ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

தமி­ழ­கத்­துக்கு ஏற்­பட்ட தலை ­கு­னிவு - விஜ­யகாந்த்

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெய­ல­லிதா முதல்வர் பத­வியில் இருக்­கும்­போதே தண்­டிக்­கப்­பட்­டதால் தமி­ழ­கத்­திற்கு தலை ­கு­னிவு ஏற்­பட்­டுள்­ள­தாக தே.மு.தி.க. தலைவர் விஜ­யகாந்த் தெரி­வித்­துள்ளார். இது தொடர்பில் அவர் வெளி­யிட்ட அறிக்­கையில்,

"தமி­ழ­கத்தின் முத­ல­மைச்­ச­ராக, ஜெய­ல­லிதா பத­வியில் இருக்­கும்­போதே தண்­டிக்­கப்­பட்­டதால், தமி­ழத்­திற்கு தலைக்­கு­னிவு ஏற்­பட்­டுள்­ளது. அதோடு மிகப் பெரிய பத­வியில் இருந்­தாலும், "சட்­டத்தின் முன் அனை­வரும் சமம்" என்­பது நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது. 'உப்பைத் தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும், தவறு செய்தால் தண்­ட­னையை அனு­ப­வித்தே தீர­வேண்டும்' என்ற இயற்­கையின் நிய­தியை யாராலும் மாற்ற முடி­யாது. இதற்கு தமி­ழ­கத்தின் முத­ல­மைச்சர் ஜெய­ல­லி­தாவும் விதி­வி­லக்­கல்ல.



சுமார் 18 வரு­டங்கள் நடை­பெற்ற இந்த வழக்கு ஒரு வழி­யாக முடி­வுக்கு வந்து ஜெய­ல­லி­தா­விற்கு தண்­டனை வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

1991 –- 1996 ஆகிய ஐந்து ஆண்­டு­க­ளுக்கு 60 ரூபாய் மட்டும் சம்­பளம் வாங்­கிய ஜெய­ல­லிதா 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்­தது எப்­படி என்­ப­துதான் வழக்கு. வழக்கு தொட­ரப்­பட்ட 1997 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை இந்த ஒரு வழக்­கிற்­காக மட்டும் மக்கள் வரிப்­பணம் சுமார் 10 கோடி ரூபாய் செல­வி­டப்­பட்­டுள்­ள­தாக தெரி­கி­றது.

சிறப்பு நீதி­மன்றம், உயர்­நீ­தி­மன்றம், உச்ச நீதி­மன்றம் என ஒவ்­வொரு நீதி­மன்­றத்­திலும் சட்ட நுணுக்­கங்­களை பயன்­ப­டுத்தி பல்­வேறு கார­ணங்­களை வித­வி­த­மாக சொல்லி இந்த வழக்கின் விசா­ர­ணையை காலம் தாழ்த்தி தடுத்து நிறுத்­திடப் பெரும் முயற்சி எடுக்­கப்­பட்­டது. இந்த வழக்­கிற்­காக இந்­தி­யாவின் பிர­ப­ல­மான மூத்த வழக்­க­றி­ஞர்கள் சிலரும் ஆஜ­ரா­னார்கள். ஆனால், இதை எல்லாம் முறி­ய­டித்து தீர்ப்பு வெளி­யா­கி­யுள்­ளது.

தற்­போது தரப்­பட்­டுள்ள இந்த தீர்ப்பு தவறு செய்­ப­வர்­க­ளுக்கு பாட­மாக இருக்கும். ஆட்சி அதி­காரம் கைகளில் இருக்­கி­றது என ஆட்­டம்­போடும் ஆட்­சி­யா­ளர்கள் இதை பார்த்த பிற­கா­வது திருந்­திட வேண்டும். மக்­களால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட ஆட்சியாளர்கள் மக்களுக்காக ஆட்சி செய்யவேண்டும் மாறாக இலஞ்சம், ஊழல், முறைகேடு, அராஜகம் என செய்து ஆட்சி நடத்தினால் தண்டனை நிச்சயம் என்பதை இத்தீர்ப்பு நிரூபித்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல