செவ்வாய், 26 அக்டோபர், 2010

ஒக்டோபுஸ் `பவுல்' இறந்தது (படங்கள் இணைப்பு)

கடந்த ஜுன்-ஜுலை மாதம் தென்ஆப்பிரிக்காவில் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்த போது உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட பவுல் என்ற பெயரை கொண்ட கடல்வாழ் உயிரினமான ஒக்டோபுஸ் நேற்று மரணம் அடைந்தது.

ஒரு ரிசானா நபீக்காவின் உயிரைக் காக்க வேண்டுகோள்!

என்ன தீர்ப்பு வருமோ , எமது பிள்ளை மீண்டும் எம்மிடம் வருவாளோ என்று பதைபதைப்புடன் காத்திருந்த ரிசானா நபீகாவின் பெற்றோர் உறவினர் இப்போது வெளியாகிருக்கும் ரியாத் உச்ச நீதிமன்ற தீர்ப்பினை கண்டு அதிர்ச்சி யடைந்திருக்கிறார்கள். அந்த சிறுமி குடும்ப வறுமைக் கொடுமைகளை தனது இளமை பிராயத்தில் தாங்கிக் கொண்டு தனது குடும்ப நலனுக்காக அயல் நாட்டில் பனிப்பெண்ணாக பிழைக்கப்போய் இறுதியில் சிசுக் கொலைக்காக உயிரை இழக்கப் போகிறாளே என்ற கவலை காரணமாக அவரது விடுதலைக்காக குரல் கொடுத்த மனித உரிமை வாதிகள் மனித உரிமை நிறுவனங்கள் அதிலும் குறிப்பாக மேன் முறையீட்டுக்கான செலவினை க்ஹடெப் அல்ஷமரி ( Al-Shammary) எனும் சவூதியிலுள்ள சட்ட நிறுவனத்துக்கு வழ‌ங்கிய ஆசிய மனித உரிமை ஆணையகம் (Asian Human Right Commission) என்பன மிகுந்த ஏமாற்றத்தை அடைந்துள்ளன.

பிள்ளைகளை பார்க்கத்துடிக்கும் பார்வதி அம்மாள்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மறைந்த தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயாரின நிலைமை மோசமடைந்து வருவதாகவும், தனது பிள்ளைகளை பார்க்க விரும்புவதாக அவர் வைத்தியசாலை தாதிமார்களை அழைத்து கண்ணீர் வடிப்பதாகவும், இன்றைய தினம் அவரை நேரில் சென்று பார்வையிட்ட தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தனக்கேற்ற மாப்பிள்ளை கிடைக்காதலால் தன்னைத் தானே திருமணம் செய்யும் பெண்! (படங்கள் இணைப்பு)

சென் வய் யி என்ற தைவான் நாட்டுப் பெண் தனது இளவயது முதல் தனக்கேற்ற ஜோடியை பல வழிகளிலும் தேடிக் கிடைக்காமையால் மனமுடைந்துபோன அவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ளப் போகின்றார்.

எந்திரன் கதை என்னுடையது!

14 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டது:
எந்திரன் சினிமா, `ஜுகிபா' சிறுகதையில் இருந்து திருடப்பட்டது
போலீஸ் கமிஷனரிடம், எழுத்தாளர் புகார்

நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் `எந்திரன்' சினிமாவில் வரும் கதை, `14 ஆண்டுகளுக்கு முன்பு தான் எழுதிய சிறுகதையில் இருந்து திருடப்பட்டது' என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எழுத்தாளர் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கிலிருந்து பிரபாகரன், பொட்டு அம்மான பெயர்கள் நீக்கம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது. பொட்டு அம்மான் பெயரும் நீக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

விக்கிலீக்ஸ் நிறுவனர் தலைமறைவு

இராக் போர் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் பால் அசான்ஜ் (39), தான் கைது செய்யப்படவோ, அதன்பிறகு, கொலை செய்யப்படவோ வாய்ப்புள்ளதாக கருதி தலைமறைவாகி விட்டார். அவர் ரகசிய ஆவணங்கள் வெளியானபோது சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் தங்கி இருந்தார். பிறகு, அங்கிருந்து ஜெர்மன் தலைநகர் பெர்லினுக்கு பறந்தார். அப்படி செல்லும்போது, அவரது பையும், 3 லேப்-டாப்புகளும் காணாமல் போய் விட்டன. பிறகு, பெர்லினில் இருந்தும் தப்பிய ஜூலியன் அசேஞ்ச், தற்போது லண்டனில் தங்கி இருக்கிறார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல