கையில் இதர ரேகைகள் பிழைபட்டிருந்தாலும் ஐக்கிய ரேகை சிறப்பாக அமைந்திருக்கக் காணப்பட்டால் மாத்திரமே பரிகாரங்கள் செய்வதால் பலன் கிடைக்கும்.
புத்தி ஜீவிகள் என்றொரு சாரார் அல்லது சாதியார் இன்று நம்மிடையே தோன்றியுள்ளனர். இவர்கள் புத்திக்கு மட்டுமே வேலை கொடுத்து வாழ்க்கையை நடத்துபவர்கள். அன்பு, பாசம், புரிந்துணர்வு, தியாகம் என்பதெல்லாம் இவர்களது அகராதியில் கிடையாது போல் தோன்றுகிறது. ஏனென்றால் ஒன்றுமில்லாதவாறு அதிகரித்துள்ள இந்தச் சாதியாரின் நடவடிக்கைகளால் தான் இன்று நம் சமூகத்தில் பிரிவு, பிளவு, சண்டை, யுத்தம் போன்றவையெல்லாம் அதிகமதிகமாய்த் தோன்றியுள்ளன.
முன்பு யுத்தம் என்பது அபூர்வமான ஒரு விடயம். கொலை என்பது எப்போதாவது ஒரு முறை நடந்து சனங்களால் நெடுநாட்களுக்கு வியப்போகும் அதிர்ச்சியோடும் பேசப்படும் மற்றொரு விடயம். கல்வியும் நாகரிகமும் பெருகி, விஞ்ஞானம் பல விந்தைகள் புரிந்துள்ள இந்தக் காலத்தில் யுத்தமும் கொலையும் வன்முறையும் தினம் தினம் நாம் பார்க்கிற கேள்விப்படுகிற விடயங்களாகி விட்டன. இதேதொடர்பில் கல்வியும் நாகரிகமும் ஆண், பெண்களிடையே ஏற்படுத்தியுள்ள இயல்பை மீறிய இறுமாப்பும், ‘நான்’ என்ற கர்வமுமே காலங்காலமாக நாம் கட்டிக்காத்துவந்த ஒழுக்கம், பண்பாடு, கலாசாரங்களையும் மீறி அன்பை முதலாக்கி புரிந்துணர்வில் கொண்டுபோகக் கூடிய மணவாழ்வில் பிணக்கையும் பிளவுகளையும் ஏற்படுத்த முயல்கின்றனர்.
இந்த விடயத்தை விவகாரமாக்கி விவாதம் புரிவது இக்கட்டுரையின் நோக்கத்திற்கு பொருத்தமாயிராது. எனவே பொருள் முதல்வாதம், அறிவியல் வாதங்களை முன்வைத்து வாழ்க்கையை நோக்கும் புத்திஜீவிகளை அருள் அல்லது அன்புமுதல் வாதத்தை முன்வைத்து உங்கள் குடும்பத்தைப் பாருங்கள் என்று கூறவிழைகிறேன்.
தம்பதிகளிடையே விரிசலை ஏற்படுத்தும் ரேகைக்குறிகள் சிலவற்றை இக்கட்டுரையில் அறிமுகப்படுத்துவது நல்லதென்று நினைக்கிறேன். எதிர்காலத்தில் ஒருவருக்கு நேரக்கூடிய நன்மை தீமைகளை சோதிடமூலம் முன்கூட்டியே அறிவது அல்லது அறிவிப்பது அஞ்சி நடுங்கி நாளும் பொழுதும் நலிந்து போவதற்கல்ல. நன்மையை வரவேற்பது போல தீமையையும் அதற்கேற்ப முன்னெச்சரிக்கையுடன் எதிர்கொள்ள எம்மைத்தயார் படுத்துவதற்கே வழிபாடுகளால் பரிகாரங்களால் அவற்றைக் கூடியவரை தவிர்ப்பதற்கே!
ஒவ்வொருவர் கையிலும் பற்பல விதங்களில் ரேகை அமைந்திருப்பதால் ஒரு ரேகைக்கும் மற்றொரு ரேகைக்குமுள்ள சம்பந்தத்தைப் பொறுத்து (Combination) பலன் மாறுபாடு அடையலாம். நல்லதொரு ஐக்கிய ரேகை அமைந்துள்ள ஆண் அல்லது பெண்ணின் கையில் (A) இருதயரேகை சனி மேட்டுக்குக் கீழே இரு கிளைகளாகப் பிரிந்து அதிலொரு கிளை புத்திரேகையை நோக்கி வளைந்து காணப்பட்டாலும்(B) மற்றொரு கிளை குருமேட்டை அடைந்தாலும் (C) புத்திரேகையிலிருந்து ஒரு கிளை தோன்றி ஆயுள் ரேகையைத் தாண்டி செவ்வாய் மேட்டை அடைந்தாலும் (D) இருதய புத்திரேகைகளுக்கிடையில் இடைவெளி மிகக்குறுகிக் காணப்பட்டாலும் மனமொத்து மங்களகரமாக நடந்த திருமணத்திற்குப் பிறகு சில ஆண்டுகளோ சில மாதங்களோ சென்ற பின்னர் தம்பதிகளிடையே திடீரென சில கருத்து முரண்பாடுகள் தோன்றி கணவனும் மனைவியும் பிரிந்து வாழ வேண்டிய நிலை அல்லது மீண்டும் இணையவே முடியாதபடி பிளவு ஏற்படுகிற நிலை உருவாகி பெருத்த மனக்கவலையைக் கொடுக்கும்.
இத்தகைய பிரிவினையை மேற்சொன்ன ரேகை அமைப்பு முன் கூட்டியே காட்டிவிடும். ஏனெனில் (1) நல்லதொரு ஐக்கிய ரேகை அமைப்பால் நல்லதொரு இடத்தில் நற்குணமுள்ள ஒருவரை மணம் முடிக்கும் வாய்ப்பு ஏற்படும். (2) சனி மேட்டுக்குக் கீழே இருதய ரேகை கிளையாக பிரிந்திருப்பதால் இணைந்து வாழ்ந்த அத்தம்பதிகளிடையே விதிவசத்தால் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிகிற சூழ்நிலை ஏற்படும் (3) புத்திரேகையிலிருந்து ஒரு கிளை ரேகை தோன்றி ஆயுள்ரேகையை வெட்டிக் கொண்டு செவ்வாய் மேட்டிற்குச் செல்வதால் (D) நன்கு ஆலோசித்து பலரறியவும் வாழ்த்தவும் திருமணம் செய்துகொண்டு அன்புடன் வாழ்ந்து வந்த அந்த வாழ்க்கையிலே ஆய்ந்தோய்ந்து பாராத அவசர புத்திகாரணமாக பிரச்சினை உருவாகி பிரிவினை ஏற்படுகிற நிலையும் உண்டாகும். (4) இருதய புத்திரேகைகள் ஒன்றையொன்று நெருங்கிச் செல்வதால் சுயநலம் சந்தேகம் குறுகிய புத்தி போன்றவைகளால் தாம்பத்தியத்திற்கே மேன்மைதரும் பரஸ்பரம் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மைக்கு இடம்கொடாமல் பிரிவினைக்கு வித்திடும் வாய்ப்பு உண்டாகும்.
இந்தப்பிரிவினைக்கு பரிகாரம் இல்லையா? ஏன் இல்லை?
பாசமானாலும் நட்பானாலும் காதலானாலும் பிரிவினை ஏற்படுவதற்கு முதற்காரணம் நம்முள்ளே நம்மை மீறி எழுகின்ற கோபதாப உணர்ச்சிகளேயாகும். நமக்குள்ள அறிவாற்றலால் சிந்திக்கும் திறமையால் பொறுமையால் கோபதாபங்களை ஆத்திர அவசரங்களை கட்டுப்படுத்தி ஆற அமர சிந்தித்துப் பார்க்க முடிந்தால் இது போன்ற எவ்வளவோ குடும்பப் பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.
மணவாழ்வில் வருகிற பிரச்சினைகளுக்கெல்லாம் செவ்வாய்க் கிரகத்தையும் கதிர்காமக்கந்தனையும் அர்ச்சனைசெய்து ஆராதித்தால் பரிகாரம் கிடைக்குமென சோதிடர்கள் கூறுகின்றனர். அத்துடன் விதிவசத்தால் ஏற்படுகிற சங்கடங்களுக்கு காரணமான சனிபகவானையும் அறிவாற்றலைத் தருகின்ற குருபகவானையும் கூட கிரகப்பிரீதி செய்து வழிபடுவதால் தம்பதிகளிடையே பிரிவு நீங்கி ஒற்றுமை ஓங்க வழியேற்படுமென அவர்கள் மேலும் கூறுகின்றனர்.
இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது யாதெனில் இதர ரேகைகள் பிழைபட்டிருந்தாலும் சின்னி விரலின் கீழுள்ள புதன்மேட்டின் பக்கவாட்டில் சிறு ஒற்றைக் கோடாய் அமைந்துள்ள ஐக்கிய ரேகை சிறப்பாக அமைந்திருக்கக் காணப்பட்டால் (A) மாத்திரமே பரிகாரங்கள் செய்வதால் பயன் கிடைக்கும் ஆனால் ஐக்கிய ரேகையிலும் குறைபாடு காணப்பட்டால் என்ன தான் பரிகாரங்கள் செய்தாலும் சரி பிரயத்தனங்கள் செய்தாலும் சரி பலனில்லாமல் போகும்.
இராஜயோகம்
உள்ளங்கையில் காணப்படும் பிரதான ரேகைகளான ஆயுள், புத்தி, இருதய ரேகைகள் ஒன்றையொன்று தொடாமல் விலகியிருந்தால் அத்தகையவருக்கு இராஜயோகம் ஏற்படும்.
இராஜயோகம் என்றால் அரசனாக முடிசூடிக்கொள்வது என்று அர்த்தமல்ல. தமக்கு இயல்பாகவே ஆர்வமுள்ள துறைகளில் அல்லது தான் ஆர்வத்துடன் ஈடுபடுகிற துறைகளில் முன்னேறி ஓர் அரசனுக்கு நிகரான அந்தஸ்தை பெறுவதாகும். உதாரணமாக அரசியலில் ஆர்வம் கொண்டு ஈடுபடுபவர் எம்.பியாக, அமைச்சராக காலகதியில் மாறுவார். வியாபாரத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுபவர், கம்பனிக்கு முதலாளியாக ஏற்றம் பெறுவார். உத்தியோகம் பார்ப்பவர் விரைவில் உயர் பதவியை அடைவார். ஓர் எழுத்தாளராயின் நாடளாவிய ரீதியில் பலராலும் புகழப்படுகிற ஒரு படைப்பாளியாக பரிமளிப்பார்.
அதேவேளை விதிரேகையும் (E) சூரியரேகையும் (F) ஆரோக்கிய ரேகையும் (G) மேற்படி இருதய, புத்தி, ஆயுள் ரேகைகளை தொட்டுக் கொண்டோ ஊடுருவியோ சென்றால் இராஜயோகத்துடன் நிபுணத்துவ யோகமும் ஏற்படும். இராஜயோகம் பெற்ற அரசியல்வாதிக்கு நிபுணத்துவ யோகமும் சேர்ந்தால் பல அமைச்சுக்களைப் பொறுப்பேற்று திறம்பட நிர்வகிப்பதும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டு தீர்க்கமான முடிவுகளை எடுப்பதும் இந்த ஆறு ரேகைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புபடுவதால் ஏற்படுகிற விளைவின் பயனாக அமையக் கூடியது.
ஒரு நடிகர் நடிப்பதோடு மாத்திரம் நில்லாமல் பாடியும் ஆடியும் இயக்கியும் இசையமைத்தும் பல்சுவை வேந்தனாக காட்சிதருவது உண்டல்லவா? அது மேற்படி ஆறு ரேகைகளும் இணைந்து முக்கோணமாவதால் உண்டாகிற அதிர்ஷ்டத்தினால் ஏற்படுவதாகும். இத்தகைய ரேகைகளின் அமைப்பால் ஏற்படுகிற முக்கோணக்குறி, சதுரக்குறி போன்றவைகளைக் கொண்டு ஒருவரின் திறமையை, ஆரோக்கிய நிலையை, செல்வச் செழிப்பை அளவிட்டுக் கூற முடியும். இந்த ரேகைகளுக்கிடையே ஏற்படுகின்ற வளைவு நெளிவுகள் மற்றும் செவ்வாய், சுக்கிர, சந்திர மேடுகளிலிருந்து வருகிற செல்வாக்கு ரேகைகளினால் ஏற்படுகிற முக்கோண, சதுர அமைப்புகள் ஆகியவைகளும் மேற்படி யோகங்கள் ஏற்பட அல்லது ஏற்படாமலிருக்க முக்கிய காரணங்களாக அமைகின்றன. ஆரோக்கிய ரேகையும் சூரியரேகையும் புத்திர ரேகையுடன் சேர்ந்து ஏற்படுத்துகின்ற முக்கோணக்குறியானது (H) அவ்விதம் கையில் அமைந்தவரை சிறந்த எழுத்தாளராக்குகிறது. அல்லது அவர் நடிப்புத்திறமையுடையவராக இருந்தால் சங்கீதப் புலமை மிக்கவராயிருந்தால் அத்துறைகளில் ஈடுபட்டுள்ள இதர கலைஞர்களை விட புகழ் பெறுவதற்கும் இது வகை செய்கிறது.
இத்தகைய அமைப்பின் மூலம் முக்கியமான மூன்று அம்சங்களை நாம் அறிந்து கொள்ள முடியும். 1. கலைத்துறையில் மேம்பாட்டை சூரிய ரேகையும் 2. சிறந்த முறையில் புகழடையும் விதமாக அந்தத் துறையில் ஆழ்ந்த புலமையை பெறத்தக்க அறிவினைத் தருகின்ற புத்திரேகையும் 3. அத்தகைய கலைஞர்கள் தங்களது தொழிலை வியாபார ரீதியில் செய்து பெரும்பொருளீட்டவும் எக்காலமும் நின்று நிலைக்கின்ற புகழைத் தருகின்ற நிலையை ஏற்படுத்தவும் காரணமான ஆரோக்கியரேகை எனப்பட்ட புதன் ரேகையும் ஒன்று கூடுவதன் மூலமே இந்நிலை உருவாகிறது. எவ்வித குற்றம் குறைகளுமில்லாமல் சீராகவும் நேராகவும் அமைந்த இத்தகைய முக்கோணத்தை உடையவர்கள் கண்டிப்பாக உன்னத நிலைக்கு வந்தே தீருவார்கள். இதனை “இராஜயோக முக்கோணம்” எனலாம்.
சுக்கிர மேட்டிலிருந்து வருகிற ஒரு செல்வாக்கு ரேகை இந்த முக்கோணத்திலுள்ள சூரிய ரேகையுடன் இணைந்தால் (J) நெருங்கிய உறவினர் அல்லது நண்பர் ஒருவரால் இந்த ரேகைக் குறியை உடைய நபர் இந்த இராஜயோகத்தை அடைகிறார் என்று பொருள். இப்படிப்பட்ட அமைப்பு ஒருவருக்கு இருந்தும் அவர் முன்னுக்கு வரவில்லை என்றால் அவர் முயற்சி செய்யும் அளவுக்கு வெற்றியை தருவதற்கு அவரது விதி ரேகை (E) சரியாக அமையவில்லை என்று பொருள் கொள்ள வேண்டும்.
திருவோணம்
புத்தி ஜீவிகள் என்றொரு சாரார் அல்லது சாதியார் இன்று நம்மிடையே தோன்றியுள்ளனர். இவர்கள் புத்திக்கு மட்டுமே வேலை கொடுத்து வாழ்க்கையை நடத்துபவர்கள். அன்பு, பாசம், புரிந்துணர்வு, தியாகம் என்பதெல்லாம் இவர்களது அகராதியில் கிடையாது போல் தோன்றுகிறது. ஏனென்றால் ஒன்றுமில்லாதவாறு அதிகரித்துள்ள இந்தச் சாதியாரின் நடவடிக்கைகளால் தான் இன்று நம் சமூகத்தில் பிரிவு, பிளவு, சண்டை, யுத்தம் போன்றவையெல்லாம் அதிகமதிகமாய்த் தோன்றியுள்ளன.
முன்பு யுத்தம் என்பது அபூர்வமான ஒரு விடயம். கொலை என்பது எப்போதாவது ஒரு முறை நடந்து சனங்களால் நெடுநாட்களுக்கு வியப்போகும் அதிர்ச்சியோடும் பேசப்படும் மற்றொரு விடயம். கல்வியும் நாகரிகமும் பெருகி, விஞ்ஞானம் பல விந்தைகள் புரிந்துள்ள இந்தக் காலத்தில் யுத்தமும் கொலையும் வன்முறையும் தினம் தினம் நாம் பார்க்கிற கேள்விப்படுகிற விடயங்களாகி விட்டன. இதேதொடர்பில் கல்வியும் நாகரிகமும் ஆண், பெண்களிடையே ஏற்படுத்தியுள்ள இயல்பை மீறிய இறுமாப்பும், ‘நான்’ என்ற கர்வமுமே காலங்காலமாக நாம் கட்டிக்காத்துவந்த ஒழுக்கம், பண்பாடு, கலாசாரங்களையும் மீறி அன்பை முதலாக்கி புரிந்துணர்வில் கொண்டுபோகக் கூடிய மணவாழ்வில் பிணக்கையும் பிளவுகளையும் ஏற்படுத்த முயல்கின்றனர்.
இந்த விடயத்தை விவகாரமாக்கி விவாதம் புரிவது இக்கட்டுரையின் நோக்கத்திற்கு பொருத்தமாயிராது. எனவே பொருள் முதல்வாதம், அறிவியல் வாதங்களை முன்வைத்து வாழ்க்கையை நோக்கும் புத்திஜீவிகளை அருள் அல்லது அன்புமுதல் வாதத்தை முன்வைத்து உங்கள் குடும்பத்தைப் பாருங்கள் என்று கூறவிழைகிறேன்.
தம்பதிகளிடையே விரிசலை ஏற்படுத்தும் ரேகைக்குறிகள் சிலவற்றை இக்கட்டுரையில் அறிமுகப்படுத்துவது நல்லதென்று நினைக்கிறேன். எதிர்காலத்தில் ஒருவருக்கு நேரக்கூடிய நன்மை தீமைகளை சோதிடமூலம் முன்கூட்டியே அறிவது அல்லது அறிவிப்பது அஞ்சி நடுங்கி நாளும் பொழுதும் நலிந்து போவதற்கல்ல. நன்மையை வரவேற்பது போல தீமையையும் அதற்கேற்ப முன்னெச்சரிக்கையுடன் எதிர்கொள்ள எம்மைத்தயார் படுத்துவதற்கே வழிபாடுகளால் பரிகாரங்களால் அவற்றைக் கூடியவரை தவிர்ப்பதற்கே!
ஒவ்வொருவர் கையிலும் பற்பல விதங்களில் ரேகை அமைந்திருப்பதால் ஒரு ரேகைக்கும் மற்றொரு ரேகைக்குமுள்ள சம்பந்தத்தைப் பொறுத்து (Combination) பலன் மாறுபாடு அடையலாம். நல்லதொரு ஐக்கிய ரேகை அமைந்துள்ள ஆண் அல்லது பெண்ணின் கையில் (A) இருதயரேகை சனி மேட்டுக்குக் கீழே இரு கிளைகளாகப் பிரிந்து அதிலொரு கிளை புத்திரேகையை நோக்கி வளைந்து காணப்பட்டாலும்(B) மற்றொரு கிளை குருமேட்டை அடைந்தாலும் (C) புத்திரேகையிலிருந்து ஒரு கிளை தோன்றி ஆயுள் ரேகையைத் தாண்டி செவ்வாய் மேட்டை அடைந்தாலும் (D) இருதய புத்திரேகைகளுக்கிடையில் இடைவெளி மிகக்குறுகிக் காணப்பட்டாலும் மனமொத்து மங்களகரமாக நடந்த திருமணத்திற்குப் பிறகு சில ஆண்டுகளோ சில மாதங்களோ சென்ற பின்னர் தம்பதிகளிடையே திடீரென சில கருத்து முரண்பாடுகள் தோன்றி கணவனும் மனைவியும் பிரிந்து வாழ வேண்டிய நிலை அல்லது மீண்டும் இணையவே முடியாதபடி பிளவு ஏற்படுகிற நிலை உருவாகி பெருத்த மனக்கவலையைக் கொடுக்கும்.
இத்தகைய பிரிவினையை மேற்சொன்ன ரேகை அமைப்பு முன் கூட்டியே காட்டிவிடும். ஏனெனில் (1) நல்லதொரு ஐக்கிய ரேகை அமைப்பால் நல்லதொரு இடத்தில் நற்குணமுள்ள ஒருவரை மணம் முடிக்கும் வாய்ப்பு ஏற்படும். (2) சனி மேட்டுக்குக் கீழே இருதய ரேகை கிளையாக பிரிந்திருப்பதால் இணைந்து வாழ்ந்த அத்தம்பதிகளிடையே விதிவசத்தால் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிகிற சூழ்நிலை ஏற்படும் (3) புத்திரேகையிலிருந்து ஒரு கிளை ரேகை தோன்றி ஆயுள்ரேகையை வெட்டிக் கொண்டு செவ்வாய் மேட்டிற்குச் செல்வதால் (D) நன்கு ஆலோசித்து பலரறியவும் வாழ்த்தவும் திருமணம் செய்துகொண்டு அன்புடன் வாழ்ந்து வந்த அந்த வாழ்க்கையிலே ஆய்ந்தோய்ந்து பாராத அவசர புத்திகாரணமாக பிரச்சினை உருவாகி பிரிவினை ஏற்படுகிற நிலையும் உண்டாகும். (4) இருதய புத்திரேகைகள் ஒன்றையொன்று நெருங்கிச் செல்வதால் சுயநலம் சந்தேகம் குறுகிய புத்தி போன்றவைகளால் தாம்பத்தியத்திற்கே மேன்மைதரும் பரஸ்பரம் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மைக்கு இடம்கொடாமல் பிரிவினைக்கு வித்திடும் வாய்ப்பு உண்டாகும்.
இந்தப்பிரிவினைக்கு பரிகாரம் இல்லையா? ஏன் இல்லை?
பாசமானாலும் நட்பானாலும் காதலானாலும் பிரிவினை ஏற்படுவதற்கு முதற்காரணம் நம்முள்ளே நம்மை மீறி எழுகின்ற கோபதாப உணர்ச்சிகளேயாகும். நமக்குள்ள அறிவாற்றலால் சிந்திக்கும் திறமையால் பொறுமையால் கோபதாபங்களை ஆத்திர அவசரங்களை கட்டுப்படுத்தி ஆற அமர சிந்தித்துப் பார்க்க முடிந்தால் இது போன்ற எவ்வளவோ குடும்பப் பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.
மணவாழ்வில் வருகிற பிரச்சினைகளுக்கெல்லாம் செவ்வாய்க் கிரகத்தையும் கதிர்காமக்கந்தனையும் அர்ச்சனைசெய்து ஆராதித்தால் பரிகாரம் கிடைக்குமென சோதிடர்கள் கூறுகின்றனர். அத்துடன் விதிவசத்தால் ஏற்படுகிற சங்கடங்களுக்கு காரணமான சனிபகவானையும் அறிவாற்றலைத் தருகின்ற குருபகவானையும் கூட கிரகப்பிரீதி செய்து வழிபடுவதால் தம்பதிகளிடையே பிரிவு நீங்கி ஒற்றுமை ஓங்க வழியேற்படுமென அவர்கள் மேலும் கூறுகின்றனர்.
இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது யாதெனில் இதர ரேகைகள் பிழைபட்டிருந்தாலும் சின்னி விரலின் கீழுள்ள புதன்மேட்டின் பக்கவாட்டில் சிறு ஒற்றைக் கோடாய் அமைந்துள்ள ஐக்கிய ரேகை சிறப்பாக அமைந்திருக்கக் காணப்பட்டால் (A) மாத்திரமே பரிகாரங்கள் செய்வதால் பயன் கிடைக்கும் ஆனால் ஐக்கிய ரேகையிலும் குறைபாடு காணப்பட்டால் என்ன தான் பரிகாரங்கள் செய்தாலும் சரி பிரயத்தனங்கள் செய்தாலும் சரி பலனில்லாமல் போகும்.
இராஜயோகம்
உள்ளங்கையில் காணப்படும் பிரதான ரேகைகளான ஆயுள், புத்தி, இருதய ரேகைகள் ஒன்றையொன்று தொடாமல் விலகியிருந்தால் அத்தகையவருக்கு இராஜயோகம் ஏற்படும்.
இராஜயோகம் என்றால் அரசனாக முடிசூடிக்கொள்வது என்று அர்த்தமல்ல. தமக்கு இயல்பாகவே ஆர்வமுள்ள துறைகளில் அல்லது தான் ஆர்வத்துடன் ஈடுபடுகிற துறைகளில் முன்னேறி ஓர் அரசனுக்கு நிகரான அந்தஸ்தை பெறுவதாகும். உதாரணமாக அரசியலில் ஆர்வம் கொண்டு ஈடுபடுபவர் எம்.பியாக, அமைச்சராக காலகதியில் மாறுவார். வியாபாரத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுபவர், கம்பனிக்கு முதலாளியாக ஏற்றம் பெறுவார். உத்தியோகம் பார்ப்பவர் விரைவில் உயர் பதவியை அடைவார். ஓர் எழுத்தாளராயின் நாடளாவிய ரீதியில் பலராலும் புகழப்படுகிற ஒரு படைப்பாளியாக பரிமளிப்பார்.
அதேவேளை விதிரேகையும் (E) சூரியரேகையும் (F) ஆரோக்கிய ரேகையும் (G) மேற்படி இருதய, புத்தி, ஆயுள் ரேகைகளை தொட்டுக் கொண்டோ ஊடுருவியோ சென்றால் இராஜயோகத்துடன் நிபுணத்துவ யோகமும் ஏற்படும். இராஜயோகம் பெற்ற அரசியல்வாதிக்கு நிபுணத்துவ யோகமும் சேர்ந்தால் பல அமைச்சுக்களைப் பொறுப்பேற்று திறம்பட நிர்வகிப்பதும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டு தீர்க்கமான முடிவுகளை எடுப்பதும் இந்த ஆறு ரேகைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புபடுவதால் ஏற்படுகிற விளைவின் பயனாக அமையக் கூடியது.
ஒரு நடிகர் நடிப்பதோடு மாத்திரம் நில்லாமல் பாடியும் ஆடியும் இயக்கியும் இசையமைத்தும் பல்சுவை வேந்தனாக காட்சிதருவது உண்டல்லவா? அது மேற்படி ஆறு ரேகைகளும் இணைந்து முக்கோணமாவதால் உண்டாகிற அதிர்ஷ்டத்தினால் ஏற்படுவதாகும். இத்தகைய ரேகைகளின் அமைப்பால் ஏற்படுகிற முக்கோணக்குறி, சதுரக்குறி போன்றவைகளைக் கொண்டு ஒருவரின் திறமையை, ஆரோக்கிய நிலையை, செல்வச் செழிப்பை அளவிட்டுக் கூற முடியும். இந்த ரேகைகளுக்கிடையே ஏற்படுகின்ற வளைவு நெளிவுகள் மற்றும் செவ்வாய், சுக்கிர, சந்திர மேடுகளிலிருந்து வருகிற செல்வாக்கு ரேகைகளினால் ஏற்படுகிற முக்கோண, சதுர அமைப்புகள் ஆகியவைகளும் மேற்படி யோகங்கள் ஏற்பட அல்லது ஏற்படாமலிருக்க முக்கிய காரணங்களாக அமைகின்றன. ஆரோக்கிய ரேகையும் சூரியரேகையும் புத்திர ரேகையுடன் சேர்ந்து ஏற்படுத்துகின்ற முக்கோணக்குறியானது (H) அவ்விதம் கையில் அமைந்தவரை சிறந்த எழுத்தாளராக்குகிறது. அல்லது அவர் நடிப்புத்திறமையுடையவராக இருந்தால் சங்கீதப் புலமை மிக்கவராயிருந்தால் அத்துறைகளில் ஈடுபட்டுள்ள இதர கலைஞர்களை விட புகழ் பெறுவதற்கும் இது வகை செய்கிறது.
இத்தகைய அமைப்பின் மூலம் முக்கியமான மூன்று அம்சங்களை நாம் அறிந்து கொள்ள முடியும். 1. கலைத்துறையில் மேம்பாட்டை சூரிய ரேகையும் 2. சிறந்த முறையில் புகழடையும் விதமாக அந்தத் துறையில் ஆழ்ந்த புலமையை பெறத்தக்க அறிவினைத் தருகின்ற புத்திரேகையும் 3. அத்தகைய கலைஞர்கள் தங்களது தொழிலை வியாபார ரீதியில் செய்து பெரும்பொருளீட்டவும் எக்காலமும் நின்று நிலைக்கின்ற புகழைத் தருகின்ற நிலையை ஏற்படுத்தவும் காரணமான ஆரோக்கியரேகை எனப்பட்ட புதன் ரேகையும் ஒன்று கூடுவதன் மூலமே இந்நிலை உருவாகிறது. எவ்வித குற்றம் குறைகளுமில்லாமல் சீராகவும் நேராகவும் அமைந்த இத்தகைய முக்கோணத்தை உடையவர்கள் கண்டிப்பாக உன்னத நிலைக்கு வந்தே தீருவார்கள். இதனை “இராஜயோக முக்கோணம்” எனலாம்.
சுக்கிர மேட்டிலிருந்து வருகிற ஒரு செல்வாக்கு ரேகை இந்த முக்கோணத்திலுள்ள சூரிய ரேகையுடன் இணைந்தால் (J) நெருங்கிய உறவினர் அல்லது நண்பர் ஒருவரால் இந்த ரேகைக் குறியை உடைய நபர் இந்த இராஜயோகத்தை அடைகிறார் என்று பொருள். இப்படிப்பட்ட அமைப்பு ஒருவருக்கு இருந்தும் அவர் முன்னுக்கு வரவில்லை என்றால் அவர் முயற்சி செய்யும் அளவுக்கு வெற்றியை தருவதற்கு அவரது விதி ரேகை (E) சரியாக அமையவில்லை என்று பொருள் கொள்ள வேண்டும்.
திருவோணம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக