திங்கள், 27 டிசம்பர், 2010

சல்மான் கானின் பிறந்த நாள்

சல்மான் கான் என்றழைக்கப்படும் அப்துல் ரஷீத் சலீம் சல்மான் கான் ஒரு பிரபல இந்திய திரைப்பட நடிகரும், பாலிவுட் நடிகருமாவார். பீவி ஹோ தோ ஐசி (1988) என்ற திரைப்படத்தில் அறிமுகமான கான், மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற மைனே பியார் கியா (1989) மூலம் இந்தி திரைப்படத்துறையில் களமிறங்கினார்.

தமிழ் அரசியல் வாதிகளால் தமிழர்களுக்கு தலைகுனிவு கூட்டமைப்பு சீற்றம்

அரசியல் சாசனந்தின் பிரகாரம் தமிழர் செறிந்து வாழும் பிரதேசங்களில் தமிழில் தேசிய பாடப்படலாம். ஆனால் நேற்றைய தினம் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்கள், சிங்கள அரசியல்வாதிகளின் நிர்ப்பந்தத்தின் பிரகாரம் சிங்கள் மொழியில் தேசிய கீதம் பாடியுள்ளனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஊடகப்பேச்சாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில்,நேற்று நடந்தது மரணவீடு: தேசிய கீதம் ஹிந்தியில்...

நேற்று இடம்பெற்றது ஒரு களியாட்டவிழா, அவ்விழாவிற்கு செல்லும் மனநிலையில் நாங்கள் இல்லை, ஏனெனில் இன்றும் யுத்தத்தின் தாக்கத்தால் பல மக்கள் இன்றும் இறந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நாம் அவர்களுடன் இணைந்து செத்தவீட்டை கொண்டாடுவதா? களியாட்ட விழாவை கொண்டாடுவதா என்ற ஒரு கேள்வி எழுந்துள்ளது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

யாழ் - வலிகாமம் வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் சுட்டுக் கொலை!

வலிகாமம் வலய பிரதிக் கல்விப் பணிப்பாளரான 52 வயதுடைய மார்க்கண்டு சிவலிங்கம் அவரது வீட்டில் வைத்து இனந்தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கடன் அட்டை மோசடியில் ஈடுபட்ட மூன்று தமிழ இளைஞர்கள் கனடாவில் கைது!

கடன் அட்டை மோசடியில் ஈடுபட்ட மூன்று தமிழ இளைஞர்கள் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் ஹல்பா பிரதேசத்தில் வைத்து குறித்த கடனட்டை மோசடி சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலங்கை இளைஞர்கள் மூவரும் ஏனையவர்களின் கடன் அட்டைத் தகவல்களை கொள்ளையிட முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பிரபாகரனுக்கு நோர்வே எழுதிய கடிதம் - விக்கிலீக்ஸ்


போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த காலப்பகுதியில் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு நோர்வே எழுதிய அந்தரங்கமான கடிதத்தினை இலங்கையி னது முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவிற்குக் காட்டுவதற்கு நோர்வே விரும்பவில்லையாம்.இவ்வாறு விக்கிலீக்ஸஸ் வெளியிட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதாக கொழும்பில் இருந்து வெளியாகும் 'சண்டே ரைம்ஸ்' இதழ் தெரிவித்துள்ளது.

உழைப்பாளியான பிச்சைக்காரர்கள்....

கோவை: தெருவில் துரத்தி விட்டது உறவு. கையேந்தி உண்பதே வாழ் வானது. கடைசி கால மாற்றம் பிச்சைக்காரர்களையும் உழைப்பாளிகளாக மாற்றியது. ஆந்திரா, கர்நாடக, கேரள மாநில பிச்சைகாரர்கள், ஆதரவற்றோர்கள் கோவை நகரில் குவிந்தனர். கோயில், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், சிக்னல்களை ஆக்கிரமித்தனர்.

பொழுதுபோக்கிற்காக கார்கள் திருடிய பெண்

சீனாவில் பொழுதுபோக்கிற்காக நண்பர்களை தூண்டி 40க்கும் மேற்பட்ட கார்கள் திருடிய பெண் கைது செய்யப்பட்டார். சீனாவில் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் டாய் குயில்வென். சிசுவான் மாகாணத்தை சேர்ந்தவர். இவர் பொழுதுபோக்கிற்காக கார் திருட்டில் ஈடுபட்டார். இவர் திட்டப்படி, நண்பர்கள் 4 பேர் கார்களை திருடி வந்தனர். கடந்த 3 ஆண்டுகளாக 40க்கும் மேற்பட்ட கார்களை இவர்கள் திருடியுள்ளனர்.

இன்டர்நெட் பார்த்து வீட்டிலே பிரசவம்

வீட்டை விட்டு வெளியேற முடியாத கடும் பனிப் பொழிவால், இங்கிலாந்தில் ஒருவர் இன்டர்நெட் மூலம் பிரசவ டிப்ஸ்களை அளித்து காதலியை பிரசவிக்கச் செய்தார்.

உலகின் மிகச் சிறிய கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை

இந்த ஆண்டு கிறிஸ்துமசுக்கு இங்கிலாந்து ‘நானோ’ விஞ்ஞானிகள் வித்தியாசமான வாழ்த்து அட்டை தயாரித்துள்ளனர். உலகின் மிகச் சிறிதான அதில் கையெழுத்திட முடியாது. கிளாஸ்கோ பல்கலைக்கழக நானோ தொழில்நுட்ப பிரிவு விஞ்ஞானிகள் இணைந்து உலகின் மிகச் சிறிய வாழ்த்து அட்டையை நானோ தொழில்நுட்பத்தில் உருவாக்கியுள்ளனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல