சனி, 27 நவம்பர், 2010

நிருபர்களை தகாத வார்த்தையில் திட்டிய அதிபர்

நிர்வாண மாடல் அழகியை திருமணம் செய்துள்ள பிரான்சு அதிபர் நிகோலஸ் சர்கோசிக்கு ஆட்சி நிர்வாகத்திலும் ஏராளமான சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. ஓய்வு வயதை உயர்த்தியதால் கடும் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த நிலையில், `கராச்சிகேட்' உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. இது தொடர்பாக, நிருபர்கள் அவரிடம் கேள்வி கேட்டபோது மிகவும் ஆத்திரம் அடைந்தார்.

புகைப்படக் கருவி முன் தற்கொலை செய்த இளைஞன்

ஜப்பானிய இளைஞர் ஒருவர் இணையத்தள புகைப்படக் கருவி முன் தற்கொலை செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கனடா தமிழருக்கு ஐந்து வருட சிறை

தனது மகளையும் மகளின் காதலனையும் வானால் மோதிக் கொல்ல முயற்சி செய்தமைக்காக 47 வயதான செல்வநாயகம் செல்லத்துரை என்பவருக்கு 5 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மாரடைப்பு வராமல் தடுக்க மஞ்சள்..!

“மாரடைப்பு வராமல் தவிர்க்க, மஞ்சள் போதும்’ என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.கனடாவில் உள்ள, சுவாசக் கோளாறு ஆராய்ச்சி மைய நிபுணர்கள் இது தொடர்பாக ஆய்வு செய்து, இதை கண்டுபிடித்துள்ளனர்.

யாழில் தினசரி பத்திரிகை அலுவலகம் நேற்று இனந்தெரியாதோரால் ஆக்கிரமிப்பு

யாழ்ப்பாணத்திலுள்ள தினக்குரல் தினசரிப் பத்திரிகை அலுவலகம் நேற்று அதிகாலை இனந்தெரியாதோரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியது.
நேற்று அதிகாலை வான் ஒன்றில் கட்டைகள், கத்திகள், வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்திறங்கிய ஆயததாரிகள் இந்த அலுவலகத்தை முற்றுகையிட்டிருந்தனர்.

கொரியாவுக்குள் நுழைந்தால் நடப்பதே வேறு

தென்கொரியா, தனது மக்களை போர்க் கேடயமாக பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டியுள்ள வடகொரியா, "அமெரிக்காவின் "ஜார்ஜ் வாஷிங்டன்,' கொரியாவின் மஞ்சள் கடல் எல்லைக்குள் வந்தால் அதன்பின் என்ன நடக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது' என்று, புதிய மிரட்டல் விடுத்துள்ளது. வடகொரியா அடுத்தடுத்து விடுத்துவரும் எச்சரிக்கைகளால் தென்கொரிய மக்களிடையே மேலும் மேலும் கோபம் அதிகரித்து வருகிறது.

யானை முகத்துடனும் தும்பிக்கையுடனும் பிறந்த பன்றிக்குட்டி (படங்கள் இணைப்பு)

சீனாவில் யானை முகத்துடனும் தும்பிக்கையுடனும் பிறந்த பன்றிக்குட்டியை  படங்களில் காணலாம்.

இரண்டு முகங்களுடன் பிறந்த பன்றிக்குட்டி (படம் இணைப்பு)


சீனாவில் இரண்டு முகங்கள் நான்கு கண்களுடன் பன்றிக்குட்டி பிறந்துள்ளதை காணலாம்.

குரங்கைப்போல் பிறந்த பன்றிக்குட்டி (படங்கள் இணைப்பு)

சீனாவில் குரங்கைப்போல் முகவடிவு கொண்டு பிறந்த பன்றிக்குட்டியை படங்களில் காணலாம்.

இரண்டு வாய்களுடன் பிறந்த பன்றிக்குட்டி (படங்கள் இணைப்பு)

சீனாவில் இரண்டு வாய்களுடன் பிறந்த பன்றிக்குட்டியை  படங்களில் காணலாம்.

புலிகளின் கடிதம்

மாவீரர்நாள் அறிக்கை
26-11-2010
தமிழீழம்

எமது அன்புக்கும், மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே,

தேச விடுதலை என்ற அதியுயர் இலட்சியக் கனலை நெஞ்சில் சுமந்து, மரணத்தை வெற்றிகொண்டு, எமது இதயங்களில் நித்திய வாழ்வுபுரியும் மாவீரர்களை நினைவேந்தல் செய்யும் தேசிய மாவீரர் வாரம் இது.

நடிகர் ஆர்யாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

‘தான் ஒரு மலையாளி என்றும், அதன் காரணமாக பெருமைபடுவதாகவும், தமிழ்நாட்டு மக்களை விட கேரள மக்கள் நல்ல ரசிப்பு தன்மை கொண்டவர்கள் என்றும், தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் கோடிகளை குவிக்கலாம் என்றும்’ ஆர்யா பேசியதே புயலை கிளப்பியிருக்கிறது.

ஒபாமாவின் உதட்டில் காயம்: 12 தையல்கள்......(படங்கள் இணைப்பு)

கூடைப்பந்து போட்டியின் போது அமெரிக்க அதிபர் ஒபாவின் உதட்டில் லேசாக அடிபட்டதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவரின் உதட்டில் டாக்டர்கள் 12 தையல் போட்டுள்ளனர். இது குறித்து அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் ரூபர்ட்ஸ் கிப்ஸ் கூறுகையில்,

வட பகுதியில் சிங்கள மக்கள் குடியேறுவதில் தவறென்ன?

கொழும்பில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஆதிக்கம் செலுத்த முடியுமானால் வடக்கில் சிங்கள மக்கள் குடியேறுவதை தவறு என எப்படிக் கூறமுடியும் என தமிழ்க் கட்சிகளின் அரங்கத்திடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கேள்வியெழுப்பி உள்ளார்.

ரிஸானாவுக்காக அமைச்சர் ரிஷாத் பதியுதீன்

நான்கு மாத குழந்தையை கொலை செய்தார் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ரிஸான நபீக்கிற்காக மன்னிப்புக் கோர அமைச்சரவை அமைச்சர் ஒருவர் ரியாத்திற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தான் குறித்த குழந்தையின் தந்தையார் நைப் ஜிஷியான அலாப் அல்-ஒட்டாபியிடம் சென்று மனித அபிமான அடிப்படையில் பணிப்பெண் ரிஸானாவிற்கு மன்னிப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளவுள்ளதாக வர்த்தக மற்றும் முதலீட்டு விவகார அமைச்சர் ரிஷாத் பதியுடீன் தெரிவித்துள்ளார்.

புரூஸ் லீ பிறந்த நாள்

அமெரிக்காவில் பிறந்த குங்ஃபூ விங் சுன் என்ற தற்காப்புக்கலை நிபுணரும் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரும் ஆவார். ஜீட் குன் டோ என்ற உள்ளொளித் தற்காப்புக்கலையைத் தோற்றுவித்தவர். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான தற்பாதுகாப்புக்கலை நிபுணர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவரது திரைப்படங்கள் காரணமாக மேற்கு நாடுகளில் சீனத் தற்பாதுகாப்புக்கலை தொடர்பில் அதீத ஆர்வம் ஏற்படமை குறிப்பிடத்தக்கது.

புஷ் எழுதிய புத்தகம் விற்பனையில் சாதனை

ஒபாமாவுக்கு முன்பு எட்டு ஆண்டுகளாக அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோர்ஜ் புஷ் தற்போது புத்தகம் எழுதும் பணியிலும் இறங்கிவிட்டார்.

தடம் மாறும் யாழ்ப்பாணம்


யாழ்ப்பாண நகரின் மத்தியில் எழிலுற தனக்கேயுரிய மிடுக்குடன் அமைந்திருக்கிறது அந்தப் பாடசாலை. அப்பிரபல பாடசாலையில் கல்வி கற்ற பலர் இன்றும் புகழ்பூத்த கல்விமான்களாக மிளிர்ந்து கொண்டிருக்கின்றனர். உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் கூட அந்தப் பாடசாலையில் பயின்றவர்கள் புகழ் பெறும் அளவிற்கு அப்பாடசாலையின் கல்வித்தரம் அன்றே மேலோங்கியிருந்தது. பல சீர் மிகு கல்வியாளர்களை உருவாக்க்கிய கலைக்கூடத்திற்கு தனிப்பட்ட அலுவல் ஒன்றின் நிமித்தம் அண்மையில் விஜயம் செய்த பாக்கியம் கிடைத்தது. அங்கு கல்வி கற்கும் ஆசிரியர் ஒருவரைச் சந்திப்பதற்காகவே சென்றிருந்தேன்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்கள் வைப்பிலிட்ட தொகையினை பட்டியலிட்ட ஜனாதிபதி

யுத்தத்தின் இறுதிக் காலகட்டத்தில் வன்னியிலிருந்து வவுனியாவுக்கு வந்த தமிழ் மக்கள் முகாம்களில் அமைக்கப்பட்ட வங்கிகளில் வைப்புச் செய்த பணம் மற்றும் நகைகளின் விபரங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தமிழ்க் கட்சிகளின் அரங்கத்துடனான சந்திப்பின்போது எடுத்துக்கூறியுள்ளார்.

இரு பெண்களைக் கொன்ற 19 வயது இளைஞனுக்கு மரணதண்டனை

இரு பெண்களை படுகொலை செய்து நபரொருவரை படுகாயப்படுத்திய குற்றச்சாட்டில் 19 வயது இளைஞன் ஒருவனுக்கு மரணதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்த சம்பவம் வட ஜப்பானில் இடம்பெற்றுள்ளது.

வடபகுதியில் கொள்ளையர்களால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதச் செயல்கள் மற்றும் கொள்ளைகள் என்பன அடிக்கடி இடம்பெற்று வருவது குறித்து ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தோம். இருந்தும் கூட அவை கட்டுக்கடங்கியதாகவோ அவற்றை தடுத்து நிறுத்த காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவோ தெரியவில்லை. இதனால், யாழ். மக்கள் சதா அச்சத்துக்கும் பதற்றத்துக்கும் மத்தியிலேயே வாழவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

காணாமல் போனோரை விடுதலை செய்வதாகக் கூறி மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் குழுவினர்

வாகரை பிரதேச செயலகத்தில் ஒரு சில கிராம சேவக உத்தியோகத்தர்கள் மூலமாக குழுவொன்று பொது மக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட பொலிஸ் குழுவினர் கொழும்பில் இருந்து வாகரைக்கு நேற்று வந்துள்ளனர்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல