பெண்ணை அடிமைப்படுத்தும் சடங்குகள் தேவைதானா?
பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிந்து பெண்ணானால் அதனைக் கருவிலேயே அழிக்கும் முயற்சிகள் இலங்கையில் இல்லை. ஆனால் கருவிலேயே பெண் குழந்தையை அழிப்பது மீறிப் பிறந்துவிடும் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்து கொல்வது எல்லாம் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இன்றும் பரவலாக வழக்கில் உள்ள நடைமுறைகள்.






