே உள்ளது.
அதேவேளை, புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்க முனைவதாகக் கூறி தடைவிதித்த அரசாங்கம், இன்னொரு வகையில் அதற்கான காரணத்தை நிரூபிக்கத் தவறியுள்ளது.
ஜெனீவா கூட்டத்தொடர் ஆரம்பமாகிய பின்னர் தான், வடக்கில் திடீரெனப் புலிவேட்டை தொடங்கப்பட்டது.
இந்தப் புலிவேட்டை நாளுக்கு நாள் விரிவாக்கப்பட்டும் – தேடப்படும் புதியவர்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டும் வருகிறது.
ஆனால், இதுவரை சன்மானம் அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வரும் கோபி, அப்பன், தேவியன் ஆகிய மூவரில் ஒருவரையேனும் அரசாங்கத்தினால் பிடிக்க முடியவில்லை. இது ஒரு பக்கத்தில் அரசாங்கத்தின் பாதுகாப்பு பலவீனம் என்று எடுத்துக் கொள்ளப்படலாம்.
இன்னொரு பக்கத்தில், வடக்கின் பாதுகாப்புக் கெடுபிடிகளை நீடித்துச் செல்வதற்கான முயற்சியாகவும் கருதலாம்.
ஜெனீவா கூட்டத்தொடரின் பின்னர் தொடங்கிய புலிவேட்டை மற்றும் புலிகளுக்கு மீண்டு உயிர் கொடுக்கும் முயற்சி என்பனவற்றுடன் தொடர்புபடுத்தி, புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளன.
ஆனால், இது நீண்டகால முயற்சி என்று பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவ்வாறாயின், குறுகிய காலத்துக்குள் ஏற்பட்டுள்ள, புலிகளின் மீள் எழுச்சி பற்றிய கதைகளுக்கும் இந்த தடைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது உறுதியாகிறது.
அதைவிட, வடக்கில் தொடங்கப்பட்ட புலிவேட்டையானது, இந்த தடையை விதிப்பதற்கான ஒரு கருவியாக உருவாக்கப்பட்டிருக்கலாம்.
அதேவேளை, இந்த தடையின் மூலம், புலம்பெயர் தமிழர்களின் அரசியல் பலத்தை சிதைக்கவும், அவர்களுக்கும், அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களுக்கும் இடையில் இருக்கின்ற சுமுகமான உறவுகளை குலைக்கவும் அரசாங்கம் முயற்சிப்பதாகத் தெரிகிறது.
அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்
டுள்ள 16 அமைப்புகளில், பல மேற்கு நாடுகளின் அரசாங்கங்கள், அரசியல் தலைவர்களுடன் சுமுகமான உறவைப் பேணும் நிலையில் இருப்பவை.
உதாரணத்துக்கு. உலகத் தமிழர் பேரவை, பிரித்தானியத் தமிழர் பேரவை, அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், கனேடி யத் தமிழ் காங்கிரஸ் உள்ளிட்ட அமைப்புகள் இவ்வாறானவை. இவை, விடுத லைப் புலிகளின் எந்தவொரு அமைப்பினதும் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை.ஆனால், இந்த அமைப்புகள் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறுவதற்கும், அதிகாரப்பகிர்வுக்கும் கொடுக்கும் அழுத்தங்களை அரசாங்கத்தினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்த தடையின் மூலம், புலம்பெயர் அமைப்புகளை நெருக்கடிக்குள் தள்ளுவது மட்டும் அரசாங்கத்தின் நோக்கமல்ல.
ஜெனீவாவில் தமக்கெதிரான தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றிய மேற்குலக நாடுகளையும் சிக்கலுக்குள் மாட்டி விடுவது தான் அரசாங்கத்தின் இலக்காக உள்ளது. ஏனென்றால், இந்த தடைவிதிக்கப்பட்டுள்ள, 1373ஆவது இலக்க ஐ.நா. பாதுகாப்புச் சபைத் தீர்மானத்துக்கு உலக நாடுகள் அனைத்தும் கட்டுப்படுபவை.
பயங்கரவாதத்தை ஒழித்தல் மற்றும் கட்டுப்படுத்தல் ஆகிய நோக்கங்களுக்காக அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் இது.
அமெரிக்கா மீது அல்கைய்தா நடத்திய தாக்குதலை அடுத்து, 2001 செப்டெம்பர் 28 ஆம் திகதி கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் அடிப்படை நோக்கம், பின்லேடனையும், அல்கைய்தாவையும் நசுக் குவதற்கு உலகளாவிய ஆதரவை உறுதிப்படுத்திக் கொள்வது தான்.
அமெரிக்கா அந்த நோக்கத்தைப் பெரும் பாலும் அடைந்து விட்டது என் றே கூறலாம். இப்போது இலங்கையும் அது வழியில் நடக்கப் பார்க்கிறது.
புலிகளுடன் போரை நடத்திய போது, கூட புலிகளுக்கு எதிராக இத்தகைய தடையை விதிக்க முனையாத இலங்கை அரசாங்கம், போருக்குப் பின்னர், 5 ஆண்டுகள் கழித்து இந்த தடையை விதித்திருக்கிறது,
இது புலம்பெயர் தமிழர்களின் அரசியல் போராட்டங்களை நசுக்குவதற்கான – முயற்சி என்பதை விட வேறெதுவாகவும் இருக்க முடியாது.
இந்த தடைக்குப் பின்னரும், குறிப்பிட்ட புலம்பெயர் அமைப்புகளுடன் மேற்கு நாடுகள் உறவுகளை வைத்துக் கொண்டிருந்தாலோ, அவற்றைச் செயற்பட அனுமதித்தாலோ, பயங்கரவாதத்துக்கு துணைபோவதாக மேற்கு நாடுகளை நோக்கி இலங்கை சுட்டுவிரலை நீட்டப்போகிறது.
அத்துடன், புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகள், சர்வதேச கூட்டங்களில் பங்கேற்பதற்கும் இலங்கை சட்டரீதியாக எதிர்ப்பைத் தெரிவிக்கும்.
அவர்கள் எதைச் சொன்னாலும் அது பயங்கரவாதிகளின் கருத்தாக தட்டிக்கழிக்கும்படி எடுத்துக்கூறும்.
இது தான் இனி நடக்கப்போகிறது
இதன்மூலம் புலம்பெயர் தமிழர்கள் சர்வதேச அளவில் கொடுத்து வரும் தலைவலியைக் குறைக்கலாம் என்று இலங்கை அரசாங்கம் கருதுகிறது.
இந்த அமைப்புகளில் இயங்குவோருக்கும் இலங்கையில் வசிக்கும் அவர்களின் உறவுகளுக்கும் இடையிலான உறவில் கூட இந்த தடை விரிசலை ஏற்படுத்தும்.
அவ்வாறான உறவு நீடித்தால், தடைசெய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம்சாட்டி இங்குள்ள உறவினர்கள் தண்டிக்கப்படக் கூடும்.
எனவே, புலம்பெயர் தமிழர்கள் தமது இங்குள்ள உறவுகளுடன் உறவைத் துண்டிக்க வேண்டும், அல்லது இலங்கை அரசுக்கு எதிரான செயற்பாடுகளில் இருந்து ஒதுங்க வேண்டும்.
புலம்பெயர் தமிழர்கள் தமது உறவுகளின் தொடர்புகளை துண்டிப்பதால், ஏற்படும் விரிசல், புலம்பெயர் தமிழர்களின் இலங்கை அரச எதிர்ப்பு போராட்டங்களை உளவியல் ரீதியாக வலுவிழக்கச் செய்யும்.
அது இனிவரும் காலத்தில் இலங்கைக்கான சர்வதேச அழுத்தங்களை குறைப்பதற்கு உதவியாக அமையும்.
இவ்வாறு அடுக்கடுக்கான பல இலக்குகளை அடையும் நோக்கில் தான் அரசாங்கம் இந்த தடையை விதித்துள்ளது.
அதேவேளை, இந்த தடையின் மூலம் அரசாங்கத்தின் தோல்வி ஒன்றும் வெளிப்பட்டுள்ளது.
போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், கே.பியை வைத்தும் அவர் சார்ந்த புலம்பெயர் செயற்பாட்டாளர்களை வைத்தும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளை முடக்க முயற்சித்தது அரசாங்கம்.
புலம்பெயர் தமிழர்கள் தம்மைத் தேடிவருவதாகவும் அவர்களுடன் அரசாங்கம் நல்லுறவை ஏற்படுத்த முனைவதாகவும் முன்னர் காட்டிக் கொண்ட அரசாங்கம், இப்போது புலம்பெயர் தமிழ் அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகளாக பட்டியலிட்டுள்ளது.
இது புலம்பெயர் தமிழ் அமைப்புகளை வசப்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் அடைந்துள்ள தோல்வியை எடுத்துக் காட்டியுள்ளது.
இந்த தடைகளின் மூலம் வெளிப்படையான போர் ஒன்றை புலம்பெயர் அமைப்புகளுக்கு எதிராக அரசாங்கம் தொடுத்துள்ளது.
இது, இருதரப்புக்கும் இடையில் சுமுகமான இணக்கத்தை ஏற்படுத்தும் கதவுகளை மட்டும் அடைக்கப் போவதில்லை.
இலங்கை அரசுக்கு எதிரான புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் நிலைப்பாட்டை இன்னும் கடுமையாக்கவும் காரணமாகலாம்.
சுபத்ரா





































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக