புதன், 30 ஜூலை, 2014
உலகமே எதிர்பார்த்த ஒரு வழக்கின் தீர்ப்பு
Kuram Shaikah Zaman (32)
"107 வருட சிறை தண்டனையை
20 வருடங்களுக்குள்
அனுபவிக்க உத்தரவிட்ட நீதிமன்றம்"
தங்காலை, மெடில்லே வீதியில் உள்ள த நேச்சர் ரிசேவ் ஹோட்டலில் பிரித் தானிய பிரஜையான குராம் ஷேய்க் என்பவரை படுகொலை செய்துவிட்டு அவரது காதலியான ரஷ்யாவை சேர்ந்த விக்டோரியா அலெக்ஸ் சான்ரானோவை கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவமானது கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி கிறிஸ்மஸ் தினத்தன்று பதிவாகியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சாட்சி யங்களை திரட்டி விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் சந்தேக நபர்களை நிறுத்தி அவர் களில் குற்றவாளிகளாக காணப்பட்ட நால்வருக்கு கடந்த 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 20 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றினால் தீர்ப்பும் வழங்கப்பட்டது.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்
பட்டப்பகலில் அரங்கேறிய பாலியல் கொடூரம்
மலையகத்தை அதிரவைத்த லடெல்வின் சம்பவம்
அன்று 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை.
இறக்குவானை டெல்வின் பி பிரிவில் ஓர் ஏழைத் தாய் மகளைத் தேடிக்கொண்டிருந்தாள்.
அன்று முற்பகல் 11.30 மணியளவில் பக்கத்துத் தோட்டத்துக்குச் சென்ற மகளை காணாத ஏக்கம் ஒருபுறம் என்ன நடந்திருக்குமோ என்ற பயம் ஒருபுறம் என அந்தத் தாயின் மனது படபடத்தது.
அன்று 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை.
இறக்குவானை டெல்வின் பி பிரிவில் ஓர் ஏழைத் தாய் மகளைத் தேடிக்கொண்டிருந்தாள்.
அன்று முற்பகல் 11.30 மணியளவில் பக்கத்துத் தோட்டத்துக்குச் சென்ற மகளை காணாத ஏக்கம் ஒருபுறம் என்ன நடந்திருக்குமோ என்ற பயம் ஒருபுறம் என அந்தத் தாயின் மனது படபடத்தது.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
தமிழர்கள்
வயிற்று வலிக்கு சிகிச்சை பெற சென்ற நபர் தான் ஒரு பெண் என அறிந்து அதிர்ச்சி
Stunned: Doctors couldn't believe the results of the scan
வயிற்றுவலியுடன் சிறுநீரில் குருதி வெளியேறிய நிலையில் மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்கு சென்ற திருமணமான 44 வயது நபரொருவர், தான் உண்மையில் ஒரு பெண் என்பதையும் தனக்கு மாதவிலக்கு ஏற்பட்டுள்ளதையும் அறிந்து அதிர்ச்சியடைந்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
முதியோர்களைத் தாக்கும் அறிவுத்திறன் வீழ்ச்சி நோய்
சுமார் அறுபது வயதைக் கடந்தவர்களுக்கு கொஞ்சம் ஞாபகமறதி ஏற்படுவது சகஜம் தான். சில தருணங்களில் நல்ல பழகிய நபர் களின் பெயர்களைக்கூட மறந்துவிடுவர் புதிய அலைபேசி எண்களையோ அல்லது தொலைபேசி எண்களையோ நினைவில் இருத்திக்கொள்ள சிரமப்படுவர். கையில் இருக்கும் பணத்தை பலமுறை எண்ணிக் கொண்டேயிருப்பர். இவைகளைமுதுமையின் ஏற்பட்ட விளைவு என்று தெரிந்துகொள்ளலாம். ஆனால் எந்தவித முன்னறிவிப்பும் இல்லா மல் அதாவது எந்தவித காரணமும் இல்லா மல் ஒரு சிலருக்கு திடிரென்று ஞாபகமறதி ஏற்படுவதைத்தான் அறிவுத்திறன் வீழ்ச்சி (Dementia) என்று மருத்துவர்கள் குறிப்பிடு கின்றனர்.
Labels:
நோய்கள்
ஸாந்தலேஸ்மா (Xanthelasma)-வுக்குரிய சிகிச்சை
நோய்களும் உடல்ரீதியான பிரச்சினை களும் பல்வேறு அறிகுறிகள் மூலமாகவே தங்களை வெளிப்படுத்திக்கொள்கின்றன. அப்படியெனில் இரத்தத்தில் கொலஸ் ட்ராலின் அளவு அதிகரித்தால் அதை வெளிப்படுத்தவும் ஏதாவது அறிகுறிகள் இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் இதற்கான பிரத்யேக அறிகுறிகள் இல்லை என்று தான் மருத்துவத்துறை குறிப்பிடுகிறது. இருப்பினும் உடல் அமைப்புகளில் ஏற்படும் ஒரு சில மாறுதல்களை வைத்து இரத்தத்தில் கொலஸ் ட்ராலின் அளவு அதிகரிப்பதை உணரமுடியும். இருந்தாலும் ஒருவரது இரத்தித்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். இது நடைமுறை.
Labels:
நோய்கள்
ஸ்டெம்செல் சிகிச்சையால் புற்றுநோய்க்கும் தீர்வு
“புற்றுநோய் என்றாலே அனைவருக்கும் ஒரு இனம்புரியாத பயம் எழும். புற்றுநோய் பற்றிய சில விளக்கங்களை நாம் தெரிந்து கொண்டால், புற்றுநோய் பற்றி நாம் பயப்படத் தேவையிருக்காது. மேலும் துரதிர்ஷ்டவசமாக புற்றுநோய் எம்மைப் பாதித்தாலோ, எமது உறவினர், நண்பர்களுக்கு ஏற்பட்டாலோ அடுத்து என்ன செய்யவேண்டும் என்பது பற்றி அறிந்திருப்பின், அது குறித்த பயம் குறைய வாய்ப்புகள் உண்டு.” எடுத்த எடுப் பிலேயே, புற்றுநோயும் ஒரு சாதாரண நோயைப் போன்றதே என்றும், அதற்கான விளக்கங்கள் பெற்றி ருந்தால் பயப்படத் தேவையில்லை என்றும் எமக்குள் நம் பிக்கை விதை விதைக்கிறார் டொக்டர் பரத் ரங்கராஜன். இவர், கோவையில் இயங்கிவரும் உலகப் புகழ்பெற்ற பல் நோக்கு சிறப்பு மருத்துவ மனையான கோவை மெடிக்கல் சென்டர் எண்ட் ஹொஸ்பிட்டல் - சுருக்கமாக கே.எம்.சி.எச்.இன் புற்று நோய் மருந்தியல் சிகிச்சையில் சிறப்பு நிபுணராகச் சேவையாற்றுகிறார். அவருடனான சந்திப்பு உங்களுக்காக...
Labels:
மருத்துவம்
மாறாத ரணங்களுடன் துளிர்விடும் உறவுகள்
வளம் கொழிக்கும் விளை நிலங்களோடும் அழகிய வனப்புகளோடும் அமைதியாக தமதுதாயகங்களில் வாழ்ந்த மக்கள் கூட்டத்தின் மீது அந்நிய ஆக்கிரமிப்பை அறிமுகம் செய்த காலனித்துவ ஆதிக்கம், தேசிய இனவொடுக்குமுறை என்னும் புற்றுநோயை விட்டுச் சென்றது. ஆரம்பத்தில் சிறுகச் சிறுகச் சூறையாடப்பட்ட உரிமைகள் தொடரும் காலத்தில் அணை உடைக்கும் அருவிபோல் மாறவும் சாத்வீகம் முதல் சரணடையா தன்மானத்துடன் உரிமைக்காக போராடிேயவந்தது தமிழினம்; தமிழ்த் தேசிய உரிமைக்காக எழுந்த அதியுச்ச வீச்சுணர்வு ஒரு சாராருக்கு பயங்கரவாதமாக புலப்படவும் மனிதாபிமானத்தின் பெயரால் அதனை முள்ளிவாய்க்கால் மூலையில் வைத்து முடக்கினர். பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் என அனைவருமே ஒரு பிரதேசத்திற்குள்ளே முடக்கப்பட்டு உயிர் துறக்கும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. தமிழ் மக்கள் செய்த தியாகங்களின் உச்சக்கட்டம் முள்ளிவாய்க்கால்.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
மீண்டும் புலிப் பூச்சாண்டி
இந்து சமுத்திரத்தின் முத்து என்று இலங்கைத் தீவை அழைப்பார்கள். ஆழ் கடல் மத்தியில் அமைந்துள்ள இந்த நாடு சிறிய நாடாக இருந்த போதிலும், இந்தப் பிராந்தியத்தில் அது கேந்திர முக்கியத்துவம் மிக்கதாகத் திகழ்கின்றது. அத்துடன் அது ஓர் அழகிய நிலப்பரப்பைக் கொண்டது. நீர் வளம் நில வளம் என்று இயற்கை வளங்கள் நிறைந்தது. இதன் காரணமாகவே இந்து சமுத்திரத்தின் முத்து என்று இந்தத் தீவு பெயர் பெற்றதாகக் கூறுவார்கள்.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
தமிழர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
















