புதன், 27 மே, 2015

சிறுமி சரண்யா பாலியல் வன்புணர்வினால் இறக்கவில்லை – மருத்துவர்களின் அறிவிப்பால் அதிர்ச்சி!

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிரபலமான செய்திகளில் ஒன்று சரண்யா என்ற சிறுமியைக் குறித்தது. இந்த நாட்களில் எப்படி வித்தியா தலைப்புச் செய்தியோ அதே போல அந்த நாட்களில் சரண்யா. ஆனால் வித்தியா அளவிற்கு சரண்யாவின் மரணம் பரபரப்பான போராட்டங்களை, திடீர் கைதுகளை நிகழ்த்தவில்லை.

அவளும் கூட்டு பாலியல் வன்புணர்வின் மூலம் கொலை செய்யப்பட்டவள் என்றே சொல்லப்பட்டது. ஆனால் சரண்யாவின் குடும்பப் பின்னணியும், வறுமையும், வெறும் அப்பாவித்தனமான அவளின் உறவுகளும், வாழ்ந்த இடமும் அவளின் மரணத்துக்கான நீதிகோரலைத் தடுத்தன.

வித்தியா கொலையாளியை கைகழுவிய சுவிஸ் நாடு

மாணவி வித்தியாவை வன்புணர்வுக்குட்படுத்தி படுகொலை செய்த சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சிவகுமார், தமது நாட்டு பிரஜை இல்லையென சுவிஸ் தூதரகம் அறிவித்துள்ளது.

வித்தியாவின் கொலையாளிகள் முழுமை விபரம் அம்பலம்

புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்த மாணவி வித்தியா சிவலோகநாதன் மீதான வன்கொடுமை மற்றும் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருக்கும் நபர்களின் விபரங்கள்…..

1. பூபாலசிங்கம் இந்திரகுமார் – புங்குடுதீவு, பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர். பிறந்த திகதி 13.04.1976

2. பூபாலசிங்கம் உதயகுமார் – புங்குடுதீவு ஒன்பதாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர். பிறந்த திகதி 14.08.1981

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல