நீதிமன்ற விசாரணையின் போது முகத்தை மூடி யிருக்கும் பர்தாவை கட்டாயம் அகற்ற வேண்டும் என முஸ்லீம் பெண் ஒருவருக்கு ஒண்டோரியோ நீதிபதி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். ஒண்டோரியோவில் உள்ள முஸ்லீம் பெண் ஒருவர், தன்னை இரண்டு ஆண்கள் ஐந்து வருடங் களாக பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடுத்திருந்தார்.