சனி, 22 ஜனவரி, 2011
திடீரென ஏற்பட்ட பெரும்பள்ளம் காரணமாக வீட்டை காலி செய்த சீனர்
சீனாவை சேர்ந்தவர் ஜாங்க் பெங்க்ராங். 58 வயதான இவர் தன் குடும்பத்துடன் சிச்சுவான் மாநிலம் லெஷான் நகரில் வசித்து வந்தார். இரவு அவர் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தபோது, நள்ளிரவு 2 மணிக்கு பயங்கர சத்தம் கேட்டது. இதை தொடர்ந்து அவர் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது, வீட்டுக்கு பின்னால் திடீர் என்று பெரும்பள்ளம் ஏற்பட்டு இருந்தது. தொடக்கத்தில் 10அடி அகலம் தான் இருந்தது. 24 மணிநேரத்துக்குள் அதன் அகலம் 70 அடிக்கு அதிகரித்தது.
Labels:
வினோதமான செய்திகள்
தாய்வானில் பட்டாசுக்கு மாற்று யோசனை
சீனப் பட்டாசு
சீனப் புதுவருடம் பிறப்பதற்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், தாய்வான் தலைநகர் தய்பெய்யில், மக்கள் நிஜப் பட்டாசுகளை வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அவற்றுக்கு பதிலாக பட்டாசு சத்த ஒலிப்பதிவை அவர்கள் ஒலிக்கச் செய்துகொள்ளலாம் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். பட்டாசு வெடிப்பதால் திருஷ்டி கழியும் துரதிருஷ்டம் விலகும் என்று நம்பும் சீனர்கள் தமது புத்தாண்டை பட்டாசு கொளுத்தி வரவேற்பதென்பது அவர்களின் நூற்றாண்டுகள் கால பாரம்பரியம் ஆகும்.
Labels:
உலகப்பார்வை
ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறாவிட்டால், பணயக்கைதிகளை கொன்று விடுவோம்
ஆப்பிரிக்காவில் உள்ள நைஜர் நாட்டில் வேலை செய்து வந்த 5 பிரெஞ்சு நாட்டினர் உள்பட 7 வெளிநாட்டினர் கடத்தப்பட்டனர். அவர்களை வடக்கு ஆப்பிரிக்கா பிரிவான அல்கொய்தா தீவிரவாதிகள் தான் கடத்தினார்கள். இந்த நிலையில் அவர்களை விடுவிப்பது தொடர்பாக அல்கொய்தா தலைவர் பின்லேடன் ஒரு ஆடியோ டேப்பை வெளியிட்டு இருக்கிறார். இந்த டேப்பை அல்ஜசீரா டி.வி.சேனல் ஒளிபரப்பியது. அதில் பின்லேடன் கூறிஇருப்பதாவது:-
Labels:
உலகப்பார்வை
சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள்
இந்திய மக்களால் மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்க்கு எதிராக தாக்குதல் நடத்தியவர்.
Labels:
இன்று
இந்திய சட்டத்தரணி இலங்கையில் கைதா?
சென்னை உயர்நீதிமன்ற சட்டத்தரணி கயல்விழி என்ற அங்கையற்கண்ணி இலங்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதை சென்னை உயர்நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம் கண்டித்துள்ளது என இந்திய தினத்தந்தி ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
Labels:
இலங்கை,
உலகப்பார்வை
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)








