இந்தோனேஷியாவில் மரணதண்டனை விதிக்கப்படவிருக்கும் இரண்டு ஆஸ்திரேலியர்களின் குடும்பத்தினர் கடைசி முறையாக அவர்களைப் பார்க்க சிறைக்கு வந்தனர்.
அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் அவர்களைச் சூழ்ந்துகொண்டனர்.
மயூரன் சுகுமாரன், ஆண்ட்ரூ சான் ஆகியோரின் உறவினர்கள் நுஸகம்பகன் சிறைக்கு வந்தபோது, அங்கிருந்தவர்கள் அவர்களைச் சூழ்ந்துகொண்டதால், காவலர்கள் அவர்களைச் சூழ்ந்து அழைத்துச் சென்றனர்.
சுகுமாரனின் சகோதரி மயங்கிவிழுந்ததால், அவர் தூக்கிச் செல்லப்பட்டார்.
செவ்வாய்க்கிழமையன்று இரவில் சான், சுகுமாரன் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவிருக்கிறது என்ற தகவல், சனிக்கிழமையன்று தெரிவிக்கப்பட்டது. இந்தோனேசிய நாட்டுச் சட்டப்படி, கைதிகளுக்கு 72 மணி நேரத்திற்கு தண்டனை நிறைவற்றப்படுவது குறித்து முறையாக அறிவிக்கப்படும்.
செவ்வாய்க் கிழமையன்று, சிறையிலிருக்கும் இரண்டு ஆஸ்திரேலியர்களைச் சந்திக்கவந்த அவர்களது உறவினர்கள், சிலாகேப் துறைமுகத்திலிருந்து சிறைக்கு நடந்துவந்தபோது, ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் அவர்களைச் சூழ்ந்துகொள்ள முயன்றதால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தீவில் வந்து இறங்கியபோது, சானின் தாயார் ஹெலன் அழுதபடி இருந்தார்.
குடும்பத்தின் பிற உறுப்பினர்கள், சிறையை நெருங்கும்போது, 'மெர்சி' என்று கத்தினர்.
திங்கட்கிழமையன்று, ஆண்ட்ரூ சான் தனது காதலி ஃபெப்யந்தி ஹெரெவிலாவைத் திருமணம் செய்துகொண்டார்.
இந்த வழக்கு தொடர்பாக ஒரு ஊழல் வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில், இவர்களது மரண தண்டனையை ஒத்திவைக்கும்படி ஆஸ்திரேலேயி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜூலி பிஷப் கோரிக்கைவிடுத்திருந்தார்.
இருந்தபோதும், இவர்களது மரண தண்டனை திட்டமிட்டபடி நிறைவேற்றப்படும் என இந்தோனேஷியாவின் அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார். ஆனால், எப்போது நிறைவேற்றப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.
விசாரணையின்போது, குறைவான தண்டனை வழங்க வேண்டுமென்றால் லஞ்சம் தர வேண்டுமென இந்தோனேஷிய நீதிபதிகள் கேட்டதாக, இந்த வருடத் துவக்கத்தில் சர்ச்சை எழுந்தது.
இந்த வழக்கில் அரசியல் தலையீடோ, லஞ்சம் தொடர்பான பேச்சுவார்த்தையோ நடக்கவில்லையென இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நீதிபதி ஒருவர் மறுத்திருக்கிறார்.
சான், சுகுமாரன் உள்ளிட்ட 9 பேர் 2005ஆம் ஆண்டில் பாலியில் கைதுசெய்யப்பட்டனர். 8.3 கிலோ ஹெராயினை இந்தோனேஷியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்திச் செல்ல முயன்றதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இதில் சானும் சுகுமாரனும்தான் இந்தக் கும்பலின் தலைவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. 9 பேரில் மீதமிருக்கும் மற்றவர்களுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.
போதைப் பொருள் கடத்தும் குற்றத்திற்கு உலகில் மிகக் கடுமையான தண்டனை விதிக்கும் நாடுகளில் இந்தோனேஷியாவும் ஒன்று.
BBC Tamil
அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் அவர்களைச் சூழ்ந்துகொண்டனர்.
மயூரன் சுகுமாரன், ஆண்ட்ரூ சான் ஆகியோரின் உறவினர்கள் நுஸகம்பகன் சிறைக்கு வந்தபோது, அங்கிருந்தவர்கள் அவர்களைச் சூழ்ந்துகொண்டதால், காவலர்கள் அவர்களைச் சூழ்ந்து அழைத்துச் சென்றனர்.
சுகுமாரனின் சகோதரி மயங்கிவிழுந்ததால், அவர் தூக்கிச் செல்லப்பட்டார்.
செவ்வாய்க்கிழமையன்று இரவில் சான், சுகுமாரன் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவிருக்கிறது என்ற தகவல், சனிக்கிழமையன்று தெரிவிக்கப்பட்டது. இந்தோனேசிய நாட்டுச் சட்டப்படி, கைதிகளுக்கு 72 மணி நேரத்திற்கு தண்டனை நிறைவற்றப்படுவது குறித்து முறையாக அறிவிக்கப்படும்.
செவ்வாய்க் கிழமையன்று, சிறையிலிருக்கும் இரண்டு ஆஸ்திரேலியர்களைச் சந்திக்கவந்த அவர்களது உறவினர்கள், சிலாகேப் துறைமுகத்திலிருந்து சிறைக்கு நடந்துவந்தபோது, ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் அவர்களைச் சூழ்ந்துகொள்ள முயன்றதால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தீவில் வந்து இறங்கியபோது, சானின் தாயார் ஹெலன் அழுதபடி இருந்தார்.
குடும்பத்தின் பிற உறுப்பினர்கள், சிறையை நெருங்கும்போது, 'மெர்சி' என்று கத்தினர்.
திங்கட்கிழமையன்று, ஆண்ட்ரூ சான் தனது காதலி ஃபெப்யந்தி ஹெரெவிலாவைத் திருமணம் செய்துகொண்டார்.
இந்த வழக்கு தொடர்பாக ஒரு ஊழல் வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில், இவர்களது மரண தண்டனையை ஒத்திவைக்கும்படி ஆஸ்திரேலேயி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜூலி பிஷப் கோரிக்கைவிடுத்திருந்தார்.
இருந்தபோதும், இவர்களது மரண தண்டனை திட்டமிட்டபடி நிறைவேற்றப்படும் என இந்தோனேஷியாவின் அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார். ஆனால், எப்போது நிறைவேற்றப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.
விசாரணையின்போது, குறைவான தண்டனை வழங்க வேண்டுமென்றால் லஞ்சம் தர வேண்டுமென இந்தோனேஷிய நீதிபதிகள் கேட்டதாக, இந்த வருடத் துவக்கத்தில் சர்ச்சை எழுந்தது.
இந்த வழக்கில் அரசியல் தலையீடோ, லஞ்சம் தொடர்பான பேச்சுவார்த்தையோ நடக்கவில்லையென இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நீதிபதி ஒருவர் மறுத்திருக்கிறார்.
சான், சுகுமாரன் உள்ளிட்ட 9 பேர் 2005ஆம் ஆண்டில் பாலியில் கைதுசெய்யப்பட்டனர். 8.3 கிலோ ஹெராயினை இந்தோனேஷியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்திச் செல்ல முயன்றதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இதில் சானும் சுகுமாரனும்தான் இந்தக் கும்பலின் தலைவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. 9 பேரில் மீதமிருக்கும் மற்றவர்களுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.
போதைப் பொருள் கடத்தும் குற்றத்திற்கு உலகில் மிகக் கடுமையான தண்டனை விதிக்கும் நாடுகளில் இந்தோனேஷியாவும் ஒன்று.
BBC Tamil

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக