நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் திருகோணமலை கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்கள் அனுபவித்த இன்னல்கள் ஏராளம். பலர் தங்கள் பிள்ளைகளை பறிகொடுத்தனர். மேலும் சிலர் கட்டாயத்தின் பேரில் அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் பலரோ விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தநிலையில், அவர்களின் உறவினர்கள் இன்றும் கண்ணீர் வடித்தவண்ணமுள்ளனர். அவ்வாறானவர்களின் கண்ணீர் கதைகளே இவை...
எனது தந்தை பொறுப்புள்ளவராக நடந்திருந்தால் என் தாயை நான் இழந்திருக்கமாட்டேன். குடும்பத்தை காப்பாற்ற விறகு வெட்ட சென்ற என் தாயை கன்னியா நடுக்காட்டில் வைத்து படுபாவிகள் வெட்டிக்கொன்றார்கள்.
இவ்வாறு ஒரு கடிதத்தை திருகோணமலை பிரஜைகள் குழுவுக்கு எழுதியிருந்தார் (3.4.1986) செல்வநாயக புரத்தை சேர்ந்த பத்ம காந்தியென்ற பெண். இப்பெண்ணால் எழுதப்பட்ட அந்த கடிதத்தில் தனது தாய்க்கும் சகோதரனுக்கும் நேர்ந்த கொடூரத்தை அவர் விவரித்திருந்தார்.
அன்றைய தினம் வழமைபோல் எனது தாயார் நவமணி விறகு வெட்டுவதற்காக காலையில் எனது மூத்த சகோதரனுடன் புறப்பட்டார். குடும்ப வறுமை காரணமாகவும், கணவரின் பொறுப்பற்ற தன்மை காரணமாகவும் குடும்பத்தை காப்பாற்ற வேண்டுமென்பதற்காக பாடசாலைக்கு அனுப்பவேண்டிய மூத்த சகோதரனை பள்ளிக்கூடம் அனுப்பாமல் விறகு வெட்ட அழைத்து சென்றார். கன்னியா, ஆண்டாங்குளம் 6 ஆம் கட்டை ஆகிய இடங்களில் அமைந்திருக்கும் காடுகளுக்கு சென்று விறகு வெட்டி சீவியம் நடத்தி வந்தார். எனக்கு மூன்று சகோதரிகளும் ஒரு ஆண் சகோதரனும் உள்ளனர்.
அன்றைய தினம் 05.03.1986 காலையில் விறகு வெட்ட எனது மூத்த சகோதரனுடன் போனவர் தான் என் தாய். மீண்டும் வரவேயில்லை. கன்னியாவிலுள்ள நடுக்காட்டில் வைத்து படுபாவிகள் அவரை வெட்டிக்கொன்று விட்டார்கள். கழுத்தில் படுகாயங்களுடன் தப்பி பிழைத்து வந்த எனது சகோதரன் மூலமே செய்தியை அறிந்து கொண்டோம். எனது தந்தையாரின் பொறுப்பற்ற தன்மை, கசிப்புக்கு அடிமையாகிய குணம் ஆகியவற்றினாலேயே எனது தாயை இழக்கவேண்டி வந்தது. தாயை இழந்து எனது சகோதரர், சகோதரிகள் அநாதையாக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்களின் வாழ்வுக்கு வழி காட்டவேண்டிய பொறுப்பு என்னிடம் விடப்பட்டுள்ளது என அப்பெண் குறிப்பிட்டிருந்தார்.
1986ஆம் ஆண்டு காலப்பகுதி திருகோணமலை மாவட்டம் முழுவதையும் கதிகலங்கவைத்த காலப்பகுதியாகும். தமிழ் கிராமங்கள் ஒப்பாரி வைத்தன; ஓலமிட்டன. கொலைகள், வன்செயல்கள், வன்புணர்வுகள், இடப்பெயர்வுகள் என கொடுங்கோண்மை தலை விரித்தாடிய காலப்பகுதி. இங்கு நடப்பவை அங்கு தெரிவதில்லை. அங்கு நடப்பவை இங்கு தெரிவதில்லையென்ற அளவுக்கு சம்பவங்கள் நடந்து கொண்டிருந்த காலம்.
1986 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி அந்த தாயும் அவளுடைய இரண்டு பிள்ளைகளும் வீட்டில் தங்க முடியாத அச்சம் காரணமாக தனது சகோதரியின் வீட்டுக்கு படுக்கைக்காக சென்றார்கள். அந்தக்காலத்தில் அவ்வகைக் கிராமங்களில் பெண்களோ குடும்பங்களோ தனியே இருக்க முடியாத கொடுமையான காலம்.
ஆண் துணையில்லாத இரண்டு சகோதரிகளும் பிள்ளைகளும் உறங்கிகொண்டிருந்தார்கள். இரவு 11.00 மணி ஊர்நாய்கள் எல்லாம் சேர்ந்து ஓலமிட்டுக் கத்தின. பிள்ளைகளுடன் நித்திரைத் தூக்கத்தில் அவர்கள் ஆழ்ந்திருந்தவேளை ஜன்னலினூடாக டோச் ஒளி பாய்ச்சப்பட்டது. இரண்டு மூன்று சீருடைக்காரர்கள் ஜன்னலுக்கு வெளியே நிற்பது தெரிந்தது. வந்த சீருடைக்காரர்கள் வீட்டுக்குள் உறங்கிக்கொண்டிருந்த தங்களை எழும்பி வரும்படி உத்தரவிட்டார்கள். பயத்தின் காரணமாக பதறி அடித்துக்கொண்டு அப்பெண் எழுந்துள்ளாள். பிள்ளைகளும் அவளும் சேர்ந்து "ஐயோ" என்ற அவலக்குரல் எழுப்பியுள்ளார்கள் ஆனால் எவரும் வரவில்லை வரமுடியாத காலம்.
வெளியே வாருங்கள் பயப்படவேண்டாமென வந்த சீருடைக்காரர்கள் கொச்சைத்தமிழில் அழைத்துள்ளனர். டோச் ஒளி தொடர்ந்து முகத்துக்கு பாய்ச்சப்பட்டு கொண்டேயிருந்தது. அந்த இரு சீருடைக்காரரின் கடுமையான தொனி அழைப்பை கேட்டு பயந்து அவளின் சகோதரியும் பிள்ளைகளும் வெளியே ஓடிவிட்டார்கள். அந்த கும்மிருட்டில் அவர்கள் எந்த திசையை நோக்கி ஓடினார்கள் எனத்தெரியாமல் அவளும் பிள்ளைகளும் உறைந்து போய் நின்றார்கள். இவர்களும் ஓட முயற்சிக்கும்போது அந்த தாயை ஒரு சீருடைக்காரன் ஓடி வந்து அழுங்குப்பிடியாக பிடித்தான் இரண்டு பிள்ளைகளும் ஊரே நடுங்கும்படி கத்தினார்கள்.
“ஐயோ" என அவள் கத்தினாள்; கதறினாள். கையெடுத்து, வந்திருந்த அந்த இரு சீருடைக்காரர்களையும் கும்பிட்டாள் அந்த இருபிள்ளைகளின் தாய். அந்தக் காமுக மிருகங்களோ வைத்திருந்த துப்பாக்கியால் அவளை தாக்கினர். அவள் வேதனையில் கத்தினாள்.
அந்த தாய் இரு காமுகவெறியர்களாலும் நிர்வாணம் ஆக்கப்பட்டாள். அந்த தாய் கட்டியிருந்த சேலையை கிழித்து வாயில் திணித்தார்கள். அதற்கு மேலே அவளால் ஒன்றும் செய்யமுடியவில்லை. பிள்ளைகளுக்கு என்ன நடந்ததென்று அவளால் ஊகிக்கமுடியவில்லை. அந்தக் கொடிய காம மிருகங்கள் தமது இச்சையை தீர்த்து கொண்டார்கள். “நாங்கள் நாளைக்கும் 10 மணிபோல் வருவோம் இங்கு நடந்தவற்றை யாருக்கும் சொன்னால் உன்னையும் உனது பிள்ளைகளையும் சுட்டுக்கொன்றுவிடுவோம்”என்று பயமுறுத்தி சென்றார்கள். வந்த இருவரில் ஒருவனை என்னால் எப்பொழுதும் அடையாளம் காட்டமுடியுமென அந்த தாய் பிரஜைகள் குழுவுக்கு முறையிட்டுள்ளார். மறுநாள் அவளும் பிள்ளைகளும் எங்கு போனார்கள் என்று யாருக்கும் தெரியாது.
(ஆதாரம்- பிரஜைகள் குழு 09.12.1986)
அதே கிராமத்தில் நடைபெற்ற இன்னுமொரு பாலியல் வன்ம சம்பவம் இக்கிராமத்தையே உலுக்கிய சம்பவமாகப் பேசப்படுகிறது. 1986 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு ஊர் உறங்கிகொண்டிருந்தது. அந்த தாயும் கணவரும் அவர்களுடைய பிள்ளைகளும் அலஸ் தோட்டத்திலுள்ள சிறிய ஹோட்டலில் பாதுகாப்பு காரணமாக சென்று தங்குவது வழக்கம். அன்றைய தினம் தங்கியிருந்த வேளையில் தான் அந்த அசம்பாவிதம் நடந்தது.
ஹோட்டலுக்கு வெளியேயிருந்த யாரோ அவளின் கணவரின் பெயரை குறிப்பிட்டு அழைத்திருக்கிறார்கள். தனது கணவரை யாரோ அழைக்கின்றார்கள் என்று எண்ணிக்கொண்டு கதவை அந்தப் பெண் திறந்தாள். திடீரென மூன்று சீருடைக்காரர்கள் ஆயுததாரிகளாக உள் நுழைந்தார்கள். அதைக்கண்டு அந்தப்பெண் நிலைகுலைந்து போனாள்.
அவர்கள் அவளிடம் , "உனது கணவரை நீ கூப்பிடவேண்டாம். நீ தான் எங்களுக்கு வேண்டுமென்று வெறித்தனத்தோடு கூறினார்கள். அப்பெண்ணோ பீதி காரணமாக தனது கணவரை பீறிட்டு கத்தி அழைத்தாள். கணவன் பதறிப்போய் ஓடிவந்து ஆயுததாரிகளிடம் “நீங்கள் யார்?" என்று வினாவினான். அதையெல்லாம் பொருட்படுத்தாத அந்த காமுகர்கள் அவளின் கணவரை அருகிலுள்ள மலசல கூடத்திற்குள் தள்ளி பூட்டினார்கள். அவனோ தனது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் ஏதோ நடக்கப்போகிறது என எண்ணி "கதவை திறவுங்கள் திறவுங்கள்" என கத்தியும் எதுவும் பலனளிக்கவில்லை. அந்த காமுகர்கள் எல்லாக்கதவுகளையும் பூட்டிவிட்டு அந்த அப்பாவிப்பெண்ணை ஒருவர் மாறி ஒருவர் வன்புணர்வுக்குட்படுத்தினார்கள். இறுதியில், அவர்கள் போகும்போது அவளிடம் இன்னுமொரு பெண்ணின் பெயரை சொல்லி அவளின் வீடு எங்கேயென்று கேட்டிருக்கின்றார்கள்.
(ஆதாரம்- பிரஜைகள் குழு கடிதம்)
அந்த இன்னுமொரு பெண் கொடுத்த வாக்குமூலம் இவ்வாறு இருந்தது. அகதிகளாக எங்கள் குடும்பம் இந்த ஹோட்டலில் தங்கியிருந்தோம். எனக்கு வயது இருபத்தைந்து. புளியங்குளவாசிகளாகிய நாங்கள் அடைக்கலம் கோரி கடந்த நான்கு மாதங்களாக ஹோட்டலில் வாழ்ந்து வருகிறோம். அன்றைய தினம் இரவு (21.12.1986) நாங்கள் உறக்கத்திலிருந்த சமயம் சிலர் எனது அறைக்கதவை தட்டினார்கள். நான் எழும்பவேயில்லை. 15நிமிடம் கழிந்த பின்னர் எனது பெயரை சொல்லி அழைத்தார்கள் நான் பயம் காரணமாக கதவை திறக்கவேயில்லை.
கதவு உடைக்கப்படும் சத்தம் கேட்டது. ஜன்னல் சுக்கு நூறாகியது. அவர்கள் எப்படியும் உள்ளே வர முயற்சிப்பதை உணர்ந்த நான் என்னுடன் இருந்த தம்பியிடம் சொன்னேன் அடுத்த அறையில் இருக்கும் இஸ்மயில் என்பவரை கூப்பிடும்படி எனது தம்பியோ வாப்பா வாப்பா என அவரை சத்தமிட்டு அழைத்தான். வாப்பா வரும் சத்தம் கேட்டதோ என்னவோ வெளியில் நின்றவர்கள் ஓடும் சத்தம் கேட்டது. சில நிமிடங்களின் பின் வாப்பா கதவை திறக்கும்படி கூறினார். நாங்கள் கதவை திறந்தோம். அதன் பின்பு தான் எங்களுக்கு தெரியும் அடுத்த அறையிலிருந்த அகதி ஒருவரின் மனைவி கொடூரமாக நடத்தப்பட்டிருக்கிறார் என்று. அடுத்த அறையில் கொடுமை புரிந்த சீருடைக்காரர்கள் தான் எங்கள் அறையை தட்டினார்கள் என்பது அவர்கள் போனபின்பு தான் தெரியவந்தது.
(ஆதாரம் -21.12.1986 பிரஜைகள் குழு கடிதம்)
இது ஒரு அம்மாவின் கதை 1987 ஆம் ஆண்டு ஆனிமாதம் 14 ஆம் திகதி (14.05.1987) நிலாவெளி அகதி முகாமில் வாழ்ந்துகொண்டிருந்தோம். எங்கு பார்த்தாலும் எந்நேரத்திலும் நடமாட முடியாத கொடுமைகள் நடந்த காலம். ஊரைவிட்டு ஓடிவந்து மக்களோடு மக்களாக ஏ. பி.சி.நிலாவெளி அகதி முகாமிலிருந்தோம். அன்று காலை 10.30 மணியிருக்கும் சீருடைக்காரர்கள் மூவர் ஆயுதபாணிகளாக முகாமுக்குள் நுழைந்தார்கள். எனது மகன் லிங்க ரட்ணம் நாகேந்திரன் நித்திரையிட்டு எழும்பாமல் தூங்கிக்கொண்டிருந்தார். எனது மகனுக்கு அருகில் சென்ற சீருடைக்காரர்கள் மகனை காலால் உதைத்து எழுப்பி “நீதானே கண்ணி வெடி வைக்க உதவியவன்”எனக்கூறி ஈவிரக்கமின்றி அடித்தார்கள், உதைத்தார்கள் என்பிள்ளை கதறியழுத காட்சியை கண்டு என்னால் பொறுக்கமுடியவில்லை.
என் பிள்ளை கெஞ்சினான் நான் ஒவ்வொரு நாளும் வந்து கேம்ப்பில் கையெழுத்துப் போடுகிறேன் எனக்கதறினான். அவர்கள் எதையுமே கேட்கவில்லை. அடித்து உதைத்துக் கொண்டு போனார்கள் சிறிது நேரத்தின் பின் வெடிச்சத்தமொன்று கேட்டது. வீதியோரத்தில் எனது மகனின் பிணம் சூட்டுக் காயங்களுடன் கிடப்பதை கண்டேன் (15.5.1987 லி.மேரிசிசிலியா பிரஜைகள் குழு கடிதம்)
இதே தினம் இதே முகாமிலிருந்த இன்னும் பலர் அழைத்து செல்லப்பட்டார்கள் என்று முறைப்பாட்டாளர்களின் கடிதங்கள் தெரிவிக்கின்றன.
திருமலை நவம்
இந்தநிலையில், அவர்களின் உறவினர்கள் இன்றும் கண்ணீர் வடித்தவண்ணமுள்ளனர். அவ்வாறானவர்களின் கண்ணீர் கதைகளே இவை...
எனது தந்தை பொறுப்புள்ளவராக நடந்திருந்தால் என் தாயை நான் இழந்திருக்கமாட்டேன். குடும்பத்தை காப்பாற்ற விறகு வெட்ட சென்ற என் தாயை கன்னியா நடுக்காட்டில் வைத்து படுபாவிகள் வெட்டிக்கொன்றார்கள்.
இவ்வாறு ஒரு கடிதத்தை திருகோணமலை பிரஜைகள் குழுவுக்கு எழுதியிருந்தார் (3.4.1986) செல்வநாயக புரத்தை சேர்ந்த பத்ம காந்தியென்ற பெண். இப்பெண்ணால் எழுதப்பட்ட அந்த கடிதத்தில் தனது தாய்க்கும் சகோதரனுக்கும் நேர்ந்த கொடூரத்தை அவர் விவரித்திருந்தார்.
அன்றைய தினம் வழமைபோல் எனது தாயார் நவமணி விறகு வெட்டுவதற்காக காலையில் எனது மூத்த சகோதரனுடன் புறப்பட்டார். குடும்ப வறுமை காரணமாகவும், கணவரின் பொறுப்பற்ற தன்மை காரணமாகவும் குடும்பத்தை காப்பாற்ற வேண்டுமென்பதற்காக பாடசாலைக்கு அனுப்பவேண்டிய மூத்த சகோதரனை பள்ளிக்கூடம் அனுப்பாமல் விறகு வெட்ட அழைத்து சென்றார். கன்னியா, ஆண்டாங்குளம் 6 ஆம் கட்டை ஆகிய இடங்களில் அமைந்திருக்கும் காடுகளுக்கு சென்று விறகு வெட்டி சீவியம் நடத்தி வந்தார். எனக்கு மூன்று சகோதரிகளும் ஒரு ஆண் சகோதரனும் உள்ளனர்.
அன்றைய தினம் 05.03.1986 காலையில் விறகு வெட்ட எனது மூத்த சகோதரனுடன் போனவர் தான் என் தாய். மீண்டும் வரவேயில்லை. கன்னியாவிலுள்ள நடுக்காட்டில் வைத்து படுபாவிகள் அவரை வெட்டிக்கொன்று விட்டார்கள். கழுத்தில் படுகாயங்களுடன் தப்பி பிழைத்து வந்த எனது சகோதரன் மூலமே செய்தியை அறிந்து கொண்டோம். எனது தந்தையாரின் பொறுப்பற்ற தன்மை, கசிப்புக்கு அடிமையாகிய குணம் ஆகியவற்றினாலேயே எனது தாயை இழக்கவேண்டி வந்தது. தாயை இழந்து எனது சகோதரர், சகோதரிகள் அநாதையாக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்களின் வாழ்வுக்கு வழி காட்டவேண்டிய பொறுப்பு என்னிடம் விடப்பட்டுள்ளது என அப்பெண் குறிப்பிட்டிருந்தார்.
1986ஆம் ஆண்டு காலப்பகுதி திருகோணமலை மாவட்டம் முழுவதையும் கதிகலங்கவைத்த காலப்பகுதியாகும். தமிழ் கிராமங்கள் ஒப்பாரி வைத்தன; ஓலமிட்டன. கொலைகள், வன்செயல்கள், வன்புணர்வுகள், இடப்பெயர்வுகள் என கொடுங்கோண்மை தலை விரித்தாடிய காலப்பகுதி. இங்கு நடப்பவை அங்கு தெரிவதில்லை. அங்கு நடப்பவை இங்கு தெரிவதில்லையென்ற அளவுக்கு சம்பவங்கள் நடந்து கொண்டிருந்த காலம்.
1986 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி அந்த தாயும் அவளுடைய இரண்டு பிள்ளைகளும் வீட்டில் தங்க முடியாத அச்சம் காரணமாக தனது சகோதரியின் வீட்டுக்கு படுக்கைக்காக சென்றார்கள். அந்தக்காலத்தில் அவ்வகைக் கிராமங்களில் பெண்களோ குடும்பங்களோ தனியே இருக்க முடியாத கொடுமையான காலம்.
ஆண் துணையில்லாத இரண்டு சகோதரிகளும் பிள்ளைகளும் உறங்கிகொண்டிருந்தார்கள். இரவு 11.00 மணி ஊர்நாய்கள் எல்லாம் சேர்ந்து ஓலமிட்டுக் கத்தின. பிள்ளைகளுடன் நித்திரைத் தூக்கத்தில் அவர்கள் ஆழ்ந்திருந்தவேளை ஜன்னலினூடாக டோச் ஒளி பாய்ச்சப்பட்டது. இரண்டு மூன்று சீருடைக்காரர்கள் ஜன்னலுக்கு வெளியே நிற்பது தெரிந்தது. வந்த சீருடைக்காரர்கள் வீட்டுக்குள் உறங்கிக்கொண்டிருந்த தங்களை எழும்பி வரும்படி உத்தரவிட்டார்கள். பயத்தின் காரணமாக பதறி அடித்துக்கொண்டு அப்பெண் எழுந்துள்ளாள். பிள்ளைகளும் அவளும் சேர்ந்து "ஐயோ" என்ற அவலக்குரல் எழுப்பியுள்ளார்கள் ஆனால் எவரும் வரவில்லை வரமுடியாத காலம்.
வெளியே வாருங்கள் பயப்படவேண்டாமென வந்த சீருடைக்காரர்கள் கொச்சைத்தமிழில் அழைத்துள்ளனர். டோச் ஒளி தொடர்ந்து முகத்துக்கு பாய்ச்சப்பட்டு கொண்டேயிருந்தது. அந்த இரு சீருடைக்காரரின் கடுமையான தொனி அழைப்பை கேட்டு பயந்து அவளின் சகோதரியும் பிள்ளைகளும் வெளியே ஓடிவிட்டார்கள். அந்த கும்மிருட்டில் அவர்கள் எந்த திசையை நோக்கி ஓடினார்கள் எனத்தெரியாமல் அவளும் பிள்ளைகளும் உறைந்து போய் நின்றார்கள். இவர்களும் ஓட முயற்சிக்கும்போது அந்த தாயை ஒரு சீருடைக்காரன் ஓடி வந்து அழுங்குப்பிடியாக பிடித்தான் இரண்டு பிள்ளைகளும் ஊரே நடுங்கும்படி கத்தினார்கள்.
“ஐயோ" என அவள் கத்தினாள்; கதறினாள். கையெடுத்து, வந்திருந்த அந்த இரு சீருடைக்காரர்களையும் கும்பிட்டாள் அந்த இருபிள்ளைகளின் தாய். அந்தக் காமுக மிருகங்களோ வைத்திருந்த துப்பாக்கியால் அவளை தாக்கினர். அவள் வேதனையில் கத்தினாள்.
அந்த தாய் இரு காமுகவெறியர்களாலும் நிர்வாணம் ஆக்கப்பட்டாள். அந்த தாய் கட்டியிருந்த சேலையை கிழித்து வாயில் திணித்தார்கள். அதற்கு மேலே அவளால் ஒன்றும் செய்யமுடியவில்லை. பிள்ளைகளுக்கு என்ன நடந்ததென்று அவளால் ஊகிக்கமுடியவில்லை. அந்தக் கொடிய காம மிருகங்கள் தமது இச்சையை தீர்த்து கொண்டார்கள். “நாங்கள் நாளைக்கும் 10 மணிபோல் வருவோம் இங்கு நடந்தவற்றை யாருக்கும் சொன்னால் உன்னையும் உனது பிள்ளைகளையும் சுட்டுக்கொன்றுவிடுவோம்”என்று பயமுறுத்தி சென்றார்கள். வந்த இருவரில் ஒருவனை என்னால் எப்பொழுதும் அடையாளம் காட்டமுடியுமென அந்த தாய் பிரஜைகள் குழுவுக்கு முறையிட்டுள்ளார். மறுநாள் அவளும் பிள்ளைகளும் எங்கு போனார்கள் என்று யாருக்கும் தெரியாது.
(ஆதாரம்- பிரஜைகள் குழு 09.12.1986)
அதே கிராமத்தில் நடைபெற்ற இன்னுமொரு பாலியல் வன்ம சம்பவம் இக்கிராமத்தையே உலுக்கிய சம்பவமாகப் பேசப்படுகிறது. 1986 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு ஊர் உறங்கிகொண்டிருந்தது. அந்த தாயும் கணவரும் அவர்களுடைய பிள்ளைகளும் அலஸ் தோட்டத்திலுள்ள சிறிய ஹோட்டலில் பாதுகாப்பு காரணமாக சென்று தங்குவது வழக்கம். அன்றைய தினம் தங்கியிருந்த வேளையில் தான் அந்த அசம்பாவிதம் நடந்தது.
ஹோட்டலுக்கு வெளியேயிருந்த யாரோ அவளின் கணவரின் பெயரை குறிப்பிட்டு அழைத்திருக்கிறார்கள். தனது கணவரை யாரோ அழைக்கின்றார்கள் என்று எண்ணிக்கொண்டு கதவை அந்தப் பெண் திறந்தாள். திடீரென மூன்று சீருடைக்காரர்கள் ஆயுததாரிகளாக உள் நுழைந்தார்கள். அதைக்கண்டு அந்தப்பெண் நிலைகுலைந்து போனாள்.
அவர்கள் அவளிடம் , "உனது கணவரை நீ கூப்பிடவேண்டாம். நீ தான் எங்களுக்கு வேண்டுமென்று வெறித்தனத்தோடு கூறினார்கள். அப்பெண்ணோ பீதி காரணமாக தனது கணவரை பீறிட்டு கத்தி அழைத்தாள். கணவன் பதறிப்போய் ஓடிவந்து ஆயுததாரிகளிடம் “நீங்கள் யார்?" என்று வினாவினான். அதையெல்லாம் பொருட்படுத்தாத அந்த காமுகர்கள் அவளின் கணவரை அருகிலுள்ள மலசல கூடத்திற்குள் தள்ளி பூட்டினார்கள். அவனோ தனது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் ஏதோ நடக்கப்போகிறது என எண்ணி "கதவை திறவுங்கள் திறவுங்கள்" என கத்தியும் எதுவும் பலனளிக்கவில்லை. அந்த காமுகர்கள் எல்லாக்கதவுகளையும் பூட்டிவிட்டு அந்த அப்பாவிப்பெண்ணை ஒருவர் மாறி ஒருவர் வன்புணர்வுக்குட்படுத்தினார்கள். இறுதியில், அவர்கள் போகும்போது அவளிடம் இன்னுமொரு பெண்ணின் பெயரை சொல்லி அவளின் வீடு எங்கேயென்று கேட்டிருக்கின்றார்கள்.
(ஆதாரம்- பிரஜைகள் குழு கடிதம்)
அந்த இன்னுமொரு பெண் கொடுத்த வாக்குமூலம் இவ்வாறு இருந்தது. அகதிகளாக எங்கள் குடும்பம் இந்த ஹோட்டலில் தங்கியிருந்தோம். எனக்கு வயது இருபத்தைந்து. புளியங்குளவாசிகளாகிய நாங்கள் அடைக்கலம் கோரி கடந்த நான்கு மாதங்களாக ஹோட்டலில் வாழ்ந்து வருகிறோம். அன்றைய தினம் இரவு (21.12.1986) நாங்கள் உறக்கத்திலிருந்த சமயம் சிலர் எனது அறைக்கதவை தட்டினார்கள். நான் எழும்பவேயில்லை. 15நிமிடம் கழிந்த பின்னர் எனது பெயரை சொல்லி அழைத்தார்கள் நான் பயம் காரணமாக கதவை திறக்கவேயில்லை.
கதவு உடைக்கப்படும் சத்தம் கேட்டது. ஜன்னல் சுக்கு நூறாகியது. அவர்கள் எப்படியும் உள்ளே வர முயற்சிப்பதை உணர்ந்த நான் என்னுடன் இருந்த தம்பியிடம் சொன்னேன் அடுத்த அறையில் இருக்கும் இஸ்மயில் என்பவரை கூப்பிடும்படி எனது தம்பியோ வாப்பா வாப்பா என அவரை சத்தமிட்டு அழைத்தான். வாப்பா வரும் சத்தம் கேட்டதோ என்னவோ வெளியில் நின்றவர்கள் ஓடும் சத்தம் கேட்டது. சில நிமிடங்களின் பின் வாப்பா கதவை திறக்கும்படி கூறினார். நாங்கள் கதவை திறந்தோம். அதன் பின்பு தான் எங்களுக்கு தெரியும் அடுத்த அறையிலிருந்த அகதி ஒருவரின் மனைவி கொடூரமாக நடத்தப்பட்டிருக்கிறார் என்று. அடுத்த அறையில் கொடுமை புரிந்த சீருடைக்காரர்கள் தான் எங்கள் அறையை தட்டினார்கள் என்பது அவர்கள் போனபின்பு தான் தெரியவந்தது.
(ஆதாரம் -21.12.1986 பிரஜைகள் குழு கடிதம்)
இது ஒரு அம்மாவின் கதை 1987 ஆம் ஆண்டு ஆனிமாதம் 14 ஆம் திகதி (14.05.1987) நிலாவெளி அகதி முகாமில் வாழ்ந்துகொண்டிருந்தோம். எங்கு பார்த்தாலும் எந்நேரத்திலும் நடமாட முடியாத கொடுமைகள் நடந்த காலம். ஊரைவிட்டு ஓடிவந்து மக்களோடு மக்களாக ஏ. பி.சி.நிலாவெளி அகதி முகாமிலிருந்தோம். அன்று காலை 10.30 மணியிருக்கும் சீருடைக்காரர்கள் மூவர் ஆயுதபாணிகளாக முகாமுக்குள் நுழைந்தார்கள். எனது மகன் லிங்க ரட்ணம் நாகேந்திரன் நித்திரையிட்டு எழும்பாமல் தூங்கிக்கொண்டிருந்தார். எனது மகனுக்கு அருகில் சென்ற சீருடைக்காரர்கள் மகனை காலால் உதைத்து எழுப்பி “நீதானே கண்ணி வெடி வைக்க உதவியவன்”எனக்கூறி ஈவிரக்கமின்றி அடித்தார்கள், உதைத்தார்கள் என்பிள்ளை கதறியழுத காட்சியை கண்டு என்னால் பொறுக்கமுடியவில்லை.
என் பிள்ளை கெஞ்சினான் நான் ஒவ்வொரு நாளும் வந்து கேம்ப்பில் கையெழுத்துப் போடுகிறேன் எனக்கதறினான். அவர்கள் எதையுமே கேட்கவில்லை. அடித்து உதைத்துக் கொண்டு போனார்கள் சிறிது நேரத்தின் பின் வெடிச்சத்தமொன்று கேட்டது. வீதியோரத்தில் எனது மகனின் பிணம் சூட்டுக் காயங்களுடன் கிடப்பதை கண்டேன் (15.5.1987 லி.மேரிசிசிலியா பிரஜைகள் குழு கடிதம்)
இதே தினம் இதே முகாமிலிருந்த இன்னும் பலர் அழைத்து செல்லப்பட்டார்கள் என்று முறைப்பாட்டாளர்களின் கடிதங்கள் தெரிவிக்கின்றன.
திருமலை நவம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக