புதன், 24 மார்ச், 2010

ஹிட்லரால் எழுதப்பட்ட அரிய கடிதம் 8000 பவுணுக்கு ஏலத்தில் விற்பனை

பிரித்தானியாவுக்கும் ஜேர்மனிக்குமிடையேயான உண்மையான ஆழமான நட்புறவுக்கு வாழ்த்து தெரிவித்து ஹிட்லரால் எழுதப்பட்ட கடிதமொன்று ஏல விற்பனையில் 8000 ஸ்ரேலிங் பவுணுக்கு விலைபோயுள்ளது.

2 வருடங்களாக பலராலும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி

அயல் வீட்டாராலும், சகோதரனாலும் சுமார் 2 வருடங்களாக பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப் பட்ட சிறுமி ஒருவரை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மண்டையோட்டில் 10 அங்குல ஆழத்திற்கு கத்தி பாய்ந்த நிலையில் உயிர் பிழைத்த சிறுவன்

10 அங்குல கத்தியின் பாகம் மண்டையோட்டில் ஊடுருவிய நிலையில் 16 வயது சிறுவன் ஒருவன் உயிர் பிழைத்த அதிசய சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

4 மைல் தூரம் காரை ஓட்டி சென்ற 5 வயது சிறுவன்

தனது தாயின் காரை மணிக்கு 10 மைல் வேகத்தில் 4 மைல் தூரத்திற்கு 5 வயது சிறுவன் ஒருவன் ஓட்டிச் சென்று பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

ஆணுடன் கைகலப்பில் ஈடுபட்ட பெண் பொலிசாரிடம் ஒப்படைப்பு

பயணிகள் பஸ் வண்டியில் ஆணொருவருடன் கைகலப்பில் ஈடுபட்ட பெண்ணொருவர் பொலிசாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ள சம்பவமொன்று நேற்று அட்டனில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

கண்டியிலிருந்து அட்டன் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ்ஸில் பெண் ஒருவர் குயில்வத்தை பகுதியிலிருந்து ஏறி கதவருகே நின்றுள்ளார்.
இதையடுத்து அவரை பஸ்ஸின் உள்ளே செல்லுமாறு நடத்துனர் கூறியுள்ளார். தொடர்ந்து இது தொடர்பில் குறித்த பெண் நடத்துனரிடம் வாக்குவாதம் புரிந்துள்ளார். பின்னர் பஸ்ஸிலிருந்து ஏனைய ஆண் ஒருவருடனும் அதே பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி தொடர்ந்து அது கைகலப்பாக மாறியுள்ளது. விடயமறிந்த சாரதி பஸ்ஸை பொலிஸ் நிலை யத்திற்கு எடுத்துச் சென்று விடயங்களை கூறி பெண்ணை பொலிசாரிடம் ஒப்படைத்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மகாராணியின் கார் ஏலத்திற்கு வருகிறது

இங்கிலாந்தின் இரண்டாம் எலிசபெத் ராணி பயன்படுத்திய டெய்ம்லர் (Jaguar Daimler) ஆடம்பர சொகுசு கார் இப்போது சந்தைக்கு வந்துள்ளது.

நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்த கணவரை எழுப்பி மனைவி துப்பாக்கிப் பிரயோகம்

தனது கணவரின் தீராத குடிப் பழக்கத்தால் சினமடைந்த மனைவி, நள்ளிரவு வேளையில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து அவரை எழுப்பி துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

தன் காதலனை வேறு பெண்கள் ரசிப்பதை விரும்பாமல் அசிட் வீசிய காதலி கைது

தன் காதலனின் அழகை வேறு பெண்கள் பார்ப்பதை விரும்பாத காதலி, அவர் மீது அசிட் ஊற்றி அழகை கெடுக்க முயன்று பொலிஸ் நிலையத்தில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

40 ஆயிரம் ரூபாவுக்கு மனைவியை விற்ற கணவனை தேடி பொலிஸார் வலைவிரிப்பு

தன் மனைவியை 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுவிட்ட கணவனைப் பீகார் பொலிஸார் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

தமிழரின் அரசியல் பிரச்சினை தொடர்பான தீர்வு யோசனைகளும் கைநழுவிப் போன தீர்வுத் திட்டங்களும்

இலங்கை சுதந்திரமடைந்த பின்பே சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான அமைதியும் வரலாற்று ரீதியான நல்லுறவும் சீர்குலைந்தன. பாராளுமன்றம் நிறைவேற்றிய பிரஜா உரிமைச் சட்டம், சிங்களம் மட்டும் ஆட்சிமொழி என்ற சட்டம் ஆகியவற்றின் மூலம் இரு சாராருக் குமிடையிலான நல்லுறவுகள் மேலும் சீர்குலைந்தன.

காதலரை கொன்று அவரது மாமிசத்தை உண்ண அழைப்பு விடுத்த பெண்

தனது காதலரை கத்தியால் குத்தி படுகொலை செய்த பெண்ணொருவர், அவரது உடலின் மாமிசத்தை தன்னுடன் இணைந்து உண்ண வருமாறு பிறிதொரு நபருக்கு கையடக்க தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்த திடுக்கிடும் சம்பவம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான வழக்கு நியூ சவுத் வேல்ஸ் உச்ச நீதிமன்றத்தில் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல