திங்கள், 3 ஜனவரி, 2011

ஐஸ்வர்யா ராய் பெயரில் புதிய கொய்யாப் பழம்

நடிகை ஐஸ்வர்யா ராயைக் கெளரவிக்கும் வகையில் தான் புதிதாக உருவாக்கிய கொய்யாப் பழத்திற்கு அவரது பெயரைச் சூட்டியுள்ளார் உ.பியைச் சேர்ந்த தோட்டக்கலை நிபுணரான ஹாஜி கலிமுல்லா கான் என்பவர்.

யாழில் பெண்கள் வீடுகளில் நடமாட முடியாத நிலை

யாழ். குடாநாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற ஆட்கடத்தல்கள் படுகொலைகள், காணாமல் போனமை தொடர்பாக உயர்மட்ட மகாநாடு ஒன்றுக்கு தான் அழைப்பு விடுத்திருப்பதாக யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

முன்னாள் புலிகள் சமூகத்தில் கலப்பதில் 'சிக்கல்'

முன்னாள் விடுதலைப் புலிகள் சமூகத்தில் மீண்டும் கலப்பதில் தாம் சில பிரச்சனைகளை சந்தித்து வருவதாக இலங்கை அதிகாரிகள் கூறுகின்றனர்.

வெளிநாட்டு தம்பதியினரின் ஆலோசனைப்படி கடனட்டை மோசடி செய்த இலங்கையர்கள் இருவர் கைது

போலி கடனட்டைகளைப் பயன்படுத்தி கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டு வந்த இரு இளைஞர்கள் காலியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஏராளமான போலி கடனட்டைகளையும், கைத்துப்பாக்கியொன்றையும் காலி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

வடமராட்சியிலேயே அதிகளவான கொலை, கொள்ளை, கடத்தல் சம்பவங்கள் பதிவு

யாழ்.மாவட்டத்தில் கடந்த வருடம் அதிகளவான கொலை, கொள்ளை, கடத்தல் சம்பவங்கள் வடமராட்சிப் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளன.

இணையப் பக்கங்களை பி.டி.எப். ஆக மாற்ற...

பல வேளைகளில், நாம் பார்க்கும் இணையப் பக்கங்களை, அவை தரும் தகவல்களுக்காக, சேவ் செய்திட விரும்புவோம். அனைத்து பிரவுசர்களும் இதற்கான வசதியைத் தருகின்றன. பிரவுசரின் எடிட் மெனுவில் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில்,சேவ் அல்லது சேவ் அஸ் தேர்ந்தெடுத்து பைலை பதிந்திடலாம்.

மனைவி மீது சந்தேகம் காவலுக்கு மின் வேலி

மனைவி மீது சந்தேகம் வந்ததால் அவருக்கு மின் வேலி பாதுகாப்பு போட்டார் கணவர். அமெரிக்காவை சேர்ந்தவர் ஆலன் பிளெச்சர். இவருக்கு வயது 51.

இணையம் வழி உரையாடலுக்கு

இணையம் வழி உரையாடலில் ஸ்கைப் குறுகிய காலத்தில் பிரபல்யம் பெற்று ஒரு புரட்சியை ஏற்படுத்தியது நீங்கள் அறிந்ததே.

அதேபோன்று இணையம் வழி உரையாடலில் மற்றுமொரு பரிணாம வளர்ச்சியே ooVoo ஊவு என்பது விண்டோஸ் மற்றும் மேக் இயங்கு தளங்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள ஸ்கைப் போன்ற நிகழ் நேர இணையம் வழி உரையாடல் சேவையாகும்.

எச்சில் இலைகள் மீது உருளும் தலித் மக்கள்

மங்களூர் அருகே உள்ள ஒரு கோவிலில், பார்ப்பனர்கள் சாப்பிட்டு முடித்த எச்சிலைகளின் மேல் தலித்துகளும், மற்ற சாதியினரும் உருண்டு செல்கிறார்கள். அப்படி சென்றால் அவர்களுக்கு தோல் சம்பந்தப் பட்ட வியாதிகள் ஏதும் வராது என்பது நம்பிக்கையாம்.

160 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் சூப்பர் துப்பாக்கி

அமெரிக்க விஞ்ஞானிகள் 160 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு இலக்கை தாக்க கூடிய ஒரு சூப்பர் துப்பாக்கியை உருவாக்கி இருக்கிறார்கள். இதில் இருந்து கிளம்பும் குண்டு ஒலியின் வேகத்தை விட 8 மடங்கு அதிக வேகத்தில் பாயக்கூடியது. இந்த துப்பாக்கியை வர்ஜீனியாவில் உள்ள நேவல் சர்பேஸ் வார்பேர் செண்டரில் அமெரிக்க ராணுவம் சோதித்து பார்த்தது. இந்த துப்பாக்கியில் இருந்து புறப்படும் குண்டு 160 கி.மீ. தூரத்தையும் 5 நிமிடத்தில் கடந்து இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.

பள்ளியில் பாடம் நடத்துகிறது ரோபோ

தென் கொரிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறது ரோபோ. கொரிய அறிவியல் தொழில்நுட்ப மையம் (கே.ஐ.எஸ்.டி.) மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தரக்கூடிய நவீன ரோபோவை தயாரித்துள்ளது. வெள்ளை நிறத்தில் முட்டை வடிவில் இருக்கும் அந்த ரோபோ, ஒரு மீட்டர் உயரம் கொண்டது. அதில் டிவி திரை போல முகப் பகுதி உள்ளது. வகுப்பறை முழுவதும் சுற்றி வரும் வகையில் சக்கரங்கள் மற்றும் கைகள், தலையை அசைக்கும் வசதி உள்ளது.

கையில் வளர்க்கலாம் பெண்ணின் கருமுட்டை

புற்றுநோய் சிகிச்சை பெறுவதால் மலட்டுத்தன்மை அடையும் பெண்களுக்கு கருப்பை திசுவை கையில் செலுத்தி பாதுகாத்து பிறகு தேவைப்படும்போது கருமுட்டை உருவாக்கும் நவீன சிகிச்சையை டெல்லி ராணுவ மருத்துவமனை ஆராய்ச்சி டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுபற்றி டாக்டர் நரேஷ் குமார் கூறியதாவது:

விஞ்ஞானிகள் உருவாக்கிய எலி

பறவையைப் போல கீச்சிடும் எலியை ஜப்பானிய விஞ்ஞானிகள் மரபு வழி பொறியியல் (Genetic Engineering) மூலம் உருவாக்கியுள்ளனர்.

"CCTV" கண்காணிப்பு கருவியால் வசமாக சிக்கிய கொள்ளையர்கள்

அதிகாலை வேளையில் உப தபால் நிலையமொன்றில் நுழைந்து தபால் நிலைய அதிகாரியொருவரை கத்தியால் குத்தி காயப்படுத்திவிட்டு அங்கிருந்த பணம் மற்றும் சிகரெட்டுகளை கொள்ளையிட்டு சென்ற இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பிரித்தானியாவில் வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

சன் சீ கப்பலின் நான்கு பணியாளர்கள் தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது!

சன் சீ கப்பல் பணியாளர்களில் நான்வர் கனடாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என அந்த நாட்டு எல்லைப் பாதுகாப்பு முகவர் நிலையம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

கதிர்காமத்திற்கு பயணம் செய்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த இ.போ.ச.ஊழியர்கள் மீது புத்தள பகுதியில் வைத்து சிலர் தாக்குதல்!

கதிர்காமத்திற்கு பயணம் செய்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த இ.போ.ச.ஊழியர்கள் மீது புத்தள பகுதியில் வைத்து சிலர் தாக்குதல் நடத்தியதுடன் அந்த பஸ்ஸின் கண்ணாடிகளை உடைத்தும் சேதப்படுத்தியுமுள்ளனர்.

இதுபற்றி தெரியவருவதாவது:

புலம் பெயர்ந்த தமிழர் முகாமில் சத்யராஜ் மகள் திவ்யா பயிற்சி!

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் என்பது மாதிரி சந்தோஷத்திலிருக்கிறார் சத்யராஜ். மகள் திவ்யா இன்றைய தேதியில் ஒரு மருத்துவர். அதுவும் சென்னையில் புகழ்பெற்ற ஒரு மருத்துவமனையில் சேர்ந்து பணியாற்ற ஆரம்பித்திருக்கிறாராம்.

2011 இல் 11.11 மணிக்கு பிறந்த அதிசய குழந்தை

2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி காலை 11.11 மணிக்கு குழந்தையொன்று பிறந்த அதிசய சம்பவம் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது.

முடிதிருத்துநர்கள் தினம்

கியுபா நாட்டில் ஹவானா நகரில் முடிதிருத்துநர்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது பழைய சதுக்கத்தில் 300 முடிதிருத்துநர்கள் கூடி நின்று மக்களுக்கு காலை முதல் மாலை வரை முடிவெட்டினார்கள்.

9 வயது சிறுமிக்கு முத்தம் கொடுத்த இந்தியர் மீது வழக்கு

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் துபாய் நகரில் தொழிலாளியாக வேலை செய்பவர் ஒரு இந்தியர். இவர் ஒரு கட்டிடத்தில் லிப்டில் சென்றபோது, அதே லிப்டில் 9 வயது சிறுமி ஒருத்தியும் இருந்தாள். அந்த சிறுமிக்கு அவர் உதட்டில் முத்தம் கொடுத்தார். லிப்டு தரைத்தளத்துக்கு வந்ததும், அந்த சிறுமி கத்தத்தொடங்கினாள். இதை பார்த்த அந்த தொழிலாளி ஓட்டம் பிடித்தார். ஆனால் அருகில் இருந்தவர்கள் அவரை மடக்கி பிடித்தனர்.

த.தே.கூட்டமைப்புடனான ஜனாதிபதியின் பேச்சுவார்த்தை (2)

(11.12.2010 வெளியான டெய்லி மிரர் ஆங்கில நாளிதழுக்காக சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது.)


அழைப்பு

இது சம்பந்தன் இலங்கைக்கு திரும்பியதால் சாத்தியமானது. ஜனாதிபதி ராஜபக்ஷ த.தே.கூ. தலைவருக்கு பேச்சுவார்த்தைக்கான ஒரு அழைப்பை அறிவுபூர்வமாக விடுத்தார். இந்த அழைப்பின் பின் சிறப்பம்சமாக, சம்பந்தனுடன் மட்டும் பேசவிரும்பியமை அமைந்தது. தமிழ்தேசிய கூட்டமைப்பு கட்சியாக அழைக்கப்படவில்லை. சம்பந்தன் மட்டும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் 'ஒருவருடன் ஒருவர்' என்ற வகையில் பேச அழைக்கப்பட்டார்.

த.தே.கூட்டமைப்புடனான ஜனாதிபதியின் பேச்சுவார்த்தை (1)

(11.12.2010 வெளியான டெய்லி மிரர் ஆங்கில நாளிதழுக்காக சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது.)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன், புதுடில்லியில் உள்ள வைத்தியசாலையில் டிசெம்பர் 7 ஆம் திகதி இருதய சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். சத்திரசிகிச்சை வெற்றியாக முடிந்ததாக த.தே.கூ. வட்டாரங்கள் தெரிவித்தன.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல