புதன், 9 செப்டம்பர், 2020
அமெரிக்காவின் எண்ணெய் வயல் ஆய்வு இடம்பெறும் நிலையில் அம்பாறைக் கடலில் கப்பல் தீப்பற்றியது எப்படி?
கிழக்கு மாகாணம் திருகோணமலையின் கடல் பகுதியை மையப்படுத்திய எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் பற்றிய ஆய்வு நடவடிக்கைகள், 2018ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில், பனாமா அரசுக்குச் சொந்தமான மெற் நியு டயமன்ட் (Mt New Diamond) என்ற கப்பல் எவ்வாறு தீப்பற்றி எரிந்தது என்ற கேள்விகள் எழுகின்றன. மைத்திரி- ரணில் அரசாங்கம் பதவியில் இருந்த காலத்தில் பனாமா நாட்டுக் கொடியுடன் இயங்கும் பிக் பைனொர் (BGP Pioneer) என்ற ஆய்வுக் கப்பல் இந்த ஆய்வைச் செய்து கொண்டிருக்கும் நிலையிலேயே இந்தியாவின் ஒடிசா துறைமுகத்துக்குச் சென்று கொண்டிருந்த மெற் நியு டைமன்ட் என்ற கப்பல் தீப்பற்றியிருக்கிறது. அதுவும் கிழக்கு அம்பாறை சங்கமன் கண்டி கடற்பரப்பில் இருந்து 38 கடல்மைல் தொலைவில் குறித்த கப்பலில் தீ பரவியிருக்கின்றது.
Labels:
இலங்கை
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



