வியாழன், 25 ஜூன், 2015
மலசலகூட கடதாசியைப் பயன்படுத்தி கண்ணைக் கவரும் மணப்பெண் ஆடை (படங்கள் இணைப்பு)
Stunning: It is difficult to believe that these incredible dresses were made from such an everyday item as toilet paper
அமெரிக்க நியூயோர்க் நகரைச் சேர்ந்த நவநாகரிக கண்காட்சி ஏற்பாட்டு நிறுவனமொன்றால் நடத்தப்பட்ட நவநாகரிக கண்காட்சியில் யுவதிகள் மலசலகூடத்தில் பயன்படுத்தப்படும் கடதாசிகள் மூலம் வடிவமைக்கப்பட்ட கண்ணைக் கவரும் அலங்கார மணப்பெண் ஆடை களை அணிந்து வலம் வந்து பார்வையாளர்களை வியப் பில் ஆழ்த்தியுள்ளனர்.
Labels:
வினோதமான செய்திகள்
மாயமான 3 வயது கிளிநொச்சி குழந்தை பணத்திற்காக விற்பனை செய்யப்பட்டதா?
- பொலிஸார் தீவிர விசாரணை; வெளிநாட்டுக்கு கடத்தப்படுவதை தவிர்க்க விமான நிலையங்களிலும் உசார் -
கிளி நொச்சி, உருத்திரபுரம் - எள்ளுக்காடு பிரதேசத்தில் காணாமல் போயுள்ள மூன்று வயது குழந்தை உதயகுமார் யர்சிகா பணத்திற்காக விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குழந்தையின் தாயார் கிளிநொச்சி பொலிஸாருக்கு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வழங்கியுள்ள வாக்கு மூலங்களின் பரஸ்பர வேறுபாடுகளையும் இன்னும் சில தடயங்களையும் வைத்து இந்த சந்தேகத்தை எழுப்பியுள்ள பொலிஸார், குழந்தை விற்பனை செய்யப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் யாழ். பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பில் யாழ்ப்பாணத்துக்கு விஷேட பொலிஸ் குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர நேற்று நான்காவது நாளாகவும் குழந்தையைத் தேடிய வேட்டை தொடர்ந்ததாக குறிப்பிட்டார்.
கிளி நொச்சி, உருத்திரபுரம் - எள்ளுக்காடு பிரதேசத்தில் காணாமல் போயுள்ள மூன்று வயது குழந்தை உதயகுமார் யர்சிகா பணத்திற்காக விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குழந்தையின் தாயார் கிளிநொச்சி பொலிஸாருக்கு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வழங்கியுள்ள வாக்கு மூலங்களின் பரஸ்பர வேறுபாடுகளையும் இன்னும் சில தடயங்களையும் வைத்து இந்த சந்தேகத்தை எழுப்பியுள்ள பொலிஸார், குழந்தை விற்பனை செய்யப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் யாழ். பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பில் யாழ்ப்பாணத்துக்கு விஷேட பொலிஸ் குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர நேற்று நான்காவது நாளாகவும் குழந்தையைத் தேடிய வேட்டை தொடர்ந்ததாக குறிப்பிட்டார்.
Labels:
தமிழர்கள்,
யாழ் செய்திகள்,
வீரகேசரி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)






