ஞாயிறு, 10 ஜூலை, 2016

"ஒரு கூர்வாளின் நிழலில்" சிங்­கள சமூ­கத்தை சுய பரி­சோ­தனை செய்ய வைத்­துள்­ளது தமி­ழி­னியின் கணவர் ம. ஜெயக்­கு­மரன் தெரி­விக்­கின்றார்

மறைந்த முன்னாள் தமிழ்ப்­போ­ரா­ளி­யான தமி­ழி­னியின் புத்­த­க­மா­னது சிங்­கள சமூ­கங்­க­ளி­டையே, சுய­ப­ரி­சோ­தனை செய்­வ­தற்­கான ஒரு எழுச்­சியை அவர்கள் மனங்­களில் உரு­வாக்­கி­ய­மையே இப்­புத்­த­கத்­திற்கு கிடைத்த வெற்றி என நான் நினைக்­கின்றேன். சிங்­க­ளத்தில் கிட்­டத்­தட்ட 6,000 பிர­தி­க­ளுக்கு மேல் விற்­ப­னை­யா­கி­யுள்­ளது. இப்­புத்­த­கத்தின் சிங்­கள வெளி­யீட்­டாளர் உண்­மை­யி­லேயே இப்­புத்­த­கத்­தினால் கிடைக்கும் நிதியை மஹ­ர­கமை புற்­றுநோய் வைத்­தி­ய­சா­லையில் சிறுவர் பிரி­விற்கு வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்­கின்றார். தமி­ழி­னியின் இறுதி விருப்­பமும் இது­வா­கவே இருந்­தது என தமி­ழி­னியின் கணவர் ம.ஜெயக்­கு­மரன் வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய விசேட செவ்­வி­யின்­போது தெரி­வித்தார்.
அவர் வழங்­கிய செவ்வி முழு­மை­யாகக் கீழே தரப்­ப­டு­கின்­றது.


கேள்வி: தமி­ழினி எழு­திய "ஒரு கூர்­வாளின் நிழலில்" என்ற புத்­த­கத்தின் விற்­பனை தற்­பொ­ழுது எவ்­வாறு இருக்­கின்­றது?

பதில்: தமி­ழி­னியின் புத்­த­கத்தை அர­சியல் வாதிகள் தொட்டு சாதா­ரண வாச­கர்கள் வரையில் பெரும்­பா­லா­ன­வர்கள் இல­வ­ச­மா­கவே வாங்க முனை­கின்­றார்கள்.
ஆனால், கிளி­நொச்­சியில் நடந்த அறி­முக விழாவில் நாங்கள் நிர்­ணய விலை­யிலும் பார்க்க அரை­வாசி விலைக்குத்தான் இப்­புத்­த­கத்தை விற்றோம். அங்கு மாத்­திரம் 30,000 ரூபா பெறு­ம­தி­யான புத்­த­கங்கள் விற்­கப்­பட்­டன. அப்­பி­ர­தேசம் முன்னாள் போரா­ளிகள் வாழ்ந்த பிர­தே­ச­மா­கையால் அதிக ஆர்­வத்­துடன் இப்­புத்­த­கங்­களை வாங்­கு­வ­தற்கு விரும்­பி­யி­ருப்­பார்கள் என நினைக்­கின்றேன்.

மேலும் மூன்று மாதங்­க­ளுக்­கொரு முறை என்ற கால இடை­வெ­ளியில் 30 புத்­த­கங்கள் என்ற வீதத்தில் அங்­குள்ள புத்­த­க­சா­லைக்கு வழங்­கி­ வந்தேன். ஆனால் விற்­ப­னைகள் மெது­வா­கவே இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன.

கேள்வி: இப்­புத்­தகம் இந்­தி­யா­விலும் வெளி­யி­டப்­பட்­டதா?

பதில்: ஆம். இந்­தி­யா­வி­லுள்ள காலச்­சு­வடு என்ற பதிப்­ப­கத்­தினால் இதே பெயரில் இரண்­டா­வது பதிப்­பாக இப்­புத்­தகம் வெளி­யி­டப்­பட்­டது. கிட்­டத்­தட்ட ஒரே காலப்­ப­கு­தியில் தான் வெளி­யி­டப்­பட்­டது. ஆனால் நாங்கள் வெளியிடுவதற்கு முன்னரே அவர்கள் வெளி­யிட்­டனர்.

கேள்வி: இப்­புத்­த­கத்­திற்கு இந்­தி­யாவில் எவ்­வா­றான கேள்வி உள்­ளது?

பதில்: இந்­தி­யாவில் சென்­னையில் இடம்­பெற்ற புத்­தகக் கண்­காட்­சியில் காலச்­சு­வடு பதிப்­ப­கத்தின் புத்­த­கங்­களின் அதி­கூ­டிய விற்­ப­னை­யான முதல் ஐந்து புனை­வுகள் அற்ற புத்­த­கங்­களில் இப்­புத்­தகம் முத­லா­மி­டத்தைப் பெற்­றுக்­கொண்­டது. இந்­தி­யாவில் இப்­புத்­த­கத்­திற்கு நல்ல கேள்வி உண்டு.

கேள்வி: இப்­புத்­த­கத்தின் தமிழ் மொழிப் பிர­தியின் விற்­ப­னை­யிலும் பார்க்க சிங்­களப் பிர­தியின் விற்­பனை எவ்­வா­றுள்­ளது?

பதில்: இப்­புத்­தகம் சிங்­கள சமூ­கங்கள், அமைப்­புக்கள் தரப்பில் பல தாக்­கங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. அண்­மையில் பாரா­ளு­மன்ற கட்­டடத் தொகு­திக்­க­ரு­கி­லுள்ள விகா­ரை­யொன்றில் வண.தேரர். ராகுல வல்­பொல தலை­மையில் இப்­புத்­த­கத்தைப் பற்­றிய விமர்­சனக் கூட்­ட­மொன்று இடம்­பெற்­றது.

அக்­கூட்­டத்தில் பலர் பங்­கு­பற்­றி­யி­ருந்­தார்கள். உண்­மையில் புத்­த­கத்தின் விமர்­ச­னங்­க­ளுக்­கப்பால் சென்று சிங்­கள சமூ­கங்­களின் குறை­பா­டுகள் மற்றும் இன­வா­தச்­சிந்­த­னைகள் தொடர்பில் அதிகம் கலந்­து­ரை­யா­டப்­பட்­டி­ருந்­தது. இப்­புத்­தக வெளி­யீடு இவ்­வா­றா­ன­தொரு கலந்­து­ரை­யா­டலை சிங்­களச் சமூ­கங்கள் மத்­தியில் ஏற்­ப­டுத்­தி­ய­தை­யிட்டு நான் மிகவும் சந்­தோ­ஷப்­ப­டு­கிறேன்.

மறைந்த முன்னாள் தமிழ்ப்­போ­ராளி தமி­ழி­னியின் புத்­த­க­மா­னது சிங்­கள சமூ­கங்­க­ளி­டையே தங்­களே தங்­களை சுய­ப­ரி­சோ­தனை செய்­வ­தற்­கான ஒரு எழுச்­சியை மக்கள் மனங்­களில் உரு­வாக்­கி­ய­மையே இப்­புத்­த­கத்­திற்கு கிடைத்த வெற்றி என நான் நினைக்­கின்றேன். சிங்­க­ளத்தில் கிட்­டத்­தட்ட 6,000 பிர­தி­க­ளுக்கும் மேல் விற்­ப­னை­யா­கி­யுள்­ளது.

இப்­புத்­த­கத்தின் சிங்­கள வெளி­யீட்­டாளர் உண்­மை­யி­லேயே இப்­புத்­த­கத்­தினால் கிடைக்கும் நிதியை மஹ­ர­கமை புற்­றுநோய் வைத்­தி­ய­சா­லையில் சிறுவர் பிரி­விற்கு வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்­கின்றார். தமி­ழி­னியின் இறுதி விருப்­பமும் இது­வா­கவே இருந்­தது.

கேள்வி: இப்­புத்­த­கத்தின் சிங்­கள மொழிப்­பெ­யர்ப்பு பற்றிக் கூற­மு­டி­யுமா?

பதில்: இந்தப் புத்­த­கத்தை பல்­க­லைக்­க­ழக சிரேஷ்ட விரி­வு­ரை­யா­ள­ரான விமல் சுவா­மி­நா­தனே மொழி­பெ­யர்ப்புச் செய்தார். மொழி­பெ­யர்ப்­ப­தற்­காக தமிழ்ப் புத்­த­கத்தை நானே அவ­ரிடம் ஒப்­ப­டைத்தேன். அவரும் இப்­ப­ணியை முழு­ம­ன­துடன் பொறுப்­பெ­டுத்து அவரே முடித்தார். பின்னர் இதனை தர்ம ஸ்ரீ பண்­டார நாயக்கா வெளி­யி­ட­ வேண்டும் என்று விரும்­பினார். ஆகவே இதனை நான் அவ­ரி­டமே ஒப்­ப­டைத்தேன். அத்­துடன் இச்­சிங்­க­ளப்­ப­திப்­பி­லி­ருந்து கிடைக்கப் பெறும் நிதி மஹ­ர­க­மை­யி­லுள்ள புற்­றுநோய் வைத்­தி­ய­சா­லையின் சிறுவர் பிரி­வுக்கு அனுப்பி வைக்­கப்­ப­ட­வேண்டும் என்ற தமி­ழி­னியின் இறு­தி­ வி­ருப்­பத்­தையும் நான் தெரி­வித்தேன்.

கேள்வி: தமி­ழி­னியை உங்­க­ளுக்கு யுத்­தத்­திற்குப் பின்னர் தெரி­யுமா? அல்­லது யுத்­தத்­திற்கு முன்­னரே தெரி­யுமா?

பதில்: இல்லை. தமி­ழினி என்ற போராளி யுத்­தத்தில் ஈடு­பட்­டி­ருந்தார். அத்­துடன் அர­சியல் துறைப்­பொ­றுப்­பா­ள­ராக செயற்­பட்டார் என்ற சில விட­யங்கள் எனக்குத் தெரியும். ஆனால் நான் போராட்­டத்தில் இணைந்­து­கொள்­ள­வில்லை என்­ற­ப­டி­யினால் அவரைப் பற்றி எனக்கு முழு­மை­யாகத் தெரி­யாது. அத்­துடன் நான் விடு­தலைப் புலி­களின் போராட்­டத்தைப் பற்றி அவ்­வ­ள­வாக அக்­க­றை­கொண்­டி­ருக்­க­வில்லை. ஆகவே இவற்­றைப்­பற்றி ஆரம்­பத்தில் அதி­க­மாக ஆரா­யவும் விரும்­பி­யி­ருக்­க­வில்லை.

கேள்வி: புலி ஆத­ர­வா­ளர்கள் இப்­புத்­த­கத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளவை பொய் என்று விமர்­ச­னங்­களை முன்­வைக்­கின்­றார்­களே அது குறித்து என்ன கூற விரும்­பு­கின்­றீர்கள்?

பதில்: இவர்­க­ளு­டைய விமர்­ச­னங்கள் சில­வற்றை பார்த்தால் தமி­ழி­னியின் புனர்­வாழ்வு பற்றி சிலர் விமர்­சித்­துள்­ளார்கள். தற்­பொ­ழுது இன்­னுமோர் முன்னாள் போராளி மன்­னாரில் தடுப்பு முகாம் பற்­றிய தனது அனு­ப­வங்­களை புத்­த­க­மாக வெளி­யிட்­டுள்ளார்.

ஆனால் தமி­ழி­னியோ வெலிக்­க­டைச்­சி­றைச்­சாலை பற்­றிய அனு­ப­வங்­க­ளையும் வவு­னியா புனர்­வாழ்வு முகாம் பற்­றிய தனது அனு­ப­வங்­க­ளை­யுமே வெளி­யிட்­டி­ருந்தார். ஆனால் இவை எல்லாம் அவர் சந்­தித்த உண்­மை­யான அனு­ப­வங்­களின் அடிப்­ப­டையில் அவரால் எழு­தப்­பட்­டி­ருந்­தது.

கேள்வி: மேலும் புத்­த­கத்தில் கடைசி யுத்­தத்தில் நந்­திக்­க­டலில் பிர­பா­க­ரனால் எடுக்­கப்­பட்ட சில முடி­வு­களைப் பற்றி குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கின்­றதே?

பதில்: அதா­வது உண்­மையில் அங்கு குறிப்­பி­டப்­பட்­டி­ருப்­பது என்­ன­வென்றால் யுத்­தத்தின் கடை­சிக்­கட்­டத்­தில் ­த­மி­ழினி தனக்கு கட்­ட­ளை­யிடும் உயர் அதி­கா­ரி­க­ளுடன் தொடர்­பு­கொள்ள பல தடவைகள் முயற்­சித்­த­போதும் முடி­யா­மற் ­போய்­விட்­டது. ஆகவே போரா­ளிகள் கைவி­டப்­பட்­டுள்­ள­னரா? என்ற சந்­தேகம் அவ­ருக்குள் எழத்­தொ­டங்­கி­ விட்­டது.

ஆனால் தலைவர் பிர­பா­கரன் தான் தப்­பித்துக் கொள்­வ­தற்­காக போரா­ளி­க­ளுடன் தொடர்பை ஏற்­ப­டுத்­திக்­கொள்­ள­வில்லை என்று எங்­குமே குறிப்­பிட்­டி­ருக்­க­வில்லை.

ஆனால் எத்­த­னையோ முறை தமி­ழினி தனக்கு மேல­தி­கா­ரி­யாக இருந்த தள­பதி நடே­ச­னிடம் தொடர்­பு­கொள்­ள­ மு­யற்­சித்­த­போதும் அம்­மு­யற்சி தோல்­வி­யி­லேயே முடி­வ­டைந்து விட்­ட­தென்று அவர் கூறினார்.

தள­பதி சூசை­யுடன் மட்­டுமே அவ­ருக்குத் தொடர்­பு­கொள்ள முடிந்­தது.
ஆகவே தனது மேல­தி­கா­ரி­க­ளுடன் தொடர்பு கொள்ள முயற்­சித்தும் தோல்­வி­ய­டைந்­த­தா­லேயே தமி­ழினி, இறு­திக்­கட்­ட­யுத்­தத்தில் போரா­ளிகள் கைவி­டப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பிட்­டி­ருந்தார்.

கேள்வி: இப்­புத்­தகம் சம்­பந்­த­மாக பர­வ­லாக எழு­கின்ற விமர்­ச­னங்கள் தொடர்பில் நீங்கள் கூற விரும்­பு­வது?

பதில்: விமர்­சனம் என்று சொல்­லும்­போது தமி­ழினி கைதா­கி­ய­வு­டனே தமி­ழி­னியைப் பற்றி ஏரா­ள­மான விமர்­ச­னங்கள் எழத்­தொ­டங்­கி­விட்­டன. அவர் செட்­டிக்­குளம் முகாமில் ஒளிந்­தி­ருக்­கும்­போது கைது­செய்­யப்­பட்டார், அவர் இரா­ணு­வத்­தி­ன­ரிடம் ஏனைய போரா­ளி­களைக் காட்­டிக்­கொ­டுத்தார் போன்ற ஏரா­ள­மான விமர்­ச­னங்கள் எழுந்­தன.

சிலர் தங்­க­ளு­டைய தேவை­களை நிறை­வு­செய்­து­ கொள்­வ­தற்­காக இதை திட்­ட­மிட்டு பரப்­பி­னார்கள். சிலர் தமி­ழினி பணத்­துடன் ஓடிப்போய் சர­ண­டைந்தார் என்றும் வதந்­தி­களைப் பரப்­பி­னார்கள்.

ஆனால் தமி­ழி­னியின் தாயாரோ இன்னும் இடுப்­ப­ள­விற்கு வெள்ளம் வரு­கின்ற வீட்­டில்தான் வசித்­து­வ­ரு­கின்றார். அவர் விதவை என்ற கார­ணத்­தினால் அவ­ருக்கு வீட்­டுத்­திட்டம் கூட வழங்கப்படவில்லை.

தமி­ழினி வெறுங்­கை­யோ­டுதான் இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்தார்.

வெகு­சொற்­ப­ள­வி­லா­ன­வர்கள் தான் தமி­ழி­னிக்கும் தமி­ழி­னியின் தாய்க்கும் உத­வி­செய்­தார்கள்.
தமி­ழினி இந்தப் புத்­த­கத்தை எழு­தி­யி­ருக்­க­மாட்டார் ஏனென்றால் இப்­புத்­த­கத்தில் புனர்­வாழ்வு முகா­மைப்­பற்றி உண்­மைக்­குப்­பு­றம்­பான தக­வல்கள் காணப்­ப­டு­வ­தாக கூறு­கின்­றனர்.
ஆனால் உண்­மையில் இவ்­வாறு விமர்­ச­னங்­களை முன்­வைப்­ப­வர்­க­ளுக்கு தடுப்பு முகாம் என்றால் என்ன? புனர்­வாழ்வு முகாம் என்றால் என்­ன­ வென்று ஒழுங்­காகத் தெரி­யாது. இவர்கள் இவை இரண்­டிற்கும் இடை­யி­லான வித்­தி­யா­சத்தைப் போட்டு குழப்­பிக்­கொள்­கின்­றார்கள்.

புனர்­வாழ்வு முகாம் என்­பது வெளி­யி­லி­ருப்­ப­வர்கள் வந்து பார்ப்­ப­தற்கு ஏற்­ற­வ­கையில் காணப்­படும் நிலையம். வெளி­நாட்டு ராஜ­தந்­தி­ரிகள் தன்­னார்­வத்­தொண்டு நிறு­வன அலு­வ­லர்கள் உள்­ளிட்ட பலர் வந்து பார்த்து செல்லக் கூடிய அமைப்­பாகக் காணப்பட்டது. அத்துடன் இந்த புனர்வாழ்வு முகாம் இராணுவத்தினரின் தேவையாகவும் கூட காணப்பட்டது.

தொடரும்

 நேர்காணல்: ஜெ.ராஜன் , எஸ்.கே. படப்பிடிப்பு: எம்.எஸ். சலீம்
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல