தமிழ் சினிமாவின் சிகரமாகத் திகழ்ந்த கே.பாலச்சந்தரின் மறைவால் திரையுலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. தமிழ் சினிமாவின் ஜாம்பவானாக இருந்து திரையுலகிற்கு பல்வேறு கலைஞர்களைத் தந்த கே.பாலச்சந்தர், தென்னிந்திய சினிமாவை புதிய பாதைக்கு இட்டுச் சென்றார். சுப்பஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல் ஹாசன் உள்ளிட்ட இவரின் கண்டு பிடிப்புகள் தான் இன்று திரையுலகை ஆட்சி செய்து வருகின்றார்கள். சினிமா கலைஞர்கள் அனைவருக்கும் குருநாதராய் இருந்த கே.பி. இன் இழப்பை எவராலும் ஈடு செய்ய முடியாது.
அண்மைக் காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் கே.பாலச்சந்தர் சிகிச்சை பலனின்றி தனது 84 ஆவது வயதில் கடந்தசெவ்வாய்க் கிழமை காலமானார். இயக்குநர் கே.பாலச்சந்தருக்கு சிறுநீர் பாதையில் ஏற்பட்ட நோய்த்தொற்று காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மூத்த மருத்துவ நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகளான ரஜினி, குஷ்பு உள்ளிட்ட பலரும் அவரை சந்தித்து நலம் விசாரித்திருந்தனர்.
மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தருக்கு 3 பிள்ளைகள். அவரது மகன் கைலாசம் சில மாதங்களுக்கு முன்பு தான் உடல்நலம் பாதிக்கப்பட்டு காலமானார். மேலும், பிரசன்னா என்ற மகனும், புஷ்பா கந்தசாமி என்ற மகளும் அவரைக் கவனித்து வந்தனர்.
தமிழ் சினிமாவில் ‘இயக்குநர் சிகரம்’ எனப் போற்றப்படும் கே.பாலச்சந்தர், 'நீர்க்குமிழி' தொடங்கி 'பொய்' வரை 101 படங்களை இயக்கியுள்ளார். அதிகமான டி.வி தொடர்களையும் இயக்கி இருக்கிறார். 'பொய்', 'ரெட்டை சுழி' மற்றும் 'உத்தம வில்லன்' ஆகிய மூன்று படங்களில் நடித்திருக்கிறார். இதில் 'உத்தம வில்லன்' திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. 'கலைமாமணி', 'பத்மஸ்ரீ', 'தாதா சாகேப் பால்கே விருது' உள்ளிட்ட பல உயரிய விருதுகளையும் அவர் வென்றவர்.
கே.பாலச்சந்தர் தன் வாழ்க்கையில் பல படிக்கட்டுகளைக் கடந்து முன்னேறி வந்தவர். நாடகங்கள் மூலம் பிரபலமான இவர் திரைப்படத்துறையில் தனக்கேயுரிய முத்திரையைப் பதித்தவர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அறிவியல் பட்டப்படிப்பு படித்த பாலச்சந்தர், படிக்கும் போதே 1960 களில் தலைமை கணக்காளர் அலுவலகத்தில் உயர்பதவியில் இருந்தார்.
'மேஜர் சந்திரகாந்த்', 'சர்வர் சுந்தரம்', 'நீர்க்குமிழி', 'மெழுகுவர்த்தி' மற்றும் 'நவக்கிரகம்' உள்ளிட்ட பிரபல நாடகங்கள் மூலம் அவர் முன்னணிக்கு வந்தார். அவரே தயாரித்து, இயக்கிய நாடகங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, விமர்சகர்களின் பாராட்டுதலையும் ஒருங்கே பெற்றது.
எம்.ஜி.ஆர் நடிப்பில் 1964 ஆம் ஆண்டு வெளியான 'தெய்வத்தாய்' படத்துக்கு வசனம் எழுதியதன் மூலம் ‘கே.பி’ திரையுலகில் நுளைந்தார். அந்த சமயத்தில், தான் பணியாற்றிய அலுவலகத்தில் கண்காணிப்பாளராகவும் பதவி உயர்வு வந்தது. இதற்கிடையே இவரின் 'சர்வர் சுந்தரம்' நாடகத்தைப் படமாக்கும் உரிமையைப் பெற்ற ஏ.வி.எம் செட்டியார், அதை கிருஷ்ணன், - பஞ்சு இரட்டை இயக்குநர்களைக்கொண்டு நாகேஷை நாயகனாக நடிக்கவைத்து தயாரித்தார். படம் மிகப் பெரிய வெற்றிபெற்றது. இவரின் இன்னொரு நாடகமான ‘மேஜர் சந்திரகாந்த்’ இந்தியில் படமாக எடுக்கப்பட்டு, தேசிய விருது பெற்றது.
1965 இல் 'நீர்க்குமிழி' மூலம் இயக்குநராக அறிமுகமானார் கே.பி. அதைத் தொடர்ந்து 'நாணல்', 'மேஜர் சந்திரகாந்த்', 'எதிர்நீச்சல்' என தன் நாடகங்களையே படமாக எடுத்தார்.
அன்று முதல் வெள்ளித்திரையில் அவர் ஒரு நட்சத்திர இயக்குநராக ஜொலிக்கத் தொடங்கினார். அதன் பிறகு பல மொழிகளிலும் திரைக்கதை, வசனம், இயக்கம் என்று அவரது பணி பரவலாக்கம் பெற்றது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மற்றும் இந்தி மொழிகளில் இவரது படங்களுக்கு பலத்த வரவேற்பு கிடைத்தன. தமிழ் மற்றும் தெலுங்கில் இவர் இயக்கிய ‘பாமா விஜயம்’ இவரை புதிய பரிணாமத்திற்கு இட்டுச் சென்றது. இவரின் ‘இருகோடுகள்’ சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதை பெற்றது. ‘அரங்கேற்றம்', 'சொல்லத்தான் நினைக்கிறேன்', 'அவள் ஒரு தொடர்கதை', 'நான் அவன் இல்லை.' என பாலச்சந்தர் இயக்கிய படங்கள் விமர்சனம், வியாபாரம், சர்ச்சை என ஏதோ ஒருவகையில் மக்களிடம் சென்றடைந்துகொண்டே இருந்தது. ‘ஏக் துஜே கே லியே’ இவர் எழுதி இயக்கிய இந்திப் படம், 1981இல் வெளிவந்து காதல் சினிமாக்களின் முகவரியாக அமைந்தது. தெலுங்கில் 'மரோசரித்ரா' என்ற படம்தான் இந்தியில் 'ஏக் துஜே கே லியே'-வாக மாறியது. தெலுங்கில் சரிதா நாயகியாகவும் கமல்ஹாசன் நாயகனாகவும் நடித்திருந்தனர். இந்தியில் சரிதாவுக்கு பதிலாக ரதி அக்னிஹோத்ரியை கமலின் நாயகியாக நடிக்க வைத்தார். தெலுங்கு, இந்தி இரண்டிலுமே இந்தப் படம் பல மைல்கற்களைக் கடந்து சென்றது.
இவரின் படங்கள் வெவ்வேறு வடிவங்களில் இருந்ததாலும், அவை பெரும்பாலும் சமூக அரசியல் விடயங்களையே மையப்படுத்தியவையாக அமைந்தன. இந்தியப் பெண்களின் பரிதாப நிலைகளையே இவரின் படங்கள் அதிகமாக பேசின. மாதவன், சிம்ரன், சினேகா நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளியான ‘பார்த்தாலே பரவசம்’ இவரின் 100 ஆவது படமாக அமைந்திருந்தது. 2006 ஆம் ஆண்டு வெளியான ‘பொய்’ திரைப்படம் கே.பி இயக்கிய 101 ஆவது படமாக அமைந்திருந்தது. இதன் பின்னர் திரைப்படங்கள் இயக்குவதை நிறுத்திக்கொண்டாலும் சினிமா ரசிகராக இளைய தலைமுறைக் கலைஞர்களை உற்சாகப்படுத்தி வந்தார்.
பெண்கள் சமுதாயத்தின் பிரச்சினைகளை உரத்த குரலில் பேசியது இவரது சில படங்கள், அதோடு மட்டுமல்லாமல் அவர்களது உயர்வுக்கும் வித்திட்டது என்று கூறலாம். மது அருந்தும் பழக்கத்தின் தீமைகளை ’உன்னால் முடியும் தம்பி’ என்ற படத்தில் காட்டிய பாலச்சந்தர், சமுதாயத்திற்காக தன்னலமற்று உழைக்க வேண்டிய கடமையையும் அப்படத்தின் மூலம் உணர்த்தினார்.
சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல என்பதை தீவிரமாக நம்பிய அவர் தன் படத்தில் சமுதாயத்திற்கான நற்செய்தி இருக்க வேண்டும் என்று நினைத்தார், அவ்வாறே படங்களையும் எடுத்தார். இவரது படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள், பாடகர்கள் பலர் தேசிய, மாநில அளவில் பல்வேறு விருதுகளை வென்றுள்ளனர்.
திறமைகளைக் கண்டுபிடிப்பதில் அவருக்கு நிகர் அவரே. இன்று நட்சத்திரங்களாகத் திகழும் பலர் இவரது கைவண்ணத்தில் உருவானவர்களே. எத்தனையோ இளம் இயக்குநர்கள், திறமையான புதிய இயக்குநர்கள் உருவாகி வந்த போதிலும் சுமார் 50 ஆண்டுகளாக இவர் படங்களை அவருக்கே உரிய தரத்துடனும் உற்சாகத்துடனும் கொடுத்து வந்தார். இவரது உத்திகள் பல இளம் இயக்குநர்களுக்கு பெரும் தூண்டுகோலாக அமைந்துள்ளது. இளம் நடிகர்களுக்கு மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எப்படியோ அப்படித்தான் இளம் இயக்குநர்களுக்கு இயக்குநர் திலகம் கே.பாலச்சந்தர்.
தான் எடுத்துக் கொள்ளும் கதை மீதான உறுதிப்பாடு மற்றும் தான் நினைத்ததை கலைஞர்களிடமிருந்து தருவிக்கக்கூடிய அவரது திறமையே கலைமட்டத்திலும், வணிக அளவிலும் அவரது பெரும் வெற்றிக்கு காரணம்.
சின்னத் திரையிலும் கே.பாலச்சந்தர் தனது முத்திரையைப் பதித்து வந்துள்ளார். வெள்ளித்திரையில் காண்பித்த அதே தீவிரம், காட்சியமைப்பில் துல்லியம் என்று இங்கும் அவர் சமரசத்திற்கு இடம் கொடுக்கவில்லை. 1990 களில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான தொடர் 'ரயில் ஸ்நேகம்' சீரியல்கள் அளவில் ஒரு புதிய பாதையை அமைத்துக் கொடுத்தது. கை அளவு மனசு என்ற தொடரும் மக்கள் மனதைக் கவர்ந்தது. 'ரகுவம்சம்' என்ற நெடுந்தொடர் மூலம் மெகா சீரியல்களும் ஏன் தரமாக இருக்கக் கூடாது என்ற சிந்தனையை இளம் இயக்குநர்கள் மத்தியில் ஏற்படுத்தினார் பாலச்சந்தர். இவரது படங்கள், அதன் கதைக்கரு, கதாபாத்திர உருவாக்கம், கதையாடல் முறை, உத்தி ஆகியவை இன்று மாணவர்களின் ஆய்வு செய்வதற்கு ஒரு கருவியாக உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
ஒரு ஹோலி பண்டிகை தினத்தில் சிவாஜி ராவ் என்ற நடிகனுக்கு ரஜினிகாந்த் என்று பெயர் மாற்றம் செய்தவர் கே.பாலச்சந்தர். திரைப்பட கல்லூரியில் பேசிய கே.பாலச்சந்தரிடம் அங்கு மாணவராக இருந்த சிவாஜிராவ் (ரஜினி) "நடிப்பைத் தவிர ஒரு நடிகனிடம் வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்?" என்று கேட்க கே.பி சிரித்தபடி "கெமராவிற்கு வெளியே அவர் நடிக்க கூடாது" என்று கே.பி. பதிலளித்துள்ளார். அதனை ரஜினிகாந்த் இன்றுவரை பின்பற்றி வருகின்றார்.
அதேபோல், பாலச்சந்தரை தனது குருநாதராக போற்றி வருபவர் கமல். காரணம், கமலின் திரையுலக வாழ்க்கையில் பல முக்கிய கதாபாத்திரங்களை அளித்து அவரை மெருகேற்றியவர் கே.பி. என்றே கூற வேண்டும். ரஜனிகாந்த், கமல்ஹாசனுடன், விவேக், நாசர், ராதாரவி, சார்லி, பிரகாஷ்ராஜ், சரத்பாபு, சிரஞ்சீவி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.வி.சேகர், திலீப், பூர்ணம் விஸ்வநாதன், கவிஞர் வாலி, மதன் பாபு, மேஜர் சுந்தரராஜன், டெல்லி கணேஷ், வை.ஜி.மகேந்திரன் உட்பட பல நடிகர்களையும் கே. பாலச்சந்தரே அறிமுகப்படுத்தியிருந்தார்.
அதேபோல், சுஜாதா, ஜெயப்பிரதா, சரிதா, ஜெயசித்ரா, படாபட் ஜெயலட்சுமி, ஸ்ரீப்ரியா, 'கல்கி' ஸ்ருதி, விஜி, சித்தாரா, ஸ்ரீவித்யா, பிரமிளா, ரதி, ஜெயசுதா, சுமித்ரா, பாத்திமா பாபு, யுவராணி, விசாலி கண்ணதாசன் போன்ற நடிகைகளும் கே.பி. இன் கண்டு பிடிப்புகளே. இயக்குநர்களைப் பொறுத்தவரை விசு, மெளலி, அமீர்ஜான் மற்றும் இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், மரகதமணி, சக்ஸபோன் கலைஞர் கத்ரி கோபால்நாத் ஆகிேயார் கே.பாலச்சந்தர் தயாரித்த படங்களின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்கள். தமிழ் திரையுலகை ஏற்றப் பாதைக்கு இட்டுச்சென்று இவ்வுலகைவிட்டு நீங்கிய கே.பாலச்சந்தரின் சாதனைகள் என்றும் நிலைத்து நிற்கும்.
தொகுப்பு: எஸ்.ரகுதீஸ்
அண்மைக் காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் கே.பாலச்சந்தர் சிகிச்சை பலனின்றி தனது 84 ஆவது வயதில் கடந்தசெவ்வாய்க் கிழமை காலமானார். இயக்குநர் கே.பாலச்சந்தருக்கு சிறுநீர் பாதையில் ஏற்பட்ட நோய்த்தொற்று காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மூத்த மருத்துவ நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகளான ரஜினி, குஷ்பு உள்ளிட்ட பலரும் அவரை சந்தித்து நலம் விசாரித்திருந்தனர்.
மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தருக்கு 3 பிள்ளைகள். அவரது மகன் கைலாசம் சில மாதங்களுக்கு முன்பு தான் உடல்நலம் பாதிக்கப்பட்டு காலமானார். மேலும், பிரசன்னா என்ற மகனும், புஷ்பா கந்தசாமி என்ற மகளும் அவரைக் கவனித்து வந்தனர்.
தமிழ் சினிமாவில் ‘இயக்குநர் சிகரம்’ எனப் போற்றப்படும் கே.பாலச்சந்தர், 'நீர்க்குமிழி' தொடங்கி 'பொய்' வரை 101 படங்களை இயக்கியுள்ளார். அதிகமான டி.வி தொடர்களையும் இயக்கி இருக்கிறார். 'பொய்', 'ரெட்டை சுழி' மற்றும் 'உத்தம வில்லன்' ஆகிய மூன்று படங்களில் நடித்திருக்கிறார். இதில் 'உத்தம வில்லன்' திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. 'கலைமாமணி', 'பத்மஸ்ரீ', 'தாதா சாகேப் பால்கே விருது' உள்ளிட்ட பல உயரிய விருதுகளையும் அவர் வென்றவர்.
கே.பாலச்சந்தர் தன் வாழ்க்கையில் பல படிக்கட்டுகளைக் கடந்து முன்னேறி வந்தவர். நாடகங்கள் மூலம் பிரபலமான இவர் திரைப்படத்துறையில் தனக்கேயுரிய முத்திரையைப் பதித்தவர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அறிவியல் பட்டப்படிப்பு படித்த பாலச்சந்தர், படிக்கும் போதே 1960 களில் தலைமை கணக்காளர் அலுவலகத்தில் உயர்பதவியில் இருந்தார்.
'மேஜர் சந்திரகாந்த்', 'சர்வர் சுந்தரம்', 'நீர்க்குமிழி', 'மெழுகுவர்த்தி' மற்றும் 'நவக்கிரகம்' உள்ளிட்ட பிரபல நாடகங்கள் மூலம் அவர் முன்னணிக்கு வந்தார். அவரே தயாரித்து, இயக்கிய நாடகங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, விமர்சகர்களின் பாராட்டுதலையும் ஒருங்கே பெற்றது.
எம்.ஜி.ஆர் நடிப்பில் 1964 ஆம் ஆண்டு வெளியான 'தெய்வத்தாய்' படத்துக்கு வசனம் எழுதியதன் மூலம் ‘கே.பி’ திரையுலகில் நுளைந்தார். அந்த சமயத்தில், தான் பணியாற்றிய அலுவலகத்தில் கண்காணிப்பாளராகவும் பதவி உயர்வு வந்தது. இதற்கிடையே இவரின் 'சர்வர் சுந்தரம்' நாடகத்தைப் படமாக்கும் உரிமையைப் பெற்ற ஏ.வி.எம் செட்டியார், அதை கிருஷ்ணன், - பஞ்சு இரட்டை இயக்குநர்களைக்கொண்டு நாகேஷை நாயகனாக நடிக்கவைத்து தயாரித்தார். படம் மிகப் பெரிய வெற்றிபெற்றது. இவரின் இன்னொரு நாடகமான ‘மேஜர் சந்திரகாந்த்’ இந்தியில் படமாக எடுக்கப்பட்டு, தேசிய விருது பெற்றது.
1965 இல் 'நீர்க்குமிழி' மூலம் இயக்குநராக அறிமுகமானார் கே.பி. அதைத் தொடர்ந்து 'நாணல்', 'மேஜர் சந்திரகாந்த்', 'எதிர்நீச்சல்' என தன் நாடகங்களையே படமாக எடுத்தார்.
அன்று முதல் வெள்ளித்திரையில் அவர் ஒரு நட்சத்திர இயக்குநராக ஜொலிக்கத் தொடங்கினார். அதன் பிறகு பல மொழிகளிலும் திரைக்கதை, வசனம், இயக்கம் என்று அவரது பணி பரவலாக்கம் பெற்றது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மற்றும் இந்தி மொழிகளில் இவரது படங்களுக்கு பலத்த வரவேற்பு கிடைத்தன. தமிழ் மற்றும் தெலுங்கில் இவர் இயக்கிய ‘பாமா விஜயம்’ இவரை புதிய பரிணாமத்திற்கு இட்டுச் சென்றது. இவரின் ‘இருகோடுகள்’ சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதை பெற்றது. ‘அரங்கேற்றம்', 'சொல்லத்தான் நினைக்கிறேன்', 'அவள் ஒரு தொடர்கதை', 'நான் அவன் இல்லை.' என பாலச்சந்தர் இயக்கிய படங்கள் விமர்சனம், வியாபாரம், சர்ச்சை என ஏதோ ஒருவகையில் மக்களிடம் சென்றடைந்துகொண்டே இருந்தது. ‘ஏக் துஜே கே லியே’ இவர் எழுதி இயக்கிய இந்திப் படம், 1981இல் வெளிவந்து காதல் சினிமாக்களின் முகவரியாக அமைந்தது. தெலுங்கில் 'மரோசரித்ரா' என்ற படம்தான் இந்தியில் 'ஏக் துஜே கே லியே'-வாக மாறியது. தெலுங்கில் சரிதா நாயகியாகவும் கமல்ஹாசன் நாயகனாகவும் நடித்திருந்தனர். இந்தியில் சரிதாவுக்கு பதிலாக ரதி அக்னிஹோத்ரியை கமலின் நாயகியாக நடிக்க வைத்தார். தெலுங்கு, இந்தி இரண்டிலுமே இந்தப் படம் பல மைல்கற்களைக் கடந்து சென்றது.
இவரின் படங்கள் வெவ்வேறு வடிவங்களில் இருந்ததாலும், அவை பெரும்பாலும் சமூக அரசியல் விடயங்களையே மையப்படுத்தியவையாக அமைந்தன. இந்தியப் பெண்களின் பரிதாப நிலைகளையே இவரின் படங்கள் அதிகமாக பேசின. மாதவன், சிம்ரன், சினேகா நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளியான ‘பார்த்தாலே பரவசம்’ இவரின் 100 ஆவது படமாக அமைந்திருந்தது. 2006 ஆம் ஆண்டு வெளியான ‘பொய்’ திரைப்படம் கே.பி இயக்கிய 101 ஆவது படமாக அமைந்திருந்தது. இதன் பின்னர் திரைப்படங்கள் இயக்குவதை நிறுத்திக்கொண்டாலும் சினிமா ரசிகராக இளைய தலைமுறைக் கலைஞர்களை உற்சாகப்படுத்தி வந்தார்.
பெண்கள் சமுதாயத்தின் பிரச்சினைகளை உரத்த குரலில் பேசியது இவரது சில படங்கள், அதோடு மட்டுமல்லாமல் அவர்களது உயர்வுக்கும் வித்திட்டது என்று கூறலாம். மது அருந்தும் பழக்கத்தின் தீமைகளை ’உன்னால் முடியும் தம்பி’ என்ற படத்தில் காட்டிய பாலச்சந்தர், சமுதாயத்திற்காக தன்னலமற்று உழைக்க வேண்டிய கடமையையும் அப்படத்தின் மூலம் உணர்த்தினார்.
சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல என்பதை தீவிரமாக நம்பிய அவர் தன் படத்தில் சமுதாயத்திற்கான நற்செய்தி இருக்க வேண்டும் என்று நினைத்தார், அவ்வாறே படங்களையும் எடுத்தார். இவரது படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள், பாடகர்கள் பலர் தேசிய, மாநில அளவில் பல்வேறு விருதுகளை வென்றுள்ளனர்.
திறமைகளைக் கண்டுபிடிப்பதில் அவருக்கு நிகர் அவரே. இன்று நட்சத்திரங்களாகத் திகழும் பலர் இவரது கைவண்ணத்தில் உருவானவர்களே. எத்தனையோ இளம் இயக்குநர்கள், திறமையான புதிய இயக்குநர்கள் உருவாகி வந்த போதிலும் சுமார் 50 ஆண்டுகளாக இவர் படங்களை அவருக்கே உரிய தரத்துடனும் உற்சாகத்துடனும் கொடுத்து வந்தார். இவரது உத்திகள் பல இளம் இயக்குநர்களுக்கு பெரும் தூண்டுகோலாக அமைந்துள்ளது. இளம் நடிகர்களுக்கு மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எப்படியோ அப்படித்தான் இளம் இயக்குநர்களுக்கு இயக்குநர் திலகம் கே.பாலச்சந்தர்.
தான் எடுத்துக் கொள்ளும் கதை மீதான உறுதிப்பாடு மற்றும் தான் நினைத்ததை கலைஞர்களிடமிருந்து தருவிக்கக்கூடிய அவரது திறமையே கலைமட்டத்திலும், வணிக அளவிலும் அவரது பெரும் வெற்றிக்கு காரணம்.
சின்னத் திரையிலும் கே.பாலச்சந்தர் தனது முத்திரையைப் பதித்து வந்துள்ளார். வெள்ளித்திரையில் காண்பித்த அதே தீவிரம், காட்சியமைப்பில் துல்லியம் என்று இங்கும் அவர் சமரசத்திற்கு இடம் கொடுக்கவில்லை. 1990 களில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான தொடர் 'ரயில் ஸ்நேகம்' சீரியல்கள் அளவில் ஒரு புதிய பாதையை அமைத்துக் கொடுத்தது. கை அளவு மனசு என்ற தொடரும் மக்கள் மனதைக் கவர்ந்தது. 'ரகுவம்சம்' என்ற நெடுந்தொடர் மூலம் மெகா சீரியல்களும் ஏன் தரமாக இருக்கக் கூடாது என்ற சிந்தனையை இளம் இயக்குநர்கள் மத்தியில் ஏற்படுத்தினார் பாலச்சந்தர். இவரது படங்கள், அதன் கதைக்கரு, கதாபாத்திர உருவாக்கம், கதையாடல் முறை, உத்தி ஆகியவை இன்று மாணவர்களின் ஆய்வு செய்வதற்கு ஒரு கருவியாக உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
ஒரு ஹோலி பண்டிகை தினத்தில் சிவாஜி ராவ் என்ற நடிகனுக்கு ரஜினிகாந்த் என்று பெயர் மாற்றம் செய்தவர் கே.பாலச்சந்தர். திரைப்பட கல்லூரியில் பேசிய கே.பாலச்சந்தரிடம் அங்கு மாணவராக இருந்த சிவாஜிராவ் (ரஜினி) "நடிப்பைத் தவிர ஒரு நடிகனிடம் வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்?" என்று கேட்க கே.பி சிரித்தபடி "கெமராவிற்கு வெளியே அவர் நடிக்க கூடாது" என்று கே.பி. பதிலளித்துள்ளார். அதனை ரஜினிகாந்த் இன்றுவரை பின்பற்றி வருகின்றார்.
அதேபோல், பாலச்சந்தரை தனது குருநாதராக போற்றி வருபவர் கமல். காரணம், கமலின் திரையுலக வாழ்க்கையில் பல முக்கிய கதாபாத்திரங்களை அளித்து அவரை மெருகேற்றியவர் கே.பி. என்றே கூற வேண்டும். ரஜனிகாந்த், கமல்ஹாசனுடன், விவேக், நாசர், ராதாரவி, சார்லி, பிரகாஷ்ராஜ், சரத்பாபு, சிரஞ்சீவி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.வி.சேகர், திலீப், பூர்ணம் விஸ்வநாதன், கவிஞர் வாலி, மதன் பாபு, மேஜர் சுந்தரராஜன், டெல்லி கணேஷ், வை.ஜி.மகேந்திரன் உட்பட பல நடிகர்களையும் கே. பாலச்சந்தரே அறிமுகப்படுத்தியிருந்தார்.
அதேபோல், சுஜாதா, ஜெயப்பிரதா, சரிதா, ஜெயசித்ரா, படாபட் ஜெயலட்சுமி, ஸ்ரீப்ரியா, 'கல்கி' ஸ்ருதி, விஜி, சித்தாரா, ஸ்ரீவித்யா, பிரமிளா, ரதி, ஜெயசுதா, சுமித்ரா, பாத்திமா பாபு, யுவராணி, விசாலி கண்ணதாசன் போன்ற நடிகைகளும் கே.பி. இன் கண்டு பிடிப்புகளே. இயக்குநர்களைப் பொறுத்தவரை விசு, மெளலி, அமீர்ஜான் மற்றும் இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், மரகதமணி, சக்ஸபோன் கலைஞர் கத்ரி கோபால்நாத் ஆகிேயார் கே.பாலச்சந்தர் தயாரித்த படங்களின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்கள். தமிழ் திரையுலகை ஏற்றப் பாதைக்கு இட்டுச்சென்று இவ்வுலகைவிட்டு நீங்கிய கே.பாலச்சந்தரின் சாதனைகள் என்றும் நிலைத்து நிற்கும்.
தொகுப்பு: எஸ்.ரகுதீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக