இன்ஃபுளுவென்சா (Influenza) எனப்படுவது ஃபுளூ எனப் பொதுவாக அழைக் கப்படும் பறவைகளிலும், பாலூட்டிகளிலும் காணப்படும் ஒரு வகைத்தொற்று நோயாகும். ஆர்த் தோமிக் சோவிரிடே குடும்பத்தைச் சேர்ந்த
ஆர்.என்.ஏ தீ நுண்மத்தினால் (virus) உண்டாவது. இந்நோய் தற்போது இலங்கையில் மிகவும் வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக கர்ப்பிணித்தாய்மார் கள், சிறுவர்கள், முதியவர்கள், இளம் வயதினர் என அனைவரையும் தாக்கும் இந்நோய் மரணத்தை விளைவிக்கக்கூடியது என சுகாதார கல்விப்பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
பொதுவாகவே கர்ப்பிணிகளை அதிகம் தாக் கும் என அச்சமடையக்கூடிய இந் நோய், கர்ப்பகாலத்தில் அதிகம் பாதிப்புக்களையும் சிக்கல்களையும் ஏற்படுத்தலாமென கண்டறியப்பட்டுள்ளது. அதாவது நீரிழிவு, இதயநோய், ஆஸ்துமா, இரத்தச்சோகை போன்ற நோய்களையுடைய கர்ப்பிணிகளுக்கே இத்தாக்கம் அதிகமாக ஏற்படுகின்றது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
ஒரு கர்ப்பிணியை இன்ஃபுளுவென்சா தாக்கும் பட்சத்தில் தாக்கப்பட்டவருக்கு இருமலுடன் கூடிய வழமைக்கு மாறான காய்ச்சல், தொண்டைவலி, மூக்குவடிதல், தலையிடி, உடல்வலி, அல்லது தசைநார் வலி போன்ற அறிகுறிகள் தென்படலாம். ஆகவே, இவ்வாறான அறிகுறிகள் தொடர்ந்து தெரியும் பட்சத்தில் உடனடியாக சிறந்த மருத்துவரை அணுகுதல் அவசியம்.
மேலும் இன்ஃபுளுவென்சா தொற்று ஏற்பட்ட ஒரு கர்ப்பிணித் தாய்க்கு கருச்சிதைவு, குறைப்பிரசவம், சிசுக்களில் சுவாசப்பிரச்சினை போன்றவையும் ஏற்படலாம்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு கர்ப்பிணிப் பெண் உடனடியாகத் தகுதி வாய்ந்த வைத்தியரை அணுகி வைத்திய ஆலோசனை மற்றும் பரிசோதனையை பெற்றுக்கொள்ளுதல் அவசியமாகும். இன்ஃபுளுவென்சா ஏற்பட்டுள்ளதாக மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடிக்கப்படின் கட்டாயமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும்.
நோய் தீவிரமடையும் பட்சத்திலோ அல்லது சிக்கல்கள் ஏற்படும் பட்சத்திலோ தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவார்.
கர்ப்பகாலத்தில் ஒரு கர்ப்பிணி க்கு பெரும்பாலும் பாதுகாப்பான மற்றும் சத்துக்கள் நிறைந்த மாத் திரைகளே வழங்கப்படுகின் றன. ஆகவே, கர்ப்பகாலத்தில் இன்ஃபுளுவென்சா ஏற்பட் டுள்ளது என உறுதி செய்யப் பட்டால் தகுந்த சிகிச்சைக ளுடன் வைத்தியரின் ஆலோசனையின் பின், மருந்துகள் எடுத்துக்கொள்வது சிறந்தது. வைத்திய ஆலோசனையின்றி எடுத்துக்கொள்ளும் மருந்துக ளால் கருவிலுள்ள குழந்தை க்கு ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆகவே, வைத்திய அறிவுரையின் கீழ் 24 மணித்தியாலமும் போதியளவு மருந்துகள் கையிருப்பில் இருத்தல் அவசியம் எனவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
கர்ப்பிணித்தாய் இன்ஃபுளுவென்சா தொற்றுடையவரென்றால் அவருடைய குடும்பத்தினர் அவருக்கான தனியானதொரு பகுதியொன்றை ஒதுக்கி கொடுக்க வேண்டும் (for infected or suspected mothers) எனவும், சமத்துவமாக வழக்கமான முறையில் கவனிக்கப்பட வேண்டுமென சுகாதார கல்விப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
பிரசவத்தின் போது, ஒரு சாதாரண இன்ஃபுளுெவன்சா தொற்று அற்ற தாய்க்கு இன்ஃபுளுவென்சா தொற்றுடையவர் பிரசவத்தை கையாள்வதை தவிர்க்க வேண்டும். மேலும் தாய்க்கு இன்ஃ புளுவென்சா நோய்தொற்று இருப்பது கண்டறியப்படும் பட்சத்தில் தாயையும் சேயையும் வேறாக்க வேண்டாம் எனவும் வலியுறுத்துகின்றனர்.
காரணம், தாயானவர் தனக்கு பிறந்திருக்கும் புதிய குழந்தையை பத்து மாதம் சுமந்து ஆசை யாய் குழந்தையின் வருகையை எண்ணி மகிழ்ந்திருப்பாள். திடீரெனப் பிறந்த குழந்தையை தாயிடமிருந்து பிரிக்கும் பட்சத்தில் தாய் உள ரீதியாக பாதிக்கப்படலாம் எனவும் தாய் தாராளமாக தாய்ப்
பாலூட்டலாம் எனவும் சுகாதாரப்பிரிவினர் தெரி விக்கின்றனர்.
ஆனால், பாலூட்டலில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படுமாக இருந்தால் அல்லது தாய்க்கு இயலவில்லை என்றால் தாயின் பாலை பீய்ச்சி எடுத்து கரண்டியாலோ அல்லது குழாயின் மூலமோ பருக்கலாம். இதனை EBM (express Breast Milk) முறை என்று கூறுவர். ஆனால், தாய் தற்காலிகமாக முகத்திற்கு கவசம் அணிந்து (Mask) குழந்தைக்கு பாலூட்டுதல் அவசியமாகும். மேலும் பாலூட்டுவதற்கு முன்னும் பின்னும் கைகளை சவர்க்காரம் இட்டு நன்கு கழுவுதல் அவசியமாகும். தாய்க்கு தேவையெனில் வைரஸ் எதிர்ப்பு (Antiviral) மருந்து வழங்கலாம் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர். இவ்வாறு வைரஸ் எதிர்ப்பு மருந்தை பாவிப்பதன் மூலம் குழந்தையை பாதுகாக்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட தாய்மாரின் குழந்தைகளுக்கு இன்ஃபுளுவென்சா அறிகுறிகள் ஏற்படுகின்றதா? என்று உன்னிப்பாக அவதானிக்க வேண்டும். உதாரணமாக குழந்தைக்கு காய்ச்சல், வேகமாக மூச்செடுத்தல், நீல் வாதை, நீண்ட நேரம் தூங்குதல், சோம்பலாக இருத்தல், பால் குடிக்க மறுத்தல், உடல் வறட்சியாக இருத்தல் போன்ற அறிகுறிகள் தெரிகின்றதா என அவதானிக்க வேண்டும் என எச்சரிப்பதுடன் இன்ஃபுளுவென்சா நோய்த்
தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித்தாய் முழு மையாக குணமடைந்த பின்னரே வைத்தியசாலை யிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.
இன்ஃபுளுவென்சா தொற்றினால் பாதிக்கப்ப ட்டு அவர் பாதியிலேயே சிகிச்சையை முடித்துக் கொண்டு வைத்தியசாலையை விட்டு வெளியேறுவாராக இருந்தால் அவரிடமிருந்து பலருக்கு இன்ஃபுளுவென்சா தொற்று பரவக்கூடும். அதனால்
முழுமை யான சிகிச்சையை பெற்றுக்கொண்டு வைத்தியசாலையிலிருந்து வெளியேறுவது அவருக்கும்
அவரை சூழவுள்ள அனைவருக்கும் பாதுகாப்பானது.
ஆர்.என்.ஏ தீ நுண்மத்தினால் (virus) உண்டாவது. இந்நோய் தற்போது இலங்கையில் மிகவும் வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக கர்ப்பிணித்தாய்மார் கள், சிறுவர்கள், முதியவர்கள், இளம் வயதினர் என அனைவரையும் தாக்கும் இந்நோய் மரணத்தை விளைவிக்கக்கூடியது என சுகாதார கல்விப்பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
பொதுவாகவே கர்ப்பிணிகளை அதிகம் தாக் கும் என அச்சமடையக்கூடிய இந் நோய், கர்ப்பகாலத்தில் அதிகம் பாதிப்புக்களையும் சிக்கல்களையும் ஏற்படுத்தலாமென கண்டறியப்பட்டுள்ளது. அதாவது நீரிழிவு, இதயநோய், ஆஸ்துமா, இரத்தச்சோகை போன்ற நோய்களையுடைய கர்ப்பிணிகளுக்கே இத்தாக்கம் அதிகமாக ஏற்படுகின்றது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
ஒரு கர்ப்பிணியை இன்ஃபுளுவென்சா தாக்கும் பட்சத்தில் தாக்கப்பட்டவருக்கு இருமலுடன் கூடிய வழமைக்கு மாறான காய்ச்சல், தொண்டைவலி, மூக்குவடிதல், தலையிடி, உடல்வலி, அல்லது தசைநார் வலி போன்ற அறிகுறிகள் தென்படலாம். ஆகவே, இவ்வாறான அறிகுறிகள் தொடர்ந்து தெரியும் பட்சத்தில் உடனடியாக சிறந்த மருத்துவரை அணுகுதல் அவசியம்.
மேலும் இன்ஃபுளுவென்சா தொற்று ஏற்பட்ட ஒரு கர்ப்பிணித் தாய்க்கு கருச்சிதைவு, குறைப்பிரசவம், சிசுக்களில் சுவாசப்பிரச்சினை போன்றவையும் ஏற்படலாம்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு கர்ப்பிணிப் பெண் உடனடியாகத் தகுதி வாய்ந்த வைத்தியரை அணுகி வைத்திய ஆலோசனை மற்றும் பரிசோதனையை பெற்றுக்கொள்ளுதல் அவசியமாகும். இன்ஃபுளுவென்சா ஏற்பட்டுள்ளதாக மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடிக்கப்படின் கட்டாயமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும்.
நோய் தீவிரமடையும் பட்சத்திலோ அல்லது சிக்கல்கள் ஏற்படும் பட்சத்திலோ தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவார்.
கர்ப்பகாலத்தில் ஒரு கர்ப்பிணி க்கு பெரும்பாலும் பாதுகாப்பான மற்றும் சத்துக்கள் நிறைந்த மாத் திரைகளே வழங்கப்படுகின் றன. ஆகவே, கர்ப்பகாலத்தில் இன்ஃபுளுவென்சா ஏற்பட் டுள்ளது என உறுதி செய்யப் பட்டால் தகுந்த சிகிச்சைக ளுடன் வைத்தியரின் ஆலோசனையின் பின், மருந்துகள் எடுத்துக்கொள்வது சிறந்தது. வைத்திய ஆலோசனையின்றி எடுத்துக்கொள்ளும் மருந்துக ளால் கருவிலுள்ள குழந்தை க்கு ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆகவே, வைத்திய அறிவுரையின் கீழ் 24 மணித்தியாலமும் போதியளவு மருந்துகள் கையிருப்பில் இருத்தல் அவசியம் எனவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
கர்ப்பிணித்தாய் இன்ஃபுளுவென்சா தொற்றுடையவரென்றால் அவருடைய குடும்பத்தினர் அவருக்கான தனியானதொரு பகுதியொன்றை ஒதுக்கி கொடுக்க வேண்டும் (for infected or suspected mothers) எனவும், சமத்துவமாக வழக்கமான முறையில் கவனிக்கப்பட வேண்டுமென சுகாதார கல்விப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
பிரசவத்தின் போது, ஒரு சாதாரண இன்ஃபுளுெவன்சா தொற்று அற்ற தாய்க்கு இன்ஃபுளுவென்சா தொற்றுடையவர் பிரசவத்தை கையாள்வதை தவிர்க்க வேண்டும். மேலும் தாய்க்கு இன்ஃ புளுவென்சா நோய்தொற்று இருப்பது கண்டறியப்படும் பட்சத்தில் தாயையும் சேயையும் வேறாக்க வேண்டாம் எனவும் வலியுறுத்துகின்றனர்.
காரணம், தாயானவர் தனக்கு பிறந்திருக்கும் புதிய குழந்தையை பத்து மாதம் சுமந்து ஆசை யாய் குழந்தையின் வருகையை எண்ணி மகிழ்ந்திருப்பாள். திடீரெனப் பிறந்த குழந்தையை தாயிடமிருந்து பிரிக்கும் பட்சத்தில் தாய் உள ரீதியாக பாதிக்கப்படலாம் எனவும் தாய் தாராளமாக தாய்ப்
பாலூட்டலாம் எனவும் சுகாதாரப்பிரிவினர் தெரி விக்கின்றனர்.
ஆனால், பாலூட்டலில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படுமாக இருந்தால் அல்லது தாய்க்கு இயலவில்லை என்றால் தாயின் பாலை பீய்ச்சி எடுத்து கரண்டியாலோ அல்லது குழாயின் மூலமோ பருக்கலாம். இதனை EBM (express Breast Milk) முறை என்று கூறுவர். ஆனால், தாய் தற்காலிகமாக முகத்திற்கு கவசம் அணிந்து (Mask) குழந்தைக்கு பாலூட்டுதல் அவசியமாகும். மேலும் பாலூட்டுவதற்கு முன்னும் பின்னும் கைகளை சவர்க்காரம் இட்டு நன்கு கழுவுதல் அவசியமாகும். தாய்க்கு தேவையெனில் வைரஸ் எதிர்ப்பு (Antiviral) மருந்து வழங்கலாம் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர். இவ்வாறு வைரஸ் எதிர்ப்பு மருந்தை பாவிப்பதன் மூலம் குழந்தையை பாதுகாக்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட தாய்மாரின் குழந்தைகளுக்கு இன்ஃபுளுவென்சா அறிகுறிகள் ஏற்படுகின்றதா? என்று உன்னிப்பாக அவதானிக்க வேண்டும். உதாரணமாக குழந்தைக்கு காய்ச்சல், வேகமாக மூச்செடுத்தல், நீல் வாதை, நீண்ட நேரம் தூங்குதல், சோம்பலாக இருத்தல், பால் குடிக்க மறுத்தல், உடல் வறட்சியாக இருத்தல் போன்ற அறிகுறிகள் தெரிகின்றதா என அவதானிக்க வேண்டும் என எச்சரிப்பதுடன் இன்ஃபுளுவென்சா நோய்த்
தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித்தாய் முழு மையாக குணமடைந்த பின்னரே வைத்தியசாலை யிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.
இன்ஃபுளுவென்சா தொற்றினால் பாதிக்கப்ப ட்டு அவர் பாதியிலேயே சிகிச்சையை முடித்துக் கொண்டு வைத்தியசாலையை விட்டு வெளியேறுவாராக இருந்தால் அவரிடமிருந்து பலருக்கு இன்ஃபுளுவென்சா தொற்று பரவக்கூடும். அதனால்
முழுமை யான சிகிச்சையை பெற்றுக்கொண்டு வைத்தியசாலையிலிருந்து வெளியேறுவது அவருக்கும்
அவரை சூழவுள்ள அனைவருக்கும் பாதுகாப்பானது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக