சனி, 8 ஜூன், 2013

இப்படியும் நடைபெற்றிருக்கிறது??? !!!!!

என் அன்புக்குரியவர்களே!

கீழ்வரும் உண்மைச் சம்பவத்தின்பால் உங்கள் கவனத்தை செழுத்துமாறு தங்களை வேண்டிக்கொண்டவளாக,

நாவலப்பிட்டியைச் சேர்ந்த ஒரு இளம் பயிற்சி தாதி போக்குவரத்து நெருக்கடி மிகுந்த கிருலப்பனை வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பஸ் ஒன்றிலிருந்து துாக்கி வீசப்பட்டு என்னுடைய காருக்கு முன்பாக வந்து விழுந்தார். சம்பவம் தொடர்பில் பஸ் சாரதியை வெள்ளவத்தை பொலிசார் விசாரணை செய்து கொண்டிருந்த இவ்வேளையில் நானும் எனது நண்பரும் விழுந்த அந்தப் பெண்ணை இலங்கையின் மிகப்பெரிய வைத்திய சாலையான கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக அழைத்துச் சென்றோம். வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு நுழைவாயிலை நாங்கள் அண்மித்த போது அங்கிருந்த ஒரு தாதி நோயாளியை சக்கரம் கொண்ட படுக்கையில் அமர்த்தி கொண்டு செல்லுமாறு எங்களை வேண்டிக் கொண்டார் .

பல வருடங்களாக விடைதெரியாத கணக்குக்கு விடை சொல்லி 5.60 கோடி பரிசை பெற்றுக்கொள்ளவும்!

நீங்கள் கணக்கில் சூரப்புலியா? இந்த ‘கணக்குப் போடும்’ திறமை மூலம் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்று ஆசை உள்ளதா? அப்படியென்றால், கடந்த பல வருடங்களாக தீர்வு கிடைக்காத இந்த கணக்குக்கு விடை சொன்னால் உங்களுக்கு ரூ.5.60 கோடி பரிசு கிடைக்குமாக்கும்.முயற்சி பண்ணுங்களேன்!

குழந்தையின் கண்பார்வையை மேம்படுத்துவதற்கான வழிகள்!!

நம் உடலில் அனைத்து உறுப்புகளுமே முக்கியமானவை. அதிலும் மிக முக்கியமானதென்றால், கண்டிப்பாக கண்களாகத் தான் இருக்க முடியும். ஒருவரை வர்ணிக்கும் போதும், ஓவியம் வரையும் போதும் கூட கண்களிலிருந்து தான் ஆரம்பிப்போம். அப்படிப்பட்ட கண்களை பாதுகாக்க நாம் அதிக சிரத்தை எடுத்துக் கொள்வது இயல்பு தான். ஆனால் குழந்தைகளுக்கு? பெற்றோர்கள் தானே பாதுகாக்க வேண்டும்.

வழுக்கை தலையாவதை தடுக்க.....

வழுக்கைத் தலை பிரச்சனையில் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம், ஆண்கள் பெண்களைப் போல், தங்கள் முடிக்கு போதிய பராமரிப்புக்களைக் கொடுப்பதில்லை. இத்தகைய முறையான பராமரிப்பின்மையினால், ஆண்கள் இளம் பருவத்திலேயே முடி உதிர்தல் பிரச்சனைக்கு உள்ளாகி, வழுக்கையை பெறுகின்றனர்.

தினமும் தொடும் 10 அழுக்கான பொருள்கள்: ஒரு ஷாக் ரிப்போர்ட்!!

மருத்துவ அறிவியல் முன்னேற்றம் மற்றும் மக்களிடையே ஆரோக்கியத்தின் மீது விழிப்புணர்வும் பெருகிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் மக்களிடையே, சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்த கவலை அதிகரித்து உள்ளது. மக்கள் தொகைப் பெருக்கமும் இதற்கு ஒரு காரணமாக உள்ளது.

பெண்களுக்கான சில டேட்டிங் டிப்ஸ்: பெண்களிடம் இருந்து பெற்றவை!!!

இந்த உலகத்தில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன. அதை அனுபவிக்கும் முன் அதனைப் பற்றி அனுபவம் உள்ளவர்களிடம் முழுவதுமாக கேட்டு தெரிந்து கொண்டால் தான் அதில் முழுமையாக ஈடுபடலாம். அப்படிப்பட்ட ஒன்று தான் டேட்டிங். உங்களை தயார்படுத்திக் கொள்ளாமல் இந்த விளையாட்டில் இறங்கி, தவறுகள் மூலம் பாடம் கற்பதை விட, இதில் உள்ள நல்லது கெட்டதை பற்றி முன்பே அறிந்து, அதன் பின் செயலில் இறங்குவதே பாதுகாப்பானதாகும்.

டேட்டிங் செல்வதால்! உறவுகள் வளரவும், மனது ஒத்து போகவில்லையென்றால் இந்த உறவு பிரியவும் செய்யும். சில நேரம் நமக்கு ஆபத்தை தரும் வகையிலும் போய் முடியும். அதனால் நாம் சொன்னது போல் அனுபவம் பெற்றவர்களிடம் டிப்ஸ் பெறலாம். இணையதளத்தின் மூலம் அல்லது பொதுவான டேட்டிங்கில் ஈடுபட்டவர்களிடம், அவர்களுடைய அனுபவத்தை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டுமா? இதோ இதில் அனுபவம் உள்ள பெண்கள், இந்த விளையாட்டில் புதிதாக அடியெடுத்து வைக்கும் பெண்களுக்கு சில அறிவுரைகளை வைத்திருக்கின்றனர்.

பெண்களிடம் இருந்து பெற்ற இந்த டிப்ஸ்களை பயன்படுத்தினால், டேட்டிங் செல்லும் போது தேவையற்ற பயத்தை உதறி விட்டு, அமைதியுடன் சந்தோஷத்துடன் இருக்கலாம்.

தனித்துவத்தை காத்திடுங்கள்

Image: from internet
இணையத்தளம் மூலம் டேட்டிங் செய்பவர்களுக்கு இது மிகவும் பொருந்தும். இணையதளத்தில் யாரையுமே நம்பக்கூடாது. பாதுகாப்பாக இருக்க விரும்பினால், அதற்கான ஒரே வழி, விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்தாமல் வைத்திருப்பதே. முழுப்பெயர், முகவரி, வாழும் ஊர் போன்ற தனிப்பட்ட தகவல்களை ஒரு போதும் வெளிப்படுத்தக் கூடாது. முக்கியமாக தொலைபேசி எண்ணை கண்டிப்பாக சொல்லக் கூடாது. மேலும் குடும்பத்தைப் பற்றியோ, வேலை பார்க்கும் அலுவலகத்தைப் பற்றியோ வாயைத் திறக்கவே கூடாது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல