திங்கள், 12 ஜனவரி, 2015

எதிர்­கா­லத்­தையே கேள்­விக்­கு­றி­யாக்கும் புகை­யிலைப் பாவனை!

இழந்­தவை எது­வா­னாலும் இழப்­புக்­களை ஈடு­செய்­வ­தென்­பது எவ­ராலும் முடி­யாது. அது உயி­ராக இருந்தால் வேத­னைகள் ஒரு­வ­ருக்கு மட்­டு­மல்ல, அனைத்து உற­வு­க­ளுக்கும் அது உறுத்­தலே. அந்­த­வ­கையில், புகை­யிலைப் பயன்­பாட்டைக் கட்­டுப்­ப­டுத்­தவும், புற்­று­நோ­யினால் ஏற்­படும் இறப்­பு­களைக் குறைக்­கவும் புகை­யிலை எதிர்ப்பு தின­மா­னது 1987ஆம் ஆண்டு பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது. இத­ன­டிப்­ப­டையில், புகை­யி­லை­யினால் ஏற்­படும் பாதிப்­புகள் குறித்து மக்­க­ளிடம் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த, ஒவ்­வொரு ஆண்டும் மே மாதம் 31 ஆம் திகதி இத்­தினம் உல­க­ளவில் நினைவு கூரப்­ப­டு­கின்­றது. புகை­யிலைப் பாவனை எனும்­போது வெறு­மனே புகைத்­தலை மட்டும் நாம் முன்­னி­லைப்­ப­டுத்த வில்லை. புகை­யி­லையை உப­யோ­கித்து தயா­ரிக்­கப்­படும் அனைத்து வித­மான பொருட்­க­ளுமே இதில் உள்­ள­டங்­கு­கின்­றன.



புகைத்தல் மட்­டு­மன்றி புகை­யி­லையைக் கொண்டு தயா­ரிக்­கப்­படும் அனைத்துப் பொருட்­க­ளுமே எமது உட­லுக்கு தீங்கை ஏற்­ப­டுத்தும் என்­பது தெரிந்தும் அதை எம் சமூகம் விடு­வதாய் இல்லை. இன்று இளைய சமு­தா­யத்­தினர் மத்­தியில் அதி­க­ரித்து வரும் புகை­யிலைப் பாவ­னை­யா­னது அவர்­களின் எதிர்­கா­லத்­தையே கேள்வி குறி­யாக்­கி­விடும் அள­வுக்கு அதிக தாக்­கங்­களை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றது. ஆனால் இவ்­வி­டயம் தொடர்பில் அவர்கள் அதிக அக்­கறை செலுத்­து­வ­தில்லை.

புகை­யிலைப் பாவ­னை­யாலும் புகைத்தல் போன்ற பழக்­கங்­க­ளி­னாலும் உலகம் முழு­வதும் 60 இலட்சம் பேர் உயி­ரி­ழக்­கின்­றனர் என்றால் நம்­பு­வீர்­களா..? . சரா­ச­ரி­யாக 6 விநா­டி­க­ளுக்கு ஒருவர் என்ற விகி­தத்தில் இம்­ம­ர­ணங்கள் நிகழ்­கின்­றன. என்­றாலும், புகைப்­ப­வர்­களின் எண்­ணிக்­கையோ குறைந்­த­பா­டில்லை. உலக சுகா­தார நிறு­வ­னத்தின் தக­வல்­களின் படி புகை­யிலை பாவ­னையால் இதயம் மற்றும் இரத்­தக்­குழாய் நோய்கள், மார­டைப்பு, மார்­பு­வலி, இத­யக்­கோ­ளா­றினால் ஏற்­படும் திடீர் மரணம், ஸ்ட்ரோக் (பக்­க­வாதம்) போன்­றன ஏற்­ப­டவும் கார­ண­மாக அமை­கி­றது எனவும் குறிப்­பாக வாய், தொண்டை, நுரை­யீரல், வயிறு, சிறு­நீ­ரகம், சிறு­நீர்ப்பை உள்­ளிட்ட உடல் பாகங்­களில் புற்­றுநோய் உண்­டா­கவும் புகை­யி­லையே காரணம் எனவும் குறிப்­பி­டு­கின்­றது.

இலங்­கையைப் பொறுத்­த­மட்டில் எதிர்­வரும் இரு­பது வரு­டங்­களில் நாட்டில் புகை­யிலைப் பாவ­னையால் ஏற்­படும் மர­ணங்­களின் எண்­ணிக்கை 40 ஆயி­ர­மாக அதி­க­ரிக்கும் எனவும் இன்­றைய நிலையில், புகை­யிலைப் பொருள் பாவனை கார­ண­மாக இலங்­கையில் வரு­டத்­திற்கு 20 ஆயிரம் பேர் வரையில் இறக்­கின்­றனர் எனவும் உலக சுகா­தார நிறு­வ­னத்தால் வெளி­யி­டப்­பட்ட தர­வுகள் குறித்து நிற்­கின்­றன. இது மட்டும் இல்­லாமல் அதே எண்­ணிக்­கை­யா­ன­வர்கள் பல்­வேறு நோய்­க­ளுக்கு இலக்­கா­வ­தா­கவும் உலக சுகா­தார அமைப்பு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. இன்­றைக்கு உலக அளவில் 15 வய­துக்கு மேற்­பட்ட ஆண்­களில் 57 சத­வீ­த­மா­னோரும், பெண்­களில் 10.8 சத­வீ­த­மா­னோரும் புகை­யி­லையை ஏதோ ஒரு வடி­வத்தில் பயன்­ப­டுத்­து­கின்­றனர். குறிப்­பாக இவ்­வ­யது பிரி­வினர் பாட­சாலை செல்­ப­வர்கள் என்­பது சொல்லித் தெரி­ய­வேண்­டி­ய­தில்லை. உலக அளவில் 47 சத­வீ­த­மான ஆண்­களும், 12 சத­வீ­த­மான பெண்­களும் புகைத்தல் பழக்­கத்­துக்கு அடி­மை­யா­கி­யுள்­ளனர். வளர்ச்­சி­ய­டைந்த நாடு­களில் 42 சத­வீ­த­மான ஆண்­களும் 24 சத­வீ­த­மான பெண்­களும், வளர்ச்­சி­ய­டைந்து வரும் நாடு­களில் 48 சத­வீ­த­மான ஆண்­களும் 7 சத­வீ­த­மான பெண்­களும் புகைத்தல் பழக்­க­மு­டை­ய­வர்­க­ளாக இனங்­கா­ணப்­பட்­டுள்­ளனர்.

வளர்ந்து வரும் நாடு என்ற வகையில் இலங்­கையும் அதில் உள்­ள­டங்­கு­கின்­றது. ஒரு சிகரெட் மனித ஆயுளில் 8 நிமி­டங்­களை கொல்­கி­றது. ஆனால் இவற்றை எமது சமூகம் உணர மறுப்­பதும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இவ்­வாறு இன்று அதி­க­ரித்­து­வரும் புகை­யிலைப் பாவ­னை­யா­னது ஆண்கள் மத்­தியில் மட்­டு­மல்­லாது பெண்கள் மத்­தி­யிலும் அதி­க­ளவு இடம்­பி­டித்­துள்­ளது. கிரா­மப்­பு­றங்­களில் பெண்கள் பொழு­து­போக்­காக வெற்­றி­லை­யோடு புகை­யி­லை­யையும் சேர்த்து வாயில் அசை போடு­வது வழக்கம். சில சந்­தர்ப்­பங்­களில் சுரக்கும் உமிழ்­நீ­ரினை வெளி­யேற்­று­வ­து­மில்லை. இவ்­வா­றான செயற்­பா­டு­களால் ஏற்­படும் தாக்­கத்­தினை அவர்கள் உணர்­வதில் இருக்கும் தாமதம் அவர்­களின் உயி­ரையே இறு­தியில் பறித்­து­வி­டு­கின்­றது.

ஒரு பொருளை நுகர்ந்து, அதை சுவைப்­பதில் இருக்கும் ஆர்வம் அப்­பொ­ருளின் எதிர்­வி­ளை­வுகள் பற்­றிய சிந்­த­னையில் இருப்­ப­தில்லை.

இவ்­வா­றான பொருட்­களின் உப­யோ­கத்தால் ஆண்­களின் ஆண்மைத் தன்மை குறை­யவும் மலட்டுத் தன்மை ஏற்­ப­டவும் அதிக வாய்ப்­புகள் உள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. ஆனால் அவ்­வா­றான தவ­றுகள் தெரிந்தே விடப்­ப­டு­கின்­றன. புகை­யிலை அல்­லது புகை­யி­லையால் தயா­ரிக்­கப்­பட்ட (சிகரெட்) ஏதேனும் பொருட்­களில் இருந்து வெளி­யாகும் புகை­யா­னது சுமார் 250 வகை­யான நச்­சுத்­தன்மை கொண்ட வாயுக்கள், இர­சா­ய­னங்கள், உட­லுக்கு அதி­க­ளவு பாதிப்பை உரு­வாக்கும் உலோ­கங்கள் என்­ப­வற்றை உள்­ள­டக்­கி­யி­ருப்­ப­தாக ஆய்வின் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தி­யுள்ள நிலையில் இவற்றில் பதி­னொரு வகை­யான மூலக்­கூ­றுகள் இருப்­ப­தா­கவும் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது..

குறிப்­பாக குரூப் ஒன்று கார்­சி­கோஜன் (Group 1 Carcinogens) எனும் மூலக்­கூ­றா­னது உட­லுக்கு மிகவும் ஆபத்­தான விளை­வு­களை ஏற்­ப­டுத்தக் கூடி­யது எனவும் அம்­மூ­லக்­கூ­றா­னது பொது­வாக புகை­யி­லையால் தயா­ரிக்­கப்­படும் பொருட்­களில் உள்­ள­டங்­கி­யுள்­ளது என்றும் குழந்­தை­க­ளுக்­கான மாஸ்­ஜெ­னரல் மருத்­து­வ­ம­னையைச் சேர்ந்த ஆராய்ச்­சி­யா­ளர்கள் நடத்­திய ஆய்வின் மூலம் தெரி­ய­வந்­துள்­ளது.

மேலும் புகை­யி­லையில் சேர்க்­கப்­ப­டு­கின்ற இர­சா­யனப் பொருட்­களால் அதை பயன்­ப­டுத்தும் பழக்கம் கொண்­ட­வர்கள் மாத்­தி­ர­மன்றி அருகில் இருப்­ப­வர்­களும் பாதிப்பை எதிர்­கொள்­கின்­றனர். உதா­ர­ண­மாக மனைவி கரு­வுற்­றி­ருக்கும் போது, கணவர் அரு­கி­லி­ருந்து புகைப்­பி­டித்தால் குழந்தை வளர்ச்சி தடை­பட்டு எடை குறை­யவும், கருச்­சி­தைவு ஏற்­ப­டவும் கூட வாய்ப்பு அதிகம். மேலும் குழந்­தையின் அறிவு வளர்ச்சி தாம­தப்­ப­டும்­. அ­தே­வேளை குழந்­தைப்­ப­ரு­வத்­தி­லேயே ஆஸ்­துமா ஏற்­ப­டவும் வாய்ப்­புகள் அதி­க­முள்­ள­தாக பல தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இந்­நி­லையில் இவ்­வி­டயம் தொடர்பில் மக்கள் இன்னும் விழிப்­ப­டை­ய­வில்லை என்றே கூற­வேண்டும்.

உட­ன­டி­யாக எந்­த­வொரு பழக்­கத்­தையும் மாற்றிக் கொள்­வ­தென்­பது கடி­னமே. ஆனால் பாதிப்­புகள் வரு­மென்று தெரிந்தும் அவற்றை புறக்­க­ணிக்­காது அதன் பாவ­னையை அதி­க­ரிக்கும் போது இழப்­பு­களைத் தடுப்­ப­தென்­பது கேள்­விக்­கு­றி­யான ஒரு விட­யமே.

இவ்­வா­றான செயற்­பா­டு­களால் ஏற்­படும் இழப்­புக்­களை தடுப்­ப­தற்கு பல நட­வ­டிக்­கைகள் அர­சாங்­கத்தால் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்ற அதே­வேளை அவை அமுல்­ப­டுத்­தப்­படும் போது குறிப்­பிட்ட அளவு நன்­மைகள் ஏற்­ப­டு­மென எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. ஆனால் அவை இவ்­வா­றான பொருட்களை உபயோகிக்கும் தரப்பினரை பொறுத்தது என்றே கூற வேண்டும்.

ஒவ்­வொரு தனி­ந­ப­ருக்கும் அவர்­களின் வாழ்க்­கையை திட்­ட­மிடும் உரிமை இருக்­கின்­றது. எதிர்­காலம் தொடர்பில் அவ­தா­ன­மாக செயற்­பட வேண்டும். விளை­வுகள் பற்­றிய தக­வல்­களை சிறு­வ­யது முதல் நாம் எமது பிள்­ளை­க­ளுக்கு கற்றுக் கொடுக்­க­வேண்டும். பாட­சாலை செல்லும் போது சக நண்­பர்­க­ளுடன் இணைந்து பொழுது போக்­காக பழகும் சில விட­யங்கள் காலப்­போக்கில் அவர்­களை அப்­ப­ழக்­கத்­திற்கு அடி­மை­யாக்­கி­விடும்.

எனவே இவ்­வி­டயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்­தப்­பட வேண்டும். பாட­சா­லை­க­ளிலும் சரி வீட்டு சூழ­லிலும் சரி இவ்­வி­டயம் தொடர்பில் மாண­வர்­க­ளுக்கு அறி­வூட்­டுதல் கட்­டா­ய­மாகும். எதிர்­கால சமு­தா­யத்­தி­னரின் வள­மா­னதும் ஆரோக்கி ­ய­மா­ன­து­மான எதிர்­காலம் இன்றைய தலைமுறையினரின் மாற்றத்தில் உள்ளத ென்பதை அனைவரும் உணர வேண்டும்.

 ஆர்.தேவிகா
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல