இந்திய மதமும் சட்டமும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்திய மதமும் சட்டமும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 3 ஏப்ரல், 2017
இந்திய மதமும் சட்டமும்: 11 (பொது சிவில் சட்டம் தேவையா?)
இந்தியாவில் ஒவ்வொரு மதமும் தனக்கென ஒரு அடிப்படை கட்டமைப்பைக் கொண்டே விளங்குகிறது. அது அதற்கான சரி தவறுகள் வெவ்வேறாக உள்ளது. காரணம், எல்லா மதங்களும் ஒரே இடத்தில், தலத்தில் ஒரெ நேரத்தில் ஒரே கூட்டத்தில் தோன்றியவை அல்ல. அன்றைய இந்திய நிலப்பரப்பில், பல்வேறு மதங்கள் வந்து இறங்கின. தன்னோடு, தன்னுடைய சரி தவறுகளையும் கொண்டு வந்தன.
Labels:
இந்திய மதமும் சட்டமும்
இந்திய மதமும் சட்டமும்: 10 (கிறித்தவ மத சட்டங்கள் நெகிழக்கூடியவையா?)
இந்தியாவிற்கு மிகப் புராதானமான வரலாறு இருப்பதாலேயே, இங்கே பல இனக்குழுக்களும், மதங்களும் நிலுவையில் இருக்கின்றன. இதன் காரணமாகவே வெவ்வேறு பழக்க வழக்கமுடையவர்கள் அருகருகே இணைந்து வாழ வேண்டியுள்ளது. இவர்கள் தலத்தைப் பொறுத்தவரையில் ஒன்றாகவும், மத பழக்க வழக்கங்களைப் பொருத்து வெவ்வேறாகவும், இருக்க வேண்டியிருக்கிறது.
Labels:
இந்திய மதமும் சட்டமும்
இந்திய மதமும் சட்டமும்: 9 (இஸ்லாமிய சட்டம் நெகிழக்கூடியதா?)
இந்தியாவில் பொது சிவில் சட்டம் தேவையா, முடியுமா என்பது பற்றிப் பேசுவதென்றால், இந்தியாவில் இருக்கும் மக்கள் அதுவரை பயன்படுத்திய சட்டங்களும், அந்தச் சட்டங்களில் திடத்தன்மை அல்லது நெகிழும் தன்மை பற்றியும், மற்றும் வேறுபாடுகளும், பற்றி ஆழ்ந்து அறிய வேண்டியது அவசியமாகிறது.இஸ்லாமியர் அல்லாத சராசரி ஒருவனிடம் இஸ்லாமியச் சட்டம் பற்றிக் கேட்டால் திருக்குரானை அவர்கள் அடிப்படையாகப் பயன்படுத்துகிறார்கள் என்பான். ஆனால் உண்மை அதுதானா என அறிய வேண்டி இருக்கிறது.
Labels:
இந்திய மதமும் சட்டமும்
இந்திய மதமும் சட்டமும்: 8
மனித சட்டங்களை இன/மத சட்டங்களாகவும், தலச் சட்டங்களாகவும் பிரிக்கலாம்.. முன்பு இன முறைச்சட்டங்களே அதாவது மதச்சட்டங்களே இருந்தன. பின் வந்த பாகுபாடுகள் தலம் சார்ந்தவையாக ஆகிவிட்டபடியால், இந்த சட்டங்களும் தலத்திற்கேற்றவாறு மாற வேண்டி இருந்தது. இந்த மத/தல சட்டங்களுக்கு இடையே ஏற்படும் சலசலப்புகளே இப்போது தீர்க்கப்பட வேண்டிய ஒன்று.
Labels:
இந்திய மதமும் சட்டமும்
இந்திய மதமும் சட்டமும்: 6 (திருமணம் நடத்தல், திருமணம் முடிதல்)
ஒரு திருமணம் என்பது எந்தப் புள்ளியில் நிறைவடைகிறது என்பது அந்தந்த மதங்களின் திருமணம் குறித்த பார்வையைப் பொறுத்தே அமைகிறது.இஸ்லாம், கிறித்தவம் ஆகிய இரு மதங்களும் தனது குடிகளில் ஒவ்வொரு செயலையும் முடிந்த வரை பதிவு செய்கிறது. இந்து என்பது இஸ்லாம், கிறித்தவம் போல இன்ஸ்டிட்யூஷனலைஸ் செய்யப்பட்ட மதம் அல்ல. அதாவது, இந்து மதம் எந்த ஒரு தனிப் புத்தகத்தையும் பின்பற்றவில்லை.
Labels:
இந்திய மதமும் சட்டமும்
இந்திய மதமும் சட்டமும்: 5 (ஏற்கப்பட்ட திருமணங்களும், தந்தைமையும்)
இந்து மதத்தைப் பொறுத்தவரையில் திருமணம் என்பது, ஒர் ஒப்பந்தம் அல்ல. அது ஜன்ம ஜன்மமாகத் தொடர்ந்து வரும் ஒரு பந்தம் என்றும், மதச் சடங்காகவுமே கருதப்பட்டு வந்தது.இந்த நம்பிக்கையின் காரணமாகவே, இந்த மதச் சடங்கிற்கு வயது ஒரு தடையில்லை; எந்த வயது ஆணும் பெண்ணும் கூட திருமணம் செய்து கொள்ளலாம் என இந்து திருமணச் சட்டம் வருவதற்கு முன்பு இருந்ததால் பால்ய விவாகம் பரவலாக இருந்து வந்தது.திருமணத்தின் முக்கிய நோக்கம், சந்ததி பெருக்குவதும்தான் என இருந்தமையால், ஆண் தன்மை அற்றவன் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. பித்து நிலையர் திருமணம் கூடாது. ஆனால், அந்தக் குழு வழக்கத்தில் அப்படி ஒன்று இருப்பின், செய்து கொள்ளலாம். இவை எல்லாம் போக ஒரு திருமணத்திற்கு மதவழி தகுதி என சிலவற்றை இந்துக்கள் பின்பற்ற வேண்டி இருந்தது (இன்றைய சட்டத்திற்கு முன்புவரை)
Labels:
இந்திய மதமும் சட்டமும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)