நுழைவுக் கட்டணம் 8,500 ரூபாய்
பத்மசிறி என்பவர் கடந்த 15 ஆம் திகதி கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள முன்னணி தாய் மசாஜ் நிலையமொன்றிற்குச் சென்றார். கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றின் இரண்டாம் மாடியிலேயே அந்த மசாஜ் நிலையம் அமைந்திருந்தது.
உள்ளே சென்ற பத்மசிறியை வரவேற்பறையிலிருந்த யுவதி புன்சிரிப்போடு வரவேற்றார். அந்த சமயம் பத்மசிறி அங்கு சென்றதற்கான காரணத்தை கூறியுள்ளார். உடனே வரவேற்பறையிலிருந்த யுவதி "சேர் இப்போ எல்லாப் பெண்களையும் புக் பண்ணியிருக்காங்க. மாலை நான்கு மணிக்கு பிறகுதான் பெண்ணொருவரை பெற்றுக்கொள்ளமுடியும். சேர் பெண்ணொருவரை புக் பண்ணிவிட்டு தொலைபேசி இலக்கத்தை தந்துவிட்டு செல்லுங்கள். நாங்கள் உங்களுக்கு பின்னர் தகவல் தருகின்றோம்" இப்படியாக வரவேற்பறையிலிருந்த இலங்கை யுவதி கூறியுள்ளார்.
உடனே பத்மசிறி பெண்ணொருவரைப் பெற்றுக்கொள்வதற்காக புக் பண்ணிவிட்டு தனது கையடக்கத் தொலைபேசி இலக்கத்தையும் கொடுக்க வரவேற்பறையிலிருந்த அந்த யுவதி அந்த இலக்கத்தை பதிவு செய்து கொண்டாள். எனவே பத்மசிறி மசாஜ் நிலையத்திலிருந்து தனது நண்பர்களை சந்திக்கச் சென்றார்.
“என்ன நடந்தது......?” நண்பர்களில் ஒருவர் பத்மசிறியைக் கேட்க "எல்லாப் பெண்களும் புக் பண்ணியாச்சாம். எபொய் மன்ட் போட்டுவிட்டு தான் வந்தேன். மாலை நான்கு மணிக்குப் பிறகு தகவல் தருவதாகக் கூறினார்கள்" என்று பதிலளித்துள்ளார்.
"சரி...அதுவும் நல்லதுதான்..நான்கு மணிவரை இந்த பகுதியில் சுற்றித் திரிவோம்” பத்மசிறியின் நண்பர் கூறியுள்ளார். ஆம் அதற்கிணங்க அவர்கள் குறித்த ஹோட்டலை அண்மித்த பகுதியில் சுற்றித்திரிந்துள்ளனர். ஆனால் பத்மசிறியோ அந்த மசாஜ் நிலையத்திலிருந்து எப்போது தொலைபேசி அழைப்பு வருமென பதற்றத்துடன் இருந்துள்ளார்.
சரியாக மாலை நான்கு மணியளவில் பத்மசிறியின் தொலைபேசி ஒலியெழுப்பியது. பத்மசிறி பச்சைப் பொத்தானை நசுக்க மறுமுனையிலிருந்து "ஹலோ சேர் உங்களுடைய எபொய்மன்ட் சரி...இப்போ வாருங்கள் ” என்று பெண்ணொருவர் கூறியுள்ளார்.
குறித்த யுவதி தொலைபேசியில் கூறியதை பத்மசிறி நண்பர்களிடம் கூற 15 ஆயிரம் ரூபாய் பணத்தை பத்மசிறியிடம் கொடுத்த நண்பர்கள் தனஞ்சய என்ற ஒருவரையும் பத்மசிறியுடன் அனுப்பி வைத்துள்ளார்கள். பத்மசிறி அந்த நண்பருடன் தனது காரில் ஏறி அந்த மசாஜ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
உள்ளே நுழைந்த பத்மசிறி நுழைவு கட்டணமாக 8,500 ரூபாயை செலுத்தியுள்ளார். அதற்காக பற்றுச்சீட்டு ஒன்றும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அப்போது அழகிய தாய்லாந்து பெண்ணொருவர் பத்மசிறியின் தோளில் சாய்ந்துள்ளாள். அந்த சமயம் பத்மசிறியுடன் சென்ற நண்பர் தனஞ்சய மசாஜ் நிலையத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
நுழைவுக் கட்டணம் செலுத்திய பத்மசிறி அதன் பின்னர் தன்னருகே வந்து தோளில் சாந்த தாய்லாந்து யுவதிக்கு 5000 ரூபாய் பணத்தினை கொடுத்துள்ளார். அதன் பின்னரே இருவரும் அறைக்குள் சென்றுள்ளனர். அறைக்குள் சென்று சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு பின் வெளியிலிருந்த நண்பருக்கு "எல்லாம் சரி உள்ளே வாருங்கள்” என பத்மசிறியிடமிருந்து தொலைபேசி அழைப்பொன்று வந்தது.
உடனே பெண் கான்ஸ்டபிள்கள் அடங்கலாக விசேட குழுவொன்று குறித்த மசாஜ் நிலையத்திற்குள் நுழைந்தது. வரவேற்பறையிலிருந்த இரு பெண்களையும் அவ்விடத்திலேயே நிறுத்தி வைத்த பொலிஸார் ஒவ்வொரு அறையாக சோதனையிடத் தொடங்கியுள்ளனர். அப்போது பத்மசிறி இருந்த அறையும் சோதனையிடுவதற்காக தட்டப்பட்டது. கதவு திறக்கவே பொலிஸார் உள்ளே சென்றனர்.
அப்போது அந்த அறைக்குள் நிர்வாணக்கோலத்தில் தாய்லாந்து பெண்ணொருவர் இருந்துள்ளார். அதனைக் கண்ட பொலிஸார் உடனே ஆடையணிந்து கொண்டு வெளியில் வருமாறு கூறியுள்ளனர். அச்சமயம் பத்மசிறியும் அறைக்குள்ளிருந்து வெளியில் வந்துள்ளார். அப்போதே பத்மசிறி பொலிஸாரால் அனுப்பப்பட்டவர் என்பதை அங்கிருந்தவர்கள் அறிந்துள்ளனர்.
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபசார நிலையம் நடத்திவந்த குற்றச்சாட்டின் பேரில் அந்த மசாஜ் நிலையத்தின் முகாமையாளரையும் ஏழு தாய்லாந்துப் பெண்களையும் வரவேற்பறையிலிருந்த இலங்கைப் பெண்ணொருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதுமாத்திரமல்லாமல் பத்மசிறி வழங்கிய நுழைவு கட்டணமான 8500 ரூபாய் தாய்லாந்து யுவதிக்கு வழங்கிய 5000 ரூபாய் மற்றும் அன்றைய தினம் சேர்ந்திருந்த 2 இலட்சத்து 18 ஆயிரம் ரூபாய் பணத்துடன் 100 அமெரிக்க டொலர்கள், ஆணுறைகள் போன்றவற்றையும் பொலி ஸார் மீட்டுள்ளனர்.
இவற்றுக்கு மேலதிகமாக ஏழு கடவுச்சீட்டுக்கள் மற்றும் அந்த மசாஜ் நிலையத்துக்கு வந்து சென்றவர்கள் பற்றிய தகவல்கள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் பதிவு செய்யப்பட்டிருந்த புத்தகங் கள் போன்றவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஏழு தாய்லாந்து பெண்களில் அறுவர் சுற்றுலா விசா மூலம் இலங்கைக்கு வந்தவர்கள். ஒருவர் மாத்திரமே வதிவிட விசா பெற்றவராவார். சுற்றுலா விசா மூலம் வருபவர்களுக்கு எந்தவொரு தொழிலையும் இங்கு புரிய முடியாது என்பது யாவரும் அறிந்ததே.இவ்வாறான நிலையில் இவர்கள் விபசாரத்தில் ஈடுபட்டதானது அதைவிட பெரி யத் தவறாகும்.
நாட்டின் பல பாகங்களிலும் இவ்வாறு மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் விபசார விடுதிகள் இயங்கி வருகின்றன. அவ்வாறான விடுதிகள் பல கடந்த காலங்களில் பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அவ்வாறே இந்த மசாஜ் நிலையமும் சுற்றி வளைக்கப்பட்டது.
இந்த விபசார விடுதியானது சுமார் பத்து வருடங்களாக மசாஜ் நிலையம் என்ற போர்வையில் மிகவும் சூட்சுமமாக இயங்கி வந்துள்ளது. கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள இந்த மசாஜ் நிலையத்திற்கு பிரபலங்கள் உள்ளிட்ட பணம் படைத்த முக்கியஸ்தர்களும் சென்றுள்ளமை அங்கு மீட்கப்பட்ட பதிவுப் புத்தகத்திலிருந்தும் பெறப்பட்ட தொலைபேசி இலக்கங்களிலிருந்தும் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இந்த மசாஜ் நிலையத்தின் வரவேற்பறையில் இரு பெண்கள் இருப்பர். அவர்களில் ஒருவர் இலங்கையர். மற்றையவர் தாய்லாந்துப் பெண். இங்கு வரும் வாடிக்கையாளர்களுடன் கதைத்து தகவல்களை இலங்கைப் பெண் பெற்றுக்கொள்ள மறுபக்கத்திலிருக்கும் தாய்லாந்து பெண் உள்ளே இருக்கும் தாய்லாந்து பெண்களுடன் கதைத்து வாடிக்கையாளர்களுடன் இணைப்பை ஏற்படுத்துவார்.
இவர்களுக்கு மேலதிகமாக முகாமையாளர் ஒருவர் இருக்கிறார். இவர் இந்த மசாஜ் நிலையத்தற்கு வரும் வாடிக்கையாளர்களினதும் மசாஜ் நிலையத்தினதும் இரகசியங்களை பேணுபவராக செயற்பட்டு வந்துள்ளார். அந்த மசாஜ் நிலையத்துக்குள் சுற்றிலும் பூச்சாடிகள் தொங்கவிடப்பட்டுள்ளன. அந்த பூச்சாடிகளுக்குள் சிறிய பாதுகாப்பு கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் யார்-? யார்? உள்ளே வருகிறார்கள் என்ற சகல விடயங்களையும் இந்த முகாமையாளர் அவதானிப்பது வழக்கம்.
இந்த முகாமையாளருக்கு மாத சம்பளம் 50 ஆயிரம் ரூபா. அதேபோன்று தாய்லாந்து பெண்ணொருவருக்கு மாத சம்பளம் ஒரு இலட்சம் ரூபா. அதற்கு மேலதிகமாக தாய்லாந்துப் பெண்ணொருவர் நாள் ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரம் ரூபா வரை உழைப்பதாகக் கூறப்படுகிறது.
மசாஜ் நிலையத்துக்குள் நுழையும் ஒவ்வொரு வாடிக்கையாளரிடமிருந்தும் நுழைவுக் கட்டணமாக 8,500 ரூபா அறவிடப்படுகிறது. இந்த பணம் அந்த நிறுவனத்திற்கே செல்லும். அதற்காக பற்றுச்சீட்டும் வழங்கப்படும். அதன் பின்னர் குறித்த வாடிக்கையாளர் தனக்கு விருப்பமான தாய்லாந்துப் பெண்களை தெரிவு செய்யலாம்.
இவ்வாறு தெரிவு செய்யப்படும் பெண்களுக்கு வாடிக்கையாளர்கள் பணம் கொடுத்து அவர்களை பாலியல் இச்சைக்கு உட்படுத்துவர். அந்தப் பெண்கள் கோரும் பணத்தை அவர்கள் கொடுத்து அவர்களுடன் அறைக்குச் செல்வர். அவ்வாறு வாடிக்கையாளரிடமிருந்து பெறப்படும் பணமானது நிறுவனத்துக்கு வழங்கப்பட மாட்டாது.
கைது செய்யப்பட்ட ஏழு தாய்லாந்து பெண்களில் அறுவர் ஆறுமாத சுற்றுலா விசாவின் மூலம் இலங்கை வந்தவர்களாவர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து இவர்கள் தாய்லாந்திலும் விபசாரத் தொழிலை செய்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது. இந்த மசாஜ் நிலையமானது சுமார் பத்து வருடங்களாக செயற்பட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வலாணை குற்றத்தடுப்பு பிரிவு விசேட பொலிஸ் குழுவொன்று இந்த மசாஜ் நிலையத்தை சுற்றிவளைத்து குறித்த தாய்லாந்துப் பெண்கள் ஏழு பேரைக் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய குறித்த மசாஜ் நிலையத்தை சோதனையிடுவதற்கான நீதிமன்ற அனுமதியினைப் பெற்றுக் கொண்டே இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த சட்டவிரோத செயற்பாடானது சில பொலிஸ் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதாகவும் இங்கு பல முக்கிய பிரமுகர்கள் பிரபலங்கள் வந்து போயுள்ளதாகவும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட சகலரையும் அதேபோன்று தடயப்பொருட்களையும் வலாணை குற்றத்தடுப்பு பிரிவினர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். தற்போது அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் நாட்டில் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்திப் படுத்தி நாட்டை சமூகச் சீரழிவில் இருந்து பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது காலத்தின் கட் டாயமாகும்.
எம்.நேசமணி
பத்மசிறி என்பவர் கடந்த 15 ஆம் திகதி கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள முன்னணி தாய் மசாஜ் நிலையமொன்றிற்குச் சென்றார். கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றின் இரண்டாம் மாடியிலேயே அந்த மசாஜ் நிலையம் அமைந்திருந்தது.
உள்ளே சென்ற பத்மசிறியை வரவேற்பறையிலிருந்த யுவதி புன்சிரிப்போடு வரவேற்றார். அந்த சமயம் பத்மசிறி அங்கு சென்றதற்கான காரணத்தை கூறியுள்ளார். உடனே வரவேற்பறையிலிருந்த யுவதி "சேர் இப்போ எல்லாப் பெண்களையும் புக் பண்ணியிருக்காங்க. மாலை நான்கு மணிக்கு பிறகுதான் பெண்ணொருவரை பெற்றுக்கொள்ளமுடியும். சேர் பெண்ணொருவரை புக் பண்ணிவிட்டு தொலைபேசி இலக்கத்தை தந்துவிட்டு செல்லுங்கள். நாங்கள் உங்களுக்கு பின்னர் தகவல் தருகின்றோம்" இப்படியாக வரவேற்பறையிலிருந்த இலங்கை யுவதி கூறியுள்ளார்.
உடனே பத்மசிறி பெண்ணொருவரைப் பெற்றுக்கொள்வதற்காக புக் பண்ணிவிட்டு தனது கையடக்கத் தொலைபேசி இலக்கத்தையும் கொடுக்க வரவேற்பறையிலிருந்த அந்த யுவதி அந்த இலக்கத்தை பதிவு செய்து கொண்டாள். எனவே பத்மசிறி மசாஜ் நிலையத்திலிருந்து தனது நண்பர்களை சந்திக்கச் சென்றார்.
“என்ன நடந்தது......?” நண்பர்களில் ஒருவர் பத்மசிறியைக் கேட்க "எல்லாப் பெண்களும் புக் பண்ணியாச்சாம். எபொய் மன்ட் போட்டுவிட்டு தான் வந்தேன். மாலை நான்கு மணிக்குப் பிறகு தகவல் தருவதாகக் கூறினார்கள்" என்று பதிலளித்துள்ளார்.
"சரி...அதுவும் நல்லதுதான்..நான்கு மணிவரை இந்த பகுதியில் சுற்றித் திரிவோம்” பத்மசிறியின் நண்பர் கூறியுள்ளார். ஆம் அதற்கிணங்க அவர்கள் குறித்த ஹோட்டலை அண்மித்த பகுதியில் சுற்றித்திரிந்துள்ளனர். ஆனால் பத்மசிறியோ அந்த மசாஜ் நிலையத்திலிருந்து எப்போது தொலைபேசி அழைப்பு வருமென பதற்றத்துடன் இருந்துள்ளார்.
சரியாக மாலை நான்கு மணியளவில் பத்மசிறியின் தொலைபேசி ஒலியெழுப்பியது. பத்மசிறி பச்சைப் பொத்தானை நசுக்க மறுமுனையிலிருந்து "ஹலோ சேர் உங்களுடைய எபொய்மன்ட் சரி...இப்போ வாருங்கள் ” என்று பெண்ணொருவர் கூறியுள்ளார்.
குறித்த யுவதி தொலைபேசியில் கூறியதை பத்மசிறி நண்பர்களிடம் கூற 15 ஆயிரம் ரூபாய் பணத்தை பத்மசிறியிடம் கொடுத்த நண்பர்கள் தனஞ்சய என்ற ஒருவரையும் பத்மசிறியுடன் அனுப்பி வைத்துள்ளார்கள். பத்மசிறி அந்த நண்பருடன் தனது காரில் ஏறி அந்த மசாஜ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
உள்ளே நுழைந்த பத்மசிறி நுழைவு கட்டணமாக 8,500 ரூபாயை செலுத்தியுள்ளார். அதற்காக பற்றுச்சீட்டு ஒன்றும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அப்போது அழகிய தாய்லாந்து பெண்ணொருவர் பத்மசிறியின் தோளில் சாய்ந்துள்ளாள். அந்த சமயம் பத்மசிறியுடன் சென்ற நண்பர் தனஞ்சய மசாஜ் நிலையத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
நுழைவுக் கட்டணம் செலுத்திய பத்மசிறி அதன் பின்னர் தன்னருகே வந்து தோளில் சாந்த தாய்லாந்து யுவதிக்கு 5000 ரூபாய் பணத்தினை கொடுத்துள்ளார். அதன் பின்னரே இருவரும் அறைக்குள் சென்றுள்ளனர். அறைக்குள் சென்று சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு பின் வெளியிலிருந்த நண்பருக்கு "எல்லாம் சரி உள்ளே வாருங்கள்” என பத்மசிறியிடமிருந்து தொலைபேசி அழைப்பொன்று வந்தது.
உடனே பெண் கான்ஸ்டபிள்கள் அடங்கலாக விசேட குழுவொன்று குறித்த மசாஜ் நிலையத்திற்குள் நுழைந்தது. வரவேற்பறையிலிருந்த இரு பெண்களையும் அவ்விடத்திலேயே நிறுத்தி வைத்த பொலிஸார் ஒவ்வொரு அறையாக சோதனையிடத் தொடங்கியுள்ளனர். அப்போது பத்மசிறி இருந்த அறையும் சோதனையிடுவதற்காக தட்டப்பட்டது. கதவு திறக்கவே பொலிஸார் உள்ளே சென்றனர்.
அப்போது அந்த அறைக்குள் நிர்வாணக்கோலத்தில் தாய்லாந்து பெண்ணொருவர் இருந்துள்ளார். அதனைக் கண்ட பொலிஸார் உடனே ஆடையணிந்து கொண்டு வெளியில் வருமாறு கூறியுள்ளனர். அச்சமயம் பத்மசிறியும் அறைக்குள்ளிருந்து வெளியில் வந்துள்ளார். அப்போதே பத்மசிறி பொலிஸாரால் அனுப்பப்பட்டவர் என்பதை அங்கிருந்தவர்கள் அறிந்துள்ளனர்.
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபசார நிலையம் நடத்திவந்த குற்றச்சாட்டின் பேரில் அந்த மசாஜ் நிலையத்தின் முகாமையாளரையும் ஏழு தாய்லாந்துப் பெண்களையும் வரவேற்பறையிலிருந்த இலங்கைப் பெண்ணொருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதுமாத்திரமல்லாமல் பத்மசிறி வழங்கிய நுழைவு கட்டணமான 8500 ரூபாய் தாய்லாந்து யுவதிக்கு வழங்கிய 5000 ரூபாய் மற்றும் அன்றைய தினம் சேர்ந்திருந்த 2 இலட்சத்து 18 ஆயிரம் ரூபாய் பணத்துடன் 100 அமெரிக்க டொலர்கள், ஆணுறைகள் போன்றவற்றையும் பொலி ஸார் மீட்டுள்ளனர்.
இவற்றுக்கு மேலதிகமாக ஏழு கடவுச்சீட்டுக்கள் மற்றும் அந்த மசாஜ் நிலையத்துக்கு வந்து சென்றவர்கள் பற்றிய தகவல்கள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் பதிவு செய்யப்பட்டிருந்த புத்தகங் கள் போன்றவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஏழு தாய்லாந்து பெண்களில் அறுவர் சுற்றுலா விசா மூலம் இலங்கைக்கு வந்தவர்கள். ஒருவர் மாத்திரமே வதிவிட விசா பெற்றவராவார். சுற்றுலா விசா மூலம் வருபவர்களுக்கு எந்தவொரு தொழிலையும் இங்கு புரிய முடியாது என்பது யாவரும் அறிந்ததே.இவ்வாறான நிலையில் இவர்கள் விபசாரத்தில் ஈடுபட்டதானது அதைவிட பெரி யத் தவறாகும்.
நாட்டின் பல பாகங்களிலும் இவ்வாறு மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் விபசார விடுதிகள் இயங்கி வருகின்றன. அவ்வாறான விடுதிகள் பல கடந்த காலங்களில் பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அவ்வாறே இந்த மசாஜ் நிலையமும் சுற்றி வளைக்கப்பட்டது.
இந்த விபசார விடுதியானது சுமார் பத்து வருடங்களாக மசாஜ் நிலையம் என்ற போர்வையில் மிகவும் சூட்சுமமாக இயங்கி வந்துள்ளது. கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள இந்த மசாஜ் நிலையத்திற்கு பிரபலங்கள் உள்ளிட்ட பணம் படைத்த முக்கியஸ்தர்களும் சென்றுள்ளமை அங்கு மீட்கப்பட்ட பதிவுப் புத்தகத்திலிருந்தும் பெறப்பட்ட தொலைபேசி இலக்கங்களிலிருந்தும் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இந்த மசாஜ் நிலையத்தின் வரவேற்பறையில் இரு பெண்கள் இருப்பர். அவர்களில் ஒருவர் இலங்கையர். மற்றையவர் தாய்லாந்துப் பெண். இங்கு வரும் வாடிக்கையாளர்களுடன் கதைத்து தகவல்களை இலங்கைப் பெண் பெற்றுக்கொள்ள மறுபக்கத்திலிருக்கும் தாய்லாந்து பெண் உள்ளே இருக்கும் தாய்லாந்து பெண்களுடன் கதைத்து வாடிக்கையாளர்களுடன் இணைப்பை ஏற்படுத்துவார்.
இவர்களுக்கு மேலதிகமாக முகாமையாளர் ஒருவர் இருக்கிறார். இவர் இந்த மசாஜ் நிலையத்தற்கு வரும் வாடிக்கையாளர்களினதும் மசாஜ் நிலையத்தினதும் இரகசியங்களை பேணுபவராக செயற்பட்டு வந்துள்ளார். அந்த மசாஜ் நிலையத்துக்குள் சுற்றிலும் பூச்சாடிகள் தொங்கவிடப்பட்டுள்ளன. அந்த பூச்சாடிகளுக்குள் சிறிய பாதுகாப்பு கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் யார்-? யார்? உள்ளே வருகிறார்கள் என்ற சகல விடயங்களையும் இந்த முகாமையாளர் அவதானிப்பது வழக்கம்.
இந்த முகாமையாளருக்கு மாத சம்பளம் 50 ஆயிரம் ரூபா. அதேபோன்று தாய்லாந்து பெண்ணொருவருக்கு மாத சம்பளம் ஒரு இலட்சம் ரூபா. அதற்கு மேலதிகமாக தாய்லாந்துப் பெண்ணொருவர் நாள் ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரம் ரூபா வரை உழைப்பதாகக் கூறப்படுகிறது.
மசாஜ் நிலையத்துக்குள் நுழையும் ஒவ்வொரு வாடிக்கையாளரிடமிருந்தும் நுழைவுக் கட்டணமாக 8,500 ரூபா அறவிடப்படுகிறது. இந்த பணம் அந்த நிறுவனத்திற்கே செல்லும். அதற்காக பற்றுச்சீட்டும் வழங்கப்படும். அதன் பின்னர் குறித்த வாடிக்கையாளர் தனக்கு விருப்பமான தாய்லாந்துப் பெண்களை தெரிவு செய்யலாம்.
இவ்வாறு தெரிவு செய்யப்படும் பெண்களுக்கு வாடிக்கையாளர்கள் பணம் கொடுத்து அவர்களை பாலியல் இச்சைக்கு உட்படுத்துவர். அந்தப் பெண்கள் கோரும் பணத்தை அவர்கள் கொடுத்து அவர்களுடன் அறைக்குச் செல்வர். அவ்வாறு வாடிக்கையாளரிடமிருந்து பெறப்படும் பணமானது நிறுவனத்துக்கு வழங்கப்பட மாட்டாது.
கைது செய்யப்பட்ட ஏழு தாய்லாந்து பெண்களில் அறுவர் ஆறுமாத சுற்றுலா விசாவின் மூலம் இலங்கை வந்தவர்களாவர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து இவர்கள் தாய்லாந்திலும் விபசாரத் தொழிலை செய்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது. இந்த மசாஜ் நிலையமானது சுமார் பத்து வருடங்களாக செயற்பட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வலாணை குற்றத்தடுப்பு பிரிவு விசேட பொலிஸ் குழுவொன்று இந்த மசாஜ் நிலையத்தை சுற்றிவளைத்து குறித்த தாய்லாந்துப் பெண்கள் ஏழு பேரைக் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய குறித்த மசாஜ் நிலையத்தை சோதனையிடுவதற்கான நீதிமன்ற அனுமதியினைப் பெற்றுக் கொண்டே இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த சட்டவிரோத செயற்பாடானது சில பொலிஸ் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதாகவும் இங்கு பல முக்கிய பிரமுகர்கள் பிரபலங்கள் வந்து போயுள்ளதாகவும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட சகலரையும் அதேபோன்று தடயப்பொருட்களையும் வலாணை குற்றத்தடுப்பு பிரிவினர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். தற்போது அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் நாட்டில் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்திப் படுத்தி நாட்டை சமூகச் சீரழிவில் இருந்து பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது காலத்தின் கட் டாயமாகும்.
எம்.நேசமணி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக