ஷமிந்திர பேர்டினன்டோ
எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது மூத்த சகாக்களுடன் மேற்கொண்ட ஆலோசனையின் பின்னர் இரண்டு உயர்மட்டக் குழுக்களை,நோர்வேயினால் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த யுத்த நிறுத்த ஒப்பந்தம் 2002 பெப்ரவரியில் இறுதி செய்யப்பட்டதும் நியமனம் செய்தார். இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு, அமெரிக்கா,ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பான் என்பனவும் உத்தரவாதம் வழங்கியிருந்தன.






