புதன், 2 பிப்ரவரி, 2011

இணையத்தளம் மூலம் இணைந்திருக்கும் கிராமத்தினர்

குஜராத் மாநிலம், அஹமதாபாத் அருகே உள்ள, “சங்காகேம்” கிராமத்தைச் சேர்ந்தவர்கள், தங்களுக்கென பிரத்தியேகமாக இணையத் தளம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.

தேநீர் பருகுங்கள்!

அவர் ஒரு முடாக் குடியர் மதுக் குடியர் அல்ல. தேநீர்க் குடியர்

“எந்தப் பத்திரிகையைப் பார்த்தாலும் தேநீர் குடியுங்கள். உடலுக்கு நல்லது. கான்ஸர், பிரஸர், இருதய நோய் எதுவும் வராது எண்டு எழுதுறாங்கள். நானும்தான் எவ்வளவு தேத்தண்ணி குடிக்கிறன். ஆனால் எனக்கு நீரிழிவு, பிரஸர், கொலஸ்ட்ரோல், ஹாட் வருத்தம் ஒண்டும் மிச்சமில்லாமல் வந்திடுத்து’ என்று சொன்னார்.

கொத்தமல்லியின் மருத்துவக் குணங்களும், ஒவ்வாமையும்

கொத்தமல்லிக்கு எமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தும் ஆற்றல் உண்டு என்ற கருத்துப்பட மதிப்பிற்குரிய பேராசிரியர் ஒருவர் அண்மையில் நடந்த குடும்ப வைத்தியர்களுக்கான கருத்தரங்கில் பேச்சு வாக்கில் சொன்னார். அவரது பேச்சின் பொருள் வேறானதால் இதற்கான மருத்துவ ஆய்வுத் தகவல்களை தரவேண்டிய அவசியம் அவருக்கு இருக்கவில்லை.

பிரேசிலின் பின்தங்கிய வனப் பிராந்தியத்தில் வெளியுலக தொடர்பின்றி வாழும் இனம் (படங்கள் இணைப்பு)

பிரேசிலின் பின்தங்கிய வனப் பிராந்தியமொன்றில் வெளியுலக தொடர்பின்றி வாழ்வதாக கருதப்படும் செவ்விந்திய இன மொன்றின் புதிய புகைப்படங் கள் வெளியிடப்பட்டுள்ளன.

உலகின் வயதான நபர் மரணம்

உலகில் உயிர் வாழும் மிகவும் வயதான நபராக கடந்த நவம்பர் 4 ஆம் திகதி அங்கீகாரம் பெற்ற இயுனைஸ் சன்போர்ன் திங்கட்கிழமை அமெரிக்க டெக்ஸாஸ் மாநிலத்தில் உயிரிழந்துள்ளார். அவர் 1895 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி லூஸியனா மாநிலத்தில் பிறந்தார்.

மனிதர்களைப் போன்று இறந்த குட்டிகளுக்காக துக்கம் அனுஷ்டிக்கும் மனிதக் குரங்குகள்

மனிதக் குரங்குகள் தமது குட்டிகள் இறக்கும்போது மனிதர்களைப் போன்று துக்கம் அனுஷ்டிப்பது சர்வதேச விஞ்ஞானிகளைக் கொண்ட குழுவினரின் புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆசையினால் ஏற்பட்ட விபரீதம்..! (காணொளி இணைப்பு)

பெண்ணொருவரை தனது மடியில் வைத்து பஸ்ஸை செலுத்திய அமெரிக்காவின் மிச்சிகன் மாநில டெட்ரொயிட் நகர சாரதியொருவர் 30 நாட்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

திமோத்தி கார்பெண்டர் என்ற சாரதியே இத்தண்டனைக்கு உள்ளாகியுள்ளார்.

பிள்ளைகளை மகவேற்பு செய்தல் (தத்தெடுத்தல்) தொடர்பான இலங்கையின் சட்ட நிலைமை

திருமண உறவின் விளைவாக பிள்ளைகளைப் பெற இயலாத சந்தர்ப்பங்களில் பிள்ளைகளைத் தத்தெடுத்து வளர்த்தலானது எமது மனித வரலாற்றில் நீண்ட காலமாக நிலவி வருகின்ற ஒரு சம்பிரதாயமாகும் / வழமை ஒன்றாகும். பிள்ளைகளைத் தத்தெடுக்கும் பெற்றோர் தமது சொந்தப் பிள்ளைகளைப் போன்று கருதி அவர்களுக்குரிய உரிமைகளைப் பெற்றுத் தருதல் வேண்டும்.

துவிச்சக்கர வண்டியை உரிய முறையில் பராமரிக்க வேண்டும்

மிலேனியம் ஆண்டாக மிளிரு கின்ற இன்றைய காலகட்டத் தில் நாம் நினைத்த இடத்திற்கு விரைவில் செல்லும் வகையில் போக்குவரத்துக்கான வாகனங்கள் (TRANSPORT VEHICLES) நிறைந்து காணப்படுகின்றன. இதன் காரணமாக இப்பூவுலகம் வெகுவாகச் சுருங்கி விட்டது என்றும் கூறலாம்.

தேனிலவுக்கு மாமியாரும் வந்ததால், கணவரை விவாகரத்து செய்த பெண்

திருமணம் முடித்து ஒரு மாதங்களே ஆகும் நிலையில் பெண்ணொருவர் தனது கணவரை  விவாகரத்து  செய்வதற்கு மனு தாக்கல் செய்துள்ளார். குறித்த பெண்ணின் கணவன் தேனிலவிற்கு செல்லும்போது  தனது தாயையும் தன்னுடன் அழைத்துச் சென்றமையே இதற்கான காரணமாம்.

குடல் புற்று நோயினைக் கண்டறியும் நாய்

இதுவரை காலமும் நாய்களின் மோப்பசக்தியானது போதைப் பொருட்கள் , வெடிபொருட்கள் என்பனவற்றைக் கண்டுபிடிப்பதற்கே உதவி வந்தன.

களனி கங்கையில் நீந்திச் சாதனை படைத்த சிறுமிக்கு ஜனாதிபதி வாழ்த்து

களனி கங்கையில் ஆயிரம் மீற்றர் தூரம் நீந்திக் கடந்து சாதனை படைத்த 5 வயது சிறுமி வியாமா ஒஷாதியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

வெல்லம்பிடிய சேதவத்த பகுதியைச் சேர்ந்த இச்சிறுமி மாளிகாவத்தை கால்டன் ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார்.

அலுவலக பணியின்போது ஏற்பட்ட மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்காக சிறுவனை படுகொலை செய்த நிறைவேற்றதிகாரி

அலுவலக வேலையின்போது ஏற்பட்ட மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்காக 10 வயது சிறுவன் ஒருவனைக் கடத்திச் சென்று படுகொலை செய்த முன்னணி தொலைபேசி நிறுவன மொன்றின் நிறைவேற்றதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது.

ஈரானில் போதைவஸ்து கடத்திய நெதர்லாந்து பெண்ணுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றம்

ஈரானில் போதைவஸ்து கடத்திய குற்றச் சாட்டில் நெதர்லாந்து - ஈரான் பெண்ணொருவருக்கு சனிக்கிழமை மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து நெதர்லாந்தானது ஈரானுடனான அனைத்து உறவுகளையும் ஞாயிற்றுக்கிழமை முடக்கியுள்ளது.

ஆபாச “வீடியோ' படங்களை தயாரித்த இந்தோனேசிய பொப் இசைப் பாடகருக்கு சிறை

தென் கிழக்கு ஆசியாவின் மிகச்சிறந்த பொப் இசைப் பாடகர்களில் ஒருவராக பிரபலம் பெற்று விளங்கும் நஸ்றில் இர்ஹாமுக்கு பாலியல் வீடியோ படங்களை தயாரித்து இணையத்தளத்தின் மூலம் விநியோகித்த குற்றச்சாட்டில் மூன்றரை வருட சிறைத் தண்டனை விதித்து இந்தோனேசிய நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.

இந்தி திரைப்படங்களில் நடிக்க உலக அழகி ஆர்வம்

இந்தி திரைப்படங்களில் நடிக்க ஆர்வத்துடன் இருப்பதாக பிரபஞ்ச அழகியாக தேர்வான மெக்சிகோவை சேர்ந்த ஜிமெனா நவரெத்தே தெரிவித்தார்.இந்த ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்ட மெக்சிகோவை சேர்ந்த ஜிமெனா நவரெத்தே இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதன் முறையாக இந்தியாவுக்கு வந்துள்ள அவர் பெண் குழந்தைகள் பற்றிய விழிபுணர்வு பிரசாரத்தில் கலந்து கொண்டார். பல்கலைக்கழக மாணவர்களுடன் மரதன் ஓட்டத்திலும் பங்கேற்க இருக்கிறார்.

நித்யானந்தா பேட்டி

``ரஞ்சிதாவுடன் இருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சியை வெளியிடாமல் இருக்க ரூ.100 கோடி பேரம் பேசினார்கள்'' என்று நித்யானந்தா கூறினார்.

நித்யானந்தா பேட்டி

போர் முடிந்தாலும் மஹிந்த சமாதானத்தைக் கொண்டு வருவார் என்பது தூரத்து விடயம்: புலிகளின் தலைவர்களாக சிலர் முயற்சி - விக்கிலீக்ஸ்!

முள்ளிவாய்க்கால் இறுதி நேரத்தில் போர் முடிந்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்தது. அதனைத்தொடர்ந்து புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் இறந்துவிட்டதாக கூறியது. இவற்றின் தாக்கங்கள் இந்திய பாகிஸ்தான் ஊடகவியலாளர்களிடம் எவ்வாறு இருந்தது என்பதனை டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்காவிற்கு கேபிள் மூலம் தெரிவித்திருந்தது.

சட்டத்தை மீறச்சொல்லும் பிரதமர்

தொலைக்காட்சி அனுமதிப் பத்திர கட்டணங்களை இத்தாலியர்கள் செலுத்தக் கூடாது

இத்தாலியர்கள் தமது தொலைக்காட்சி அனுமதிப் பத்திரங்களுக்கான கட்டணங்களை செலுத்தாது சட்டத்தை மீறும் வகையில் செயற்பட அந்நாட்டு பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கொனி வலியுறுத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல