செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015
குடும்பக் கட்டுப்பாட்டு சத்திரசிகிச்சை மாதவிடாய் சக்கரத்தில் ஏற்படுத்தும் மாற்றம்
குடும்ப தம்பதிகள் தமது குடும்பத்தில் இருக்கும் பல பிரச்சினைகளை வெற்றி கொண்டு தமது குடும்பம் எவ்வாறு அமைய வேண்டும் என திட்டமிட வேண்டியது அவசியம். அதாவது தமக்கு இரண்டு பிள்ளைகள் போதுமா? அல்லது மூன்று பிள்ளைகள் போதுமா? என திட்டமிட்டுக் கொள்வது சிறந்தது. இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவினால் பல குடும்பங்கள் தடுமாறும் போது குடும்பத்தை திட்டமிட்டு அமைத்துக் கொள்வது தங்களுக்கு இருக்கும் பிள்ளைகளை நன்கு கற்பித்து ஆரோக்கியமாக வளர்க்க உதவும். இவ்வாறு குடும்பத்தை சரியாக திட்டமிடாது இருந்தால் பின்னர் திட்டமிடாது கர்ப்பம் தரித்து திட்டமிடாது பிள்ளைகள் பிறக்கும் போது குடும்பங்கள் தடுமாறுவது தவிர்க்க முடியாமல் போகின்றது. இந்நிலையில் இருக்கும் பிள்ளைகளையும் சரியாக கவனிக்காமல் போகும் நிலை ஏற்படுகின்றது. இதனால் குடும்பங்களை திட்டமிட உதவும் குடும்ப கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை பற்றி அறிந்திருப்பது அவசியமாகும்.
Labels:
கேள்வி - பதில்,
மருத்துவம்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




