முஸ்லிம்கள் மீது அடாவடித்தனம் காரணமாக உலகில் மதிப்பிழந்த பர்மா தனது பெயரை மியன்மார் என மாற்றிக் கொண்டது. மீண்டும் மியன்மார் எனும் பெயரும் மாற்றம் பெறுமோ?என்ற சந்தேகம் எழுகிறது
உலகிலுள்ள சிறுபான்மைச் சமூகங்களில் அதி உச்சக்கட்ட துன்பங்களை அனுபவிக்கும் சிறுபான்மை சமூகமென்றால் மியன்மார் முஸ்லிம்கள்தான்
மியன்மாரில் பெரும்பான்மையினராக பௌத்த மக்கள் வாழ்கின்றனர். மொத்த சனத்தொகையில் 6 சதவீதம் முதல் 10சதவீதம் வரை முஸ்லிம்கள் 1000 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வருகின்றனர். முஸ்லிம்கள் குறித்து துல்லியமான மதிப்பீடுகள் இல்லை.
மியன்மாரில் 3 சதவீதமான முஸ்லிம்கள் வாழ்ந்து வந்துள்ளனர். தன்னசெரில் மாகாணத்தில் வாழும் முஸ்லிம்கள் பஷுஷ் என அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் சீன மற்றும் தாய்லாந்து பூர்வீகத்தை கொண்டுள்ளனர். மியன்மாரின் தெற்கில் வாழும் முஸ்லிம்கள் பான்தாய் என அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் பர்மிய பூர்வீகத்தை கொண்டுள்ளனர். இவ்விரு விதமான முஸ்லிம்கள் குடியுரிமையுடன் வாழ்கின்றனர். இவர்களை மியன்மார் தனது நாட்டுப் பிரஜைகளாக கருதுகின்றது. மூன்றாவது விதமான முஸ்லிம்கள் அரக்கான் மாநிலத்தில் வாழ்கின்றனர். இவர்கள்தான் ரோஹிங்யா முஸ்லிம்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் இந்திய பூர்வீகத்தை கொண்டுள்ளனர். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஒன்றாக இருந்தபோது அரக்கானுக்கு குடியேறியவர்கள்.
அரக்கானில் வாழும் ரோஹிங்யா முஸ்லிம்களே இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கிட்டத்தட்ட எட்டு இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள்.
ரோஹிங்யா முஸ்லிம்கள் வாழும் அரக்கான் மாநிலம் ஒரு காலத்தில் இஸ்லாமிய சுதந்திர குடியரசாக செயற்பட்டு வந்துள்ளது. 1784 ஆம் ஆண்டில் ரோஹிங்யா முஸ்லிம்கள் வாழ்ந்துவந்த அரக்கான் பகுதி படையெடுப்பு காரணமாக பர்மாவோடு இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு அந்த அடிப்படையில் பர்மாவின் ஒரு பகுதியாக ரோஹிங்யா இன மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். 1824 ஆம் ஆண்டு முதல் ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பில் இருந்த பர்மா, 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் திகதி சுதந்திரமடைந்தது. முதலாவது பிரதமர் யூ நூ ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ரோஹிங்யா முஸ்லிம்கள் பர்மாவின் குடிமக்கள், இந்த மண்ணில் அனைத்து இனங்களுக்கும் உள்ள உரிமைகள் அவர்களுக்கும் உண்டு என 1951 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் அறிவிப்பு செய்தார். ஆனால் இன்று நிலைமை இவ்வாறில்லை. ரோஹிங்யா முஸ்லிம்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு கேவலமான நிலைமைக்கு ஆளாக்கியுள்ளார்கள் மியன்மார் அரசாங்கத்தினர். கொடுமையிலும் கொடுமை!
அரக்கான் பகுதி பர்மாவுடன் இணைக்கப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது தீவிர பௌத்த மதப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. பௌத்தத்திற்கு மதம் மாற வேண்டும் அல்லது நாட்டிலிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என அந்நாட்டின் சர்வாதிகார இராணுவத்தினர் பயமுறுத்தினர்.
ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஏன் இந்த நிலைமை வரவேண்டும் என்பதை அலசுவோம். 16 ஆம் நூற்றாண்டில் ஷாஜஹான் மன்னனின் மகன் ஷா சுஜா எனும் இளவரசன் முறையில்லாது அரசராக வர முயன்றான். முயற்சி தோல்வியடைந்ததால் உயிருக்கு அஞ்சி, அரக்கானில் ஆட்சி செய்த சண்ட துத்தம்மா எனும் மன்னனிடம் அடைக்கலம் புகுந்தான். 1660களில் அவனுக்கு அடைக்கலம் கொடுத்த மன்னன், பின்னர் அவனின் மகளை மனைவியாக்கிக் கொள்ள ஆசைப்பட்டு பெண் கேட்கப் போனான். ஆனால் இதனை சம்மதிக்க மறுத்துவிட்டான் ஷா சுஜா. இதனால் கோபமுற்ற மன்னன் சண்ட துத்தம்மா அனைத்து முகலாயர்களையும் வெட்டிக் கொல்லும்படி உத்தரவிட்டான். அதன்படி அனைவரும் கொல்லப்பட்டனர். இதனை கேள்விப்பட்ட முகலாய சாம்ராஜ்யத்தினர் சண்ட துத்தம்மாவிடம் போர் தொடுத்தனர். இதனால் அரக்கான் மன்னனின் கட்டுப்பாட்டில் இருந்த சித்தாங்கொங்க் பகுதியை முகலாயர்களிடம் இழக்க நேரிட்டது. இன்றும் சித்தாங்கொங்க் பங்களாதேஷ் நாட்டின் ஒரு பகுதியாகவே இருக்கிறது. இன்றும் சித்தாங்கொங்க்கில் வாழும் பெரும்பகுதியினர் பர்மிய மொழி பேசும் பௌத்தர்களாகவே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
சுஜாவின் மகள் கிடைக்காததினாலும் சித்தாங்கொங்க் பகுதியை பறிகொடுத்ததினாலும் ஏற்பட்ட அவமானத்தினால் மன்னர் சண்ட துத்தம்மா பழிவாங்கும் முகமாக வரலாறை தவறாக எழுதினான். ரோஹிங்யா முஸ்லிம்கள் மிகத் தாழ்த்தப்பட்ட சாதியென்றும் பௌத்தத்தின் தூய்மைக்கு களங்கம் ஏற்படுத்தக்கூடியவர்கள் என்றும் மியன்மாரை சூறையாடுகின்றவர்கள் என்றும் உள்ளூர் மக்களை ஏமாற்றுகின்றவர்கள் என்றும் குறிப்பிட்டான். இந்த விடயங்கள் மியன்மாரின் தேசிய வரலாற்று கையேட்டில் காணப்படுகிறது.
1660 களில் இருந்து இன்றுவரை பௌத்த மக்கள் மன்னன் சண்ட துத்தம்மாவின் பொய்ச் செய்திகளை கேட்டு ரோஹிங்யா முஸ்லிம்களை கொடுமைப்படுத்தி வருகின்றனர். அன்று தொடக்கம் இன்றுவரை திட்டமிட்டு இனச்சுத்திகரிப்பில் மியன்மார் பௌத்தர்கள் ஈவிரக்கமின்றி ஈடுபடுகின்றனர். 1871, 1911, 1990, 1996, 2014, இன்றும் பெரிய அளவில் அரச, இராணுவ ஆதரவில் மியன்மார் பௌத்தர்கள் பௌத்தத்திற்கு அப்பாற்பட்ட விடயங்களில் கொடூரமாக ஈடுபடுகின்றனர். புத்த பெருமான் இன்றிருந்தால் கண்ணீர் வடிப்பார். அந்தளவிற்கு கொடூரமான முறையில் இனச்சுத்திகரிப்பு அரங்கேறுகிறது. இதுவரை இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள். அயல்நாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். தப்பியோடும்போது பலர் கடலில் வீழ்ந்து இறந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான வீடுகள் எரிக்கப்பட்டிருக்கின்றன. பாலியல் வல்லுறவு, பள்ளிவாசல்களை அகற்றுதல், சொத்துக்களை சூறையாடுதல் தொடர்ந்தவண்ணம் உள்ளன. இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்கிறார் சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஜனநாயக போராளியென மேற்கு நாடுகளால் புகழப்பட்ட ஆன்சாங்க் சூகி . இவர் சமாதானத்திற்கான நோபல் பரிசு பெறுவதற்கு தகுதியானவரா என உலகம் ஆச்சரியமாக கருதுகிறது.
பௌத்த மக்களுக்கு மனிதாபிமானத்தை எடுத்துச்சொல்ல வேண்டிய அசின் விராது தேரர் இனச்சுத்திகரிப்புக்கு தலைமை தாங்குகிறார். வேலியே பயிரை மேய்கிறது. ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது அன்று தொடக்கம் இன்றுவரை திட்டமிட்ட படுகொலை, பாலியல் வல்லுறவு, சொத்துக்கள் சூறையாடல், சமய விடயங்களில் இடையூறு, பல அக்கிரமங்கள் அரங்கேறியதால் உலகில் பர்மாவால் பௌத்த மதத்திற்கு இழுக்கு ஏற்பட்டது. உலகின் உயர்பீட பௌத்த தேரர்களின் ஆலோசனைக்கமைய பர்மாவின் பெயரை 1989 இல் மியன்மார் என மாற்றிக்கொண்டனர். குற்றம் செய்தவர்கள், பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் தங்களது பெயரை மாற்றி நாட்டில் வலம் வருவார்கள். அதேபோன்று ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது அடாவடித்தனம் புரிந்த பர்மா தனது பெயரை மியன்மார் என மாற்றி உலகில் வலம் வருகிறது. தொடர்ந்தும் இனச்சுத்திகரிப்பு அரங்கேறுவதால் மியன்மாரின் பெயரும் மாற்றமடையும் நிலைமை தோன்றுகிறது.
அமெரிக்காவின் ஜனாதிபதி ஒபாமா மியன்மார் நாட்டிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். சர்வதேசளவில் மக்கள் எதிர்பார்த்த விடயம் என்னவெனில் மனித உரிமை மீறல்கள், ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலைகள் பற்றி அரசுடன் கதைத்து அழுத்தம் கொடுப்பார் என்பதே. ஆனால் பராக் ஒபாமாவோ மண்ணை வாரிவிட்டார். மியன்மாரில் உள்ள இயற்கை வளங்களுக்காக வரிந்துகட்டும் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் போட்டியாக மூன்றாம் சக்தியாகவே ஒபாமா அங்கு சென்றார்.
மியன்மாரில் என்ன நடக்கிறது என்பது உலகம் அறிந்த விடயம். அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஏன் அமைதி காக்கின்றன? பாதிக்கப்படுபவர்கள் முஸ்லிம்கள் என்பதனாலேயா? சர்வதேச மன்னிப்புச்சபை, ஆசிய மனித உரிமை கண்காணிப்பகம் ஆகியன ரோஹிங்யா முஸ்லிம்களின் பாதிப்புகள் பற்றி உருப்படியான விடயங்களில் ஈடுபடாமல் இருப்பது ஏன்?
உலகில் 65 முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளையும் 160 கோடி மக்களையும் கொண்ட இஸ்லாமிய உலகு மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம்கள் பற்றி இதுவரை உருப்படியான நடவடிக்கைகள் எடுத்ததாகத் தெரியவில்லை. அனைத்து 65 நாடுகளும் ஒன்றுசேர்ந்து ரோஹிங்யா முஸ்லிம்கள் மீண்டும் குடியுரிமை பெற்று மியன்மாரில் நிம்மதியாக சுயமரியாதையுடன் தங்களது வாழ்க்கையை வழிசமைக்க உதவவேண்டும் என்பதே உலக முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாகும். அல்லாஹ் அருள் செய்வானாக! ஆமீன்!!
உலகிலுள்ள சிறுபான்மைச் சமூகங்களில் அதி உச்சக்கட்ட துன்பங்களை அனுபவிக்கும் சிறுபான்மை சமூகமென்றால் மியன்மார் முஸ்லிம்கள்தான்
மியன்மாரில் பெரும்பான்மையினராக பௌத்த மக்கள் வாழ்கின்றனர். மொத்த சனத்தொகையில் 6 சதவீதம் முதல் 10சதவீதம் வரை முஸ்லிம்கள் 1000 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வருகின்றனர். முஸ்லிம்கள் குறித்து துல்லியமான மதிப்பீடுகள் இல்லை.
மியன்மாரில் 3 சதவீதமான முஸ்லிம்கள் வாழ்ந்து வந்துள்ளனர். தன்னசெரில் மாகாணத்தில் வாழும் முஸ்லிம்கள் பஷுஷ் என அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் சீன மற்றும் தாய்லாந்து பூர்வீகத்தை கொண்டுள்ளனர். மியன்மாரின் தெற்கில் வாழும் முஸ்லிம்கள் பான்தாய் என அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் பர்மிய பூர்வீகத்தை கொண்டுள்ளனர். இவ்விரு விதமான முஸ்லிம்கள் குடியுரிமையுடன் வாழ்கின்றனர். இவர்களை மியன்மார் தனது நாட்டுப் பிரஜைகளாக கருதுகின்றது. மூன்றாவது விதமான முஸ்லிம்கள் அரக்கான் மாநிலத்தில் வாழ்கின்றனர். இவர்கள்தான் ரோஹிங்யா முஸ்லிம்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் இந்திய பூர்வீகத்தை கொண்டுள்ளனர். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஒன்றாக இருந்தபோது அரக்கானுக்கு குடியேறியவர்கள்.
அரக்கானில் வாழும் ரோஹிங்யா முஸ்லிம்களே இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கிட்டத்தட்ட எட்டு இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள்.
ரோஹிங்யா முஸ்லிம்கள் வாழும் அரக்கான் மாநிலம் ஒரு காலத்தில் இஸ்லாமிய சுதந்திர குடியரசாக செயற்பட்டு வந்துள்ளது. 1784 ஆம் ஆண்டில் ரோஹிங்யா முஸ்லிம்கள் வாழ்ந்துவந்த அரக்கான் பகுதி படையெடுப்பு காரணமாக பர்மாவோடு இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு அந்த அடிப்படையில் பர்மாவின் ஒரு பகுதியாக ரோஹிங்யா இன மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். 1824 ஆம் ஆண்டு முதல் ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பில் இருந்த பர்மா, 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் திகதி சுதந்திரமடைந்தது. முதலாவது பிரதமர் யூ நூ ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ரோஹிங்யா முஸ்லிம்கள் பர்மாவின் குடிமக்கள், இந்த மண்ணில் அனைத்து இனங்களுக்கும் உள்ள உரிமைகள் அவர்களுக்கும் உண்டு என 1951 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் அறிவிப்பு செய்தார். ஆனால் இன்று நிலைமை இவ்வாறில்லை. ரோஹிங்யா முஸ்லிம்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு கேவலமான நிலைமைக்கு ஆளாக்கியுள்ளார்கள் மியன்மார் அரசாங்கத்தினர். கொடுமையிலும் கொடுமை!
அரக்கான் பகுதி பர்மாவுடன் இணைக்கப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது தீவிர பௌத்த மதப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. பௌத்தத்திற்கு மதம் மாற வேண்டும் அல்லது நாட்டிலிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என அந்நாட்டின் சர்வாதிகார இராணுவத்தினர் பயமுறுத்தினர்.
ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஏன் இந்த நிலைமை வரவேண்டும் என்பதை அலசுவோம். 16 ஆம் நூற்றாண்டில் ஷாஜஹான் மன்னனின் மகன் ஷா சுஜா எனும் இளவரசன் முறையில்லாது அரசராக வர முயன்றான். முயற்சி தோல்வியடைந்ததால் உயிருக்கு அஞ்சி, அரக்கானில் ஆட்சி செய்த சண்ட துத்தம்மா எனும் மன்னனிடம் அடைக்கலம் புகுந்தான். 1660களில் அவனுக்கு அடைக்கலம் கொடுத்த மன்னன், பின்னர் அவனின் மகளை மனைவியாக்கிக் கொள்ள ஆசைப்பட்டு பெண் கேட்கப் போனான். ஆனால் இதனை சம்மதிக்க மறுத்துவிட்டான் ஷா சுஜா. இதனால் கோபமுற்ற மன்னன் சண்ட துத்தம்மா அனைத்து முகலாயர்களையும் வெட்டிக் கொல்லும்படி உத்தரவிட்டான். அதன்படி அனைவரும் கொல்லப்பட்டனர். இதனை கேள்விப்பட்ட முகலாய சாம்ராஜ்யத்தினர் சண்ட துத்தம்மாவிடம் போர் தொடுத்தனர். இதனால் அரக்கான் மன்னனின் கட்டுப்பாட்டில் இருந்த சித்தாங்கொங்க் பகுதியை முகலாயர்களிடம் இழக்க நேரிட்டது. இன்றும் சித்தாங்கொங்க் பங்களாதேஷ் நாட்டின் ஒரு பகுதியாகவே இருக்கிறது. இன்றும் சித்தாங்கொங்க்கில் வாழும் பெரும்பகுதியினர் பர்மிய மொழி பேசும் பௌத்தர்களாகவே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
சுஜாவின் மகள் கிடைக்காததினாலும் சித்தாங்கொங்க் பகுதியை பறிகொடுத்ததினாலும் ஏற்பட்ட அவமானத்தினால் மன்னர் சண்ட துத்தம்மா பழிவாங்கும் முகமாக வரலாறை தவறாக எழுதினான். ரோஹிங்யா முஸ்லிம்கள் மிகத் தாழ்த்தப்பட்ட சாதியென்றும் பௌத்தத்தின் தூய்மைக்கு களங்கம் ஏற்படுத்தக்கூடியவர்கள் என்றும் மியன்மாரை சூறையாடுகின்றவர்கள் என்றும் உள்ளூர் மக்களை ஏமாற்றுகின்றவர்கள் என்றும் குறிப்பிட்டான். இந்த விடயங்கள் மியன்மாரின் தேசிய வரலாற்று கையேட்டில் காணப்படுகிறது.
1660 களில் இருந்து இன்றுவரை பௌத்த மக்கள் மன்னன் சண்ட துத்தம்மாவின் பொய்ச் செய்திகளை கேட்டு ரோஹிங்யா முஸ்லிம்களை கொடுமைப்படுத்தி வருகின்றனர். அன்று தொடக்கம் இன்றுவரை திட்டமிட்டு இனச்சுத்திகரிப்பில் மியன்மார் பௌத்தர்கள் ஈவிரக்கமின்றி ஈடுபடுகின்றனர். 1871, 1911, 1990, 1996, 2014, இன்றும் பெரிய அளவில் அரச, இராணுவ ஆதரவில் மியன்மார் பௌத்தர்கள் பௌத்தத்திற்கு அப்பாற்பட்ட விடயங்களில் கொடூரமாக ஈடுபடுகின்றனர். புத்த பெருமான் இன்றிருந்தால் கண்ணீர் வடிப்பார். அந்தளவிற்கு கொடூரமான முறையில் இனச்சுத்திகரிப்பு அரங்கேறுகிறது. இதுவரை இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள். அயல்நாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். தப்பியோடும்போது பலர் கடலில் வீழ்ந்து இறந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான வீடுகள் எரிக்கப்பட்டிருக்கின்றன. பாலியல் வல்லுறவு, பள்ளிவாசல்களை அகற்றுதல், சொத்துக்களை சூறையாடுதல் தொடர்ந்தவண்ணம் உள்ளன. இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்கிறார் சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஜனநாயக போராளியென மேற்கு நாடுகளால் புகழப்பட்ட ஆன்சாங்க் சூகி . இவர் சமாதானத்திற்கான நோபல் பரிசு பெறுவதற்கு தகுதியானவரா என உலகம் ஆச்சரியமாக கருதுகிறது.
பௌத்த மக்களுக்கு மனிதாபிமானத்தை எடுத்துச்சொல்ல வேண்டிய அசின் விராது தேரர் இனச்சுத்திகரிப்புக்கு தலைமை தாங்குகிறார். வேலியே பயிரை மேய்கிறது. ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது அன்று தொடக்கம் இன்றுவரை திட்டமிட்ட படுகொலை, பாலியல் வல்லுறவு, சொத்துக்கள் சூறையாடல், சமய விடயங்களில் இடையூறு, பல அக்கிரமங்கள் அரங்கேறியதால் உலகில் பர்மாவால் பௌத்த மதத்திற்கு இழுக்கு ஏற்பட்டது. உலகின் உயர்பீட பௌத்த தேரர்களின் ஆலோசனைக்கமைய பர்மாவின் பெயரை 1989 இல் மியன்மார் என மாற்றிக்கொண்டனர். குற்றம் செய்தவர்கள், பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் தங்களது பெயரை மாற்றி நாட்டில் வலம் வருவார்கள். அதேபோன்று ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது அடாவடித்தனம் புரிந்த பர்மா தனது பெயரை மியன்மார் என மாற்றி உலகில் வலம் வருகிறது. தொடர்ந்தும் இனச்சுத்திகரிப்பு அரங்கேறுவதால் மியன்மாரின் பெயரும் மாற்றமடையும் நிலைமை தோன்றுகிறது.
அமெரிக்காவின் ஜனாதிபதி ஒபாமா மியன்மார் நாட்டிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். சர்வதேசளவில் மக்கள் எதிர்பார்த்த விடயம் என்னவெனில் மனித உரிமை மீறல்கள், ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலைகள் பற்றி அரசுடன் கதைத்து அழுத்தம் கொடுப்பார் என்பதே. ஆனால் பராக் ஒபாமாவோ மண்ணை வாரிவிட்டார். மியன்மாரில் உள்ள இயற்கை வளங்களுக்காக வரிந்துகட்டும் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் போட்டியாக மூன்றாம் சக்தியாகவே ஒபாமா அங்கு சென்றார்.
மியன்மாரில் என்ன நடக்கிறது என்பது உலகம் அறிந்த விடயம். அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஏன் அமைதி காக்கின்றன? பாதிக்கப்படுபவர்கள் முஸ்லிம்கள் என்பதனாலேயா? சர்வதேச மன்னிப்புச்சபை, ஆசிய மனித உரிமை கண்காணிப்பகம் ஆகியன ரோஹிங்யா முஸ்லிம்களின் பாதிப்புகள் பற்றி உருப்படியான விடயங்களில் ஈடுபடாமல் இருப்பது ஏன்?
உலகில் 65 முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளையும் 160 கோடி மக்களையும் கொண்ட இஸ்லாமிய உலகு மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம்கள் பற்றி இதுவரை உருப்படியான நடவடிக்கைகள் எடுத்ததாகத் தெரியவில்லை. அனைத்து 65 நாடுகளும் ஒன்றுசேர்ந்து ரோஹிங்யா முஸ்லிம்கள் மீண்டும் குடியுரிமை பெற்று மியன்மாரில் நிம்மதியாக சுயமரியாதையுடன் தங்களது வாழ்க்கையை வழிசமைக்க உதவவேண்டும் என்பதே உலக முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாகும். அல்லாஹ் அருள் செய்வானாக! ஆமீன்!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக