வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

அம்மா பகவான் சாயிபாபா எதிர்ப்புப் பிரசாரப் பாடல்

உழைக்காத ஊதாரி இவன் அல்லவா? – இந்த
எருமைக்கு செருப்பாலே பதில் சொல்லவா? -மு.மயூரன்
எனது ஊரான திருகோணமலையிலும் இங்கே கொழும்பிலும் இளைஞர்களைக் குறிவைத்து அதி வேகமாக ஒரு வியாதிபோல இந்த அம்மாபகவான் மதக்குழு பரவி வருகிறது. இளைஞர்களை மொத்தமாக மூளைச்சலவை செய்து அவர்களது பணத்தையும் சிந்திக்கும் ஆற்றலையும் இவ்வமைப்புச் சுரண்டி வருகிறது. கண்ணுக்கு முன்னால் நடக்கும் இந்த அநியாயத்தை சகித்துக்கொண்டு இருக்க முடியவில்லை.

பாசிச ஆட்சியைத் தான் எதிர்த்து ஒன்றும் செய்ய நாதியில்லை, ஆகக்குறைந்தது இந்த அநியாயத்தையாவது எதிர்த்து முடிந்ததைச்செய்வோம் என்று நண்பர்களோடு பல்வேறு செயற்பாடுகளைத் தொடக்கியுள்ளோம். அதன் ஒரு பகுதியாக, எந்த இளைஞர்களை இவ்வமைப்புக் குறிவைத்து விழுங்குகிறதோ, அந்த இளைஞர்கள் அதிகம் புழங்கும் இடங்களான இணையச் சமூக வலையமைப்புக்களில் நண்பர்கள் தொடர்ச்சியான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு உதவும் முகமாக இப்பாடல் தயாரிக்கப்பட்டது.

அம்மா பகவான் பக்தர்களைக் கவரக்கூடிய மெட்டும் பாடலும் அவர்களுடைய பக்திப்பாடல்களைத்தவிர வேறெதுவாக இருக்கமுடியும்? எனவே அவர்களது பாடலொன்றின் மெட்டுக்கு இப்பாடல் எழுதப்பட்டுள்ளது.

குரு என்கிறோம்
கல்கி இவர் என்கிறோம்
பரமாத்ம அவதாரம் இது என்கிறோம்

அவதாரம் நடமாடும் திருமண்ணிலே – அட
அநியாயம் அதிகாரம் தொடர்கின்றதேன்?
பகவான்கள் சொகுசாக வாழும் போதிலே – பலர்
பசியோடும் வலியோடும் சாகநேர்வதேன்?

எளியோர்கள் துயர் தீர்க்கப் போராடினான் -யேசு
வலியோடு வதை தாங்கிக் கொலையாகினான்
நபிநாதன் சனத்தோடு சேர்ந்து வாழ்ந்தவன் – புத்தன்
தெருவெங்கும் பிச்சைதான் வாங்கி உண்டவன்

பலகோடிச் செலவோடு மாளிகைகளாம் -இவன்
பட்டாடை படுக்கைக்கு லட்சலட்சமாம்
உழைக்காத ஊதாரி இவன் அல்லவா? – இந்த
எருமைக்கு செருப்பாலே பதில் சொல்லவா?

மு.மயூரன்

மாட்றவரைக்கும் சாமியார் மாட்டிக்கிட்டா போலிச்சாமியாரா?

அந்தச் சாமியார் குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலமாகிருந்தார். அதுவும் பெண்கள் மத்தியில் மிகப் பிரபலம். பெண்களின் மத்தியில் மிகப்பிரபலமாவதற்குக் காரணம் என்ன?ஒவ்வொரு சாமியாருக்கும் ஒரு ‘சிறப்பு தகுதி’ (Speciality) இருப்பது போல் இவருக்கும் ஒரு ‘சிறப்பு தகுதி ’ இருந்தது.

அது குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தைவரம் அளிப்பது.

நேரு குடும்பம்


படத்தின் மீது அழுத்தி பெரிதாக்கிப் பார்க்கவும்

கான் (Khan) காந்தியான (Gandhi) கதை

ஃப்ரோஸ் காந்திக்கும் இந்திராகாந்தி திருமணம்
இத்திருமணம் 26.03.1942 இல் அலகபாத் நகரில் நடைபெற்றது
 
தற்போதைய நிலமையில் கான் (KHAN) என்ற பெயர் அடையாளம் அமெரிக்கர்களுக்கு ஒரு அலர்ஜியான வார்த்தை என்பது உலகம் அறிந்த உண்மை. அது ஒரு புறம் இருக்க இந்திய வரலாற்றில், இந்தியாவின் நேரு பரம்பரைக்கு காந்தி என்ற அடையாளம் யாரால் வலிந்து கொடுக்கப்பட்டது? எப்படி நேரு என்ற குடும்பப்பெயர் காணாமல் போய் காந்தி எனும் பெயர் இடத்தைப் பிடித்துக்கொண்டது? இதுவரையில் அதற்கு ஒரு தெளிவான விளக்கம் கிடையாது.

அதுபற்றி ஒரு சிறு குறிப்பு....

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல