புதன், 19 நவம்பர், 2014
ஹரியானா சாமியார் ராம்பால் நள்ளிரவில் அதிரடி கைது
ஹிசார்: ஹரியானா சாமியார் ராம்பால் அதிரடியாக நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். ஆசிரமத்தில் இருந்து 15 ஆயிரம் பேரை வெளியேற்றிய பிறகு, சாமியாரை போலீசார் கைது செய்தனர். ஹரியானா மாநில அரசில் என்ஜீனியராக வாழ்க்கையை தொடங்கி, பின்னர் ஆன்மிகத்தில் இறங்கி பிரபலம் ஆனவர் சாமியார் ராம்பால் (வயது 63). அங்கு பர்வாலா என்ற இடத்தில் அமைந்துள்ள அவரது ஆசிரமம், ஒரு அரசாங்கம் போலவே இயங்கி வந்தது. சர்ச்சைகளில் சிக்கிய அவர், ஒரு கொலை வழக்கில் சிக்கினார்.
Labels:
கள்ளச் சாமியார்கள்,
பித்தலாட்டங்கள்
மீனவர்கள் விடுதலை: ராஜபக்சே, மோடிக்கு நாடு நன்றிக் கடன்பட்டுள்ளது - சு.சுவாமி
டெல்லி: இருநாட்டின் தலைவர்கள் மேற்கொண்ட முயற்சியால் 5 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைவர்களின் கூட்டு முயற்சிக்கு நாடு நன்றிகடன்பட்டுள்ளதாக பாஜகவின் சுப்பிரணிய சாமி தெரிவித்துள்ளார். தூக்கு தண்டனையை எதிர்நோக்கியிருந்த 5 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதற்கு அவர் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)





