செவ்வாய், 17 மார்ச், 2015

சிகிரியாவில் பெயர் எழுதிய தமிழ்ப் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம் – நடந்தது என்ன (மவ்பிம)

சீகிரியாவின் கண்ணாடிச் சுவரில் பெயரொன்றை கிறுக்கினாரென்ற குற்றச்சாட்டில் அநுராதபுரம் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருக்கும் மட்டக்களப்பு சித்தாண்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி உதய ஸ்ரீ என்ற யுவதியின் நலனை விசாரிப்பதற்காக அவரின் தயாரான சின்னத்தம்பி தவமணி (61) அவர்களை கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்று சந்தித்திருந்தோம்.

கடாபியின் மறுபக்கம்…!!

1. லிபியாவில் மின்சார கட்டணம் கிடையாது, மின்சாரம் இலவசம்.

2. வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி கிடையாது.

3. வீடு மனை என்பது லிபியாவில் மனித உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது , லிபியாவில் வாழும் அனைத்து மக்களும் வீடுகள் பெரும் வரை தனக்கோ தனது பெற்றோருக்கோ வீடு கட்டமாட்டேன் என்று கடாபி சபதம் பூண்டிருந்ததால், அவரது பெற்றோர்கள் இறக்கும் போது அவர்கள் வீடுகள் இல்லாமல் கூடாரங்களிலேயே இறந்தனர் .

சுரேஷ் பிரேமசந்திரன் அவர்களே! இரகசிய முகாங்களை அம்பலப்படுத்துங்கள்....?

"இரகசிய முகாம்கள் தொடர்பான சாட்சியங்கள் தன்னிடம் உள்ளதாகவும் சாட்சியங்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டால் அவற்றை வெளிப்படுத்த தான் தயார் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், திங்கட்கிழமை (16) தெரிவித்துள்ளார்."

அதுசரி இதுவொன்றும் இரகசியமான விடயம் அல்ல. மாறாக புலிகளின் பிரசன்ன காலத்தில் வன்னியிலும், யாழ்ப்பாணம் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் யாழ்பாணத்திலும் புலிகளின் இ(ப)ரகசிய வதை முகாங்கள் இருந்தன.

தமிழ் தேசியவாதிகளின் அரசியலில் துரோகத்தனம் தொடர்பாக மீண்டும் மீண்டும் தோன்றும் அதிசய நிகழ்வுகள் பாகம் - 2

பாகம் - 2

தனித்த ஆதாயம்

இங்கு குறிப்பிடுவதற்கு முக்கியமானது என்னவென்றால் தமிழ் TRaitoriztionதேசியவாதிகளின் அரசியல் அவர்களின் எந்த ஒரு நோக்கத்தையும் சுயேச்சையாக அடைவதில் வெற்றி பெறவில்லை என்பதுதான். ஒருபுறம் அது தமிழ் காங்கிரஸ், இலங்கை தமிழரசுக் கட்சி, ரி.யு.எல்எப் அல்லது ரி.என்.ஏ எதுவானாலும் சரி, மறுபுறத்தில் எல்.ரீ.ரீ.ஈ உட்பட்ட தமிழ் போராளிக் குழுக்களானாலும் சரி அவர்கள் அனைவருமே இதுவரை தோல்வியே அடைந்துள்ளார்கள். இதில் தனித்த ஆதாயமாக காணப்படுவது இந்திய - இலங்கை ஒப்பந்தம் கொண்டுவந்த 13வது அரசியலமைப்பு திருத்தம் மட்டுமே. அரசியல் முன்னணி; இந்த தோல்வியை அடைந்த போதிலும், தமிழ் தேசியவாதிகளின் கட்சிகள் மற்றும் அமைப்புகள், தொடர்ந்தும் உச்ச நிலையிலேயே ஆட்சி செய்தன. தமிழ் தேசியவாதிகளின் அரசியலில் உள்ள தமிழ் ஆட்சியாளரின் இந்த ஏகபோக கட்டுப்பாட்டுக்கு அருகில் உள்ள முக்கிய கருவியாக பயன்படுவது துரோகத்தனமான நடவடிக்கைதான். தங்களால் வழங்க முடியாது தோற்றுப் போகும் எதற்கும் இந்த துரோகத்தனம் என்கிற சமாதானத்தை கூறி தப்பிவிடுவார்கள். யதார்த்தமற்ற மற்றும் அடையமுடியாத இலக்குகளுக்கு அரசியல் முட்டாள்தனம்தான் காரணம் என்பது ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை மாறாக எங்கள் மத்தியில் உள்ள துரோகிகள்மீது தவறுகள் சுமத்தப்படுகின்றன. தமிழர்களுக்கு சொல்லப்படுவது தவறுகள் எங்களுடையது அல்ல ஆனால் துரோகிகளுடையது என்று.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல