சில ஆண்டுகளுக்கு முன் பிச்சை எடுத்த ஒரு மாணவி இன்று மருத்துவம் படிக்க ரஷ்யா சென்றுள்ளார்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. இவர், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், தனது 2 மகள்களுடன் தேனி பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டு இருந்துள்ளார். இதை அறிந்த பழனிசெட்டிபட்டியில் உள்ள அவருடைய உறவினர்கள் லட்சுமி குடும்பத்தினரை தங்களுடன் அழைத்துச் சென்றுள்ளனர்.



