வெள்ளி, 21 மார்ச், 2014

239 பயணிகளை பத்திரமாக மீட்க விமான கடத்தல்காரர்களுடன் மலேசிய அரசு ரகசிய பேச்சு? பரபரப்பு தகவல்கள்

ஜார்ஜ் டவுன்:மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கடந்த 8ம் தேதி பீஜிங் சென்ற விமானம் மாயமான பிறகு பலரும் பலவித சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், விமான கம்ப்யூட்டரில் நன்கு தொழில்நுட்பம் தெரிந்த யாரோ, விமான பாதையை மாற்றி பதிவு செய்துள்ளனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதற்கேற்ப விமான பைலட் அகமது ஜகாரியின் வீட்டில் சோதனை செய்த போது, விமானம் ஓட்ட பயிற்சி பெறும் சிமுலேட்டர் கருவியில் சில தகவல்கள் அழிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. அழிக்கப்பட்ட அந்த தகவல்களை, அமெரிக்க உளவு பிரிவு எப்.பி.ஐ. உதவியுடன் மலேசிய அதிகாரிகள் இப்போது மீட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நக்ஸல் பிரச்சினைக்குத் தீர்வு என்ன?

சமூக சேவகர் பாபா ஆம்தே, 1973-ல் மகாராஷ்டிரத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள ஹேமல்காசா கிராமத்தில் மக்களுக்குத் தொண்டு செய்ய சிறு உதவி மையத்தைத் தொடங்கினார். அந்தப் பகுதியில் மரியா கோண்ட் என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்த மக்கள்தான் அதிக எண்ணிக்கையில் வசித்துவருகின்றனர். அவர்கள் அனைவரும் வறுமையில் வாடுகின்றனர். காடுகளிலிருந்து அவர்கள் சேகரித்துத்தரும் உலர் பழங்கள், காய்கள், இலைகள், மரப்பட்டைகள், மரப்பிசின்கள் போன்றவற்றை வியாபாரிகள் மிகமிகக் குறைந்த விலைக்கு வாங்கி, நகர்ப்புறங்களில் விற்றுக் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். வனத் துறை அலுவலர்களும் இதர அரசுத் துறை அலுவலர்களும்கூட அந்த மக்களின் உழைப்பைச் சுரண்டத் தவறவில்லை.

ஐன்ஸ்டைன்: ஒளியின் கடவுள்

ஒளிக்கு இணையாகப் பயணித்தோம் என்றால், அப்போது ஒளி எப்படித் தோற்றமளிக்கும்?’ என்ற சந்தேகம் 16 வயது ஐன்ஸ்டைனுக்கு ஏற்பட்டது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தச் சந்தேகம் அவர் மனதைப் போட்டு அரித்துக்கொண்டிருந்தது.

இந்த வாரம் ஒன்றை கற்போம் -3

இன்று மிக முக்கியமாக கருதப்படும் ஒன்று பிறப்பு / இறப்பு சான்றிதழ். சில பேரிடம் இது போன்ற சான்றிதழ்கள் தொலைத்திருக்க வாய்ப்புண்டு. அதே போல் இந்த சான்றிதழை பெற மாநகராட்சி அலுவுலகத்தில் இனிமேல் நீங்க அலைய வேண்டியதில்லை. இதை இனிமேல் ஆன்லைனில் பெறலாம் அதுவும் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் பிடிஎஃப் காப்பியில் சேவ் கூட செய்யலாம். உங்களிடம் ஏற்கனவே சான்றிதழ் இருந்தாலும் இந்த ஈ காப்பியை டவுன்லோட் செய்து வைத்து கொண்டால் போதும் பிரின்ட் அவுட் செய்து கொள்ளலாம்.

இந்த வாரம் ஒன்றை கற்போம் -4

இந்த வாரம் ஒன்றை கற்போம் -வரிசையில் இன்று மெமரி கார்டின் ஸ்பீடை கண்டுபிடிப்பது / லாக் செய்யவும். மற்றும் அழித்த டேட்டாவை மீட்டு எடுப்பது எப்படி என்பதைத் தெரிந்து கொள்வோமா?.

இந்த வாரம் ஒன்றை கற்போம் – 2

டாங்கில் அல்லது யூ எஸ் பி ஸ்டிக் இன்டர்னெட்டை அன்லாக் செய்வது எப்படி?

இந்த வாரம் ஒன்றை கற்போம் – 5

இந்த வாரம் ஒன்றை கற்போம் -வரிசையில் இப்போது- உங்கள் மொபைல் ஃபோன் / டேப்ளட் பேட்டரியை பாதுகாப்பது / இலவச பேட்டரி மீட்டர் சாஃப்ட்வேர் எப்படி?என்று பார்ப்போமா?சரியான ஜோடியை தேர்ந்தெடுககவிடில் வாழ்க்கை எப்படி சூனியம் ஆகுமோ அதே தான் பலரின் மொபைல் ஃபோன் வாழ்கை. எப்ப பார் சுகர் பேஷன்ட் மாதிரி சார்ஜரோடு திரிஞ்சிகிட்டு இருப்பாங்க. இது ஏன்? – முதல் முதல் ஃபோன் வாங்கின உடனே ஃபோனை ஃபிளைட் மோட் அல்லது ஆஃப் செஞ்சிட்டு தொடர்ந்து 6 மணி நேரம் மினிமம் சார்ஜ் பண்ணனும். அதுக்கு அடுத்து முதல் 15 – 30 நாட்கள் பேட்டரியை 80% உபயோகபடுத்தாம சார்ஜ் ஏற்றவே கூடாது. ஏன்னா அப்படி செஞ்சா பேட்டரியோட சைக்கிள் சரியா வேலை செய்யாம பேட்டரி அரை குறை சார்ஜ் தான் வாழ்க்கை முழுசா தரும்.

மார்பகங்களை பெரிதாக்க வெசலீனை ஏற்றிக்கொண்ட பெண் பரிதாப மரணம்!

தனது மார்பகங்களை பெரிதாக்க சுயமாக வெசலீன் களிம்பை ஏற்றிக்கொண்ட பெண்ணொருவர் நுரையீரலில் இரத்தம் உறைந்து கட்டியாகி பரிதாபகரமாக மரணத்தைத் தழுவிய சம்பவம் ஆர்ஜென்ரீனாவில் இடம்பெற்றுள்ளது.

பாசிப்பருப்பு வடை

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - 1 கப்
அரிசி மாவு - 1/2 கப்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
வரமிளகாய் - 5
இஞ்சி - 1/2 இன்ச்
பூண்டு - 5 பல்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)

இ மெயிலை இனி நீங்களும் டிக்டேட் செய்யலாம்!

நீங்கள் சொல்ல சொல்ல இமெயில் தானாகவே எழுதப்பட்டால் எப்படி இருக்கும் ? இது ஒன்றும் சாத்தியமாகாத மாயம் இல்லை. பேச்சறியும் மென்பொருள் ( ஸ்பீச் ரிகக்னிஷன் சாப்ட்வேர்) கைவசம் இருந்தால் , நாம் சொல்வதை அது புரிந்து கொண்டு எல்லாவற்றையும் வாக்கியங்களாக எழுதித்தரும். இப்போது இந்த வசதியை உங்கள் உலாவிக்கே ( பிரவுசர்) கொண்டு வந்திருக்கிறது டிக்டேஷன்.இயோ இணையதளம்.

தகவல்களை திருடும் பறக்கும் ட்ரோன்கள்……! (Video)

கணனியில் நிறைய விஷயம் நம்ம இல்லாத போது காணாம போகுதுனு நிறைய பேர் இப்ப முக்கியமான தகவல்களான வங்கி அக்கவுன்ட் எண் / கிரடிட் கார்ட் எண் மற்றும் பல விஷயங்களை தன் டேப்ளட் அல்லது மொபைல் ஃபோன்ல வைக்கிறாங்க அந்த வகையில இப்ப அதுக்கும் ஆப்பு.

இந்த நாயின் விலை 12 கோடி ரூபாய்!

சீனாவில் நடந்த நாய் கண்காட்சியில் திபெத்திய வேட்டை இன நாய் ஒன்று ரூ.12 கோடிக்கு விலை போனது. இதன் மூலம் உலகிலேயே காஸ்ட்லியான நாய் என்ற பெருமை அதற்கு கிடைத்துள்ளது.கடந்த 2011ம் ஆண்டு நடந்த கண்காட்சியில் இதே வகை நாய் ரூ.9 கோடிக்கு விலை போனது. இந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. மத்திய ஆசியா மற்றும் திபெத் பழங்குடியின மக்களால் வேட்டைக்காக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த நாய்கள், மற்ற இனங்களை விட மிகவும் விசுவாசம் உள்ளவை என கூறப்படுகிறது –

ஈழப் போரின் இறுதி நாட்கள் (26)

புலிகளின் போன் தொடர்பு ஸ்டைலை பிடித்தது உளவுத்துறை!

அத்தியாயம் 26

…கொழும்புவில் எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி நடத்தியவர் மூலம் விடுதலைப்புலி இணைப்பாளர்களில் ஒருவரை பிடித்துவிட்ட இலங்கை உளவுத்துறை, அவருக்கு வந்த ‘ஆர்மி அங்கிளின்’ போன் அழைப்பை ட்ரேஸ் செய்தபோது, ‘ஆர்மி அங்கிள்’, கொழும்புவில் ரத்மலானவுக்கும், ஹொமகமவுக்கும் இடையிலுள்ள ஏரியா ஒன்றில் இருந்து பேசுவது தெரியவந்தது. -கடந்த அத்தியாயத்திலிருந்து…

இராணுவத்தில் இணைந்த பெண்களை மானபங்கபடுத்தும் தமிழ் சமூகமும் ஊடகங்களும்

பேருந்தில் தனியாக ஒரு பெண் சென்றாலே உரசி பார்க்கும் சமூகம் இது. இந்த சமூகத்தில், அதீதமான முறையில் ஆணாதிக்கமும் ஒடுக்கியாளும் மனனோபாவமும் நிலவும் இராணுவத்தில் பெண்கள் எதிர்நோக்கும் ஒடுக்குமுறையை சமானியர்களால் அத்தனை இலகுவாக கற்பனை செய்திட முடியும் என்று நான் நினைக்கவில்லை. இராணுவத்தில் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் இதே நிலை தான்.

கிரிமியா நமக்குச் சொல்வது…

சோவியத் யூனியன் உடைவுக்குப் பின்னர் அமெரிக்காவும் அதன் நேசநாடுகள் கூட்டணியும் உலக ஒழுங்கை பெருமளவுக் குத் தாங்களேதான் கையாள்வதாக நினைத்துச் செயற்பட்டு வந்தன. பயங்கரவாதம் எது என்று தீர்மானிப்பதாகட்டும், மனித உரிமை மீறல்கள் எவை என்று தீர்மானிப்பதாகட்டும், எங்கே ஆட்சி கவிழ்க்கப்பட வேண்டும் அல்லது ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று தீர்மானிப்பதாகட்டும், எந்தெந்த நாடுகளைப் பிரிப்பது எந் தெந்த நாடுகளை ஒன்றுசேர்ப்பது, அதற்காக எந்தெந்த நாட்டின் வீதிகளில் மக்களை இறக்கி ஆர்ப்பாட்டங்களை செய்ய வைப்பது என்பதெல்லாம் தங்களுடைய நிகழ்ச்சி நிரலுக்குரியவை என்றே அவை நடந்து வந்தன. இந்தியாவும் கூட இந்த மேற்கு நாடுகளின் வல்லபங்களுட னேயே தன்னை இணைத்துக் காண்பித்துக் கொள்வதான போக் கும் சமீபகாலம்வரை இருந்தது.

இன்னொரு வரலாற்றுத் தவறு!

மீண்டும் ரஷ்யாவின் ஒரு பகுதியாகிறது கிரைமியா. உக்ரைனிடமிருந்து பிரிந்து, சுதந்திரப் பிரகடனத்தை அறிவித்த கிரைமியா, பொதுவாக்கெடுப்பில் 96.8% ஆதரவோடு ரஷ்யாவுடன் இணையும் முடிவை எடுத்திருக்கிறது.

பள்ளி மாணவர்களிடையே பரவும் ‘ஜாதிக் கயிறு’ கலாச்சாரம்!

 பள்ளி மாணவர் ஒருவர் கையில் ஜாதிக் கயிறு
சமீபத்தில் மூன்று காட்சிகள் என் கண்ணில்பட்டன. ஆசிரியராகிய எனக்கு அது பேரதிர்ச்சியாக அமைந்துவிட்டது. இதை உன்னிப்பாகப் பார்க்கும் யாருக்கும் பேரதிர்ச்சியாகத்தான் அமையும். உம். இந்தப் பிள்ளைகள் வாழ்க்கை என்ன ஆகப்போகிறதோ? என்று நீங்கள் சொல்லத் தோன்றும்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல