வெள்ளி, 31 டிசம்பர், 2010

இலங்கை கடந்து வந்த சவால்களை எவராலும் மறக்க முடியாது

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கை கடந்து வந்த சவால்களை எவராலும் மறக்க முடியாது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பட்ரிசிய ஏ.பூட்டனிஸ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் அவசர உணவு நிவாரண பொதிகளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சரிடம் கையளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு, குடத்தனையில் தபாலக ஊழியர் மீது துப்பாக்கிச் சூடு

வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தின் குடத்தனை கிழக்கில் வீடு புகுந்து ஆயுததாரிகள் துப்பாக்கியால் சுட்டதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எய்ட்ஸ் நோயாளிகளும் மனிதர்களே!

20ஆம் நூற்றாண்டில் இறுதிப் பகுதியிலிருந்து உலகை ஆட்டிப் படைக்கும் பயங்கர ஆட்கொல்லி நோயாகவே எய்ட்ஸ் இனங்காட்டப்பட்டது. இந்த கொடிய நோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இன்றுவரை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. அதேநேரம், அனைத்து நாடுகளும் இந் நோயின் பாதிப்பிலிருந்து விடுவிப்பதற் கான முயற்சிகளை தொடர்ந்து மேற் கொண்டு வந்தபோதிலும்கூட, இந்த நோயை பூரணமாகக் கட்டுப்படுத்த இன்றுவரை எந்தவித கண்டுபிடிப்புக் களும் மேற்கொள்ளப்படவில்லை.

குடாநாட்டில் மீண்டும் படுகொலை

கடந்த முப்பது வருட காலமாக இடம்பெற்று வந்த யுத்தத்தினை முடிவு செய்து தமிழ் மக்கள் குறிப்பாக குடா நாட்டு மக்கள் தற்போது சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்கும் அமைதியை நேசிப்பதற்கும் வழியமைத்துக் கொடுத்த அதியுத்தம ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவை பாராட்டுகின்றோம் என்று யாழ்ப்பாணத்திற்கு அடிக்கடி வருகை தருகின்ற அமைச்சர்கள் வாயார புகழ்ந்து நெஞ்சார வாழ்த்துத் தெரிவித்துச் செல் கிறார்கள்.

"சத்தியமா நாங்கள் செய்யேல்லை"

விக்கிலீக்ஸ்....!" பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்லே. வாய்க்குள் நுழைவதற்குக் கஷ்டமாக இருந்தபோதும் கூட தம்முடைய அரட்டைகளின் போது "விக்கிலீக்ஸ்" என்ற சொல்லை உச்சரிக்காவிட் டால் நம்மவர்கள் பலருக்கும் " பத்தியப்படுவ தில்லை". அந்தளவுக்கு எல்லோரையும் ஆட்கொண்ட ஒரு மந்திரச் சொல்லாக இது மாறி இருக்கிறது.

அகதி முகாமிலிருந்து கடத்தப்படும் உணவுப் பொருட்கள்: முகாம்வாசிகள் பட்டிணி

போரினால் இடம்பெயர்ந்து வவுனியா, மெனிக்பாம் முகாம்களில் உள்ளவர்களுக்காக கொடுக்கப்படும் உணவுப்பொருட்கள் அவர்களுக்குக் கொடுக்கப்படாமல் திட்டமிட்ட ஒரு குழுவினரால் அங்கிருந்து கடத்தப்படுவதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரொபர்ட் பிளெக் பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளார் – கருணா!

இலங்கைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவது ரொபர்ட் ஒ பிளெக் பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளதாக பிரதி மீள் குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா தெரிவித்துள்ளார்.

இலங்கை அகதிகளை நாடுகடத்த கூடாது

அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்ட இலங்கை தமிழ் அகதிகளை மீண்டும் அவுஸ்திரேலியா இலங்கைக்கு நாடுகடத்த கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. மனித உரிமைகள் கண்கானிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை என்பன இந்த வலியறுத்தலை விடுத்துள்ளதாக த ஒஸ்ட்ரேலியன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையை ஐ.நா. விசாரிப்பதே அமெரிக்க அரசாங்கத்தின் நோக்கம்

த பொஸ்ரன் குளோப் அதிரடித் தகவல்

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையை கொண்டுவருவதே அமெரிக்காவின் நோக்கமாகும். இதன் அடிப்படையிலேயே விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டது. இவ்வாறு அமெரிக்காவை தளமாகக் கொண்ட த பொஸ்ரன் குளோப் தனது ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி: சிறுமி ஒருவரை கர்ப்பிணியாக்கினார் என்ற சந்தேகத்தில் முன்னாள் அரச உத்தியோகத்தர் ஒருவர் கைது!

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி சிறுமி ஒருவரை கர்ப்பிணியாக்கினார் என்ற சந்தேகத்தில் முன்னாள் அரச உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

புலிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்

புலிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற தலைப்பில் அட்டைப் படம் கொண்ட புத்தகம் வெளியீடு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

புத்தகத்தின் முதல் பிரதியை பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கி வைத்தார். புத்தகத்தின் நூலாசிரியர் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ கொன்வேர்ட்டர்

கடந்த 10 ஆண்டுகளில் வீடியோ இயக்கும் சாதனங்களின் எண்ணிக்கையும், வகையும் அதிகரித்துள்ளன. வீடியோ கேம் சாதனங்கள், மொபைல் போன்கள், எம்பி 3 பிளேயர்கள், லெப்டொப் கொம்பியூட்டர்கள், நெட்புக் மற்றும் டெஸ்க்டாப் கொம்பியூட்டர்கள் என இந்தப்பட்டியல் தொடர்கிறது.

விவாகரத்துக்கு துணை போகும் வலைத்தளங்கள்

ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத் தளங்கள் உலக அளவில் ஏராளமான மக்களை ஒன்றிணைப்பதற்காக ஒருபுறம் பெருமையுடன் பேசிக்கொண்டிருக்கையில் மறுபுறம் அமெரிக்காவில் நடக்கும் ஒவ்வொரு ஐந்து விவாகரத்திலும் ஒரு விவாகரத்துக்கு ஃபேஸ்புக் காரணமாக உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

ஒன்லைனில் படங்களின் அளவை மாற்ற

படங்களின் அளவை ஒன்லைனில் மாற்றித் தருகிறது mypictr எனும் இணையதளம். இதன் மூலம் விரைவாகவும் இலகுவாகவும் உங்கள் படங்களின் அளவை நீங்கள் விரும்பும் அளவில் சிறிதாக்கியோ பெரிதாக்கியோ பெறலாம்.

அசுத்த வாயு மணத்தை தடுக்கும் நவீன உள்ளாடை கண்டுபிடிப்பு

அமெரிக்காவிலுள்ள உள்ளாடைகள் தயாரிக்கும் நிறுவனமொன்று புதிய வகையிலான உள்ளாடையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது உடலிலிருந்து வெளியேறும் வாயுவினால் எழும் மணத்தை இந்த ஆடைகள் மறைக்குமாம்.

விடைபெற்றுச் செல்லும் 2010ஆம் ஆண்டிற்கு...

2010ஆம் ஆண்டின் இறுதி நாள் இன்று. இதுவே 2011ஆம் ஆண்டின் முகிழ்ப்பிற்கான முதல் நாள். எனினும் இது 2010ஆம் ஆண்டின் இறுதி நாள் என்ற நினைப்பிலேயே எங்கள் சிந்தனையின் பதிவாக இருப்பதனால் விடைபெற்றுச் செல்லும் 2010ஆம் ஆண்டிற்கு நன்றி கூறி விடை பகருவது எங்கள் தமிழ்ப் பண்பாட்டிற்கு அழகாகும்.

சவுதி அரேபியாவில் துரத்தும் மரணங்கள்

குழந்தை ஒன்றின் மரணம் தொடர்பாக இன்னொரு இலங்கைப் பணிப்பெண் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டிருக்கிறார். அக்கரைப்பற்றைச் சேர்ந்த நாகராஜா விஜயகுமாரி என்ற பெண்ணே கைது செய்யப்பட்டவராவார்.

வெள்ளை வானில் வந்தோரால் இளைஞன் கடத்தப்பட்டார்

உரும்பிராய் மூன்று கோயிலுக்கு அண்மையான வீதியில் வைத்து இளைஞர் ஒருவர் வெள்ளை வானில் வந்த இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்றுக் காலை 8.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

பன்றிக்குப் பாய்ச்சிய மின்சாரம் பாகற்காய் பறிக்க வந்த இளைஞனைப் பலியெடுத்தது

மிளகாய்த் தோட்டத்தில் பன்றிக்கு வைத்த மின்சாரப் பொறியில் சிக்கிய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று அதிகாலை 3 மணியளவில் தெல்லிப்பழை கட்டுவன் மேற்கில் இடம்பெற்றது. இதில் கட்டுவன் மேற்கைச் சேர்ந்த சந்திரசேகரன் பாக்கியராஜ் (வயது 25) என்ற இளைஞனே உயிரிழந்தவராவார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட தெல்லிப்பழை பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டதாவது,

சுடப்பட்டுக் கிடந்த இலங்கை இளைஞருக்கு உதவாமல், கடையில் திருடிய வாடிக்கையாளர் (படங்கள் இணைப்பு)

அமெரிக்காவில் கடையொன்றில் பணியாற்றியபோது கொள்ளையனால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கை இளைஞரான சுஜேந்திரா அமரசிங்கம் காயமடைந்து வீழ்ந்து கிடந்த நிலையில், அவரை புறக்கணித்துவிட்டு அங்குள்ள பொருட்களைத் திருடுவதற்கு வாடிக்கையாளர் ஒருவர் முயற்சித்தாக கான்ஸாஸ் நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வரலாற்றில் இன்று

1695: இங்கிலாந்தில் வீட்டு ஜன்னல்களுக்கு வரி அறிமுகப்படுத்தப்பட்டது.

1857: ஒட்டோவாவை கனடாவின் தலைநகராக விக்டோரியா மகாராணியார் தெரிவுசெய்தார்.

2011 ஆம் ஆண்டு ராசி பலன்கள்

மேஷம்

உங்கள் ஜென்ம ராசிக்கு ருண ரோக ஸ்தானமான 7ஆம் வீட்டில் இந்த 2011ஆம் ஆண்டு முழுவதும் சனிபகவான் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இதனால் நீங்கள் நினைத்ததை நிறைவேற்றி கொள்ள முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல