ஞாயிறு, 15 நவம்பர், 2015

என்ர மகள் தமிழினி நாட்டுக்காகவே வாழ்ந்து அந்த ஏக்கத்துடனேயே போனாள் தாயாரான சின்னம்மா கூறுகிறார்

"தமி­ழினி தடுப்­பால வந்­த­வு­டனும் சிலர் அவ கேட்­கிற மாதி­ரியே கதைச்­சி­ருக்­கினம் பிள்­ளை­களை பிடிச்சி கொண்டு போய் கொன்று போட்டு அவ மட்டும் உயி­ரோட வந்­திட்டா என்று. இப்­படி பலர் கதைப்­பினம். இதால தமி­ழி­னிக்கு இங்க வாழ விருப்பம் இல்­லாமல் போயிட்டு வெளிய வெளிக்­கிட்டு போக முடி­யாது விடு­த­லை­யாகி வந்தும் சிறைக்குள் இருக்­கிற மாதிரி இருக்க அவ விரும்­ப­யில்ல அதால தான் அவ கொழும்­புக்கு போயிட்டா. பூந்­தோட்டம் தடுப்பில் இருந்து வந்த பிறகு கொழும்­பில்தான் அதிகம் இருந்­தவ. அவ­வுக்கு இங்க (பரந்­தனில்) இருக்­கவே விருப்பம் இல்லை" என்­கிறார் தமி­ழி­னியின் தாய் சின்­னம்மா.



கடந்த வாரம் ஒரு முற்­பகல் வேளை கிளி­நொச்சி கண்­டா­வளை பிர­தேச செய­லக பிரிவில் பரந்தன் முல்­லைத்­தீவு வீதியில் உள்ள சிவ­புரம் கிரா­மத்தில் வசிக்­கின்ற அவரை சந்­தித்து உரை­யா­டிய போதே தமிழினியின் தாய் சின்­னம்மா தனது கருத்­துக்­களை எங்­க­ளுடன் பகிர்ந்­து­கொண்டார்.

சிவ­புரம் கிராமம் ஒரு பரந்த வெளி­யான பிர­தேசமாகும். 2006 ஆம் ஆண்டு தமி­ழீழ நிர்­வாக சேவை­யி­னரால் காணி­யற்­ற­வர்­க­ளுக்கு கால் ஏக்கர் வீதம் காணிகள் வழங்­கப்­பட்டு மீள் குடி­யேற்­றப்­பட்ட பிர­தேசமாகும். இந்த காணிகள் இன்றைக்கு முப்­பது வரு­டங்­க­ளுக்கு முன்பு மத்­திய வகுப்புத் திட்­டத்தின் கீழ் ஒன்­பது பேருக்கு 15 ஏக்கர் வீதம் வழங்­கப்­பட்­டது. இதில் இரண்டு உரி­மை­யா­ளர்கள் மாவட்­டத்தில் உள்­ளனர். ஏனை­ய­வர்கள் தற்போது நாட்டில் இல்லை அல்­லது உயி­ரோ­டில்லை. இந்தக் காணி­க­ளில்தான் காணி­யற்ற தமி­ழினி குடும்பம் போன்று 254 இற்கு மேற்­பட்ட குடும்­பங்கள் காணி தொடர்­பான எந்தவிதமான ஆவ­ணங்­களும் இன்றி வாழ்ந்து வரு­கின்­றனர். இதனால் அவர்­க­ளினால் அரச மற்றும் அர­ச­சார்­பற்ற நிறு­வ­னங்­களின் உத­வி­களை எத­னையும் பெற­மு­டி­யா­த­வர்­க­ளாக அவல வாழ்க்கை வாழ்ந்து வரு­கின்­றனர். இது ஒரு தனிக் கதை. எனவே, இது ஒரு புற­மி­ருக்க தமி­ழி­னியின் அம்மா தமி­ழினி தொடர்பாக எங்­க­ளோடு பகிர்ந்­து­கொண்ட விட­யங்கள்

தமி­ழினி பிறந்­ததும், இயக்­கத்தில் இணைந்­ததும் பற்றி கூறுங்கள்

1972 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி ஐந்து பெண் சகோ­த­ரி­க­ளுக்கும், ஒரு ஆண் சகோ­த­ர­ருக்கும் மூத்­த­வ­ளாக கிளி­நொச்சி வைத்­தி­ய­சா­லையில் பிறந்த வள் தமி­ழினி. பரந்தன் இந்து மகா வித்­தி­யா­ல­யத்தில் கல்வி கற்று வந்தாள். இந்த நிலையில் 1983 ஆம் ஆண்டு தமி­ழி­னியின் தந்தை சிவ­சுப்­பி­ர­ம­ணியம் பரந்தன் பகு­தியில் புகை­யி­ரதம் மோதி இறந்து விட்டார். அதன்பிறகு எனது அண்­ணாவின் உத­வி­யுடனே பிள்­ளை­களை வளர்த்து வந்தேன்.

தமி­ழினி பாட­சாலை முடிந்­த­வுடன் ஜெயந்­தி­ந­க­ருக்கு தனது நண்­பி­யுடன் ரீயூ­ச­னுக்கு செல்­வது வழமை. இப்­ப­டித்தான் 1991 ஆம் ஆண்டு ஒரு நாள் எனக்கு திகதி சரியாக ஞாப­கத்தில் இல்லை. ரீயூ­ச­னுக்கு சென்­றவள் வீடு திரும்­ப­வில்லை. அவ­ளோடு சென்ற பிள்­ளைதான் வந்து அம்மா சிவ­காமி இயக்­கத்­திற்கு போயிட்டா என்று சொன்னாள். எனக்கு அழு­வ­தனை தவிர என்­ன­செய்­வது என்றே தெரி­ய­வில்லை தாய்ப் பாசம் என் கண்­களில் நீராக மட்­டுமே வெளி­யா­னது.

பின்னர் பெண்­களின் பேஸ் (போரா­ளிகள் தங்­கு­மிடம்) இருக்கும் சில இடங்­க­ளுக்கு சென்றேன். ஒரு பேஸில் (முகாம்) சொன்­னார்கள் அவ மேலி­டத்­திற்கு போயிட்டா இங்கு இல்லை என்று கூறினார்கள்.அப்ப எனக்கு இயக்­கத்தை பற்றி பெரிசா எதுவும் தெரி­யாது மேலிடம் என்று சொல்ல நான் பயந்து போனன். வேறு எங்­கையோ கொண்டு போயிட்­டாங்கள் என்று நினைத்து இருந்­த­வர்­க­ளுடன் சத்தம் போட்டு பேசி­விட்டு வந்­திட்டன்.

கொஞ்ச நாளைக்கு பிறகு பரந்­தனில் சனம் இல்லை. ஆனை­யி­றவு சண்டை நேரம். எல்­லோரும் இடம்­பெ­யர்ந்து சென்று விட்­டனர். ஜெயந்­தி­ந­கரில் உள்ள முகாம் ஒன்றுக்கு நானும் எனது அண்­ணாவும் சென்றோம். அங்கு இவ நிற்­கி­றத கண்­ட­வுடன் கட்டிப் பிடிச்சி அழு­தனான். "அழ வேண்டாம் அம்மா நாட்­டுக்­காக ஒவ்­வொரு வீட்­டி­லி­ருந்து ஓராள் போக­தானே வேண்டும். அதுதான் எங்­கட வீட்­டி­லி­ருந்து நான் வந்­திட்டன். என்னைப் பற்றி யோசிக்க வேண்டாம்" என்று எனக்கு பெரிய மனுசி மாதிரி ஆறுதல் கூறினா. பிற­கென்ன நானும் அழ, அவவும் அழ வளர்த்த மாமாவும் அழ கொஞ்ச நேரம் கதைச்சிப் போட்டு வந்­திட்டம்.

அவரும்(கணவன்) இல்லை. குடும்­பத்தில் சரி­யான கஷ்டம். எனவே, பிள்­ளை­களை அண்­ணாவின் குடும்­பத்­துடன் விட்­டிட்டு நான் வெளி­நாட்­டுக்கு வேலைக்கு போயிட்டன்.

தமி­ழி­னியின் தங்கை எப்­பொ­ழுது இயக்­கத்தில் இணைந்தார் எப்­பொ­ழுது வீரச்­சா­வ­டைந்தார்?

நான் வெளி­நாடு சென்­ற­வுடன் எனது அடுத்த மகள் கௌரியும் (இயக்கப் பெயர் சந்­தியா) 1992 ஆம் ஆண்டு இயக்­கத்­திற்கு போயிட்டா. அவ சிறுத்தை பிரிவில் போரா­ளி­யாக இருந்­தவ. தமி­ழினி இயக்­கத்­தில சேர்ந்து ஒரு வரு­டத்தில் தங்­கையும் போரா­ளி­யா­கி­விட்டார். சத்­ஜெய இரா­ணுவ நட­வ­டிக்­கையின் போது உருத்­தி­ர­புரம் பகு­தியில் இரா­ணு­வத்தின் சினைப்பர் தாக்­கு­தலில் கௌரி இரண்டாம் லெப். சந்­தி­யா­வாக வீரச்­சா­வ­டைந்­து ­விட்டார்.

அர­சியல் துறை மகளிர் பொறுப்­பாளர் தமி­ழினி பொறுப்­பேற்­றது பற்றி கூறுங்கள் அம்மா?

இயக்­கத்தில் தமி­ழி­னிக்கு வழங்­கப்­பட்ட எல்லாப் பணி­க­ளையும் சிறப்­பாக செய்­தி­ருக்­கின்றா. இதனை பல பெண் போரா­ளிகள் மற்றும் பொறுப்­பா­ளர்கள் என்­னிடம் கூறு­வார்கள். 1991 ஆம் ஆண்டு இயக்­கத்தில் இணைந்த தமி­ழினி படிப்­ப­டி­யாக பல பிரி­வு­களில் இருந்து 1998 ஆம் ஆண்டு மகளிர் அர­சியல் துறைப் பொறுப்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்டார்.

இயல்­பா­கவே வீட்டில் கெட்­டிக்­கா­ரி­யா­கவே இருந்தா. பள்ளிக் கூடத்­திலும் அப்­ப­டிதான் எல்­லோ­ரையும் தன் பக்கம் இழுத்­து­வி­டுவா. ஏ.எல் மட்­டும்தான் படிச்­சவ அதுவும் சோதனை எழு­த­வில்லை.

மகளிர் அர­சியல் துறைப் பொறுப்­பா­ள­ராக வரு­வ­தற்கு முதல் ஆறு மாத­த்திற்கு ஒரு தட­வை­யா­வது சென்று பார்ப்­பது வழக்கம் அப்­போதும் என்­னிடம் பத்து நிமி­டங்கள் வரையே செலவு செய்வா. பிறகு அந்த வேலை இருக்கு, இந்த வேலை இருக்கு நான் போக­வேணும் கனக்க கதைக்க ஏலாது என்று சொல்­லி­விட்டு சென்று விடுவா. அர­சி­யல்­துறை மகளீர் பொறுப்­பா­ள­ராக வந்த பின்பு முதல் தட­வை­யாக என்னை சந்­திக்கும் போது, இனி என்னை சந்­திப்­பது கஷ்­ட­மாக இருக்கும் முந்தி மாதி­ரி­யெல்லாம் சந்­திக்க முடி­யாது. இயக்கம் என்னை நம்பி அதிக பொறுப்­பு­களை ஒப்­ப­டைச்­சி­யி­ருக்கு நான் நேரம் கிடைக்கும் போது உங்­களை வந்து சந்­திப்பன் என்னைப் பற்றி யோசிக்க வேண்டாம். எனக்கு ஒன்டும் ஆகாது நான் சாக மாட்டன். என்ர அம்மா கெட்­டிக்­கா­ரி­தானே தைரி­ய­மாக இருங்கோ" என்று ஆறுதல் கூறி­விட்டு சென்று விட்டா.

பிற­கென்ன சொன்ன மாதி­ரியே தமி­ழி­னியை சந்­திப்­பது அரி­தா­கி­விட்­டது. நாங்­களும் எங்­கா­வது கூட்­டங்­க­ளுக்கு வரும் போது சந்­திக்­கிற நிலை­மையே ஏற்­பட்­டது. எப்­பொ­ழுது பார்த்­தாலும் பிசி­யா­கத்தான் திரிவா.

எப்­பொ­ழுதும் இயக்கம் பற்­றியோ, தன்னுடைய வேலை பற்­றியோ எத­னையும் எங்­க­ளுடன் பகிர்ந்­து­கொண்­டது கிடை­யாது. தடுப்பில் இருந்து வந்த பிறகும் அப்­ப­டிதான் கடந்த கால சம்­ப­வங்­களை அவள் மறந்தும் பேசி­யது கிடையாது.

போரா­ளி­யாக இருந்த காலத்தில் வீட்டை எப்­படி பார்த்­துக்­கொண்டார் தமி­ழினி?

தமி­ழினி நாட்­டுக்­காக போன பிள்ளை. தன்­னு­டைய சுய­ந­லமோ, வீட்டைப் பற்­றிய சிந்­த­னைக்கோ அவ அதிக முக்­கி­யத்­துவம் கொடுப்­பது இல்லை. அது தமி­ழி­னியின் இயல்பு. அதுவும் அர­சியல் துறை மகளிர் பொறுப்­பா­ள­ராக வந்த பிறகு இந்த குணம் மேலும் அதி­க­மா­கி­விட்­டது.

உங்­க­ளுக்கு தெரி­யும்­தானே கிளி­நொச்­சியில் இரத்­தி­ன­புரம் போன்ற இடங்­களில் பொறுப்­பா­ளர்­களின் வீடுகள் எப்­படி இருக்­குது என்று?. எனது மகள் நாட்­டுக்­காக, பொது நல­னுக்­காக சென்­றவள். அவள் எப்­பொ­ழுதும் தனது குடும்­பத்­தி­னதும் நலன்­களில் அக்­கறை செலுத்­தி­யது கிடை­யாது. அவள் அப்படி செலுத்­தி­யி­ருந்தால்் நாங்கள் ஏனைய சில இயக்கப் பொறுப்­பா­ளர்கள் குடும்­பங்கள் இருந்­தது போன்று வாழ்ந்­தி­ருப்பம்.

என்ரப் பிள்ளை நாட்­டுக்­காக இயக்­கத்­திற்கு போனவள் நாட்­டுக்­காவே வாழ்ந்தாள், இறுதி வரை அந்த ஏக்­கத்­து­ட­னேயே இறந்தும் போனாள்.

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்­தத்தின் இறுதி நாட்­களில் தமி­ழினி உங்­க­ளுடன் இணைந்­து­கொண்­டது பற்றி சொல்­லுங்­களேன்?

கிளி­நொச்­சி­யி­லி­ருந்து இடம்­பெ­யர்ந்து சென்ற பின்பு தமி­ழி­னியை காண­மு­டி­ய­வில்லை. மகள் எங்க? என்ன செய்­கிறாள்? என்­பது தெரி­ய­வில்லை.பரந்­த­னி­லி­ருந்து தர்­ம­புரம், விசு­வ­மடு, உடை­யார்­கட்டு, புதுக்­கு­டி­யி­ருப்பு., இர­ணைப்­பாலை, புது­மாத்­தளன், வலை­ஞர்­மடம் என இடம்­பெ­யர்ந்து சென்றோம். இந்தக் காலப்­ப­கு­தியில் போரா­ளி­க­ளாலும் தங்­க­ளது குடும்­பங்­களை சந்­திக்க முடி­ய­வில்லை குடும்­பங்­க­ளாலும் தங்­க­ளது போராளிப் பிள்­ளை­களை தேட முடி­ய­வில்லை.

என­வேதான் எனக்கு ஏற்­பட்­டுள்ள கஷ்­டத்தை தீர்க்கும் வகை­யிலும், மகளை (தமி­ழினி) சந்­திப்­ப­தற்­கான ஒரு வழி­யா­கவும் சிறு வியா­பாரம் செய்ய ஆரம்­பித்தேன். மேசை ஒன்றில் அந்த நேரம் எனக்கு கிடைத்த சவர்க்­காரம், வெற்­றிலை, கச்சான் போன்ற பொருட்­களை வீதி ஓர­மாக வைத்து வியா­பா­ரத்தில் ஈடு­பட்டு வந்தேன். அப்­பொ­ழு­துதான் வலை­ஞர்­மடம் பகு­தியில் 2009 மார்ச் மாதம் என நினைக்­கிறன் வலைஞர் மடத்தில் வைத்து மகளை பார்த்­திட்டன். அவ­சர அலு­வ­லாக போய்க்­கொண்­டி­ருந்­தவ, என்ன அம்மா? இது என்ன வேலை என்று கேட்க, "உன்னை சந்­திக்­கதான் இப்­படி என்றேன் சரி­சரி கவனம் என்று சொல்லி விட்டு என்னைப் பற்­றி­ யோ­சிக்க வேண்டாம் என்னை காண­வில்லை என்றால் எங்­கையும் தேடி­தி­ரிய வேண்டாம் நான் செத்­தி­ருப்பன் அல்­லது குப்பி கடிச்­சி­ருப்பன் நான் ஒரா­ளுக்­காக மற்ற பிள்­ளை­களை வைச்­சிக்­கொண்டு இருக்க வேண்டாம். நீங்கள் சனத்­தோட வெளி­கிட்டு போங்கோ என்று சொல்­லிப்­போட்டு போயிட்டா. ஆனால், அவ­ளு­டைய முகம் நான் வழ­மை­யாக காணும் தமி­ழி­னியின் முகம் மாதிரி இருக்­க­யில்லை. எல்­லா­வற்­றையும் இழந்­தவள் போன்று காணப்­பட்டாள்.

அதற்கு பிறகு எல்லாம் முடிந்து முள்­ளி­வாய்க்­கா­லி­ருந்து வட்­டு­வாகல் ஊடாக முல்­லைத்­தீவு நோக்கி போய்க்­கொண்­டி­ருக்­கிறம். ஆனால், எனக்கு எனது கால்கள் எடுத்து வைத்து நடக்க முடி­ய­வில்லை தமி­ழி­னிக்கு என்ன நடந்­தி­ருக்கும்? அவள் எங்க இருப்பாள்? என்ன செய்­யப்­போ­கின்றாள்? உயி­ரோ­டுதான் இருக்­கின்­றாளா? இப்­படி பல கேள்­விகள். இது மே பதி­னெட்டாம் திகதி.

நாங்கள் அனை­வரும் முல்­லைத்­தீ­வுக்கு வந்­திட்டம். அப்­போது எனது மரு­மகன் வந்து சொன்னார் "மாமி அக்கா இருக்­கிறா. என்று எனக்கு நம்­பவும் முடி­ய­வில்லை. நம்­பாமல் இருக்­கவும் முடி­ய­வில்லை. எங்க இருக்­கிறா. வாங்கோ போய் பார்ப்பம்" என்று அவ­ரையும் கூட்­டிக்­கொண்டு போனால் ஒரி­டத்தில் நிறைய சனம் போரா­ளி­க­ளுடன் தமி­ழி­னியும் இருந்தா. பிள்­ளையை பார்த்­த­வுடன் எனக்கு என்ன செய்­வது என்றே புரி­ய­வில்லை. பஞ்­சா­பி­யுடன் தமி­ழினி காணப்­பட்டாள்.

பிறகு தமி­ழி­னியை கையில் பிடித்­துக்­கொண்டு நீ யாரையும் எதிர்­பார்க்க கூடாது என்­னோட வா கூட்­டிக்­கொண்டு போகின்றேன். தமி­ழினி தயங்­கினாள். நான் விட­யில்லை. உனக்­கா­கதான் கடைசி வரைக்கும் இருந்­தனான். அண்ணா (தமி­ழி­னியின் மாமா) எல்லாம் இரண்டாம் மாதமே ஆமிக் கட்­டுப்­பாட்­டுக்குள் போயிற்றார். நீ என்­னோட வா எது வந்தாலும் நான் பார்த்­துக்­கொள்­கிறன் என்று கூறி கூட்­டிக்­கொண்டு வந்து பஸ்­ஸில ஏறி ஓமந்தை வரைக்கும் வந்­திட்டம்.

மெனிக்பாம் முகாமில் தமி­ழினி எவ்­வாறு கைது செய்­யப்­பட்டார்?

மகள் மெனிக்பாம் முகாமில் கைது செய்­யப்­பட்து என்­பது ஒரு அப்­பட்­ட­மான பொய். 2009 மே இரு­பதாம் திகதி ஓமந்­தையில் வைத்து போரா­ளிகள், எல்­லைப்­ப­டைகள் என எல்­லோ­ரையும் தனித்­த­னி­யாக வரு­மாறு அறி­விச்­சாங்கள். அப்ப தமி­ழி­னியும் எழும்­பினாள். நான் கையை பிடிச்சி இருத்­திட்டன். ஏன் எழும்­புறாய் நீ என்­னோடு இரு நான் பார்த்­துக்­கொள்றன் என்றேன். இல்லை அம்மா சர­ண­டையப் போகிறேன். பிரச்­சி­னை­யில்லை என்று சொல்லிப் போட்டு எழும்பி போயிட்டா. காலை ஐந்து மணி இருக்கும் பல போரா­ளி­க­ளுடன் அவவும் சர­ண­டைந்தாள். பிறகு எங்­களை மெனிக்பாம் வலயம் நான்கு முகா­முக்கு ஏற்­றி­விட்­டார்கள். அதற்கு பிறகு சில மாதங்கள் தமி­ழி­னியின் தொடர்பு இல்லை. நான் முகா­முக்கு வரு­கிற ஐ.சி.ஆர்.சி போன்ற பல நிறு­வ­னங்­க­ளி­டமும் சென்று பதி­வு­களை மேற்­கொண்டேன்.

பத்­தி­ரி­கை­களில் எல்லாம் தமி­ழினி மெனிக்பாம் முகாமில் வைத்து கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக பல தக­வல்கள் வந்­தன. ஆனால் அது அனைத்தும் அப்­பட்­ட­மான பொய்

இதற்கு பிறகு பல தக­வல்கள் வந்­தது தமி­ழினி நாலாம் மாடியில் இருக்­கிறா?, அந்த முகாமில் இருக்­கிறா, இந்த முகாமில் இருக்­கிறா, என்று எல்லாம் சொன்­னார்கள். எத­னையும் உறு­திப்­ப­டுத்த முடி­ய­வில்லை

நானும் முயற்­சியை கைவி­ட­வில்லை வவு­னி­யா­வில உள்ள சொந்­த­காரர் ஒரு­வ­ரிடம் தமி­ழி­னியின் விப­ரங்­களை கொடுத்து ஐ.சி.ஆர்.சி அலு­வ­ல­கத்தில் பார்க்­கச்­சொல்லி கேட்­டனன். அவர் போய் பார்த்த இடத்­தி­லதான் தமி­ழினி வெலிக்­கடைச் சிறை­சா­லையில் இருப்­பது தெரி­ய­வந்தது.

பிறகு நானும் முகா­மி­லி­ருந்து வெளி­யால வந்­திட்டன். தமி­ழி­னியை பார்க்க வெலிக்­க­டைக்கு எங்­க­ளு­டைய சித்­தப்பா ஒரு­வ­ரையும் கூட்­டிக்­கொண்டு கொழும்­புக்கு போனன். வெலிக்­கடை எங்கு இருக்கு எப்­படி போக­வேணும் என்று எதுவும் தெரி­யாது. மகளை பார்க்க வேண்டும் என்ற ஆர்­வத்தில் வெளிக்­கிட்டு போயிற்றம். ஒரு வழி­யாக விசா­ரித்து வெலிக்­கடை சிறைக்கு போய் மகளை பார்த்த போது எனது மகளா? என்ற சந்­தேகம். மெலிஞ்சி முகம் எல்லாம் கறுத்து ஆள் அடை­யா­ளமே மாறி­யி­ருந்தா. கண்­ட­வுடன் அவவும் நானும் அழுதோம். சில நிமி­டங்கள் கதைச்சுப் போட்டு, கொண்டு போன பொருட்­க­ளையும் கொடுத்து­விட்டு வந்­திட்டன்.

அதற்கு பிறகு தொடர்ச்­சி­யாக மாத்­திற்கு ஒருக்கா அல்­லது இரண்டு மாத்­திற்கு ஒருக்கா பல­கா­ரங்கள் மற்றும் தேவை­யான பொருட்­களை எடுத்­துக்­கொண்டு வெலிக்­க­டைக்கு சென்று பார்த்­திட்டு வருவன். கஷ்­டம்தான் ஆனாலும் என்ன செய்­யி­றது தாய் பாசம். எவரும் பெரிசா எதுவும் செய்­த­தாக இல்லை எனது மகள் ஒருத்தி நோர்­வேயில் இருக்­கிறா அவதான் சிறிய உத­வி­களை செய்­தவ.

தமி­ழினி சிறை­யிலும், தடுப்­பிலும் இருந்த போது யார் சென்று பார்த்­தார்கள் உதவி செய்­தார்கள்?

தமி­ழினி சிறையில் இருந்த போது அவவ யாரும் சென்று பார்த்­தது கிடை­யாது. சிறையில் இருந்து வெளியில் எடுக்­கவும் எவரும் எதுவும் செய்­ய­வில்லை. மகளின் மரண வீட்டில் பலரும் பல மாதிரி கதைத்­தார்கள். ஆனால் இதுதான் உண்மை. ஆக சிறி­தரன் எம்பி மட்டும் வேறு யாரையோ வெலிக்­கடை சிறைக்கு பார்க்க போன இடத்தில் தமி­ழி­னி­யையும் எட்­டிப்­பார்த்­திட்டு வந்­தவர்.

பிறகு தடுப்பு முகா­முக்கு வந்து விடு­த­லை­யாகி வரும் வரைக்கும் எவரும் தமி­ழி­னியை எட்­டியும் பார்க்­க­வில்லை. தமி­ழனி வீட்­டுக்கு வந்த பின்­னரும் எவரும் அவரை வந்து பார்த்து சுக துக்­கங்கள் விசா­ரிக்­கவும் இல்லை, உத­வவும் இல்லை. அனால் அடிக்­கடி ஆமி, சி.ஐ.டி, புல­னாய்வு என்று அவர்கள் வந்து போனார்கள்.

தமி­ழினி தடுப்பில் இருக்கும் போது ஒரு நேரம் பார்க்க போவ­தற்கு காசு இல்­லாமல் எத்­தனை தட­வைகள் கஷ்­டப்­பட்­டி­ருக்­கிறன். இதெல்லாம் யாருக்கு தெரியும். நோர்­வேயில் உள்ள மகள்தான் அப்­பப்ப உத­விகள் செய்­யி­றவ அதை வைச்­சிதான் அவவ போய் பார்த்­திட்டு தேவை­யான உடுப்பு, சாப்­பா­டுகள் எல்லாம் வாங்கி கொடுக்க முடி­யாது என்­றாலும் கேட்­ட­தில கொஞ்­சத்­தை­யா­வது வாங்கி கொடுத்துப் போட்டு வாறது.

தமி­ழி­னியின் வழக்­கு­காக ஒரு சிங்­கள சட்­டத்­த­ரணி உத­வி­ய­தாக கூறப்­ப­டு­கி­றதே எவ்­வாறு?

தமி­ழி­னியை சிறையில் இருந்து வெளியில் எடுக்கும் முயற்­சியில் பல லோயர்­மாரை சந்­தித்தன் இந்த நேரத்தில் எனக்கு சென்­னார்கள் அப்­பாத்­துரை விநா­ய­க­மூர்த்­தியை (முன்னாள் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு பா.உ) போய் பாருங்கோ என்று அவரை போய் சந்­தித்து விச­யத்தை சொன்னன். அவர் சொன்னார். "அம்மா இந்த வழக்கை ஒரு மூன்று இலட்சம் வரை செல­வாகும் என்று நான் மூன்று ரூபா­வுக்கும் வழி­யில்­லாத நான் எப்­படி மூன்று இலட்­சத்தை கொடுக்­கி­றது. ஜயா நீங்கள் வழக்­குக்கு காசு கேட்­கி­றீங்­களா? அல்­லது வச­னத்­திற்கு காசு கேட்­றீங்­களா என்று கேட்­டுப்­போட்டு நான் வந்­திட்டன்”””””".

பிறகு எனக்கு ஒருவர் சொன்னார் தலை­மன்­னாரில் ஒரு லோயர் இருக்­கிறார் அவர் நல்ல மனுசன் பீஸ் குறை­வா­கதான் கேட்பார் போய் பாருங்கோ என்று

"நானும் இடம் வலம் தெரி­யாது அவ­ரு­டைய போன் நம்­ப­ரையும் எடுத்­துக்­கொண்டு விசா­ரிச்சு விசா­ரிச்சு போய் ஆளை சந்­தித்து விச­யத்தை சொன்னன். அவர் சொன்னார் "சரி­யம்மா நாங்கள் வழக்கை எடுக்­கிறம். ஆனால் நான் மட்டும் பேச முடி­யாது கொழும்பில் உள்ள ஒரு சிங்­கள லோய­ரையும் பிடிக்க வேண்டும் என்று. நான் திருப்பிச் சொன்­னனான் ஐயா, என்­னிட்ட அதிக பணம் தார­தற்கு வச­தி­யில்லை ஆனாலும் என்னால் முடிஞ்ச காசை தருவன் இதை­யொரு உத­வி­யாக செய்து தாங்கோ என்று சரி நாங்கள் காசு எவ்­வ­ளவு என்று பிறகு சொல்­லுறம் நீங்கள் விப­ரத்தை தாங்கோ என்று எல்லா விப­ரத்­தையும் பெற்­றுக்­கொண்டார் என்னைப் பொறுத்­த­வரை தலை மன்னார் லோயர் ஒரு தெய்வம் மாதிரி.

பிறகு ஒவ்­வொரு தவ­ணைக்கும் ஒரு நாளைக்க முதல் போன் எடுத்தா சொல்­லவார் கொழும்­புக்­குதான் தமி­ழி­னியின் வழக்­குக்­கா­கதான் போய்க்­கொண்­டி­ருக்­கிறன் என்று அப்­ப­டி­யொரு மனுசன். வழக்கு சில தவ­ணைகள் நடந்­தது. நான் ஒரு தட­வைதான் நீதி­மன்றம் போன்னான் அங்கு நானும் தலை­மன்னார் லோயரும் சிங்­கள லோயரும் சோடா வேண்டி குடிச்­ச­னாங்கள். அப்­போது எனக்கு தெரி­யாது தமி­ழி­னியின் வழக்­கு­காக நான் கொடுக்க போவது இந்த சோடா மட்­டும்தான் என்று.

பிறக்கு நான் கொழும்பு போவ­தில்லை வழக்கு தவ­ணைக்கு முன் லோய­ருக்கு கோல் பண்­ணினாள். கொழும்­புக்­குதான் போய்க்­கொண்­டி­ருக்­கிறன் என்ற பதிளே பெரும்­பாலம் எனக்க வரும்.

2012 ஆம் ஆண்டு ஒரு நாள் மதியம் பதி­னொரு மணி­யி­ருக்கும் சமைத்­துக்­கொண்­டி­ருக்கும் போது போன் கோல் வந்­தது அந்த சிங்­கள லோயர் சொன்னார் தனக்கு தெரிஞ்ச கொச்சை தமிழில் தமி­ழினி அம்மா தமி­ழினி றிலீஸ். நீங்க ஒங்­கட மக­ளோட சந்­தோ­ச­மாக வாழுங்கோ அவ புன்­வாழ்­வுக்கு விட்­டாச்சு. கெதி­யில ஒங்­க­ளோட சேர்ந்­தி­ருவா என்ற அந்த வார்த்­தைகள் இப்­பொ­ழுதும் என்ற காதுக்­குள்ள கேட்­டு­கொண்­டி­ருக்கு.

சில நாட்­க­ளுக்கு பிறகு சிங்­கள லோய­ருக்கு கோல் பண்ணி எவ்­வ­ளவு பீஸ் என்று கேட்­டனான். அவர் சொன்னார் நீங்க மனம் நோகாமல் தமி­ழி­னி­யோடு சந்­தோ­ச­மாக இருங்கோ. அது காணும் எங்­க­ளுக்கு என்று. திரும்ப தலை­மன்னார் லோய­ருக்கு எடுத்து கேட்­டனான் அவர் சொன்னார் அத­தெல்லாம் வேண்டாம் தமி­ழினி நாட்­டுக்­காக சனத்­திற்­காக எவ்­வ­ளவோ கஷ்­டப்­பட்­டி­ருக்கா நாங்கள் அவ­வுக்­காக இதை­யா­வது செய்யக் கூடாதா? எத்­தனை வழக்­குகள் செய்­யிறம் இதை நாங்கள் ஒரு சேவை­யாக செய்­யிறம் என்றார்.

தமி­ழி­னியின் விடு­த­லையின் முழு பங்­க­ளிப்பு இந்த இரண்டும் லோயர்­க­ளையே சாரும். அவர்­க­ளால்தான் தமி­ழினி தடுப்­புக்கு போய் விடு­த­லை­யாகி வந்­தவ. மற்­றும்­படி யாரும் எங்­க­ளுக்கு எந்த சின்ன உத­வியும் செய்­ய­வில்லை.

தம­ழினி தடுப்­பி­லி­ருந்து விடு­த­லை­யா­கிய காலம் வடக்கு மாகாண சபை தேர்தல் காலம் அப்­போது நிலை­மை­களை எவ்­வாறு இருந்­தது?

ஒரு வருட புனர்­வாழ்வு முடிச்சி வெளி­யாள 2013 யூன் 29 ஆம் திகதி பூந்­தோட்டம் தடுப்பு முகா­மி­லி­ருந்து விடு­தலை செய்­யப்­பட்ட போது மாகாண சபை தேர்தல் காலம். அப்ப பலரும் பல வித­மாக கதைச்­சினம் செய்­தி­களும் தமி­ழி­னியை பற்றி கண்­டப்­படி வெளி­வந்­தது.

தமி­ழினி தொலை­பேசி வைத்­தி­ருக்க வில்லை தேவை­யில்­லாத பிரச்­சி­னை­களை தவிர்த்­துக்­கொள்­வ­தற்­காக அவ அதை தவிர்த்­துக்­கொண்டா. என்­னு­டைய நம்­ப­ருக்­குதான் எல்­லோரும் தொடர்பு கொள்­வார்கள் அப்ப அந்த நேரத்தில் பலர் தொடர்­பு­கொண்டு தமி­ழினி தேர்­தலில் நிற்­கப்­போ­றாவா என்­றெல்லாம் கேட்­டிச்­சினம். பத்­தி­ரி­கை­யா­ளர்கள் எடுத்து கேப்­பினம். நான் எல்­லே­ருக்கும் பதி­ல­ளிச்­சனான் எல்­லோ­ருக்கும் சொன்­னது அப்­படி எதுவும் இல்லை தயவு செய்து எங்­களை நிம்­ம­தி­யாக இருக்க விடுகோ என்று.

தமி­ழினி பற்றி அர­சியல் வாதிகள் முதல் பத்­தி­ரி­கைகள் வரை சொன்ன எதுவும் நடக்­க­வில்லை அதெல்லாம் பொய் என்று என்ற மகள் நிரூ­பித்து உல­கத்தை விட்டு போயிட்டா. தமி­ழினி அர­சாங்­கத்­துடன் சேர்ந்­திட்டா அத­னால்தான் தேர்தல் காலத்தில் விடு­தலை செய்­யப்­பட்­டவ தேர்­தலில் நிற்­கப்­போ­றக இப்­படி பல கதைகள் கதைச்­சினம் ஆனால் அப்­படி எதுவும் நடக்­க­யில்லை. அமை­தி­யாக இருக்க விரும்­பினா அப்­ப­டியே போயிட்டா..

தமி­ழினி தடுப்­பி­லி­ருந்து வந்த பின்னர் தனது சமூ­கத்தில் எவ்­வா­றான சவால்­களை அல்­லது நெருக்­க­டி­களை எதிர்­கொண்டார் என்­பது பற்றி உங்­க­ளுக்கு தெரி­யுமா?

ஒரு வருட புனர்­வாழ்வு முடிச்சி வெளியில் வந்த மகள் இங்க (பரந்­தனில்) இருக்க விரும்­ப­யில்லை. உங்­க­ளுக்கு தெரி­யும்­தனே சமூ­கத்தில் நல்ல மனி­சரும் இருப்­பினும் கெட்ட மனி­சரும் இருப்­பினும், சில பேர் மனதை நோக­டிக்­கிற மாதிரி நடக்க மாட்­டினம் ஆனால் பல பேர் அப்­ப­டி­யில்லை.

மெனிக்ப்பாம் முகாமில் இருந்த போது ஒருக்கா ஜசி­ஆர்­சி­யிடம் பதிய போயி­ருந்தன் அப்ப பலர் என்னை பார்த்து இவன்ர மகள்தான். பிள்­ளை­களை பிடிச்­சவ அவ உயி­ரோட எங்­கையோ இருக்­கிறா. ஆனால் எங்­கட பிள்­ளை­கள்தான் இல்லை. என்று என் காது­ப­டவே மிக மோச­மாக கதைச்­சினம் சிலர் எங்­க­ளுக்கு பின்னாள் கதைச்­சி­ருக்­கினம்.

தமி­ழினி தடுப்­பால வந்­த­வு­டனும் இப்­படி பலர் கதைச்­சினம். சிலர் அவ கேட்­கிற மாதி­ரியே கதைச்­சி­ருக்­கினம் பிள்­ளை­களை பிடிச்சி கொண்டு பொய் கொன்று போட்டு அவ மட்டும் உயி­ரோட வந்­திட்டா என்று கதைப்­பினம். இதால தமி­ழி­னிக்கு இங்க வாழ விருப்பம் இல்­லாமல் போயிட்டு. வெளிய வெளிக்­கிட்டு போக முடி­யாது. விடு­த­லை­யாகி வந்தும் சிறைக்குள் இருக்­கிற மாதிரி இருக்க அவ விரும்­ப­யில்ல அத­லால தான் அவ கொழும்­புக்கு போயிட்டா. பூந்­தோட்டம் தடுப்பில் இருந்து வந்த பிறகு கொழும்­பில்தான் அதிகம் இருந்­தவ. அவ­வுக்கு இங்க (பரந்­தனில்) இருக்­கவே விருப்பம் இல்லை.

நீங்கள் உங்கள் வாழ்­வா­தா­ரத்­திற்­காக கச்சான் வியா­பாரம் செய்­வ­தாக செய்­திகள் வந்­தி­ருக்­கின்­ற­னவே அது உண்­மையா?

நான் எப்­பொ­ழுதும் எங்­கை­யா­வது வேலை செய்வன். உங்­க­ளுக்கு தெரியும் 2009 க்கு முன் தமிழர் புனர்­வாழ்­வுக்கு கழ­கத்தில் வேலை செய்­தனான், இறுதி யுத்தம் நடக்கும் போது வியா­பாரம் பிறகு மீள்­கு­டி­யேற்­றத்­திற்கு பின்­னரும் எனது வரு­மா­னத்­திற்கு வியா­பாரம் செய்தன். எனக்கு எல்லாம் பொம்­பிள பிள்­ளைகள் எல்­லோரும் கலி­யாணம் செய்­திட்­டினம் அவை­யி­ளிட்ட நான் எந்த உத­வியும் கேட்டு போறது இல்லை. என்ற வாழ்க்­கைக்கு நான் உழைக்க வேணும். அதுதான் கிளி­நொச்சி கந்­த­சு­வாமி கோயில் திரு­விழா நேரம் கச்சான் விற்க வெளிக்­கிட்டன்.

எனக்கு கொஞ்ச தகரம் கிடைச்­சது அதையும் எடுத்­துக்­கொண்டு கோயி­லுக்கு முன்னாள் உள்ள சிறி­தரன் எம்பி ஜயா­வின்ர ஓப்­பி­சில போய் ஒரு மேசையும் கதி­ரையும் வாங்கி பத்­து­நாளும் கச்சான் விற்­றனான். இப்­படி எங்­கட வாழ்க்­கையை நாங்கள் ஒரு மாதிரி ஓட்­டிக்­கொண்டு போனனாங்கள் யாரிட்டையும் போகயில்லை

தமிழினிக்கு புற்றுநோய் என்று எப்பொழுது அறிந்துகொண்டீர்கள்?

பெரும்பாலும் போராளிகளுக்கு அல்சர் இருக்கும் அவர்கள் நேரத்திற்கு நேரம் சாப்பிடுவது இல்லை எனவே தமிழினியும் அடிக்கடி வயிற்று வலி என்று சொல்லும் போத நான் சொல்லுவன் நீ நேர காலத்திற்கு சாப்பிடுறது இல்லை. கூட்டம் அது இது என்று திரிச்சுபோட்டு பிறகு ஒரு சோடாவை குடிச்சுப் போட்டு போறது இப்படி இருந்தால் அல்சர் வராமல் வேறு என்ன செய்யும் என்று. ஆரம்பித்தில் வயிற்று வலி வரும போதெல்லாம் அல்சர் மருந்துதான் குடிக்கிறவ

ஆனால் இந்த வருடம் (2015) சித்திரை மாதம்தான் புற்றுநோய் இருக்குது என்று கண்டுபிடிச்சது. கல்லீரலுக்கு பக்கத்தில் கான்சர் தமிழினிக்கும் சித்திரை மாதம்தான் தெரியும் தனக்கு கான்சர்; என்று. வருத்தம் வந்து கடைசி ஒரு மாதம் சரியா கஷ்டப்பட்டுப் போட்டா. மருமகனும் அவவோட சரியாக கஷ்டப்பட்டவர்.

தமிழினியின் மரணம் அதன் பின்னரான நிலைமைகள் தொடர்பில் என்ன கூற விரும்புகின்றீர்கள்?

தமிழினி உயிரோடு இருக்கும் போது எதுவும் செய்யாதவர்கள் இனி செய்து என்ன பயன்? அவ இருக்கும்போது யாரும் வந்து பார்த்து எதுவும் செய்யவில்லை. நாட்டுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த பிள்ளை நாங்கள் நல்லா இருக்க வேணும் என்று நினைச்ச போது யாரும் அதுக்கு உதவியில்லை இனியென்ன மகள் இல்லை எனவே நாங்கள் இப்படியே இருந்தாலும் பரவாயில்லை. தயவு செய்து தமிழினியை வைத்து அவவின்ர மரணத்தை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம். அதைதான் எல்லாரிட்டையும் கேட்கிறன். மற்றயது

இயக்கத்தில் மகளீர் அரசியல் துறைப்பொறுப்பாளராக இருந்த என்ர மகளின்ர வாழ்கையை தடுப்பால வந்த பிறகு யாரும் எட்டியும் பார்க்கயில்லை என்றால் மற்ற முன்னாள் சாதாரண போராளிகளின் நிலைமைகளை நினைச்சுப் பாருங்கோ பாவம் அவர்கள் என்றார் கண்ணீருடன்.

நேர்காணல், படப்பிடிப்பு
மு.அமிழ்ச்செல்வன்
வீரகேசரி
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல