திருமணம் முடிந்த தம்பதியினருக்கு குழந்தையின்மை என்பது நோய் அல்ல, ஒருவகை பாதிப்புதான் என்றாலும், கணவன், மனைவி இருபாலாரிடத்தும் இப் பிரச்சினை பெரும் கவலைக்குரிய விடயமாக மாறிவிடுகிறது. மனிதர்களின் ஒவ்வொரு சிக்கல்களுக்கும் இறைவன் மாற்று வழிமுறைகளை நிறையக் கொடுத்திருக்கிறான். அந்த வகையில் குழந்தைப்பேற்றை அடைய முடியாத தம்பதியினருக்கு மாற்று வழியாக இறைவன் மருத்துவத்துறையினர் மூலம் அளித்திருக்கும் மாபெரும் கொடை ஐ.வி.எஃப் எனப்படும் செயன்முறைக் கருவேற்றம். ஆனாலும்கூட, இந்த செயன்முறைக் கருவேற்றம் என்பது வசதி உடையவர்களால் மட்டுமே செய்துகொள்ள முடியும் என்கிற நிலைதான் இன்றுவரை தொடர்கிறது. இதைக் கவனத்தில் கொண்டு ஏழைத் தம்பதியினரும் பயன்பெறும் வகையில் மிகக் குறைந்த செலவில், செயன்முறைக் கருவேற்றத்தை செய்து வருகிறார் டொக்டர் சாமுண்டி சங்கரி.
திங்கள், 29 ஜூலை, 2013
சிறுநீரகம் செயலிழந்துவிட்டது என்பதை ஒருவர் எப்படித் தெரிந்து கொள்வது?
சிறுநீரக செயலிழப்பானது மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது. முதலாவது லேசான சிறுநீரக செயலிழப்பு அதாவது 30 விழுக்காடு செயலிழந்துபோவது. இரண்டாவதாக நடுத்தர செயலிழப்பு. அதாவது 30 விழுக்காடு முதல் 60 விழுக்காடு வரை. மூன்றாவதாக அதிக சிறுநீரக செயலிழப்பு. 60 விழுக்காட்டிற்கு மேல் செயலிழந்து போவது.
Labels:
நோய்கள்
ஏழை சிறுமியின் உயிர் காக்க உதவுங்களேன்!!!
தேனி: தேனி மாவட்டம் கம்பம் நகரைச் சேர்ந்த எஸ்.வி. முஹமது மஜீத் அவர்களின் பேத்தி சிறுமி பவுசியா SLE - Systemic Lupus Erythematosus எனப்படும் Auto Immune Disease எனும் நோயினால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதியுற்று வருகிறார்.
Labels:
உதவி (Please help)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




.jpg)
