ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

ஜெ.ஜெ! ஜெயிலில் ஜெயலலிதா

நீதிமன்றில் ஜெயலலிதா

காலை 10.40 மணிக்கு நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்ஹா பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு வந்தார். சரியாக பகல் 11.20 மணிக்கு இருக்கையில் அமர்ந்த நீதிபதி, அங்கிருந்த ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரிடம் உங்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. அது குறித்து ஏதாவது கருத்து தெரிவிக்க விரும்புகிறீர்களா? என்று கேட்டார். அதற்கு 4 பேரும், நாங்கள் குற்றவாளிகள் அல்ல என்று பதில் அளித்தனர்.

ஜெயலலிதாவின் தாயார் சந்தியா மைசூர் கோர்ட்டில் சந்தித்த வழக்கு!

மைசூர்: சொத்து குவிப்பு வழக்கை, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில், ஜெயலலிதா சந்தித்தது போன்று, 55 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவும், கர்நாடக மாநிலம் மைசூரு நீதிமன்றத்தில், ஒரு வழக்கை சந்தித்துள்ளார்.

அம்மாவுக்காகப் பறிபோன 14 உயிர்களின் பட்டியல்....!

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் சிறைவாசத்தால் அதிர்ச்சியிலும், துக்கத்திலும் 14 பேர் இதுவரை மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் தீக்குளித்தும் தற்கொலை செய்துள்ளனர்.
ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் மரணச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

ஐ.எஸ்.ஐ.எஸ்.மீதான தாக்­கு­தல்­களும் அரபு நாடு­களும்

ஈராக்கில் மட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்­பினர் மீது தாக்­குதல் நடாத்­தினால் போதாது சிரி­யா­விலும் அவர்கள் மீது தாக்­குதல் நடாத்த வேண்­டு­மென ஐக்­கிய அமெ­ரிக்கா உறு­தி­யாக நம்­பி­யது. ஆனால், சிரிய அதிபர் பஷார் அல் அஸாத் பத­வியில் இருப்­பதை விரும்­பாத சவூதி அரே­பியா, கட்டார், ஐக்­கிய அமீ­ரகம் போன்ற நாடுகள் அஸாத்­திற்கு எதி­ராகப் போராடும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் மீது தாக்­குதல் நடத்தத் தயக்கம் காட்­டின. ஐக்­கிய அமெ­ரிக்கா ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­பினர் மீது தாக்­குதல் நடத்தப் பல நாடு­க­ளையும் இணைத்த ஒரு பரந்த கூட்­டணி அமைக்கத் தீவிர முயற்சி எடுத்­தது. இதில் ஈரா­னையும் இணைத்துக் கொள்ள பெரு முயற்சி எடுக்­கப்­பட்­டது. ஆனால் ஈரான் மறுத்துவிட்­டது.

ஐயாயிரம் ரூபாய்க்கு தாய்லாந்துப் பெண்கள்

நுழைவுக் கட்­டணம் 8,500 ரூபாய்

பத்­ம­சிறி என்­பவர் கடந்த 15 ஆம் திகதி கொள்­ளுப்­பிட்­டியில் அமைந்­துள்ள முன்­னணி தாய் மசாஜ் நிலை­ய­மொன்­றிற்குச் சென்றார். கொள்­ளுப்­பிட்­டியில் அமைந்­துள்ள ஹோட்­ட­லொன்றின் இரண்டாம் மாடி­யி­லேயே அந்த மசாஜ் நிலையம் அமைந்­தி­ருந்­தது.

தமி­ழ­கத்­துக்கு ஏற்­பட்ட தலை ­கு­னிவு - விஜ­யகாந்த்

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெய­ல­லிதா முதல்வர் பத­வியில் இருக்­கும்­போதே தண்­டிக்­கப்­பட்­டதால் தமி­ழ­கத்­திற்கு தலை ­கு­னிவு ஏற்­பட்­டுள்­ள­தாக தே.மு.தி.க. தலைவர் விஜ­யகாந்த் தெரி­வித்­துள்ளார். இது தொடர்பில் அவர் வெளி­யிட்ட அறிக்­கையில்,

"தமி­ழ­கத்தின் முத­ல­மைச்­ச­ராக, ஜெய­ல­லிதா பத­வியில் இருக்­கும்­போதே தண்­டிக்­கப்­பட்­டதால், தமி­ழத்­திற்கு தலைக்­கு­னிவு ஏற்­பட்­டுள்­ளது. அதோடு மிகப் பெரிய பத­வியில் இருந்­தாலும், "சட்­டத்தின் முன் அனை­வரும் சமம்" என்­பது நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது. 'உப்பைத் தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும், தவறு செய்தால் தண்­ட­னையை அனு­ப­வித்தே தீர­வேண்டும்' என்ற இயற்­கையின் நிய­தியை யாராலும் மாற்ற முடி­யாது. இதற்கு தமி­ழ­கத்தின் முத­ல­மைச்சர் ஜெய­ல­லி­தாவும் விதி­வி­லக்­கல்ல.

நல்ல நேரம்… ராகு­காலம்… எம­கண்டம் பார்த்தும் ஜெ.வுக்கு எதி­ராக வந்த தீர்ப்பு

ஜெய­ல­லி­தா­விற்கு பாத­க­மான தீர்ப்­புதான் வரும் என்று ஏரா­ள­மான ஜோதி­டர்கள் அறி­வித்­தனர். ஒரு­சிலர் சாத­க­மான தீர்ப்பு வரும் என்று கூறினார். எனினும் ஜெய­ல­லி­தாவின் ஜோதிட நம்­பிக்கை பொய்த்­துப்­போ­னது என்­பதை இந்த தீர்ப்பு உணர்த்­தி­யுள்­ளது.

சிம்­ம­ரா­சிக்கு பாதகம்

தமி­ழக முதல்வர் ஜெய­ல­லி­தா­விற்கு சிம்ம ராசி, மிதுன லக்னம். அந்­த­வ­கை யில், ஜெய­ல­லி­தாவின் ஜாதகம் வலி­மை யும் வல்­ல­மையும் கொண்­ட­தாக இருக்­கி­றது. இன்­றைய கோச்­சார நில­வ­ரப்­படி ராசிக்­கு­ரிய குரு 6, 8, 12-ஆம் இடத்­துக்கு வரு­வது சிறப்பான அம்சம் கிடை­யாது. என்று ஜோதிட சிகா­மணி டி.வி.ராஜா­செந்­தில்­குமார் தெரி­வித்­தி­ருந்தார்.

பத­வி­யி­ழப்பு, அவ­மானம்

இதே­வேளை, சிம்ம ராசி, மக நட்­சத்­திரம் கொண்ட முதல்வர் ஜெய­ல­லி­தாவின் தசா புக்தி எப்­ப­டிப்­பட்­ட­தாக இருந்­தாலும் கோச்­சாரம் என்­பது சிம்ம ராசிக்கு எதிர் மறை­யா­கவே இருக்­கி­றது. சிம்ம ராசிக்கு 12-இல் குரு வந்­துள்ளார். இது மிகுந்த பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்தும். புரா­ணத்தில் ராவ­ணனின் ராசிக்கு குரு 12-இல் வந்த போது தான் ராவணன் பத­வி­களை இழக்க நேர்ந்­தது. முடி­து­றந்தான் ராவணன். அவ­மா­னப்­பட்டான் என்று "அதிர்ஷ்டம்' சி.சுப்­பி­ர­ம­ணியம் கூறி­யுள்ளார்.

சனியால் கெடுதல்

அதே­போ­லத்தான் 12-இல் உள்ள குரு, இந்த ராசிக்­கு­ரி­ய­வ­ருக்கும் கெடு­த­லை யும் அவ­மா­னத்­தையும் ஏற்­ப­டுத்­துவார். மேலும், சிம்ம ராசிக்கு கடந்த ஏழரை நாட்டு சனியில் எல்­லா­வி­த­மான யோகங் களையும் கொடுத்­து­விட்டார். அடுத்து வரும் சனிப்­பெ­யர்ச்சி, கொடுத்த யோகங்­க­ளுக்கு எதிர்­ம­றை­யா­கத்தான் கொடுப்பார். இந்த சனிப்­பெ­யர்ச்­சி­யா­னது 2014 டிசம்­பரில் நடக்­க­வி­ருக்­கி­றது. அப்­போது ராசிக்கு 4-இல் அமர்ந்து ஜென்ம நட்­சத்­தி­ரத்தை சனி பார்க்கும் காலத்தில் மாபெரும் கெடு­த­லையே செய்வார் என்றும் கூறி­யுள்ளார். சனியின் இந்த ஆக்­ரோஷம், சனிப் பெயர்ச்சி நடக்கும் டிசம்­ப­ருக்கு 3 மாதத்­திற்கு முன்­பா­கவும் காட்டும் அல்­லது சனிப் பெயர்ச்சி நடந்த பிறகும் காட்­டலாம். ஆகவே, சுருங்கச் சொன்னால் சிம்ம ராசிக்கு 4-இல் வரும் சனியும் 12-இல் உள்ள குருவும் பத­வியில் இருப்பவர்­களை நீடிக்க விட­மாட்டார்'' என்று கூறி­யுள்ளார் ஜோதிடர் சுப்­ர­ம­ணியம்.

கைவிட்ட ஜோதிட நம்­பிக்கை

சொத்­துக்­கு­விப்பு வழக்கு தீர்ப்பு திகதி அறி­விக்­கப்­பட்­டதில் இருந்தே கோவில்­களில் யாகங்களும், பூஜைகளும் நடை பெற்றன. நல்லநேரம், ராகுகாலம், எம கண்டம் பார்த்துதான் அவர் நீதிமன்றத் திற்கே கிளம்பினார். ஆனால் அந்த நம்பிக் கைகள் எதுவுமே ஜெயலலிதாவிற்கு கை கொடுக்கவில்லை.

Share |
Image Hosted by ImageShack.us

நீதிபதி குன்காவுக்கு கடும் கண்டனம் - ஜெ. ஜாமீன் வழக்கில் ஆஜராகிறார் ராம்ஜெத்மலானி!

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையுடன் ரூ100 கோடி அபராதம் விதித்து நீதிபதி குன்கா தீர்ப்பளித்ததற்கு மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ஜெயலலிதா ஜாமீன் கோரி தாக்கல் செய்யும் போது ராம்ஜெத்மலானியே அவருக்காக ஆஜராகி வாதாடக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதாவின் சொத்துப் பட்டியல் 5

ஸ்ரீராம் இன்வெஸ்ட்மென்ட்டில்....

268. ஸ்ரீராம் இன்வெஸ்ட்மென்ட்டில் செல்வி ஜெயலலிதா பெயரில் நிரந்தர வைப்புத் தொகை புதுப்பிக்கப்பட்டது. 3 லட்சம் ரூபாய்.

269. ஸ்ரீராம் இன்வெஸ்ட்மென்ட்டில் செல்வி ஜெயலலிதா பெயரில் நிரந்தர வைப்புத் தொகை புதுப்பிக்கப்பட்டது. 30 லட்சம் ரூபாய்.

270. ஸ்ரீராம் இன்வெஸ்ட்மென்ட்டில் செல்வி ஜெயலலிதா பெயரில் நிரந்தர வைப்புத் தொகை 15 லட்சம் ரூபாய்.

ஜெயலலிதாவின் சொத்துப் பட்டியல் 4

சென்னை லஸ் அவென்யூ.. சுதாகரன், இளவரசி பெயரில்

153. சென்னை லஸ் அவென்யூ சர்வே எண் 334/1ஏ-ல் உள்ள மொத்தம் 5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (சுதாகரன் பெயரில்)

ஜெயலலிதாவின் சொத்துப் பட்டியல் 3

அரும்பாக்கம், சேரகுளம் கிராமம், ஊரூர்

103. அரும்பாக்கம் கிராமம், டவுன் சர்வே எண். 115/பி மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 3,197 சதுர அடி மனை.

104. ஊரூர் கிராமம், பரமேஸ்வரி நகர், டவுன் சர்வே எண். 2 மற்றும் 18ல் 4,565 சதுர அடி மனையும் கட்டடமும்.

105. சேரகுளம் கிராமம், சர்வே எண். 471 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 73 ஏக்கர் 90 சென்ட் நிலம்.

ஜெயலலிதாவின் சொத்துப் பட்டியல் 2

தியாகராயநகர் சொத்துக்கள்

தியாகராய நகர், பத்மநாபா தெரு...

51. தியாகராய நகர், பத்மநாபா தெரு, சர்வே எண். 301 மற்றும் சில சர்வே எண்களில் உள்ள மொத்தம் 1 கிரவுண்ட் 1086 சதுர அடி மனை மற்றும் கட்டடத்தில் 1/5 பங்கு.

ஜெயலலிதாவின் சொத்துப் பட்டியல் 1

ஜெயலலிதாவின் 306 மெகா சொத்துப் பட்டியல் இதுதான்.... படிக்க ரொம்ப நேரம் ஆகும்.. பொறுமை!!

ஆசைப்பட்டு சேர்த்து வைத்த நகைகளும் சொத்துக்களும் இன்றைக்கு மிகப்பெரிய சிக்கலை உண்டுபண்ணியிருக்கிறது முதல்வர் ஜெயலலிதாவுக்கு.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல