மீன் வடை
அயிரை மீன் – 3
வெங்காயம் – கிலோ.
பச்சை மிளகாய் – 7
முட்டை – 2
கருவேப்பிலை
எண்ணெய் – தேவையான அளவு
எப்படி செய்வது?
மீன்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் அவற்றை வேக வைத்து, முட்களை நீக்க வேண்டும். அதன் பின்னர் மீனை உதிர்த்து வைக்க வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி, மிளகாயை சிறியதாக நறுக்கி கருவேப்பிலை, முட்டையை அதில் சேர்க்க வேண்டும். அதனுடன் மீன்களை போட்டு வடை மாதிரி தட்டி எண்ணையில் போட்டு பொரித்து எடுத்தால் சுட சுட மீன் வடை தயார். இதனை செய்ய 25 நிமிடங்கள் ஆகும்.............
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
ஆம்பூர் மட்டன் பிரியாணி
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி – ஒரு கிலோ
மட்டன் – ஒரு கிலோ
வெங்காயம் – அரை கிலோ
பழுத்த தக்காளி – அரை கிலோ
பழுத்த சிவந்த பச்சை மிளகாய் – ஆறு
காஷ்மீரி சில்லி (அ) மிளகாய் தூள் – இரண்டு தேக்கரண்டி
தயிர் – ஒரு கோப்பை
கொத்துமல்லித்தழை – ஒரு கொத்து
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
புதினா – ஒரு கொத்து
பட்டை, ஏலம், கிராம்பு – தலா இரண்டு
பிரியாணி இலை – இரண்டு
உப்பு தூள் – தேவையான அளவு
எண்ணெய் – 200 மில்லி
நெய் – 50 மில்லி
எலுமிச்சை -அரை பழம்
செய்முறை
1. அரிசியை லேசாக களைந்து ஊற வைக்கவும்.
2. மட்டனை கொழுப்பெடுத்து 5 முறை கழுவி தண்ணீரை வடிக்கவும்.
3. வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஈரம் போக காய வைத்து எண்ணெய் ஊற்றி அதில் பட்டை,ஏலம், கிராம்பு , பிரியாணி இலை போட்டு வெடிக்க விட்டு வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து சேர்த்து நன்கு வதக்கவும்.
4. வதக்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி மிளகாய் தூள், பழுத்த பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
5. பிறகு புதினா, தயிர் சேர்க்கவும், அடுத்து தக்காளியும் கொத்துமல்லியும் சேர்க்கவும்.
6. அடுத்து உப்பு, மட்டன் சேர்த்து நன்கு கிளறி, தீயின் தனலை சிம்மில் வைத்து மட்டனை வேக விடவும்.
7. மட்டன் வெந்து கூட்டு கிரேவி பதம் வரும் வரை வேக விடவும்.
8. மட்டன்அதிகமாக இருந்தால் அதற்கு தகுந்தாற் போல் தண்ணீர் ஊற்றவும். ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்னேகால் வீதம் தண்ணீர் அளந்து ஊற்றவும்.
9. தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை களைந்து போட்டு கொதிக்கவிட்டு கடைசியாக சிறிது நெய், லெமன் பிழிந்து, பாதி அளவு வற்றும் போது அடுப்பின் மேல் தம் போடும் கருவியை வைத்து சாப்பாடு சட்டியின் மேல் கனமான பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் தம்மில் விடவும்.
10. பிறகு லேசாக மேலிருந்து கீழாக சாதம் குழையாமல் பிரட்டி எடுக்கவும்.
11. சுவையான ஆம்பூர் மட்டன் பிரியாணி ரெடி.
குறிப்பு
1. இதற்கு தொட்டு கொள்ள தயிர் பச்சடி, (பிரட் ஹல்வா, தக்காளி ஹல்வா, பீட்ரூட் ஹல்வா, கேரட் ஹல்வா) ஏதேனும் ஒரு ஸ்வீட், எண்ணெய் கத்திரிக்காயுடன் சாப்பிடலாம்.
2. பிரியாணியை வடித்து தட்டியும் செய்யலாம், குக்கரிலும் செய்யலாம். லேயராக தம் போட்டும் செய்யலாம்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
மீன் கட்லட்
தேவையான பொருட்கள்
மீன் - 1/2 கிலோ
உருளைக்கிழங்கு - 2
சி-வெங்காயம் – 100 கிராம்
பச்சைமிளகாய் – 5
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
இஞ்சி,பூண்டுவிழுது – 1/4 ஸ்பூன்
மல்லி இலை -1 கொத்து
புதினா இலை -1 கொத்து
ரஸ்க் –4 (தேவைக்கு ஏற்ப்ப)
முட்டை – 4 (தேவைக்கு ஏற்ப்ப)
எலுமிச்சை சாறு – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
மீன், உருளைக்கிழங்கு இரண்டையும் ஆவியில் வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெயை விட்டு வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி,பூண்டு விழுது, மல்லி இலை, புதினா இலை ஆகியவற்றை வதக்கி மீன் கலவையில் சேர்க்கவும்.
அத்துடன் மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
முட்டையை (வெள்ளைக்கரு மட்டும்) ஒரு வாய் அகன்றபாத்திரத்தில் உடைத்து ஊற்றி நன்கு அடித்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெயை விட்டு நன்கு காய்ந்த்தும் மீன் கலவையை சின்ன சின்ன உருண்டைகளாக நமக்கு பிடித்த வடிவில் தட்டி முட்டையில் தோய்த்து ரஸ்க் தூளில் புரட்டி பொரித்தெடுக்கவும்
அயிரை மீன் – 3
வெங்காயம் – கிலோ.
பச்சை மிளகாய் – 7
முட்டை – 2
கருவேப்பிலை
எண்ணெய் – தேவையான அளவு
எப்படி செய்வது?
மீன்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் அவற்றை வேக வைத்து, முட்களை நீக்க வேண்டும். அதன் பின்னர் மீனை உதிர்த்து வைக்க வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி, மிளகாயை சிறியதாக நறுக்கி கருவேப்பிலை, முட்டையை அதில் சேர்க்க வேண்டும். அதனுடன் மீன்களை போட்டு வடை மாதிரி தட்டி எண்ணையில் போட்டு பொரித்து எடுத்தால் சுட சுட மீன் வடை தயார். இதனை செய்ய 25 நிமிடங்கள் ஆகும்.............
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
ஆம்பூர் மட்டன் பிரியாணி
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி – ஒரு கிலோ
மட்டன் – ஒரு கிலோ
வெங்காயம் – அரை கிலோ
பழுத்த தக்காளி – அரை கிலோ
பழுத்த சிவந்த பச்சை மிளகாய் – ஆறு
காஷ்மீரி சில்லி (அ) மிளகாய் தூள் – இரண்டு தேக்கரண்டி
தயிர் – ஒரு கோப்பை
கொத்துமல்லித்தழை – ஒரு கொத்து
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
புதினா – ஒரு கொத்து
பட்டை, ஏலம், கிராம்பு – தலா இரண்டு
பிரியாணி இலை – இரண்டு
உப்பு தூள் – தேவையான அளவு
எண்ணெய் – 200 மில்லி
நெய் – 50 மில்லி
எலுமிச்சை -அரை பழம்
செய்முறை
1. அரிசியை லேசாக களைந்து ஊற வைக்கவும்.
2. மட்டனை கொழுப்பெடுத்து 5 முறை கழுவி தண்ணீரை வடிக்கவும்.
3. வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஈரம் போக காய வைத்து எண்ணெய் ஊற்றி அதில் பட்டை,ஏலம், கிராம்பு , பிரியாணி இலை போட்டு வெடிக்க விட்டு வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து சேர்த்து நன்கு வதக்கவும்.
4. வதக்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி மிளகாய் தூள், பழுத்த பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
5. பிறகு புதினா, தயிர் சேர்க்கவும், அடுத்து தக்காளியும் கொத்துமல்லியும் சேர்க்கவும்.
6. அடுத்து உப்பு, மட்டன் சேர்த்து நன்கு கிளறி, தீயின் தனலை சிம்மில் வைத்து மட்டனை வேக விடவும்.
7. மட்டன் வெந்து கூட்டு கிரேவி பதம் வரும் வரை வேக விடவும்.
8. மட்டன்அதிகமாக இருந்தால் அதற்கு தகுந்தாற் போல் தண்ணீர் ஊற்றவும். ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்னேகால் வீதம் தண்ணீர் அளந்து ஊற்றவும்.
9. தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை களைந்து போட்டு கொதிக்கவிட்டு கடைசியாக சிறிது நெய், லெமன் பிழிந்து, பாதி அளவு வற்றும் போது அடுப்பின் மேல் தம் போடும் கருவியை வைத்து சாப்பாடு சட்டியின் மேல் கனமான பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் தம்மில் விடவும்.
10. பிறகு லேசாக மேலிருந்து கீழாக சாதம் குழையாமல் பிரட்டி எடுக்கவும்.
11. சுவையான ஆம்பூர் மட்டன் பிரியாணி ரெடி.
குறிப்பு
1. இதற்கு தொட்டு கொள்ள தயிர் பச்சடி, (பிரட் ஹல்வா, தக்காளி ஹல்வா, பீட்ரூட் ஹல்வா, கேரட் ஹல்வா) ஏதேனும் ஒரு ஸ்வீட், எண்ணெய் கத்திரிக்காயுடன் சாப்பிடலாம்.
2. பிரியாணியை வடித்து தட்டியும் செய்யலாம், குக்கரிலும் செய்யலாம். லேயராக தம் போட்டும் செய்யலாம்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
மீன் கட்லட்
தேவையான பொருட்கள்
மீன் - 1/2 கிலோ
உருளைக்கிழங்கு - 2
சி-வெங்காயம் – 100 கிராம்
பச்சைமிளகாய் – 5
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
இஞ்சி,பூண்டுவிழுது – 1/4 ஸ்பூன்
மல்லி இலை -1 கொத்து
புதினா இலை -1 கொத்து
ரஸ்க் –4 (தேவைக்கு ஏற்ப்ப)
முட்டை – 4 (தேவைக்கு ஏற்ப்ப)
எலுமிச்சை சாறு – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
மீன், உருளைக்கிழங்கு இரண்டையும் ஆவியில் வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெயை விட்டு வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி,பூண்டு விழுது, மல்லி இலை, புதினா இலை ஆகியவற்றை வதக்கி மீன் கலவையில் சேர்க்கவும்.
அத்துடன் மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
முட்டையை (வெள்ளைக்கரு மட்டும்) ஒரு வாய் அகன்றபாத்திரத்தில் உடைத்து ஊற்றி நன்கு அடித்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெயை விட்டு நன்கு காய்ந்த்தும் மீன் கலவையை சின்ன சின்ன உருண்டைகளாக நமக்கு பிடித்த வடிவில் தட்டி முட்டையில் தோய்த்து ரஸ்க் தூளில் புரட்டி பொரித்தெடுக்கவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக