பொதுவாகவே பெற்றோரும் ஆசிரியர்களும் மாணவர்கள் - எப்போதும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது வழக்கம். படிக்காவிட்டால் அவர்கள் எதிர்காலமே இருண்டு போய்விடுமே என்ற எண்ணத்தால்தான் இத்தனை எதிர்பார்ப்பும். ஆனால், இப்படி அவர்களை இடைவெளியில்லாமல், எந்தப் பொழுதுபோக்கும் இல்லாமல் கட்டாயப்படுத்தி படிக்க வைத்தால் நிச்சயம் மன அழுத்தம் ஏற்படும். இதனால், பரீட்சையில் தோல்வியடையவில்லை என்றாலும், வாழ்க்கையில் தோல்வியை தழுவுவார்கள் எனப் பல ஆராய்ச்சி முடிவுகள் உரைக்கின்றன.
நல்ல பாடசாலையில் சேர்க்கை... நல்ல அலுவலகத்தில் வேலை, கை நிறைய சம்பளம்... நிறைவான வாழ்க்கை... இப்படி எதிர்காலம் பிரகாசமாக அமைய வேண்டும் என்ற பெற்றோரின் ஆசைகள் மன அழுத்தம் காரணமாக நிராசையாகவே ஆகிவிடும். சில நேரங்களில் மன அழுத்தத்துடனே விருப்பமில்லாமல் படித்து நல்ல வேலை அமைந்தாலும் குழந்தைகள் பிற்காலத்தில் பெற்றோரை பெரும்பாலும் மதிக்க மாட்டார்கள். பல தருணங்களில் குடி மற்றும் போதைப் பழக்கங்களுக்கு ஆளாகவும் வாய்ப்புள்ளது. மொத்தத்தில், அவர்களின் ஆளுமையே (Personality) பாதிக்கப்படலாம்.
இதற்காக மாணவர்களை படிக்க வேண்டாம் எனக் கூறவில்லை. எந்தவொரு விடயத்தையும் ரசித்து அதன் அர்த்தத்தை உணர்ந்து செய்தால் வெற்றி நிச்சயம். கட்டாயத்தால் பிடிக்காத பாடப்பிரிவை எடுப்பவர்கள், தங்கள் வாழ்க்கையை எந்த மகிழ்ச்சியும் இன்றி மற்றவர்களை குறை சொல்லியே காலத்தை கழிப்பார்கள். இப்படியொரு வாழ்க்கை அவசியம்தானா?மாணவர்களுக்கு மன அழுத்தம் வராமல் இருக்க பெற்றோரின் பங்கு மிகவும் அவசியம். சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு கல்வியின் சக்தியை சொல்லியே வளர்க்க வேண்டும். இதற்காக, ‘படித்தால்தான் நல்லா சம்பாதிக்கலாம்’, ‘படிக்கலைன்னா மாடுதான் மேய்க்கணும்’, ‘படி படி’ என்பது போன்ற வாசகங்களை தவிர்க்க வேண்டும்.
மாறாக, கல்வியினால் என்னென்ன நன்மைகள் என்பதை நாசுக்காக சிறுவயதிலேயே உணவோடு சேர்த்து புகட்ட வேண்டும். மதிப்பெண்களுக்காகப் படிப்பதைத் தவிர்த்து, எதிர்கால வாழ்க்கைக்காக படிக்க வேண்டும் என உணர்த்தினாலே அர்த்தம் புரிந்து ஆர்வத்துடன் படிப்பை நேசிக்க ஆரம்பித்து விடுவார்கள். அடுத்ததாக... தங்களுடைய கனவு, ஆசைகளை பிள்ளைகள் மீது திணிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
அது அவர்களுக்கு ஊக்கத்தை அளிக்காது... சுமையாகவே அமையும்.
இது உங்களுக்கு பொருந்துகிற உடையை, உங்கள் பிள்ளைகளை அணியச் செய்வதற்கு சமம்! உங்கள் குழந்தைகள் தனித்தன்மை வாய்ந்தவர்கள். தனிப்பட்ட ஆசை, கனவு, திறன் என பல விடயம் சேர்ந்த ஆற்றல் மிக்க அற்புத கலவை. இவ்வுலகில் எல்லோருக்கும் தனித்தன்மை உள்ளது... ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிடுவதே சாத்தியமில்லை.
பறவைக்கு எவ்வளவுதான் நீச்சல் சொல்லிக் கொடுத்தாலும் அதனால் நீந்த முடியாது. மீன் எவ்வளவு பயிற்சி எடுத்தாலும் பறவை போல பறக்க முடியாது. அதனால், குழந்தைகளின் ஆர்வம் மற்றும் தனித் திறமையையும் பலவீனத்தையும் நன்கு புரிந்து, அதற்கு தகுந்தவாறு ஊக்கமளிக்க வேண்டும். அவர்களின் எதிர்காலத்தை செதுக்கும் உரிமையையும் சுதந்திரத்தையும் அவர்களிடமிருந்து தட்டிப் பறிக்கக் கூடாது.
அதிக மதிப்பெண் வாங்க வைப்பதை விட பிள்ளைகளின் வாழ்க்கையை நிறைவாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்குவதே உண்மையான வெற்றி என்பதை பெற்றோர் உணர வேண்டும். மாணவர்கள் வாழ்வில் படிப்பும், பொழுதுபோக்கும் சமமாக இருப்பின் மன அழுத்தம் இல்லாமல் தங்களின் முழுத் திறமையை வெளிக்காட்டி நல்ல மதிப்பெண்கள் பெறலாம். பறவைகளும் விலங்குகளும் குறிப்பிட்ட காலகட்டம் வரையே குழந்தைகளை பாதுகாக்கும். அவற்றுக்குத் தனியே வாழும் பக்குவம் வந்தவுடன், அதன் சுதந்திரத்தில் தலையிடாமல் அடுத்த வேலையை பார்க்க போய்விடும். இந்த இயற்கை நியதி மனிதனுக்கும் பொருந்தும். நம் நாகரிகத்திலோ, பிள்ளைகளுக்கு எவ்வளவு வயதானாலும் பெற்றோரின் தலையீடு தொடர்ந்து கொண்டே இருக்கும். இப்படி எல்லா விடயத்துக்கும் தங்களையே சார்ந்திருக்கும்படி பெற்றோர் வளர்த்துவிட்டு, 20 வயதானவுடன் திடீரென பிள்ளைகள் சுயமாக இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பார்கள்.
பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு
மன அழுத்தத்தினால் ஏற்படும் விளைவுகள்
1. அறிவுத்திறனை பாதிக்கும். கவனம் செலுத்த முடியாது. மறதி ஏற்படும். படிப்பில் ஆர்வமின்மை உண்டாகும்.
2. உறவுகளை பாதிக்கும். அம்மா, அப்பாவுடன் சண்டை, சக மாணவியருடன் தகராறு, ஆசிரியர்களிடம் பிரச்சினை ஏற்படும்.
3. தற்கொலை எண்ணம் தோன்றக்கூடும்.
4. தன்னம்பிக்கை குறையும்.
5. குடி / சிகரெட் / போதைப் பழக்கம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.
6. தோல்வி அடைந்து விடுவோம் என்கின்ற எதிர்மறை மனப்பான்மை ஏற்படும் (Fear of failure).
7. தன் திறமையை / அறிவுத்திறனை விட குறைவாக மதிப்பெண் எடுப்பது வழக்கமாகும் (underachievers).
8. உடல், மனநல பிரச்சினைகள் (வலிகள், மனச்சோர்வு, மனப்பதற்றம், பயம் மற்றும் பல...)
இது எப்படி சாத்தியம்?
பிள்ளைகளின் பிரச்சினையை தீர்க்கும் திறனும், சுய அறிவும், முடிவு எடுக்கும் திறனும் வளராமல் ஆளுமை இவ்வித வளர்ப்பினால் பாதிக்கப்படுகிறது. இப்படி வளர்க்கப்படும் பிள்ளைகள் தம் வாழ்நாள் முழுதும் பிறரைச் சார்ந்தே வாழப் பழகிவிடுவார்கள். பெற்றோர் பிள்ளைகளுக்கு நல்லது கெட்டதைப் புரிய வைத்து போதிய சுதந்திரம் கொடுத்தால் அவர்களின் ஆளுமை சிறப்பாக செதுக்கப்படும். பிள்ளைகளை சிறு வயதிலிருந்தே உற்சாகப்படுத்தி, ஊக்கமளித்து அவர்கள் ஏதேனும் இலட்சியத்தைத் தேர்ந்தெடுக்க உறுதுணையாக இருக்க வேண்டும். இலட்சியமுள்ள பிள்ளைகளை படிக்க சொல்லி வற்புறுத்த வேண்டிய அவசியமில்லை. அவர்கள் அவரவரின் வாழ்க்கையைத் தானே ரசித்து தேர்ந்தெடுப்பார்கள். வாழ்வின் முக்கிய முடிவுகளை தாமாகவே எடுப்பதால் அவர்களுக்கு பொறுப்பும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வாழ்க்கைப் பாதையில் ஏற்படும் சவால்களை சமாளிக்கும் திறன் ஏற்படும். தங்கள் வாழ்க்கைக்கும் அவர்களே பொறுப்பேற்று மற்றவர்களை குறை சொல்லாமல் சவாலை எதிர்கொண்டு வெற்றி பெறுவர். இப்படிப்பட்ட ஆரோக்கியமான மாணவர்களே நம் நாட்டுக்கு மிகவும் அவசியம்.
– தொகுப்பு:அருணா
நல்ல பாடசாலையில் சேர்க்கை... நல்ல அலுவலகத்தில் வேலை, கை நிறைய சம்பளம்... நிறைவான வாழ்க்கை... இப்படி எதிர்காலம் பிரகாசமாக அமைய வேண்டும் என்ற பெற்றோரின் ஆசைகள் மன அழுத்தம் காரணமாக நிராசையாகவே ஆகிவிடும். சில நேரங்களில் மன அழுத்தத்துடனே விருப்பமில்லாமல் படித்து நல்ல வேலை அமைந்தாலும் குழந்தைகள் பிற்காலத்தில் பெற்றோரை பெரும்பாலும் மதிக்க மாட்டார்கள். பல தருணங்களில் குடி மற்றும் போதைப் பழக்கங்களுக்கு ஆளாகவும் வாய்ப்புள்ளது. மொத்தத்தில், அவர்களின் ஆளுமையே (Personality) பாதிக்கப்படலாம்.
இதற்காக மாணவர்களை படிக்க வேண்டாம் எனக் கூறவில்லை. எந்தவொரு விடயத்தையும் ரசித்து அதன் அர்த்தத்தை உணர்ந்து செய்தால் வெற்றி நிச்சயம். கட்டாயத்தால் பிடிக்காத பாடப்பிரிவை எடுப்பவர்கள், தங்கள் வாழ்க்கையை எந்த மகிழ்ச்சியும் இன்றி மற்றவர்களை குறை சொல்லியே காலத்தை கழிப்பார்கள். இப்படியொரு வாழ்க்கை அவசியம்தானா?மாணவர்களுக்கு மன அழுத்தம் வராமல் இருக்க பெற்றோரின் பங்கு மிகவும் அவசியம். சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு கல்வியின் சக்தியை சொல்லியே வளர்க்க வேண்டும். இதற்காக, ‘படித்தால்தான் நல்லா சம்பாதிக்கலாம்’, ‘படிக்கலைன்னா மாடுதான் மேய்க்கணும்’, ‘படி படி’ என்பது போன்ற வாசகங்களை தவிர்க்க வேண்டும்.
மாறாக, கல்வியினால் என்னென்ன நன்மைகள் என்பதை நாசுக்காக சிறுவயதிலேயே உணவோடு சேர்த்து புகட்ட வேண்டும். மதிப்பெண்களுக்காகப் படிப்பதைத் தவிர்த்து, எதிர்கால வாழ்க்கைக்காக படிக்க வேண்டும் என உணர்த்தினாலே அர்த்தம் புரிந்து ஆர்வத்துடன் படிப்பை நேசிக்க ஆரம்பித்து விடுவார்கள். அடுத்ததாக... தங்களுடைய கனவு, ஆசைகளை பிள்ளைகள் மீது திணிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
அது அவர்களுக்கு ஊக்கத்தை அளிக்காது... சுமையாகவே அமையும்.
இது உங்களுக்கு பொருந்துகிற உடையை, உங்கள் பிள்ளைகளை அணியச் செய்வதற்கு சமம்! உங்கள் குழந்தைகள் தனித்தன்மை வாய்ந்தவர்கள். தனிப்பட்ட ஆசை, கனவு, திறன் என பல விடயம் சேர்ந்த ஆற்றல் மிக்க அற்புத கலவை. இவ்வுலகில் எல்லோருக்கும் தனித்தன்மை உள்ளது... ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிடுவதே சாத்தியமில்லை.
பறவைக்கு எவ்வளவுதான் நீச்சல் சொல்லிக் கொடுத்தாலும் அதனால் நீந்த முடியாது. மீன் எவ்வளவு பயிற்சி எடுத்தாலும் பறவை போல பறக்க முடியாது. அதனால், குழந்தைகளின் ஆர்வம் மற்றும் தனித் திறமையையும் பலவீனத்தையும் நன்கு புரிந்து, அதற்கு தகுந்தவாறு ஊக்கமளிக்க வேண்டும். அவர்களின் எதிர்காலத்தை செதுக்கும் உரிமையையும் சுதந்திரத்தையும் அவர்களிடமிருந்து தட்டிப் பறிக்கக் கூடாது.
அதிக மதிப்பெண் வாங்க வைப்பதை விட பிள்ளைகளின் வாழ்க்கையை நிறைவாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்குவதே உண்மையான வெற்றி என்பதை பெற்றோர் உணர வேண்டும். மாணவர்கள் வாழ்வில் படிப்பும், பொழுதுபோக்கும் சமமாக இருப்பின் மன அழுத்தம் இல்லாமல் தங்களின் முழுத் திறமையை வெளிக்காட்டி நல்ல மதிப்பெண்கள் பெறலாம். பறவைகளும் விலங்குகளும் குறிப்பிட்ட காலகட்டம் வரையே குழந்தைகளை பாதுகாக்கும். அவற்றுக்குத் தனியே வாழும் பக்குவம் வந்தவுடன், அதன் சுதந்திரத்தில் தலையிடாமல் அடுத்த வேலையை பார்க்க போய்விடும். இந்த இயற்கை நியதி மனிதனுக்கும் பொருந்தும். நம் நாகரிகத்திலோ, பிள்ளைகளுக்கு எவ்வளவு வயதானாலும் பெற்றோரின் தலையீடு தொடர்ந்து கொண்டே இருக்கும். இப்படி எல்லா விடயத்துக்கும் தங்களையே சார்ந்திருக்கும்படி பெற்றோர் வளர்த்துவிட்டு, 20 வயதானவுடன் திடீரென பிள்ளைகள் சுயமாக இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பார்கள்.
பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு
மன அழுத்தத்தினால் ஏற்படும் விளைவுகள்
1. அறிவுத்திறனை பாதிக்கும். கவனம் செலுத்த முடியாது. மறதி ஏற்படும். படிப்பில் ஆர்வமின்மை உண்டாகும்.
2. உறவுகளை பாதிக்கும். அம்மா, அப்பாவுடன் சண்டை, சக மாணவியருடன் தகராறு, ஆசிரியர்களிடம் பிரச்சினை ஏற்படும்.
3. தற்கொலை எண்ணம் தோன்றக்கூடும்.
4. தன்னம்பிக்கை குறையும்.
5. குடி / சிகரெட் / போதைப் பழக்கம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.
6. தோல்வி அடைந்து விடுவோம் என்கின்ற எதிர்மறை மனப்பான்மை ஏற்படும் (Fear of failure).
7. தன் திறமையை / அறிவுத்திறனை விட குறைவாக மதிப்பெண் எடுப்பது வழக்கமாகும் (underachievers).
8. உடல், மனநல பிரச்சினைகள் (வலிகள், மனச்சோர்வு, மனப்பதற்றம், பயம் மற்றும் பல...)
இது எப்படி சாத்தியம்?
பிள்ளைகளின் பிரச்சினையை தீர்க்கும் திறனும், சுய அறிவும், முடிவு எடுக்கும் திறனும் வளராமல் ஆளுமை இவ்வித வளர்ப்பினால் பாதிக்கப்படுகிறது. இப்படி வளர்க்கப்படும் பிள்ளைகள் தம் வாழ்நாள் முழுதும் பிறரைச் சார்ந்தே வாழப் பழகிவிடுவார்கள். பெற்றோர் பிள்ளைகளுக்கு நல்லது கெட்டதைப் புரிய வைத்து போதிய சுதந்திரம் கொடுத்தால் அவர்களின் ஆளுமை சிறப்பாக செதுக்கப்படும். பிள்ளைகளை சிறு வயதிலிருந்தே உற்சாகப்படுத்தி, ஊக்கமளித்து அவர்கள் ஏதேனும் இலட்சியத்தைத் தேர்ந்தெடுக்க உறுதுணையாக இருக்க வேண்டும். இலட்சியமுள்ள பிள்ளைகளை படிக்க சொல்லி வற்புறுத்த வேண்டிய அவசியமில்லை. அவர்கள் அவரவரின் வாழ்க்கையைத் தானே ரசித்து தேர்ந்தெடுப்பார்கள். வாழ்வின் முக்கிய முடிவுகளை தாமாகவே எடுப்பதால் அவர்களுக்கு பொறுப்பும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வாழ்க்கைப் பாதையில் ஏற்படும் சவால்களை சமாளிக்கும் திறன் ஏற்படும். தங்கள் வாழ்க்கைக்கும் அவர்களே பொறுப்பேற்று மற்றவர்களை குறை சொல்லாமல் சவாலை எதிர்கொண்டு வெற்றி பெறுவர். இப்படிப்பட்ட ஆரோக்கியமான மாணவர்களே நம் நாட்டுக்கு மிகவும் அவசியம்.
– தொகுப்பு:அருணா






































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக