போரில் இறந்து போன தங்கள் உறவுகளுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்ததற்காக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இராணுவத்தினராலும் பொலிஸாரும் தாக்கப்பட்டது மட்டுமன்றி இதுவரை 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் உட்பட இதுவரை 35க்கும் மேற்பட்டவர்கள் இந்த வாரத்தில் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மாணவர்கள் ஊர்வலம் நடத்துவதும் பொலிஸார் அவர்களை கைது செய்வதும் விசாரணை நடத்துவதும் நாம் கேள்விப்படுகின்ற விடயங்கள்தான்.
திங்கள், 10 டிசம்பர், 2012
உயிரே உனது விலை என்ன?
அவுஸ்திரேலியாவில் நுரையீரல் புற்று நோய்க்கு மருந்து செய்ய 60000 டாலர் தேவை. ஒருவர் இந்த நாட்டு பிரசையாகவோ நிரந்தர வதிவிடம் பெற்றவராக இருந்தால் ஒரு சதம் செலவு செய்யாமல் அரசாங்கம் வைத்தியம் செய்யும்.இது உறவினர் ஒருவருக்கு ஏற்பட்டதால் அனுபவமாக பெற்ற உண்மை. மற்ற நோய்களோடு ஒப்பிடும்போது தொடர்ச்சியாக கீமோ திரப்பி வைத்தியம் செய்யவேண்டியதால் இதன் செலவு அதிகமாகிறது.ஈழவிடுதலைப் போராட்டத்தில் உயிர்களுக்கு எந்த மரியாதையும் கொடுக்கப்படவில்லை. இதுவே இந்த போராட்டத்தின் தோல்வியின் மூலவேர் என்ற எனது கருத்து.
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
ஏமாற்று அழைப்பு: "செவிலி மரணம் எதிர்பாராத துயரம்"
பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்மின் மனைவி கேத்தரின் தங்கியிருந்த மருத்துவமனைக்கு மஹாராணியும் இளவரசர் சார்ல்ஸும் பேசுவதுபோல நடித்து செய்யப்பட்டிருந்த தொலைபேசி அழைப்பின் ஒலிப்பதிவை ஒலிபரப்பிய வானொலி நிலையம், இந்த அழைப்புக்கு பதிலளித்த நர்ஸ் தனது உயிரை மாய்த்துக்கொள்வார் என்பது யாருமே எதிர்பார்க்க முடியாத ஒரு நிகழ்வு என்று கூறியுள்ளது.
Labels:
உலகப்பார்வை
சாவை நம்பினால் பகையை விடலாமே!
Labels:
கட்டுரைகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)








