திங்கள், 1 நவம்பர், 2010

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் நாளைய தினம் கொழும்பில் கூடி இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டமொன்றைத் தயாரிப்பது தொடர்பாகப் பேச விருக்கின்றது!

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் நாளைய தினம் கொழும்பில் கூடி இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டமொன்றைத் தயாரிப்பது தொடர்பாகப் பேச விருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் பேசுவதற்குத் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் முயற்சிப் பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜி லிங்கம் கூறுகின்றார்.

பள்ளி குழந்தைகள் கொலையில் வெளிவராத அதிர்ச்சி தகவல்கள்

கோவை நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி குழந்தைகள் இருவர் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரத்துக்கு பின் வாய்க்காலில் தள்ளி ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்ட கொடூரத்தின் பின்னணி, கிரைம் நாவலையும் மிஞ்சுகிறது. "இப்படியும் கொடூரர்கள் இருப்பார்களா?' என்ற கேள்வி, மக்கள் மனதை கொந்தளிக்க செய்திருக்கிறது. படுபாதக கொலைச்சம்பவம் எப்படி நடந்திருக்கும், கொலையாளிகளிடம் சிக்கி பிள்ளைகள் என்னபாடு பட்டிருப்பார்கள், போலீசாரால் உயிருடன் மீட்க முடியாமல் போனதெப்படி என்ற, ஆதங்க கேள்விகள் ஆயுதமாகி இதயத்தை துளைக்கின்றன.

ரிஸானாவுக்கு கருணை கோரி பிரார்த்தனைகள்

ரிஸானாவின் குடும்பத்தினர் (ஆவணப்படம்-2007)
சவுதி அரேபியாவில் பணிப்பெண்ணாக பணியாற்றிய போது குழந்தை ஒன்றின் மரணத்திற்கு காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இலங்கை பணிப்பெண்ணுக்கு கருணை கிட்ட வேண்டுமெனக் கோரி பிரார்த்தனைகள் இடம்பெறுகின்றன.
இலங்கையின் கிழக்கே மூதூர் சாபி நகரைச் சேர்ந்த ரிஸானா நபீக் என்ற இந்தப் பணிப்பெண்ணுக்கு மன்னிப்பு கிட்ட வேண்டுமென மூதூர் பொது மைதானத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் கண்ணீர் மல்க பிரார்த்தனை வழிபாடுகளை நடத்தியுள்ளனர்.

உலக அழகுராணி (படங்கள் இணைப்பு)

சீனாவின் சன்யா நகரில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற 60 ஆவது உலக அழகுராணிப் போட்டியில் அமெரிக்க அழகியான அலெக்ஸாண்ட்ரியா மில்ஸ் அழகுராணியாக முடிசூட்டிக் கொண்டார்.

நான் அவருடைய களியாட்ட விருந்துபசாரங்களில் கலந்து கொண்டது உண்மை

இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கொனியின் அர்கோரிலுள்ள வசிப்பிடத்தில் அவருடன் பிரத்தியேக களியாட்ட விருந்துபசாரங்களில் கலந்து கொண்டதாக மொரோக்கோவைச் சேர்ந்த கரீமாகெயெக் என்ற 17 வயது கவர்ச்சிப் பாவை அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கழுதையுடன் பாலியலில் ஈடுபட்ட நபர் கழுத்து வெட்டிக்கொலை

கழுதையுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்ட 68 வயது நபரொருவரை, கழுதையின் உமையாளர் கழுத்தை வெட்டி படுகொலை செய்த சம்பவம் போர்த்துக்கலில் இடம்பெற்றுள்ளது.

மிகப்பெரிய வைன்கிண்ணம் (படங்கள் இணைப்பு)

உலகிலேயே மிகப் பெரிய “வைன்' குடிபான கிண்ணத்தை தயாரித்து லெபனானியர்கள் புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.

யாழில், களவாக மின்சாரம் பெற்ற 300 பேர் கைது

யாழ், குடாநாட்டில் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்துச் சென்ற இலங்கை மின்சார சபையின் விசேட குழுவினர் இன்று அதிகாலை தொடக்கம் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வன்னி மக்களின் கதறல்

வடபகுதியில் காணாமல்போன தமது பிள்ளைகளை கண்டுபிடித்து தருமாறு வன்னி மக்கள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் கதறியழுது கோரிக்கை விடுத்துள்ளனர்.

பூசனியில் பூதம் கண்காட்சி

கனடாவின் வன்கூவர் நகராட்சியில் அண்மையில் பூசனித் திருவிழா நடைபெற்றதென்றே கூறலாம். அங்கு நடைபெற்ற கண்காட்சியொன்றில் பூசனியில் செய்யப்பட்ட வித விதமான கலை நயம் மிக்க படைப்புக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல