வியாழன், 3 பிப்ரவரி, 2011

இலங்கையின் சுதந்திர தினம்

இலங்கை சிறிய தீவாக இருந்தபோதிலும் 2500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்டகால வரலாற்றைக் கொண்டதாகும்.

இலங்கையின் காலத்தால் முந்திய வரலாற்று நூலாகக் கருதப்படும் மகாவம்சத்தின்படி இலங்கையின் வரலாறு கிமு 6ம் நூற்றாண்டு அளவில் இந்தியாவின் கலிங்க நாட்டிலிருந்து துரத்திவிடப்பட்ட அந்நாட்டு இளவரசனான விஜயன் என்பவன் தனது தோழர்கள் எழுநூறு பேருடன் இலங்கையில் வந்து இறங்கியதுடன் ஆரம்பமாகின்றது.

சுன்னாகத்தில் வயோதிபப் பெண் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்!

சுன்னாகப் பகுதியில் வீட்டில் தனித்திருந்த வயோதிபப் பெண்ணொருவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஊயிரிழந்தவர் கிட்டப்பா பரமேஸ்வரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு தனது பின்புறத்தை காட்டிய பெண் கைது

தனது சகோதரனை பொலிஸார் கைது செய்தார்கள் என்பதற்காக,  தனது ஆடையை தூக்கி பின்புறத்தை பொலிஸாருக்கு காட்டிய அமெரிக்கப் பெண்ணொருவர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஷிய அதிபர், பிரதமர் புதின் மீது ஊழல் புகார்

ரஷிய அதிபர் மெட்வடேவ், பிரதமர் புதின் ஆகியோர் மீது ஊழல் புகார்கள் எழுப்பப்பட்டு உள்ளன. இவர்கள் இருவரும் சேர்ந்து ஆடம்பர மாளிகைகள், அரண்மனைகள் ஆகியவற்றை ரகசியமாக வாங்கி குவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக ரஷியாவில் இருந்து வெளிவரும் கொமர்சாண்ட் டெங்கி என்ற பத்திரிகையில் கடந்த திங்கட்கிழமை அன்று வெளியான செய்தி வருமாறு.

எகிப்து எழுப்பும் எச்சரிக்கை!

நான்கு நாள்களாக எகிப்து ஒரு மிகப்பெரிய மக்கள் புரட்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக இரும்புக் கரம் கொண்டு மக்களின் பேச்சுரிமையையும், சுதந்திரத்தையும் அடக்கி வைத்து ஒரு சர்வாதிகார ஆட்சிக்குத் தலைமை தாங்கி வந்த அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகவேண்டும் என்கிற கோரிக்கை வலுத்திருக்கிறது.

சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பிரித்தானிய முஸ்லீம் மதகுரு கைது

இரு சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பிரித்தானியாவைச் சேர்ந்த முஸ்லீம் மதகுரு ஒரு வரை குற்றவாளியாக இனங்கண்டு அந்நாட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

ஒபாமாவின் மனைவி தன் மகள்களுடன் மீண்டும் இந்தியா வருகிறார்

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிச்சல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் முறையாக கணவருடன் இந்தியா வந்தார். மும்பை, டெல்லி ஆகிய நகரங்களுக்கு சென்ற அவர் மீண்டும் தன் மகள்கள் சஷா, மாலியாவுடன் இந்தியா வர இருக்கிறார்.

நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் !!!

நாம் நகைகளை வெறுமனே அழகுக்காகத்தான் அணிகிறோம் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். நகை அணிவது வெறும் அழகுக்காக மட்டும் இல்லை... அதில் மருத்துவ ரீதியான பலன்களும் நமக்குக் கிடைக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

அறிஞர் அண்ணாவின் நினைவு நாள் இன்று

மக்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் மிக்க மறக்க முடியாத மாமனிதர்களாக வாழ்ந்து மறைந்த வள்ளல்கள், அறிஞர்கள், ஆன்மீகவாதிகள், பகுத்தறிவாளர்கள், பக்திமான்கள், பரோபகாரிகள், கவிஞர்கள், கலைஞர்கள் என்று தன்னிகரற்ற பல தலைவர்களின் நீங்காத நினைவு நாட்களை ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தும் தினமாக அன்று முதல் இன்று வரை அனுஷ்டிப்பது அனைவரும் அறிந்ததே.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல